சஹிதா

சஹிதா, கே.வி.ஷைலஜா, வம்சி புக்ஸ் வெளியீடு, விலை: ரூ.300. பெண் தன்னுடைய வாழ்க்கையில் மூன்று விடுதலைகளுக்கான போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. உடல் விடுதலை, சமூக விடுதலை, ஆன்ம விடுதலை. இதில் ஆன்ம விடுதலைக்குத் தான் எடுக்கும் முன்னெடுப்பையும் போராட்டத்தையும் முன்வைக்கிறது, மொழிபெயர்ப்பாளர் ஷைலஜாவின் முதல் நாவலான ‘சஹிதா’. துறவறமும் வீடுபேறும் ஆண்களுக்கானவை என்ற வழமையிலிருந்து விலகி, இறைமை என்பது பெண்களுக்குள் எப்போதுமே சூல் கொண்டியங்கும் பண்பு நிலை என்பதை இந்நாவல் உணர்த்துகிறது. தினம் ஐந்து முறை தொழுகை நடத்தும் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்த சஹிதாவுக்கு […]

Read more

விடுபட்டவர்கள்

விடுபட்டவர்கள்: இவர்களும் குழந்தைகள்தான், இனியன், நாடற்றோர் பதிப்பகம், விலை: ரூ.100. குழந்தைகள் நலனில் அக்கறையோடு இருக்கிறோமா?, பாரம்பரிய விளையாட்டுகளை அதன் வரலாற்றுடன் குழந்தைகளிடம் கொண்டுசேர்ப்பதையே வாழ்நாள் பணியாகச் செய்துவருபவர், குழந்தைகள் நலச் செயல்பாட்டாளர் இனியன். அது தொடர்பான கள அனுபவங்களை அப்படியே எழுத்தில் வடித்துள்ளார். குழந்தைகளுக்காகவே வாழ்கிறோம் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் பெற்றோர்கள் அவர்கள் நலனில், உரிமையில், பாதுகாப்பில் பெரிதாக அக்கறை கொள்ளவில்லை என்ற உண்மையானது அப்பட்டமாகவும் ஆதங்கத்துடனும் இந்நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தச் சமூகத்தில் மாற்றுத்திறன், ஆட்டிசம் மற்றும் ஹைப்பர்டென்ஷன், பார்வைக் குறைபாடு, காது […]

Read more

பத்து இரவுகளின் கனவுகள்

பத்து இரவுகளின் கனவுகள், நாட்சுமே சொசெகி, தமிழில்: கே.கணேஷ்ராம், நூல்வனம் வெளியீடு, விலை: ரூ.150. நாட்சுமே சொசெகி: கனவுகளைத் தியானிக்கும் எழுத்து கனவின் மாயத்துடன் புனைவுகளை உருவாக்குவதில் வெற்றிபெற்ற வெகு சிலரில் போர்ஹேஸும் ஒருவர். ‘நீங்கள் தூக்கத்திலிருந்து விழிக்கவில்லை, முந்தைய கனவொன்றில் விழித்திருக்கிறீர்கள், அந்தக் கனவு இன்னொரு கனவுக்குள் இருக்கிறது, அது இன்னொரு கனவுக்குள், இப்படியே முடிவற்றுப் போய்க்கொண்டிருக்கிறது…’ என்று ‘கடவுளின் எழுத்து’ கதையில் எழுதியிருப்பார். கனவை இலக்கியமாக்குவதில் போர்ஹேஸுக்கும் முன்னோடி ஜப்பானின் மிக முக்கியமான நவீனப் படைப்பாளிகளுள் ஒருவரான நாட்சுமே சொசெகி (1867-1916). […]

Read more

தொல்குடித் தழும்புகள்

தொல்குடித் தழும்புகள், செம்பேன் உஸ்மான், தமிழில்: லிங்கராஜா வெங்கடேஷ், கலப்பை வெளியீடு, விலை: ரூ.180. ஆப்பிரிக்காவின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராகப் பார்க்கப்படும் செம்பேன் உஸ்மானின் வாழ்க்கையே ஒரு நாவலைப் போல சுவாரயஸ்மானது. எழுத்தறிவற்ற தம் மக்களிடம் இலக்கியம் வழியாக நெருங்க முடியாததுதான் அவரை சினிமாவை நோக்கித் தள்ளியது. அது அவரை ஆப்பிரிக்க சினிமாவின் தந்தை எனும் அளவுக்கு இட்டுச்சென்றது. சினிமாவுக்குள் அடியெடுத்து வைப்பதற்கு முன்பாகவே அவருடைய மூன்று நாவல்களும், ‘தொல்குடித் தழும்புகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் வந்திருந்தன. பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட இந்தச் சிறுகதைத் […]

Read more

இலக்கியம் வளர்த்த இஸ்லாமியத் தமிழ்ச் சான்றோர்

இலக்கியம் வளர்த்த இஸ்லாமியத் தமிழ்ச் சான்றோர், எஸ்.சேகு ஜமாலுதீன், வானதி பதிப்பகம், விலை: ரூ.175. அரிதான ஆளுமைகளைக்கூட உரிய வகையில் அங்கீகரிக்கவும் கொண்டாடவும் வரலாற்றில் அவர்களை ஆவணப்படுத்தவும் தவறும் சமூகம் என்ற பெயர் தமிழ் முஸ்லிம் சமூகத்துக்கு உண்டு. இந்த அவப்பெயரைத் துடைத்தெறிய மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஒன்றாக ‘ஆலிம் முகம்மது சாலிஹ் கல்விக் குழும’த்தின் செயலர் எஸ்.சேகு ஜமாலுதீன் படைத்திருக்கும் நூலைக் குறிப்பிடலாம். அவரைக் கவர்ந்த பதினாறு இஸ்லாமியப் படைப்பாளிகளை வரிசைப்படுத்திக் கொண்டாடும் இந்நூல் நல்ல ஆவணமாகவும் வந்திருக்கிறது. சீறாப்புராணக் காப்பியச் சுவைச் கொண்டு, […]

