விடுதலை வேந்தன் விஸ்வநாத தாஸ்

விடுதலை வேந்தன் விஸ்வநாத தாஸ், முனைவர் ப. பாலசுப்பிரமணியன், சங்கர் பதிப்பகம், பக். 136, விலை 75ரூ. இந்திய விடுதலை போராட்ட வீரர்களுள் குறிப்பிடத்தக்கவர் விசுவநாத தாஸ். தன் நடிப்பாலும், மேடை நாடகப் பாடல்களாலும் மக்களிடத்தில் சுதந்திர உணர்வை ஊட்டியவர். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு, சிறை சென்று துன்புற்றவர். வறுமையில் துன்புற்ற போது, ஆங்கிலேய கவர்னர் பொருளாதார உதவி செய்ய முற்பட்ட போது, மறுத்துவிட்டு வறுமை யில் வாடியவர் விஸ்வநாத தாஸ். அண்ணல் காந்திஜி, நேருஜி, வ.உ.சி., பசும்பொன் முத்துராமலிங்கம் முதலானோர் இவருடைய பாடல்களை […]

Read more

தெய்வங்கள் வணங்கிய தெய்வத் திருத்தலங்கள்

தெய்வங்கள் வணங்கிய தெய்வத் திருத்தலங்கள், தெள்ளாறு இ. மணி, சங்கர் பதிப்பகம், பக். 365, விலை 300ரூ. எத்தகைய நல்ல செயல்களைச் செய்தாலும், அதில் சிறிதளவாவது தீமை கலந்தே இருக்கும். தெய்வங்களின் செயல்கள் அனைத்தும் அதர்மத்தை அழிக்கக்கூடியவையாக இருக்கும். அந்தச் செயல்களின் காரணமாகவே அந்தத் தெய்வங்களை தோஷங்கள் பற்றி இருக்கின்றன. தம்மைப் பற்றிய தோஷங்களை நீக்குவதற்காகவும், ‘பேரானந்த நிலை’ என்பது செயலற்ற ஆன்ம தரிசனத்தில் தான் உள்ளது என்பதை உணர்த்துவதற்காகவும், தெய்வங்கள் மற்றொரு தெய்வத்தை வணங்கி நமக்கு வழிகாட்டி இருக்கின்றன எனக் கூறுகிறார் நூலாசிரியர். […]

Read more

சித்த வைத்தியத் திரட்டு

சித்த வைத்தியத் திரட்டு, தி.நா.அங்கமுத்து முதலியார், சங்கர் பதிப்பகம், பக். 264, விலை 225ரூ. பத்தியம், புடம், கிருதம், எரு, விறகு வகைகளையும், நிறுத்தல் அளவை நிறைகள், முகத்தல், பழங்கால சித்த மருத்துவ அளவைகளையும் பட்டியலிடுகிறது இந்நூல் நன்றி: தினமலர், 21/5/2017.   —-   தமிழ் மொழி அகரமுதலி, ஞானச்செல்வன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 280, விலை 120ரூ. மக்களிடம் பயன்பாட்டில் உள்ள சொற்களுக்கும், தமிழில் கலந்து கிடக்கும் தெலுங்கு, கன்னடம், பாரசீகம், அரேபியச் சொற்களுக்கும் பொருள் தருவதாக அமைந்துள்ளது இந்நூல். […]

Read more

தெய்வங்கள் வணங்கிய தெய்வத் திருத்தலங்கள்

தெய்வங்கள் வணங்கிய தெய்வத் திருத்தலங்கள், தெள்ளாறு இ.மணி, சங்கர் பதிப்பகம், விலை 300ரூ. தமிழகத்தில் உள்ள கோவில்கள் ஒவ்வொன்றும் ஒரு வகையில் சிறப்பு பெற்றவை ஆகும். ஆலயங்களுக்கு தெய்வங்களே வந்து வழிபாடு நடத்தி இருக்கின்றன என்பது ஐதீகம். அவ்வாறு எந்த கோவிலில் எந்த தெய்வம் வழிபாடு நடத்தியது என்பதையும், அந்த கோவிலின் வரலாறு உள்பட வேறு பல சிறப்புகள், அந்த கோவில்கள் அமைந்துள்ள ஊர், அங்கே செல்வது எப்படி என்பது போன்ற ஆன்மிக வாசகர்களைக் கவரும் பல்வேறு அம்சங்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. […]

Read more

நீதி நூல்களில் உடல் நலம்

நீதி நூல்களில் உடல் நலம், மு.சு. கன்னையா, சங்கர் பதிப்பகம், பக். 160, விலை 135ரூ. மனிதனிடம் உள்ள மதிப்புயர்ந்த செல்வங்கள், அவன் நோய்வாய்ப்படும்போது மருந்து வாங்கியே அழிந்துவிடுகின்றன. அதனால்தான் ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்கிறது தமிழ் நீதி. நீதி நூல்களில் காணப்படும், உடல்நலம் குறித்த கருத்துக்கள் குறித்தும் இந்த நூல் தொகுத்தும், பகுத்தும் பேசுகிறது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், அற நூல்கள், அறநெறிச்சாரம், ஆத்திசூடி, சதகங்கள் ஆகிய இலக்கியங்கள் இதற்கு ஆய்வுக் களங்களாக விளங்குகின்றன. உடலும் உயிரும், மருந்து, சினம், கள்ளும் […]

