சாலாம்புரி

சாலாம்புரி, அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை: ரூ.400. நாவலின் மையக் கதாபாத்திரமான அம்மையப்பநல்லூர் நடராஜன் நெசவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவன். குடும்பச் சூழ்நிலை காரணமாகவும், தந்தையின் விருப்பத்துக்காகவும் பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு, உடலுழைப்பை நோக்கித் தள்ளப்பட்டிருந்தான். குறைந்த அளவிலான காடு கழனியுடன் ஒரு ஹோட்டலையும் நடத்திவந்த சின்னு, ஆஸ்துமா நோய் வந்து இறந்துபோகிறார். அந்தக் குடும்பத்தின் மூத்த மகனான நடராஜன், குடும்பப் பொறுப்புகளை ஏற்க வேண்டியதாகிறது. அந்த வகையில் நடராஜன் தன் மனைவி, அம்மா உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட […]

Read more

சித்திரச் சோலை

சித்திரச் சோலை, சிவகுமார், இந்து தமிழ் திசை, விலை: ரூ.285. பன்முக வாழ்க்கை ‘சித்திரச் சோலை’ நூலைப் படிக்கும்போது ஒரு பன்முகக் கலைஞரின் வாழ்வு எப்படி ரத்தமும் சதையுமாக வார்த்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டுப்போவீர்கள். ஓவியர், நடிகர் என்ற இரு அம்சங்களில், இரு வேறு கோணங்களில் தன் ஒட்டுமொத்த அனுபவங்களையும் ‘சித்திரச் சோலை’யில் சிவகுமார் வடித்துள்ளார். மிகச் சிறந்த மனிதர், மார்க்கண்டேயர் என்றெல்லாம் அவர் புகழப்படுவதன் சூட்சுமம் அவரது சொல்லும் செயலும் ஒன்றாக இருப்பதிலும், அளவிட்டு அறிய முடியாத ஒரு கலை உணர்வு எப்போதும் […]

Read more

வாட்டர் மெலன்

வாட்டர் மெலன், கனகராஜ் பாலசுப்பிரமணியம், தமிழில்:கே.நல்லதம்பி, வெளியீடு: யாவரும் பதிப்பகம், விலை: ரூ.180. புலப்பெயர்வின் தமிழ் வாழ்க்கை நவீன வாழ்வின் மிகப் பெரிய துயரங்களுள் ஒன்று அகதி வாழ்க்கை! 2020-ன் கணிப்பின்படி, தங்கள் நாடுகளை விட்டுப் பிற நாடுகளுக்குப் புகலிடம் தேடிச் சென்ற 28.10 கோடி அகதிகள் இருக்கிறார்கள். உலகின் மொத்த மக்கள்தொகையில் இது 3.6%. இதைத் தவிர, ஒவ்வொரு நாட்டிலும் உள்நாட்டிலேயே அகதிகள் காணப்படுகிறார்கள். இந்தியாவுக்குள் சுமார் 10 கோடி உள்நாட்டு அகதிகள் காணப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் இந்தி பேசும், ஏழ்மை நிறைந்த […]

Read more

ஒப்பு நோக்கில் காந்தியடிகள்

ஒப்பு நோக்கில் காந்தியடிகள் – மார்க்ஸிலிருந்து வள்ளலார் வரை, கா.செல்லப்பன்,  எழிலினி பதிப்பகம், விலை: ரூ.180. உலகப் பேரறிஞர்களுடன் காந்தியை ஒப்பீடு செய்து பேராசிரியர் கா.செல்லப்பன் எழுதியுள்ள இந்நூல் முக்கியமானது. காந்தியைப் புரிந்துகொள்வதில் சிலருக்கு இருக்கும் போதாமைகளை இந்நூல் தகர்க்கும். ‘தனது வாழ்க்கையே ஒரு சத்திய வேட்கை. தம் வாழ்க்கையே சத்தியத்தின் பரிசோதனைக் களம் எனக் கருதியதால், தமது சுயசரிதையை ‘சத்திய சோதனை’ என்று காந்தி குறிப்பிட்டார். ‘புத்தரும் மகாவீரரும் ஏசுவும் அஹிம்சையைப் போதித்தனர். ஆனால், காந்திஜிதான் அதை அரசியலில் பயன்படுத்தி வெற்றியும் கண்டார்’ […]

Read more

மகாகவி தாந்தே: விண்ணோர் பாட்டு

மகாகவி தாந்தே: விண்ணோர் பாட்டு, (மூன்று தொகுதிகள்), தமிழில்: கே.சுப்பிரமணியன்,  விடியல் பதிப்பகம், மொத்த விலை: ரூ.750 தாந்தேவைத் தமிழிலும் கொண்டாடுவோம் உலகின் மாபெரும் கவிஞர்களில் ஒருவர் இத்தாலியின் தாந்தே. அவரது நினைவின் 700-வது ஆண்டு செப்.13 தொடங்கி இந்த ஆண்டு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி, உலகின் செவ்வியல் இலக்கியங்களில் ஒன்றான அவரது ‘ட்வைன் காமெடி’ மறுவாசிப்புக்கு வந்திருக்கிறது. 1307-ல் தொடங்கி 1320-ல் எழுதி முடிக்கப்பட்ட இந்தக் காப்பியத்தைத் தமிழில் முழுவதுமாக விரிவான விளக்க உரைகளுடன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் கே.சுப்பிரமணியன். பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற […]

