நாங்கூழ்

நாங்கூழ், மின்ஹா, கருப்புப்பிரதிகள் வெளியீடு, விலை: ரூ.70. கவிதைகள் பெரும்பாலும் நிரந்தர அர்த்தம் உடையவை அல்ல. அவை காலந்தோறும், நிலந்தோறும், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அவரவருக்குத் தக்கவாறு தனித்துவமான நுகர்ச்சியை வழங்கக்கூடியவை. இவற்றைக் கடந்து கவிதைகளுக்குச் சில பொதுவான பண்புகள் உண்டு என்பதும் மறுக்க இயலாது. படைப்பிலக்கிய வகைமைகளில் மற்ற எல்லாவற்றையும்விடக் கவிதைகளின் பங்கே இவ்வுலகில் கணிசமானது என்று நான் உறுதியாக நம்புகிறேன். இயற்கையோடு இணைந்து வாழும் விருப்பமுடைய மனித மனம் ஏராளமான ரகசியங்களைத் தன்னுள்ளே கொண்டிருக்கிறது. ரகசியங்களில்தான் கடவுளும் படைப்பும் […]

Read more

மொழியின் நிழல்

மொழியின் நிழல், ந.பெரியசாமி, தேநீர் பதிப்பக வெளியீடு, விலை: 180. படைப்பின் ஊற்றுக்கண்ணைத் தேடும் முயற்சி கவிதை, நாவல், சிறுகதைத் தொகுப்புகள், நிகழ் நாடகங்கள், சுயசரிதங்கள், மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் பற்றிக் கவிஞர் ந.பெரியசாமி எழுதியிருக்கும் கட்டுரைகளின் தொகுப்பு ‘மொழியின் நிழல். இந்தப் புத்தகங்கள் தரும் அனுபவங்கள் பற்றி நிதானமாகப் பேசுவதோடு, அந்தந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்த அரசியல், சமூகப் போக்கையும் பதிவுசெய்யும் எழுத்து முறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் பெரியசாமி. புத்தகங்கள் தரும் அனுபவங்களை இரண்டு விதங்களில் இவர் வெளிப்படுத்துகிறார். முதலாவதாக, தன்னுடைய அனுபவம் சார்ந்த நிகழ்வுகளின் வழியாக விவரிப்பது. […]

Read more

முறிந்த வானவில்

முறிந்த வானவில், கோ.வசந்தகுமாரன், தமிழ் அலை வெளியீடு, விலை: ரூ.100 முறிந்தாலும் வானவில்தான் ‘கவிதை என்பது ரொட்டி மாதிரி; படித்தவர்களும் பாமரர்களும் மகத்தான மானுடக் குடும்பத்தினர் அனைவரும் அப்படைப்பைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்’ என பாப்லோ நெரூதாவின் கருத்தை முன் பக்கத்தில் பதிவிட்டு, அதைத் தொடர்ந்த பக்கங்களில் தொடரும் வசந்தகுமாரனின் கவிதைகள் அந்தக் கூற்றுக்கு சான்று பகிர்கின்றன. ‘ஒரு பறவையை வரைவதற்கு முன்  ஒரு கூட்டை வரைந்துவிடு பாவம் எங்கு போய் அவை தங்கும்’ என்பன போன்ற கவிதைகள் கருணையின் கோப்பையில் தேநீர் அருந்துகின்றன. ‘என்னை […]

Read more

கிருமி

கிருமி, சி.சரவணகார்த்திகேயன், உயிர்மை பதிப்பகம், விலை: ரூ.350 பெங்களூருவில் மென்பொருள் துறையில் பணியாற்றிவரும் எழுத்தாளர் சி.சரவணகார்த்திகேயனின் மூன்றாம் சிறுகதைத் தொகுப்பு இது. தொகுப்பில் உள்ள பத்து சிறுகதைகளும் 2020-ன் பெரும் பகுதியை விழுங்கிய கரோனா ஊரடங்கின்போது எழுதப்பட்டவை. பெருந்தொற்றுக் காலத்தின் அச்சமும் அவநம்பிக்கையும் வீட்டில் அடைந்துகிடக்கும் மனித மனங்களில் உருவாகும் வெறுமையும் பெருந்தொற்று இல்லாத காலங்களிலும் தவிர்க்க முடியாத உணர்வுகளாக இருப்பதைப் பிரதிபலிக்கும் கதைகள் என்று இவற்றை வரையறுக்கலாம். பெரும்பாலான கதைகளின் அடிநாதமாகக் காமம் கலந்தோடுகிறது. ‘ஜலபிரவேசம்’ உள்ளிட்ட ஒருசில கதைகளில் காமம் குறித்த […]

Read more

தமிழிசை : ஓர் எளிய அறிமுகம்

தமிழிசை : ஓர் எளிய அறிமுகம், புதுகை கு.வெற்றிச்சீலன், களம் வெளியீடு, விலை: ரூ.20. தமிழ்த் தேசிய அரசியல் மேடைகளில் உணர்ச்சிக் கொந்தளிப்போடு முழங்கும் கு.வெற்றிச்சீலன், இசை குறித்த ஆய்வுகளில் தோய்ந்து, அறிமுக நூலொன்றை எழுதியிருக்கிறார் என்பது ஆச்சரியம்தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இசைத்தமிழ் அறிஞரான தஞ்சை ஆப்ரகாம் பண்டிதரின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரைக் குறித்து எழுதிய ஒரு முகநூல் குறிப்பானது தொடர் கட்டுரைகளாக விரிந்து, தற்போது நூல் வடிவம் கண்டிருக்கிறது. 31 தலைப்புகளில் எழுதப்பட்ட இந்த அறிமுக நூல், சங்க காலம் தொடங்கி […]

Read more

நீங்கள் இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை?

