ஆழ்வார்களின் சிந்தனைகள் 2 பகுதிகள்

ஆழ்வார்களின் சிந்தனைகள் 2 பகுதிகள், பேரா.ஜய.குமாரபிள்ளை, சங்கர் பதிப்பகம், பக். 368+624, விலை 300ரூ+550ரூ. கி.பி., மூன்றாம் நுாற்றாண்டிற்குப் பின், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த களப்பிரர்களாலும், பல்லவர்களாலும், சமணம் மற்றும் பவுத்த சமயங்கள் பரவியதுடன், அவர்களின் பிராகிருத மொழி இங்கு ஆட்சி மொழியாக இருந்ததால், தமிழ்மொழியும், தமிழரின் சமயங்கள், இல்லற மாண்புகள், அகப்பொருள் இலக்கிய மரபுகள், இசை, கூத்து முதலியன சிதைந்தனவென்று அறிஞர்கள் கூறுவர். அங்ஙனம் பிற மதங்களின் கட்டுப்பாட்டில் சிக்கியிருந்த தமிழகத்தை மீட்டெடுக்கவே, சைவ -வைணவப் பெரியோர்கள், பக்தி இயக்கத்தைத் தோற்றுவித்தனர் என்பர். […]

Read more

முக்காலம் தொடும் முத்தரையர் வரலாறு

முக்காலம் தொடும் முத்தரையர் வரலாறு, அ.சவரிமுத்து, சங்கர் பதிப்பகம், பக். 240, விலை 225ரூ.   முத்தரையர் என்ற பழம்பெரும் சமூகத்தின் தொடக்கக் காலம் முதல் இன்று வரை, பல்வேறு ஆய்வுகள் செய்து எழுதப்பட்டுள்ளது, முக்காலம் தொடும் முத்தரையர் வரலாறு எனும் இந்நுால். முத்தரையர் என்பதற்கு சேர, சோழ, பாண்டியரை அடக்கி, ஓர் கொடையின் கீழ் ஆண்ட அரசர் முத்தரையர் என்றும், மூன்று + தரையர் = முத்தரையர் என்றும் விளக்கம் கூறுவர். நுாலின் முகப்பிலேயே, இந்த நுால் எந்த சமுதாயத்திற்கும் எதிராக எழுந்த […]

Read more

தமிழினத்தின் துருவ நட்சத்திரம்

தமிழினத்தின் துருவ நட்சத்திரம், ப.பாலசுப்பிரமணியன், சங்கர் பதிப்பகம், விலை 100ரூ. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி பதவியில் ஒவ்வொரு நிலையாக எப்படி கடந்து வந்தார் என்று விவரமாக தரப்பட்டுள்ளது. அத்துடன் அவர், சென்னை மாநகர மேயராகவும்,தமிழகத்தின் துணை முதல்வராகவும் இருந்த சமயங்களில் ஆற்றிய ஆக்கப்பூர்வமான பணிகள் பற்றிய விவரமும் இதில் தரப்பட்டு இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027643.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 […]

Read more

ஆண்டாள்

ஆண்டாள், பேரா.ஜெய.குமார பிள்ளை, சங்கர் பதிப்பகம், பக்.112, விலை 100ரூ. தமிழ்மொழியின் வளமைக்கும், உயிர்ப்புக்கும் பெருமை சேர்த்தோர் ஆழ்வார்களும், நாயன்மார்களும் ஆவர். தமிழ் மொழியின் இருண்ட காலமான களப்பிரர்கள் காலத்தில், தமிழை அழியாமல் காத்தவர்கள் அவர்கள். பாவைப் பாடல் என்ற புதிய இலக்கிய மரபைத் தமிழுக்குத் தந்த பெருமை ஆண்டாள் நாச்சியாருக்கே உரியது. அக்றிணை பன்மைக்கு, ‘கள்’ விகுதி சேர்த்து எழுதும் முறையை ஆண்டாள் பாடலால் அறியலாம் என்று பெரியோர் கூறுவர். அத்தகு ஆண்டாளின் திருப்பாவையையும், நாச்சியார் திருமொழியையும் விளக்கும் உரை நுாலாக, இந்நுால் […]

Read more

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, ப.பாலசுப்பிரமணியன், சங்கர் பதிப்பகம், விலை 100ரூ. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றியவரும், சிறந்த தமிழ் அறிஞர்களில் ஒருவருமான மனோன்மணியம் சுந்தரனாரை பற்றிய நூல் இது. அவரது இளமைக்காலம் மற்றும் தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டுகள் உள்ளிட்ட பல்வேறு குறிப்புகளுடன், சுந்தரனார் இயற்றிய மனோன்மணியம் கவிதை நாடகம் குறித்தும் சிறப்பாக விவரித்துள்ளார் ஆசிரியர். தனது அறிவுத்திறமையால் சுவாமி விவேகானந்தருடன் விவாதம் நடத்தி அவரை தனது நண்பராக்கிய சுந்தரனாரின் திறமையும், தமிழை அன்னையாக கருதிய அவரது மாண்பும் வியக்க வைக்கிறது. பாரதிதாசன், கவிமணி, […]