Read more

அஞ்சலை அம்மாள்

அஞ்சலை அம்மாள், ராஜா வாசுதேவன், தழல் வெளியீடு, விலை: ரூ.250. அஞ்சலை அம்மாளுக்கு நம் தமிழக வரலாற்றில் நிறைய முக்கியத்துவங்கள் இருக்கின்றன. தனது வாழ்க்கையையும் சொத்துக்களையும் இந்தியாவின் விடுதலைக்காக அர்ப்பணித்தவர். சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் சிறைவாசம் ஏற்றவர். வயிற்றில் பிள்ளையைச் சுமந்தபடியும், பெற்றெடுத்த பிள்ளையோடும் சிறையில் இருந்த அனுபவங்கள் இவருக்கு உண்டு. காந்தி, ராஜாஜி, பெரியார், ஓமந்தூர் ராமசாமி, காமராஜர் என முக்கியமான தலைவர்களோடு அரசியல் ஆலோசனை நடத்தியவர். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். இப்படி அஞ்சலை அம்மாளைப் […]

Read more

பட்டக்காடு

பட்டக்காடு, அமல்ராஜ் பிரான்சிஸ், எழுத்துப் பிரசுரம் வெளியீடு, விலை: ரூ.599. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தில் பணியாற்றும் அமல்ராஜ் பிரான்சிஸின் முதல் நாவல் ‘பட்டக்காடு’. ஈழப் போரின் இறுதிக் காலகட்ட அனுபவங்களை மையமாக வைத்து அவர் ‘தினக்குரல்’ பத்திரிகையில் எழுதிய தொடர்தான் இப்போது நாவலாக உருமாறியிருக்கிறது. வன்னிக்கு வெளியே இருந்து போரை எதிர்கொண்ட தமிழர்களின் கதையாக இந்நாவல் விரிகிறது. அதாவது, வன்னியில் நடக்கும் சாவுகளைக் கண்டு பயந்து வாழ்பவர்களின் கதை. நன்றி: இந்து தமிழ், 7/09/2020 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

கடுவழித்துணை

கடுவழித்துணை, கமலதேவி, வாசகசாலை பதிப்பகம், விலை: ரூ.150. இறப்பு வீடுகளின் துயரம் நேரடியான கதைமொழியுடன் தமிழ்ச் சூழலில் அறிமுகமானவர் எழுத்தாளர் கமலதேவி. ‘சக்யை’, ‘குருதியுறவு’ என அடுத்தடுத்து ஒரே ஆண்டில் (2019) இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ‘கடுவழித்துணை’ (2020) இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. திருச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளே இவரது கதைகளின் நிலம். கிராமமும் நகரமும் கதைகளில் மாறி மாறி வருகின்றன. கதையின் திறப்பு ஏதாவதொரு ஒற்றைச் சொல்லில் மறைந்து கிடக்கும்படி எழுதுவது ஒரு வகை. அந்த மந்திரச் சொல்லைப் பிடித்துக்கொண்டுதான் மொழியால் […]

Read more

தடங்கள்

தடங்கள், எம்.ஏ.சுசீலா, மீனாட்சி புத்தக நிலையம், விலை: ரூ.225. பெண்களும் நெருக்கடிகளும் தன்னுடைய அனுபவங்களிலிருந்தே இந்த நாவலை எழுதியதாகச் சொல்கிறார் நாவலாசிரியர் எம்.ஏ.சுசீலா. தனது பேராசிரியர் பணியில் எதிர்கொண்ட பலதரப்பட்ட பெண்களை நாவலுக்குள் உலவவிட்டிருக்கிறார். நாவல் முழுக்கவும் நிறைந்திருப்பவர்கள் பெண்கள்தான். ஒவ்வொருவருக்கும் விதவிதமான பிரச்சினைகள். பெண்களின் கோணத்திலிருந்தே அவர்களுடைய பிரச்சினைகள் விவரிக்கப்படுகின்றன. பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கெல்லாம் ஆதார மையமாக ஆண்களே இருக்கிறார்கள். பெண்கள் தாம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை எப்படிச் சமாளிக்கிறார்கள், அந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியாமல் எப்படித் திணறுகிறார்கள் என்பனவற்றைச் சொல்வதே நாவலாசிரியரின் அக்கறையாக […]

Read more

மாடர்ன் சவுத் இந்தியா

மாடர்ன் சவுத் இந்தியா, ராஜ்மோகன் காந்தி, அலெப் புக் கம்பெனி, விலை: ரூ.799 பதினாறாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தொடங்கி 2018 வரையிலான காலகட்டத்தின் தென்னிந்திய வரலாற்றைச் சுருங்கக் கூறும் முயற்சியாக ராஜ்மோகன் காந்தியின் இந்நூல் அமைகிறது. 16-ம் நூற்றாண்டில் தக்காணப் பீடபூமியின் பீஜப்பூர், அகமத் நகர், கோல்கொண்டா, பிடார் சுல்தான்கள் ஒன்றிணைந்து, மத்திய காலப் பகுதியின் மிகப் பெரும் அரசான விஜயநகர ஆட்சிக்கு முடிவுகட்டினர். அதைத் தொடர்ந்து வலுகுன்றிய நாயக்கர்கள், சுல்தான்களின் ஆட்சிக் காலத்தில் இவர்களின் பரஸ்பரப் பகைமையை ஐரோப்பிய வர்த்தக கம்பெனிகள் […]

Read more
1 9 10 11 12 13 44