கதைகளின் கதை

கதைகளின் கதை, ம. மணிமாறன், விஜயா பதிப்பகம், பக். 224, விலை 160ரூ. முப்பத்தியிரண்டு தமிழ் முன்னணி எழுத்தாளர்கள் பற்றிய விமர்சனப் பார்வையை நம் முன் வைக்கிறார், ம.மணிமாறன். சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் – மனிதர்களின் உணர்ச்சி பெருக்கை கதைகளமாக்கிய மவுனி – அகத்தின் கேள்வியை புறத்தே கண்டெழுதிய, ந.பிச்சமூர்த்தி – பெண் உலகின் மாயங்களை கண்டெழுதிய, கு.ப.நா., – தஞ்சை பெருவெளியின் அதீத கணங்களை, கதை ஆக்கிய, தி.ஜானகிராமன். மனிதகுலம் சுமக்கிற புறக்கணிப்பின் சொற்களை கதை ஆக்கிய, கிருஷ்ணன் நம்பி – அழகின் […]

Read more

மனம் ஒரு மகாத்மா

மனம் ஒரு மகாத்மா, முனைவர் பா. மஞ்சுளா, விஜயா பதிப்பகம், விலை 70ரூ. வள்ளலாரின் வழியை பின்பற்றி வரும் நூலாசிரியரான தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் பா. மஞ்சுளா, வள்ளலாரின் 43 அமுதுமொழிகளை தேர்வு செய்து, அதனை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நூலாக தொகுத்துள்ளார். அதில் ‘துணையினை தூயமனதோடு நேசியுங்கள்’, ‘மனிதரை நேசித்தால் இறைவன் உங்களை நேசிப்பான்’, ‘எல்லோரும் ஜெயிக்க நினைப்பவன், ஒருபோதும் தோற்பதில்லை’ போன்ற வரிகளுக்கு விளக்கம் தந்திருப்பது மனதை தொடுகிறது. தற்போதைய தண்ணீர் பஞ்சத்தை நினைவூட்டும் வகையில் ‘குடிக்கின்ற நீர்ள்ளக் […]

Read more

உலக சினிமா வரலாறு

உலக சினிமா வரலாறு, ஜாக் சி.எல்லுஸ், தமிழில் வேட்டை எஸ். கண்ணன், புதிய கோணம், பக். 608, விலை 495ரூ. சினிமாவின் துவக்க காலத்திருந்து துவங்கி, நவீன காலம் வரையில், ஆங்கிலத்தில் வெளிவந்த, ஜாக்சி எல்லீஸின் (A History of film) என்ற நூல், உலக சினிமாவின் வரலாற்றை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தும் நூல். இந்நூலை, வேட்டை எஸ்.கண்ணன் அழகு தமிழில் மொழிபெயர்த்து, தமிழ் வாசகர்களுக்கு அளித்துள்ளார். புதிய சாதனமான சினிமாவின் குழந்தை பருவம், 1895 – 1914 அமெரிக்க சினிமாவின் எழுச்சி, 1914 […]

Read more

சித்த வைத்தியத் திரட்டு

சித்த வைத்தியத் திரட்டு, தி.நா.அங்கமுத்து முதலியார், சங்கர் பதிப்பகம், பக். 264, விலை 225ரூ. பத்தியம், புடம், கிருதம், எரு, விறகு வகைகளையும், நிறுத்தல் அளவை நிறைகள், முகத்தல், பழங்கால சித்த மருத்துவ அளவைகளையும் பட்டியலிடுகிறது இந்நூல் நன்றி: தினமலர், 21/5/2017.   —-   தமிழ் மொழி அகரமுதலி, ஞானச்செல்வன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 280, விலை 120ரூ. மக்களிடம் பயன்பாட்டில் உள்ள சொற்களுக்கும், தமிழில் கலந்து கிடக்கும் தெலுங்கு, கன்னடம், பாரசீகம், அரேபியச் சொற்களுக்கும் பொருள் தருவதாக அமைந்துள்ளது இந்நூல். […]

Read more

மகாபாரதத்தில் வரமும் சாபமும்

மகாபாரதத்தில் வரமும் சாபமும், இ.எஸ்.லலிதாமதி, கலைஞன் பதிப்பகம், விலை 165ரூ. கலைஞன் பதிப்பக வைர விழாவை முன்னிட்டு, மலேஷியாவில் வெளியிட்ட, 60 நூல்களுள் இந்நூலும் ஒன்று. இந்நூல் மகாபாரதத்துள் இடம் பெற்றுள்ள வரம், சாபம் குறித்த, 30 கதைகளைத் தொகுத்துக் கூறுகிறது. இது, மகாபாரதம் முழுமையாகப் படித்தறியாதவர்கள், அது குறித்து அறிந்து கொள்ளும்படியும், படித்தோர் என்னென்ன வரங்கள், என்னென்ன சாபங்கள் உள்ளன என, தொகுத்து நோக்கி இன்புறுவதற்கும் ஏற்ற வகையில் சுவை நிறைந்த சொல்லாடலில் அமைந்துள்ளது. வரங்கள் என்று நோக்கும்போது நாராயணன், உத்தங்கர், சஞ்சயன், […]

