முக்திக்கு வழி

முக்திக்கு வழி, நரேஷ் குப்தா, தமிழில்: கே.சீ, சிபிஆர் பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.150 ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான நரேஷ் குப்தா, தமிழகத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் உறுப்பினர் எனப் பல முக்கியமான பதவிகளை வகித்தவர். அவர் எழுதிய ‘தி பாத் டு சால்வேஷன்’ எனும் புத்தகம் ‘முக்திக்கு வழி’ என்ற பெயரில் இப்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தியத் தத்துவச் சிந்தனைகளில் புலமை கொண்ட ஆளுமைகளின் கருத்துகளை எளிமையான முறையில் இந்தப் புத்தகத்தில் விவரித்திருக்கிறார். பல்லாயிரம் வருட வயது கொண்ட சிந்தனைகள் […]

Read more

பிச்சியின் பாடு

பிச்சியின் பாடு, பி.உஷாதேவி, அகநி வெளியீடு, விலை: ரூ.140 பி.உஷாதேவியின் தாய்மொழி மலையாளம். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் சிறுகதைகளை எழுதிவருகிறார். ‘வீடு பள்ளத்தில் இருக்கிறது’, ‘ஊதா வண்ண இலைகளின் பாடல்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளைத் தொடர்ந்து வெளிவந்துள்ள தொகுப்பு ‘பிச்சியின் பாடு’. வளர்ச்சியானது உறவுகளுக்குள் ஏற்படுத்தும் நுட்பமான விரிசலையும், அதை எதிர்கொள்ள முடியாத ஆண்களின் இயலாமையையும் முதல் தொகுப்பில் செறிவாக எழுதியிருந்தார். இந்த மூன்றாவது தொகுப்பு வருவதற்குள், கீழ்நடுத்தரக் குடும்பப் பெண்களின் பிரச்சினைகளை உணர்வுபூர்வமாக எழுதுவதில் பி.உஷாதேவியின் கை தேர்ந்திருக்கிறது. இந்தத் […]

Read more

முறையிட ஒரு கடவுள்

முறையிட ஒரு கடவுள், சர்வோத்தமன் சடகோபன், மணல்வீடு பதிப்பகம், விலை: ரூ.150.   தன்னைச் சுற்றியிருக்கும் உலகின் பலதரப்பட்ட மனிதர்களின் குணங்களிலிருந்தும், ஊடாடும் தொடர் காட்சிகளிலிருந்தும் தருணங்களைத் தனியாகத் தேடியெடுத்துச் சொல்லப்பட்டிருக்கும் சிறுகதைகளின் தொகுப்பு இது. நிகழ்வுகளின் வழியே நகர்ந்திடும் கதாபாத்திரங்களின் சகலவிதமான குணாதிசயங்களிலும் நுழைந்து அவர்களின் மன அடுக்குகளின் தன்மைகளை நுட்பமாகப் பதிவுசெய்திடும் புனைவின் வசீகரத்தை இந்தக் கதைகள் கொண்டிருக்கின்றன. கதைகள் நிகழ்ந்திடும் நிலத்தின் பின்னணியில் அரசியல், தத்துவம், பொருளாதாரம், மனப்பிறழ்வு ஆகியவை சார்ந்த உரையாடல்கள் வாசகர்களோடும் விவாதம் புரிகின்றன. தனிமனித அகம் […]

Read more

ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்

ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம், ஸ்ரீதர் சுப்ரமணியம், கோதை பதிப்பகம், விலை: ரூ.180 மதச்சார்பின்மை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கையா இல்லையா என்னும் விவாதம் தீவிரமாக முன்னெடுக்கப்படும் காலத்தில் அரசியலிலும் நிர்வாகத்திலும் மதச்சார்பின்மையைக் கடைப்பிடித்தல் என்னும் கோட்பாட்டின் முக்கியத்துவத்தையும், அதனால் உலகுக்குக் கிடைத்த பயன்களையும், மனித குலம் அடைந்த முன்னேற்றங்களையும் விளக்கும் நூல் இது. மதச்சார்பின்மை என்றால் என்ன என்னும் அடிப்படை விளக்கத்துடன் தொடங்கும் இந்நூல், மதச்சார்பின்மையால் விளைந்த நன்மைகளை விளக்கும் ஐந்து அத்தியாயங்களுடன் நிறைவடைகிறது. இடையில் உள்ள அத்தியாயங்கள் மதச்சார்பின்மைக்கு நேரெதிர் கொள்கையான […]

Read more

மூங்கில்

மூங்கில், சுஷில் குமார், யாவரும் வெளியீடு,விலை: ரூ.200 சுஷில்குமாரின் ‘மூங்கில்’ சிறுகதைத் தொகுப்பானது பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. தமிழ்ச் சிறுகதை, வாழ்க்கையிலிருந்து விலகி நகர்ந்துவரும் இந்தச் சூழலில் இந்தக் கதைகள் வாசிப்புக்கு ஆசுவாசம் அளிக்கின்றன. இந்தத் தொகுப்பில் 12 சிறுகதைகளும் வெவ்வேறு விதமான பின்னணியைக் கொண்டவை. சுந்தர ராமசாமி, நாஞ்சில்நாடன், ஜெயமோகன் கதைகளில் சித்தரிக்கப்பட்ட நாகர்கோவில் வட்டாரப் பகுதிகளின் யதார்த்தமான புதிய வாழ்க்கையை இந்தக் கதைகளில் பார்க்க முடிகிறது. நாகர்கோவிலின் இளம் தலைமுறையினரின் வாழ்க்கை முறை, அவர்களது புழங்குமொழி எனத் தத்ரூபமான […]