நீங்கள் இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை?, இராம்குமார் சிங்காரம், தாய் வெளியீடு, விலை:ரூ.120. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பலர் வேலைவாய்ப்புகளை இழந்திருக்கிறார்கள். தொழிலில் முன்னேறுவதற்கான பாதைகள் தடைபட்டிருக்கின்றன. இந்தச் சூழலில் பல துறைகளில் நீண்ட அனுபவம் கொண்ட இராம்குமார் சிங்காரம் எழுதியிருக்கும் ‘நீங்க இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை’ என்னும் நூல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. ஒவ்வொருவரும் வருமானத்தை உயர்த்தி வசதியாக வாழ்வதற்கான 25 உத்திகளைத் தரும் 25 அத்தியாயங்கள் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு அத்தியாயமும் நான்கைந்து பக்கங்களில் சுருக்கமாக […]

Read more

எந்தையும் தாயும்

எந்தையும் தாயும், நரசய்யா, பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு, விலை: ரூ.230 ஒடிஷாவில் பிறந்தவரும், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவருமான நரசய்யாவுக்குத் தமிழிலும் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. கடற்படைக் கப்பல், விசாகப்பட்டினத் துறைமுகத்தில் தலைமைப் பொறியாளர், கம்போடியா புணர் நிர்மாணத்தில் பங்குபெற்றது, வங்கதேச விடுதலைப் போரில் பங்காற்றியது என இவருடைய பணி வாழ்க்கையைப் போல எழுத்து வாழ்க்கையும் விரிவானது. ‘எந்தையும் தாயும்’ என்று இவருடைய புதிய நூலில் சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தை விவரிக்கிறார் நரசய்யா. தன்னுடைய அனுபவங்களும், அவருடைய தாய் தந்தையரின் அன்றாட அனுபவங்களை அவர்கள் கதையாகச் […]

Read more

இலக்கியத்தில் விருந்தோம்பல்

இலக்கியத்தில் விருந்தோம்பல், இறையன்பு, கற்பகம் பதிப்பகம், விலை: ரூ.175. சங்கத் தமிழர் மரபின் தொடர்ச்சியாகக் கருதப்படும் நவீன வாழ்க்கையிலும் காதல், வீரம், விருந்தோம்பல், நட்பு போன்ற சொற்கள் முக்கியமானவைதான். வீட்டுக்கு வரும் முன் பின் அறிமுகம் இல்லாதவரை உபசரித்தல் தமிழர் பண்பாட்டில் சிறப்பானது என்ற எண்ணம் இன்றைக்கும் நிலவுகிறது. ஆனால், இன்று விருந்தோம்பலைக் கொண்டாடும் போக்கு தமிழ்ச் சமூகத்தில் நிலவுகிறதா என்ற கேள்வியையும் கேட்டுக்கொள்வோம். இந்தப் பின்னணியில், விருந்தோம்பலின் சிறப்புகளைச் சமகாலத் தமிழர்களிடம் நினைவுபடுத்திட வேண்டியுள்ளது. அந்தப் பணியை இந்த நூல் வழியாகச் செய்திருக்கிறார் […]

Read more

கொச்சிக்கட vs கும்மிடிபூண்டி

கொச்சிக்கட vs கும்மிடிபூண்டி, ஈழவாணி, பூவரசி பதிப்பகம், விலை: ரூ.250. கானவி, கண்ணன், நுவன், குழந்தை யாழி, ஆச்சி, லட்சுமி என்று மிகச் சில கதாபாத்திரங்களை வைத்து அற்புதமாக எழுதப்பட்டுள்ள நாவல் இது. நிகழ்கால நிஜமும் கடந்த கால வரலாறும் கேள்விகளாகவும் வேதனைகளாகவும் பதிவாகியிருக்கின்றன. கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத் திருத்தலத்தில் ஈஸ்டர் ஞாயிறு அன்று நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடங்கும் கதை, மடு மாதா தேவாலயத்துக்குச் சென்று லட்சுமியைப் பார்த்துவிட்டுக் குழந்தையுடன் கானவி திரும்புவதுடன் முடிகிறது. இடையில் புலிகளின் தகவல் தொடர்புப் பிரிவில் […]

Read more

கூடு

கூடு, கலைச்செல்வி,யாவரும் பதிப்பகம், விலை: ரூ.190. எந்த வாழ்க்கையையும் வாழப் பழகிக்கொள்ளும் பெண்களைத்தான் கலைச்செல்வி தம் புனைவுகளில் தொடர்ந்து முன்னிலைப்படுத்துகிறார். இவருடைய சிறுகதைகள் மொழியின் மீது மௌனத்தை ஏற்றுபவை. சமூக அறத்தை மீறும் நிகழ்வுகளுக்கான எதிர்வினைகளாகவும் இவரது புனைவுகளை உள்வாங்கிக்கொள்ளலாம். எல்லாக் கதைகளின் மீதும் ஒரு மெல்லிய மூடுபனி படர்ந்திருப்பது போன்ற தோற்றத்தைத் தருகிறது. தொடக்க காலக் கதைகளில் இந்தத் தன்மை இல்லை; ஒரு தெளிவான நிலமும் கதையும் இருந்தன. இந்தத் தொகுப்பில் தன்னையே அவர் கடந்திருக்கிறார். நன்றி: தமிழ் இந்து, 24/4/21 இந்தப் […]

Read more
1 7 8 9 10 11 44