மோகனா ஓர் இரும்புப் பெண்மணியின் கதை

மோகனா ஓர் இரும்புப் பெண்மணியின் கதை, பேரா.சோ.மோகனா, பாரதி புத்தகாலயம், விலை: ரூ.120. போராட்டமே வாழ்க்கை ஆணுக்கு எளிதாகக் கிடைத்துவிடுகிற அனைத் தையும் பெண் போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது. பேராசிரியர் மோகனாவும் போராடித்தான் வென்றிருக்கிறார். கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவருக்குக் கல்வி பெறுவதே மிகப் பெரிய சவாலாக இருந்தது. தன்னை மூழ்கடிக்க முயன்ற ஒவ்வொரு சவாலையும் துணிவோடு எதிர்கொண்டு களமாடினார். அறிவொளி இயக்கம், அறிவியல் இயக்கம், பெண்கள் இயக்கம், தொழிற்சங்கம் என்று பல்வேறு அமைப்புகளில் பங்கேற்றுக் களப்பணியாற்றிவர், புற்றுநோயிலிருந்தும் போராடி மீண்டார். தான் கடந்துவந்த […]

Read more

நெடுமரங்களாய் வாழ்தல்

நெடுமரங்களாய் வாழ்தல், ஆழியாள், அணங்கு பெண்ணியப் பதிப்பகம், விலை: ரூ.70. ஆறாத பெருவலி இந்தியப் பெருங்கடலில் முலைப்பால் துளியாய்ச் சொட்டி நிற்கும் சின்னஞ்சிறிய இலங்கைத் தீவில் போரால் பாதிக்கப்பட்டு, பசிபிக் சமுத்திரத்தில் முதிய ஆமைபோல் மிதக்கும் ஆஸ்ரேலியப் பெருந்தீவுக்குத் தன்னைக் கடத்திக் கொண்டவர்களின் ஆறாத பெருவலியைச் சொல்கிறது ஆழியாளின் இந்தத் தொகுப்பு. இதிலிருக்கும் கவிதைகள் ஒரு தலைமுறையின் நெடுந்துயரை, வாழ்வின் இருண்மைகளை, கனவின் அதீதத்தைக் காட்சிப்படுத்துகின்றன. எளிய சொற்களின் ஒளிர்தலில் உயிர்ப்பைக் கண்டடைதலும் இனப்பேரழிவின் எச்சத்தில் மூச்செடுக்கும் மொழியுடலும்தான் ஆழியாளின் கவிதைகள். நன்றி: தமிழ் […]

Read more

விரிசல்

விரிசல், கா.சிவா, வாசகசாலை பதிப்பகம், விலை: ரூ.150 நினைவுகளில் ஊடாடும் நிலம் இது கா.சிவாவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. கிராமத்திலிருந்து இளம் வயதிலேயே நகரத்துக்குக் குடிபெயர்ந்த ஒருவர், தன் பதின்பருவ நினைவுகளுடன் உரையாடுவதற்கான மொழி சாத்தியப்படும் சூழலில் எழுதப்பட்ட கதைகளாக இவற்றைக் கூறலாம். சொந்த நிலத்திலும் புலம்பெயர்ந்த நிலத்திலும் தன் இருப்பு என்னவாக இருந்திருக்கிறது என்பதைப் பின்னோக்கிப் பார்த்திருக்கும் புனைவுகளாகவும் இதைக் கருத வாய்ப்புள்ளது. தன் சொந்த உறவுகளால் ஏமாற்றப்படுகிறான் வேலன்; நண்பனால் ஏமாற்றப்படுகிறான் பிரபா; வாடிக்கையாளரால் ஏமாற்றப்படுகிறான் சங்கர். ஏமாற்றுவதும் ஏமாறுவதும் வாழ்க்கையின் […]