Read more

சித்தர் பாடல்கள் பட்டினத்தாரின் பைந்தமிழ்ப் பாடல்கள்,

சித்தர் பாடல்கள் பட்டினத்தாரின் பைந்தமிழ்ப் பாடல்கள், புலவர் அடியன்மணிவாசகன், சங்கர் பதிப்பகம், விலை 240ரூ. பட்டினத்தாரின் பைந்தமிழ்ப் பாடல்களையும், அவற்றுக்கான உரை விளக்கமும் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் தொகுக்கப்பட்ட நூல். ஒவ்வொரு பாடல்களிலும் பொதிந்துள்ள இன்பத்தை நாம் பாடல்களை படிப்பதன் மூலம் அனுபவிக்க முடியும். நன்றி: தினத்தந்தி, 24/8/2016.   —- தேடல், எஸ். கண்ணன், திருவரசு புத்தக நிலையம், விலை 80ரூ. அனைவருக்கும் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்ட 23 சிறுகதைகளின் தொகுப்பாகும். நன்றி: தினத்தந்தி, 24/8/2016.

Read more

உணவே அமிர்தம் உணவே மருந்து

உணவே அமிர்தம், உணவே மருந்து, சி.எஸ். தேவ்நாத், சங்கர் பதிப்பகம், பக். 200, விலை 165ரூ. 40 வருடங்களுக்கு முன் சர்க்கரை நோயாளிகளை காண்பதே மிக அரிது. இன்று ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒருவர் இந்நோய்க்கான சிகிச்சைக்கு அலைவதை காண்பது எளிது. இதற்கு நாம் உட்கொள்ளும் தவறான உணவு முறையும், போதிய உழைப்பின்மையுமே காரணம். ஆக எந்தவொரு நோயும் நம்மை தாக்காமல் இருக்கவும், நமது அழகு, இளமை, ஆராக்கியம் இம்மூன்றும் நீடித்திருக்கத் தேவையான ரகசியங்களை கூறுவதுமே இந்நூலின் நோக்கம். நாம் எப்படி, எந்தவகையான உணவுகளை […]

Read more

திருப்போரூர்ச் சந்நிதி முறை

திருப்போரூர்ச் சந்நிதி முறை, பி.ரா. நடராசன், சங்கர் பதிப்பகம், பக். 440, விலை 350ரூ. சிதம்பரம் சுவாமிகளின் ஒப்பற்ற நூல்! கடந்த, 200 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சிறந்த இலக்கணப் புலவர், சிதம்பர சுவாமிகள். மதுரையிலிருந்து முருகன் திருவருளால், திருப்போரூர் வந்தார். புதைத்திருந்த சுயம்பு முருகனுக்கு, வியந்து போகுமளவு கற்கோவில் கட்டினார். ‘திருப்போரூர் சந்நிதி முறை’ எனும் சொற்கோவிலும் படைத்தார். இவரது உரையால்தான், திருஞானசம்பந்தர் பாடல் திருக்கடைக்காப்பு, அப்பர் பாடியது தேவாரம், சுந்தரர் பாடியது திருப்பாட்டு என்று வகைப்படுத்தப்பட்டது. இத்தகு அருட்புலவரின் புதிய பக்தி […]

Read more

இஸ்லாமிய சட்டக் கருவூலம்

இஸ்லாமிய சட்டக் கருவூலம், தமிழில் மவுலவி நூஹ், இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம், விலை 150ரூ. இஸ்லாமிய சட்டங்கள் குறித்து அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக் எழுதிய நூல் ‘பிக்ஹுஸ் சுன்னா.’ இதைத் தமிழில் மவுலவி நூஹ் மஹ்லரி மொழிபெயர்த்துள்ளார். இது ஏழாவது பாகமாகும். இந்த நூலில் மண விலக்கு குறித்த அனைத்து செய்திகளும் இடம் பெற்றுள்ளன. மணவிலக்கு (தலாக்), மணவிலக்கின் முறை, குழந்தை பராமரிப்பு, பராமரிப்பதற்கான நிபந்தனைகள் போன்ற அனைத்து சட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய சட்டங்கள் அனைத்து தமிழ் முஸ்லிம்களிடம் சென்று சேர வேண்டும். அவர்களுக்குப் […]

Read more

உலக மதங்கள்

உலக மதங்கள், குன்றில் குமார், சங்கர் பதிப்பகம், பக். 208, விலை 175ரூ. உலகில் பல்வேறு மதங்கள் தோன்றி, மக்களால் அவை பின்பற்றப்பட்டு வந்தாலும், இந்த மதங்கள் அனைத்துமே ஒற்றுமை, அமைதி, அன்பு போன்ற நல்ல விஷயங்களை வலியுறுத்துகின்றன. தனக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்றிருப்பதை மனிதன் நம்புகிறான். அவற்றை எடுத்துரைக்கும் இறைத்தூதர்கள் அல்லது தீர்க்கதரிசிகளின் கருத்துக்களை ஏற்று மனிதன் நடப்பதாலும், அம்மதங்கள் நிலைத்திருக்கின்றன. அந்த வகையில், இந்நூலாசிரியர் இவ்வுலகிலுள்ள முக்கிய மதங்களைப் பற்றியும், அவை எப்படி, யாரால், எப்போது, எதற்காக தோற்றுவிக்கப்பட்டன என்றும், அவற்றின் […]

Read more
1 3 4 5 6 7 9