Read more

ஆதிசங்கரர் முதல் மகாபெரியவா வரை

ஆதிசங்கரர் முதல் மகாபெரியவா வரை, குன்றில்குமார், சங்கர் பதிப்பகம், விலை 125ரூ. இந்தியாவின் நான்கு பகுதிகளிலும் மடங்களை நிறுவி, நலிந்து கிடந்த இந்து மதத்தைக் காப்பாற்றிய ஆதிசங்கரரின் 33 ஆண்டுகால வரலாறு விவரமாகத் தரப்பட்டுள்ளது. அவரது பிறந்த ஆண்டு எது என்ற முரணான கருத்துக்கள் பற்றியும், அவர் காஞ்சியில் தான் முக்தி அடைந்தார் என்பதற்கான ஆதாரங்கள் என்ன என்பது குறித்தும் தரப்பட்டுள்ளன. அத்துடன் தற்போது வரை உள்ள மடாதிபதிகளின் முழு விவரமும், காஞ்சி மடத்தின் கிளைகள் எங்கே இருக்கின்றன என்ற தகவலும் இதில் காணக்கிடைக்கின்றன. […]

Read more

புதுச்சேரி சித்தர்கள்

புதுச்சேரி சித்தர்கள், சி.எஸ்.முருகேசன், சங்கர் பதிப்பகம், விலை 300ரூ. வேதபுரி, அகத்தீசுவரம் என்று புதுச்சேரி போற்றப்படுகிறது. பாடல் பெற்ற கோவில்கள் இங்கு இல்லை. ஆனாலும் அரவிந்தர், அன்னை, பாரதியார் போன்றவர்களால் புனிதம் சேர்ந்தது புதுச்சேரிக்கு. ஞானபூமியில் தோன்றிய 47 சித்தர்களை அரும்பாடுபட்டு இந்நுாலாசிரியர் தொகுத்து விரிவாக எழுதியுள்ளார். பாரதியார், பல சித்தர்களுடன் பழகியவர் என்றும், அவர்கள் பற்றி பாடல்கள் பாடியவர் என்றும் முன்னுரையில் கூறியிருப்பது மிக முக்கியத் தகவலாகும். புதுச்சேரி சித்தர் ஆய்வில், இளைஞர்கள் ஆர்வமுடன் இருப்பதாக எழுதியுள்ளது, எதிர்கால நம்பிக்கை தருகிறது. அகத்தியர் […]

Read more

பிரபத்தி அறிவோம் தெளிவோம்

பிரபத்தி அறிவோம் தெளிவோம், வ.ந.கோபால தேசிகாச்சாரியார், சங்கர் பதிப்பகம், விலை 210ரூ. பிரபத்தி மார்க்கம் ஒன்று தான், உய்வதற்கு ஒரே வழியாகும். எது சாரம்? யார் கடவுள்? மோட்சத்தில் ஆசையா? பக்தியும் பிரபத்தியும், யோகங்கள் மூன்று, அங்கங்கள் ஐந்து, சாஸ்திர வரையறை, பாவம் பரிகாரம், ஆன்மாவின் பயணம், மோட்சானந்தம், திருமால் பெருமையை கூறுகிறது. குரு மற்றும் சீடனின் கடமை உள்ளிட்டவை பற்றி வேதங்களும், சாஸ்திரங்களும், ஆழ்வார்கள், ஆளவந்தார், ராமானுஜர் போன்ற வைணவ மகான்களும், பக்தி மார்க்கத்திற்கு செல்லும் வழிமுறைகளை இந்நுாலில் கூறி உள்ளனர். நன்றி: […]

Read more

பிரபத்தி அறிவோம் தெளிவோம்

பிரபத்தி அறிவோம் தெளிவோம், வ.ந.கோபால தேசிகாச்சாரியார், சங்கர் பதிப்பகம், விலை 210ரூ. பிரபத்தி மார்க்கம் ஒன்று தான், உய்வதற்கு ஒரே வழியாகும். எது சாரம்? யார் கடவுள்? மோட்சத்தில் ஆசையா? பக்தியும் பிரபத்தியும், யோகங்கள் மூன்று, அங்கங்கள் ஐந்து, சாஸ்திர வரையறை, பாவம் பரிகாரம், ஆன்மாவின் பயணம், மோட்சானந்தம், திருமால் பெருமையை கூறுகிறது. குரு மற்றும் சீடனின் கடமை உள்ளிட்டவை பற்றி வேதங்களும், சாஸ்திரங்களும், ஆழ்வார்கள், ஆளவந்தார், ராமானுஜர் போன்ற வைணவ மகான்களும், பக்தி மார்க்கத்திற்கு செல்லும் வழிமுறைகளை இந்நுாலில் கூறி உள்ளனர். நன்றி: […]

Read more

யுவான்சுவாங் புத்தரைத் தேடி ஒரு புனிதப் பயணம்

யுவான்சுவாங் புத்தரைத் தேடி ஒரு புனிதப் பயணம், குன்றில் குமார், சங்கர் பதிப்பகம், பக். 184, விலை 160ரூ. சீனாவிலுள்ள புத்தமத நூல்கள் பலவற்றிலுமுள்ள முரண்பாடுகளைக் கண்டு, புத்தர் அவதரித்த இந்தியாவிற்கே சென்று உண்மை நிலையை அறிய விரும்பி, கி.பி.629-ல் பயணத்தை மேற்கொண்டவர் சீனத் துறவி யுவான் சுவாங். 20 வயதிலேயே தனது நாட்டை விட்டு வெளியேறி, காடுகள், மலைகள், பாலைவனம், சீதோஷ்ணம், காட்டு விலங்குகள், கெள்ளையர் கூட்டம்… என்று பல இடர்களையும், தடைகளையும் கடந்து கால்நடையாகவே இந்தியாவிற்குள் வந்தார். பாடலிபுத்திரத்திலுள்ள நாளந்தா பல்கலைக் […]

Read more
1 2 3 4 5 9