Read more

ஒரு நல்ல வறட்சியை எல்லோரும் நேசிக்கிறார்கள்

ஒரு நல்ல வறட்சியை எல்லோரும் நேசிக்கிறார்கள், பி.சாய்நாத், தமிழில்: ஆர்.செம்மலர், பாரதி புத்தகாலயம் வெளியீடு, விலை: ரூ.550. இந்தியாவில் கிராமப்புறச் செய்திகளின் முக்கியத்துவத்தை உணர்த்தி அவற்றுக்குத் தனிக் கவனத்தை உருவாக்கிய மூத்த பத்திரிகையாளர் பி.சாய்நாத்தின் பிரபலமான புத்தகம் இது. விவசாயிகளின் பிரச்சினைகள், கிராமப்புறங்களில் நிலவும் கல்வி, சுகாதாரச் சிக்கல்கள், அரசு நடைமுறைப்படுத்தும் திட்டங்களின் தோல்விக்குக் காரணங்களை விரிவான ஆய்வுக்கு உட்படுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு இது. வறட்சிக்குப் பெயர்போன ராமநாதபுரம் மாவட்டத்தில் பனையேறும் தொழிலாளர்களின் பரிதாபகரமான வாழ்க்கை, இடைத்தரகர்களால் விவசாயிகளின் வருமான இழப்பு, சாராயம் காய்ச்சுபவர்களின் […]

Read more

சித்ரசூத்ரம்

சித்ரசூத்ரம், தமிழில்: அரவக்கோன், அனன்யா வெளியீடு, விலை: ரூ.140. இந்தியாவின் ஓவிய மரபுகளுக்குப் பின்னால் உள்ள கோட்பாடுகள், இலக்கணங்களைத் தெரிந்துகொள்ள உதவும் பண்டைய ஓவியக் கலைக்களஞ்சியம் ‘சித்ரசூத்ரம்’. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட விஷ்ணுதர்மோத்தர புராணத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்த நூலை 1924-ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகம் முழுக்கப் பிரபலப்படுத்தியவர் கலை வரலாற்றறிஞர் ஸ்டெல்லா கிராம்ரிஷ். ஆங்கிலத்திலிருந்து மாதிரி ஓவியங்களுடன் தமிழில் இந்த நூலை அரவக்கோன் மொழிபெயர்த்திருக்கிறார். இந்தியக் கலைமரபின் வீச்சை தமிழில் அறிவதற்கு உதவிகரமான நூல் இது. நன்றி: தமிழ் இந்து,.6/3/21 இந்தப் […]

Read more

நாங்கூழ்

நாங்கூழ், மின்ஹா, கருப்புப்பிரதிகள் வெளியீடு, விலை: ரூ.70. கவிதைகள் பெரும்பாலும் நிரந்தர அர்த்தம் உடையவை அல்ல. அவை காலந்தோறும், நிலந்தோறும், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அவரவருக்குத் தக்கவாறு தனித்துவமான நுகர்ச்சியை வழங்கக்கூடியவை. இவற்றைக் கடந்து கவிதைகளுக்குச் சில பொதுவான பண்புகள் உண்டு என்பதும் மறுக்க இயலாது. படைப்பிலக்கிய வகைமைகளில் மற்ற எல்லாவற்றையும்விடக் கவிதைகளின் பங்கே இவ்வுலகில் கணிசமானது என்று நான் உறுதியாக நம்புகிறேன். இயற்கையோடு இணைந்து வாழும் விருப்பமுடைய மனித மனம் ஏராளமான ரகசியங்களைத் தன்னுள்ளே கொண்டிருக்கிறது. ரகசியங்களில்தான் கடவுளும் படைப்பும் […]

Read more

மனம் செய்யும் மாயவித்தை

மனம் செய்யும் மாயவித்தை, ரவி வல்லூரி, மணிமேகலை பிரசுரம், விலை- ரூ.260. இந்த நூலின் ஆசிரியரான ரவி வல்லூரி, இந்திய ராணுவத்தில் பணியாற்றிவிட்டு தற்போது உத்தர பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் இந்திய ரயில்வேயில் பணியாற்றிவருகிறார். ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கரின் ‘வாழும் கலை’ இயக்கத்தில் ஆசிரியராகச் செயல்பட்டுவருகிறார். கடந்த இரண்டாண்டுகளில் பெற்றோர் இருவரையும் அடுத்தடுத்துப் பறிகொடுத்திருக்கிறார். கரோனா தொற்றுக்கு ஆட்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். இதுபோன்ற மோசமான சூழ்நிலைகளும் துரதிர்ஷ்டங்களும் நிறைந்த இந்த வாழ்வின் இருண்ட பக்கங்களை எதிர்கொள்வதற்குத் தேவையான விழிப்புணர்வையும் பக்குவப்பட்ட மனநிலையையும் அடைவதற்கு ஆன்மிகப் பாதையில் வழிகாட்டும் […]