Read more

வரலாற்றில் வன்னியர் மகாவம்சம்,

வரலாற்றில் வன்னியர் மகாவம்சம், ந. இறைவன், வன்னியகுல சத்திரிய மகாசங்கம், பக். 488, விலை 450ரூ. பிரமனின் தோளில் இருந்து வலிமையுடன் தோன்றிய ஷத்திரியர்கள், உலக ஒழுங்குமுறையை காக்கப் பிறந்தவர்கள் என்ற கருத்து அழுத்தமாக இந்நூலில் கூறப்பட்டிருக்கிறது. நன்றி: தினமலர், 21/5/2017.   —-   ஷீரடி சாயிபாபா, ஹோவர்ட் மாபெட், அமராவதி வெளியீடு, பக். 112, விலை 80ரூ. ஷீரடி சாயிபாபாவின் வரலாற்றைப் படிக்க, மனதில் பரவசம் பொங்கிப் பெருகும். காலத்தை வென்ற மகான் இவர் என்பதற்கு மாற்றுக் கருத்தே இல்லை என்கிறது […]

Read more

கனவுகளின் கையெழுத்து

கனவுகளின் கையெழுத்து, மு.மேத்தா, கவிதா, பக்.112, விலை 75ரூ. தேசப்பற்றுக்குப் புதுமையும், புனிதமும் குழைத்து, புது இலக்கணம் வகுத்து, வாசலைத் திறக்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 30/4/2017.   —-   சிறுவர்களுக்கான சிறந்த கதைகள், வைரவமணி, மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், பக். 128, விலை 70ரூ. இளம் மாணவர்களை சிரிக்க வைத்து சிந்தனையை தூண்டும் வகையில், 84 சிறுகதைகள் இடம் பெற்று சிறப்பு சேர்க்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 30/4/2017.

Read more

வஞ்சிக்கப்பட்ட தெற்கு மற்றும் மேற்கு தமிழகம்

வஞ்சிக்கப்பட்ட தெற்கு மற்றும் மேற்கு தமிழகம், சி.க.கருப்பண்ணன், செல்லம்மாள் பதிப்பகம், பக். 190, விலை 95ரூ. பிரிக்க வேண்டும் என்று வாதிப்பதாலேயே பிரிவினை வாதம் என்று எடுத்துக் கொள்ளாமல் பகுத்து ஆராய்ந்தால் இது ஒரு சிந்திக்க வைக்கும் நூல். நூலின் தலைப்பில் வெப்பமும் வேதனையும் இருப்பதுபோல் தோன்றினாலும், தமிழகத்தின் மேற்கு, தெற்கு பகுதி மக்களின் பின்தங்கிய நிலையைப் பல கோணங்களில் ஆராய்ந்து ஆதாரங்களோடு தன் தரப்பு வாதங்களை முன்வைக்கிறார் நூலாசிரியர், முன்னாள் சுங்கத்துறை அதிகாரி, சி.க.கருப்பண்ணன் ஐ.ஆர்.எஸ். ஒரு மாநிலத்தின் வளர்ச்சி, அந்த மாநிலத்து […]

Read more

முகம் மாறும் நிலா

முகம் மாறும் நிலா, வறீதையா கான்ஸ்தந்தின், நெய்தல் வெளியீடு, பக். 78, விலை 75ரூ. தமிழ் கண்ட அபூர்வம் சில, கடல் சூழலியல், வாழ்வியல் எழுத்தாளர்களில் முன்வரிசையில் வருபவர், முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின். இவர் வரைந்த அறிவியல், சூழலியல் பேசும் புத்தகம் இது. கடலில் கால் நனைத்து, முடிந்தால் குளித்து, ஆர்ப்பரிக்கும் அலைகளை கண்டு ஆச்சரியப்பட்டு, சில நிமிடங்களில் அங்கிருந்து கிளம்பி விடும் நமக்கு, கடலும், கடல் சார்ந்த வாழ்வும் அந்நியமாக அறியப்படுவதில் ஆச்சரியமில்லை. அந்த அடித்தட்டு மக்களுடன் வாழ்ந்து, அவர்களின் வாழ்பனுவத்தை, தன் […]

Read more

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் – 2

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் – 2, தொகுப்பும் பதிப்பும் பேரா.சு.சண்முகசுந்தரம், காவ்யா பதிப்பகம், பக். 922, விலை 900ரூ. எழுதி எழுதிக் குவித்த ஒரு மாபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன். 1920ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி தாலுகா, திசையன்விளையில் பிறந்தவர். 2006, நவ., 9ல் தன், 86வது வயதில் மறைந்தார். இவரது இயற்பெயர் கிருஷ்ணசுவாமி. புனைப்பெயர் வல்லிக்கண்ணன். ராசவல்லிபுரத்தில் உள்ள வல்லியும், கிருஷ்ணனின் தமிழ்ப் பெயரான கண்ணனும் சேர்ந்து வல்லிக்கண்ணன் ஆயிற்று. இத்துடன் நையாண்டி பாரதி, சொனாமுனா, சொக்கலிங்கம், கெண்டையன்பிள்ளை, கோரநாதன், மிவாங்கி, வேதாந்தி, பிள்ளையார், […]

Read more
1 119 120 121 122 123 240