Read more

நவசெவ்வியல் பொருளியல்

நவசெவ்வியல் பொருளியல், எஸ்.நீலகண்டன், எம்ஐடிஎஸ், காலச்சுவடு வெளியீடு, விலை: ரூ.425. நவசெவ்வியல் உருக்கொண்டபோது நிலவிய உலகப் பொருளியல் சூழலைக் குறித்த விரிவான அத்தியாயம், அதை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. தொழில் முதலாளியம் சரிவுற்று, நிதி முதலாளியம் வளரத் தொடங்கிய காலம் அது. பொருளியல் நோக்கில், இந்தியாவின் காலனிய வரலாறும் அந்த அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளது. மரபுவழித் தொழில்கள் அழிக்கப்பட்டு, காலனி நாடுகள் கச்சாப் பொருட்களை விளைவிக்கும் இடங்களாகவும் சந்தைகளாகவும் மாறிக்கொண்டிருந்த காலத்தில்தான் நவசெவ்வியல் பொருளியல் கோட்பாடுகள் விவாதத்துக்கு வரத் தொடங்கின. நிதி முதலாளியம், பொருளியல் […]

Read more

உயிரசைதல்

உயிரசைதல், ஜீவிதன், நீந்தும் மீன்கள் வெளியீட்டகம், விலை: ரூ.250. எரிந்தணையும் தீவிரம் தொண்ணூறுகளின் மத்தியில் சிற்றிதழ் சூழலில் அறிமுகமாகி 2000 வரை தொடர்ந்து கவிதைகள் எழுதியவர், சிவகங்கையில் வசிக்கும் கவிஞர் ஜீவிதன். பின்னரும் கவிதைகள் எழுதினாலும் முந்தைய அளவுக்குச் சீராக இயங்கவில்லை. நெடுங்காலக் காத்திருப்புக்குப் பின் ஜீவிதனின் கவிதைகள் ‘உயிரசைதல்’ எனும் தலைப்பில் தொகுப்பாகியுள்ளது. 2000-க்குப் பின்பான தமிழ்க் கவிதைகள் வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டன. எனினும், ஜீவிதனின் கவிதைகள் கவிமனதின் ஊசலாட்டங்களையும் அலைக்கழிப்புகளையும் அதிகமும் பேசுகின்றன. அக்கவிதைகளில் வெளிப்படும் தவிப்பு அதன் நேர்மைத்தன்மை […]

Read more

மா.அரங்கநாதன் படைப்புகள்

மா.அரங்கநாதன் படைப்புகள், நற்றிணை வெளியீடு, விலை: ரூ.890. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியத்தின் தாக்கம், நவீன இலக்கியத்தின் வெவ்வேறு வடிவங்களில் இன்றும் தொடர்வதைக் காண்கிறோம். கவிதைதான் தொல் இலக்கிய வடிவம். பெரும்பாலான நவீன இலக்கியப் படைப்பாளிகள் கவிதையிலிருந்துதான் தங்கள் எழுத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், கவிதை எழுதாமல் நேரடியாகக் கதை எழுதியவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் மா.அரங்கநாதன் (1932-2017). “சிறுகதையே இன்னொரு விதத்தில் கவிதையோட விளக்கம்தான்” என்று கூறிய இவர், கவிதையின் நுண்மையையும் பருண்மையையும் மிகச் சாதாரணமாகத் தன் புனைகதைக்குள் கொண்டுவந்தவர். அவ்வகையில் மா.அரங்கநாதன், தொல் […]

Read more

தடையின் தடத்தில்

தடையின் தடத்தில், துரை.நந்தகுமார், அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், விலை: ரூ.80. நோய்மைக் கால கவிதை ஆவணம் கரோனா பெருந்தொற்றுக் காலம் பல மனிதர்களின் வாழ்வைப் புரட்டிப்போட்டுவிட்டது. திசையெங்கும் அச்சத்தின் நிழலாட்டம். உயிரைப் பற்றிய நமுத்துப்போன உரையாடல்கள். பிள்ளைகளின் கல்வி நிலைகளில் விழுந்தன கறுப்புக் கோடுகள். பொருளாதார பலவீனங்களால் கனக்கும் குடும்பச் சுமைகள். நோய்மையின் இத்தகைய சுவடுகள் மறைய எவ்வளவு காலம் ஆகுமென்று எவராலும் சொல்ல முடியவில்லை. ‘விரல்விட்டு விரலுக்கு/ பூசப்படுகிறது மருதாணி’, ‘யாருமற்ற பள்ளிக்கூடம்/ அழிக்காத கரும்பலகையில்/ இருப்பது 40’. இதுபோன்று தனது கவிதைக்குள் […]

Read more

நீர்ச்சுழி

நீர்ச்சுழி, முத்துராசா குமார், சால்ட் வெளியீடு, விலை: ரூ.150. கைவிடப்பட்டவர்களின் குரல்கள் மயானக்கொள்ளையின்போது வலம்வரும் புகையிலைக்காரி, வில்லிசைப் பாட்டுக்காரி என்று கைவிடப்பட்ட அல்லது நமது நினைவுகளிலிருந்து மறைந்துபோன, அதிகம் பேசப்படாத மனிதர்களின் குரலைத் துல்லியமாகத் தனது ‘நீர்ச்சுழி’ கவிதைத் தொகுப்பில் பதிவுசெய்திருக்கிறார் முத்துராசா குமார். அவருடைய சிறுகதைகளிலும் இதே மனிதர்கள் தங்களின் வாழ்க்கைப் பாடுகளை விரிவாகப் பேசுகிறார்கள். ஆனால், கவிதையில் வெளிப்படும் சின்னச் சின்னத் தருணங்கள் அவர்களின் வாழ்க்கையை, அதன் மகத்துவத்தை மிளிரச் செய்கின்றன. உதாரணமாக, வில்லிசைக்காரி கவிதையை வாசிக்கையில் அவளுடைய இசையைவிட, அவள் […]

Read more
1 5 6 7 8 9 44