Read more

பெண்மைய வாசிப்பும் அரசியலும்

பெண்மைய வாசிப்பும் அரசியலும், அரங்க மல்லிகா, புலம் வெளியீடு, விலை: ரூ.150. பெண்மைய வாசிப்பு பேராசிரியரும், சமூகச் செயல்பாட்டாளருமான அரங்க மல்லிகா விளிம்பு நிலை விடுதலைச் சிந்தனை ஓட்டத்தில் தொடர்ந்து பயணித்துவருபவர். இந்த நூலில் மொத்தம் 18 கட்டுரைகள். அத்தனையும் பெண்ணை மையப்படுத்தியே சுழல்கின்றன. சங்க இலக்கியம் தொடங்கிச் சமகால இலக்கியம் வரை பேராசிரியர் காத்திரமாகக் களமாடியிருக்கிறார். தமிழ்ச் சமூகத்துக்கு அவர் புதுப்புதுத் தகவல்களை, தரவுகளை அள்ளியள்ளித் தருகிறார். வரலாற்று மூலமும் தொன்மமும் அவர் கட்டுரைகளில் மிக இயல்பாக வந்து நுழைகின்றன. அவை பண்பாட்டுத் […]

Read more

எல்லோருக்குமானவரே

எல்லோருக்குமானவரே, க.கணேசன், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை, விலை: ரூ.20. அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி கடந்த ஏப்ரல் 14 அன்று மலிவுப் பதிப்பாக வெளியான ‘எல்லோருக்குமானவரே’ நூல், இதுவரையில் இரண்டாயிரம் பிரதிகளுக்கும் மேலாக விற்பனையாகியுள்ளது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி குறித்த அம்பேத்கரின் சிந்தனைகளைப் பற்றி அசோக் தாவ்லே எழுதிய கட்டுரை, பெண் விடுதலைக்கு அம்பேத்கரின் பங்களிப்பு குறித்து பிருந்தா காரத் எழுதிய கட்டுரை ஆகியவற்றின் மொழிபெயர்ப்புடன் பேராசிரியர் க.கணேசன் எழுதிய கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இந்திய அரசமைப்பின் சிற்பி, ஒடுக்கப்பட்டோரின் தலைவர் என்பதைத் தாண்டி மானுடவியல், […]

Read more

அகத்தைத் தேடி

அகத்தைத் தேடி, தஞ்சாவூர்க் கவிராயர், விலை: ரூ. 200. அகத்தின் சாவி அஷ்டாவக்கிரர், அரிஸ்டாட்டில் காலத்திலிருந்து சத்தியம் என்பது வெளிப்படையாகவே உள்ளது. அதைப் புரிந்துகொள்வதற்கான திராணிதான் அனைவருக்கும் இல்லை. திறந்து கிடக்கும் உண்மையைப் பார்ப்பதற்கான, எதிர்கொள்வதற்கான திராணி இல்லாத இடத்தில்தான் உண்மைக்குத் திரை போடப்பட்டு, பூசைகளும் புனஸ்காரங்களும் தொடங்குகின்றன. அனுஷ்டானங்களும் மடத்தனங்களும் நியமங்களும் மனிதனைப் பிரித்து வகுக்கும் பாகுபாடுகளும் தொடங்குகின்றன. நன்மை, தீமை, கருத்தியல், விருப்புவெறுப்புகள், ஆசைகள், அச்சங்களால் மனிதர்களும் சமூகங்களும் தேசங்களும் தங்களுக்குள் போரிட்டு மாயும் காலத்தில் மனிதர்கள் நேசிக்க மறந்துவிட்ட சூழலில் […]

Read more
1 4 5 6 7 8 44