Read more

விரிசல்

விரிசல், கா.சிவா, வாசகசாலை பதிப்பகம், விலை: ரூ.150. இது கா.சிவாவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. கிராமத்திலிருந்து இளம் வயதிலேயே நகரத்துக்குக் குடிபெயர்ந்த ஒருவர், தன் பதின்பருவ நினைவுகளுடன் உரையாடுவதற்கான மொழி சாத்தியப்படும் சூழலில் எழுதப்பட்ட கதைகளாக இவற்றைக் கூறலாம். சொந்த நிலத்திலும் புலம்பெயர்ந்த நிலத்திலும் தன் இருப்பு என்னவாக இருந்திருக்கிறது என்பதைப் பின்னோக்கிப் பார்த்திருக்கும் புனைவுகளாகவும் இதைக் கருத வாய்ப்புள்ளது. தன் சொந்த உறவுகளால் ஏமாற்றப்படுகிறான் வேலன்; நண்பனால் ஏமாற்றப்படுகிறான் பிரபா; வாடிக்கையாளரால் ஏமாற்றப்படுகிறான் சங்கர். ஏமாற்றுவதும் ஏமாறுவதும் வாழ்க்கையின் ஒரு பகுதி. சங்கர் […]

Read more

ஏ.ஆர்.ரஹ்மான்: நவீன இந்தியத் திரையிசையின் அடையாளம்

ஏ.ஆர்.ரஹ்மான்: நவீன இந்தியத் திரையிசையின் அடையாளம், விஜய் மகேந்திரன், புலம் வெளியீடு, விலை: ரூ.150. தமிழ் சினிமா இசையை சர்வதேசக் கவனத்துக்கு எடுத்துச் சென்ற ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கை, திரைப்பயணம் குறித்த அறியப்படாத, சுவாரஸ்யமான, சில நேரம் ஆச்சரியப்பட வைக்கும் தகவல்களால் நிரம்பியுள்ளது ‘ஏ.ஆர்.ரஹ்மான்: நவீன இந்தியத் திரையிசையின் அடையாளம்’ நூல். தொலைக்காட்சி விளம்பரப் படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருந்த திலீப்பாக இருந்த காலம்தொட்டு, ரஹ்மானை ஒரு ரசிகராகப் பின்தொடர்ந்துவரும் விஜய் மகேந்திரன், ரசனையைத் தாண்டி ஒரு பத்திரிகையாளருக்கு இருக்க வேண்டிய சமநிலை நோக்குடன் இந்தக் கட்டுரைகளை எழுதியுள்ளார். […]

Read more

உடல்மொழியின் கலை

உடல்மொழியின் கலை, வெளி ரங்கராஜன், போதிவனம் பதிப்பகம், விலை: ரூ.120 கலை, இலக்கியம், நாடகம் தொடர்பான வெளி ரங்கராஜனின் சமீபத்திய கட்டுரைத் தொகுப்பு இது. நேரடிக் கட்டுரைகளும் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுமாக மொத்தம் 22 கட்டுரைகள். கலை வடிவங்களை ஆவணப்படுத்துவதன் வழியாக சமூக வரலாற்றைப் பேசும் புத்தகமாகவும் இந்நூலை வாசிக்க இடமுண்டு. பிரதிகள் சார்ந்ததாக மட்டுமல்லாமல் நபர்களும், அரசு நிறுவனங்களின் நடவடிக்கைகளும், சமூகத்தின் பிரதிபலிப்புகளும் விவாதமாகியிருப்பது இந்நூலின் தனித்துவம் எனலாம். மதங்களுக்கு உள்ளிருக்கும் குடும்ப அறநெறிகளும் ஏற்றத்தாழ்வுகளும் சமூக உளவியலுக்குள் ஏற்படுத்தியிருந்த துயரங்களிலிருந்து மக்கள் வெளியேறுவதற்காகவே […]

Read more

கொங்கு தேன்

கொங்கு தேன், சிவகுமார், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.225 நடிகர் சிவக்குமாருடன் ஒரு பயணம். திரைப்பட நடிகர் என்பதைத் தாண்டி சிவகுமார் எந்த ஒரு விஷயத்தையும் சுலபமாக எழுத்தில் கொண்டுவர நினைக்க மாட்டார். கொண்டுவந்துவிட்டார் என்றால் அது நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். ‘சிவகுமார் ஏன் எல்லோருக்கும் இனிய மனிதராக இருக்கிறார்?’ என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இந்த எழுத்துகளைப் படிக்கிற ஒவ்வொருவருக்கும், அந்தக் காரணங்கள் ஒவ்வொன்றாகப் புரியும். குறிப்பாக அவர் நினைவாற்றல், நன்றியுணர்வு, பிறந்த இடத்தை மறக்காமல் இருக்கிற […]

Read more

தெற்கிலிருந்து ஒரு சூரியன்

தெற்கிலிருந்து ஒரு சூரியன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.300. தமிழக சட்டமன்றத்தில் கருணாநிதி ஆற்றிய உரைகளிலேயே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது ‘மாநில சுயாட்சி’ தீர்மானத்தை நிறைவேற்றக் கோரும் அவருடைய 20.04.1974 உரை. நீண்ட அந்த உரையிலிருந்து சிறு பகுதி: “கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் பசுமைப் புரட்சியின் மூலமாக உணவுத் துறையிலே தன்னிறைவு பெற்று, இன்றைக்கு மற்ற மாநிலங்களுக்கு உணவுத் தானியங்களை வழங்கி, அவர்களுடைய பசியை ஓரளவு குறைக்கின்ற பெருமை உடையதாகத் தமிழக அரசு விளங்குகிறது. பியுசி வரை இலவசக் கல்வி, 1967-க்கு […]

Read more
1 8 9 10 11 12 44