ஆச்சரியம் நிறைந்த அமேசான் காடுகள்

ஆச்சரியம் நிறைந்த அமேசான் காடுகள், குன்றில் குமார், குறிஞ்சி, பக். 176, விலை 150ரூ. நூலாசிரியர் குன்றில் குமார் கூறும் கருத்துக்கள், அதிசயம். ஆனால், உண்மை என்ற நிலையில் விளக்கம் பெறுகின்றன. அமேசான் காடுகளில் காணப்படும் ஒரு வகை மரம் நடந்து கொண்டே இருக்கிறது. இப்படி நம்ப முடியாத அதிசயங்களும், வியப்பும், அமேசான் காடுகளில் ஏராளமாக உள்ளன. ‘அமேசான்’ என்றால் மரங்களை அழிக்க வல்லவன் என்று அப்பகுதிமக்கள் மொழியில் அர்த்தமாம். தென் அமெரிக்காவில், பிரேசில், பெரு, பொலிவியா, கானா, ஈக்வெடார், கொலம்பியா, வெனிசுலா ஆகிய […]

Read more

குற்றங்களே நடைமுறைகளாய்

குற்றங்களே நடைமுறைகளாய், ப. திருமலை, வாசகன் பதிப்பகம், பக். 224, விலை 150ரூ. பல்வேறு சமூக பிரச்னைகள் தொடர்பாக, பத்திரிக்கைகளில் வெளியான தகவல்களை தொகுத்து கட்டுரைகளாக உருவாக்கியுள்ளார் ஆசிரியர். தமிழகத்தின் கல்வி அறிவு, குற்ற செயல்கள், விவசாய பிரச்னை, மழை, சூழியல் வன உயிர்கள் பாதுகாப்பு என, பல துறைச் சார்ந்த, 25 கட்டுரைகள், இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. ‘தமிழகத்தில், கடந்த, எட்டு ஆண்டுகளில், மட்டும் காணாமல் போன விவசாய நிலம், 13 லட்சம் ஏக்கர் ஆகும். ‘காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, […]

Read more

ஐங்குறுநூற்று உருபனியற் பகுப்பாய்வு

ஐங்குறுநூற்று உருபனியற் பகுப்பாய்வு, முனைவர் அ.காமாட்சி, முனைவர் செ.கல்பனா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 428, விலை 325ரூ. ஐங்குறுநூற்றில் உள்ள ஐந்நூறு பாடல்களையும் உருபன் அடிப்படையில் பகுத்து, உரையுடன் இந்த நூலின் முதற்பகுதி தருகிறது. இரண்டாம் பகுதியில் ஐங்குறுநூற்றில் வரும் சொற்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு, அகர வரிசைப்படுத்தப்பட்டு இலக்கணப் பொருளும், ஆங்கில இலக்கண விளக்கமும், தமிழ்ச் சொல்லும் வழங்கப்பட்டுள்ளன. நான்காம் பகுதியில் சொற்கோவையில் இடம் பெற்றுள்ள சொற்கள் வரும், ஐங்குறுநூற்றுப்பாடல் எண்ணும், அடி எண்ணும் தரப்பட்டுள்ளன. ஐந்தாம் பகுதியில் ஐங்குறுநூற்றுச் சொற்களுக்கு […]

Read more

தடம் பதித்த தமிழறிஞர்கள்

தடம் பதித்த தமிழறிஞர்கள், பேராசிரியர் இராம. குருநாதன், விழிகள் பதிப்பகம், பக். 128, விலை 120ரூ. நுணுக்கம் மிக்க தகவல்கள் சிறந்த சன்மார்க்கம் ஒன்றே பிணி, மூப்பு, மரணம் சேராமல் தவிர்த்திடுங்கான்’ என, வள்ளலார் வலியுறுத்திய மரணமிலாப் பெருவாழ்வை, ‘மேதினியில் மரணமில்லை’ என்னும் பாரதி (பக்.17) ஒப்பிட்டுத் தொடங்கி, வள்ளலாரும் பாரதியும் கட்டுரை முதல், ‘நான் உடலால் என் தந்தையின் மகன், உள்ளத்தால் திருவள்ளுவரின் மகனாக இருக்கிறேன்’ என்ற ‘மு.வ.,வின் படைப்பில் காந்தியக் கருத்தியல்’ ஈறாக, 10 தமிழறிஞர்கள் பற்றிய நுணுக்கமான கட்டுரைகளின் தொகுப்பு […]

Read more

பகவத் கீதை சிந்தனைகள்

பகவத் கீதை சிந்தனைகள், காந்தாமணி நாராயணன், தென்றல் நிலையம், பக். 96, விலை 50ரூ. எளிமையான நடையில் எழுதப்பட்ட இந்நூல், ‘தர்மசக்தி’ என்ற வார இதழில் தொடர்ந்து ஒரு ஆண்டிற்கும் மேலாக வந்தது. அந்தத் தொகுப்பு தான், இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளது. மனதிற்கு அமைதியையும், ஆன்மிக அனுபூதியையும் கொடுக்கக் கூடிய நூல் பகவத் கீதை. இதில் கூறப்பட்டுள்ள உண்மைகள் எல்லா காலத்திற்கும் பொருந்தும். ‘நம் மனதில் உள்ள கெட்ட எண்ணங்களைப் போக்குவது, நெற்பயிர்களுக்கு இடையே முளைத்து இருக்கும் களைகளை எடுப்பது போல், நல்ல […]

Read more

இணைந்த கல்வி உருவாக்கம்

இணைந்த கல்வி உருவாக்கம், டாக்டர் கி.உமா மகேஸ்வரி, சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 160, விலை 100ரூ. அனைவருக்கும் தொடக்கக் கல்வி, அனைவருக்கும் உயர்நிலைக் கல்வி, அனைவருக்கும் உயர்கல்வி என்னும் எழுச்சிமிக்க வாசகங்கள், இந்த 21ம் நூற்றாண்டில், இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. கல்விச் சிந்தனைகளும், கோட்பாடுகளும் ஆங்கிலத்தில் இருப்பதால், அனைவருக்கும் அது எளிதில் சென்று சேராமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அவரவர் தாய் மொழியில், கல்விச் சிந்தனை பரவ வேண்டும் என்னும் உயர் நோக்கத்தில் தமிழில் உருவாக்கப்பட்டு உள்ளது இந்நூல். செவித்திறன், பேச்சுத் திறன், […]

Read more

தகப்பன் சாமி

தகப்பன் சாமி, ராமசுப்பு, வித்யுத் பப்ளிகேஷன்ஸ், பக். 114, விலை 100ரூ. சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து முருகன் தோன்றியது விசாக நட்சத்திரத்தில். எனவே முருகனை, விசாகன் என்றும் அழைக்கின்றனர். கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால், கார்த்திகேயன் எனப்படுகிறான். சூரனை வெல்வதற்காகப் படைக்கப்பட்ட முருகன், வீரபாகு உட்பட, ஒன்பது வீரர்களின் துணையுடன், சக்தி கொடுத்த வேல் கொண்டு தாரகாசுரனையும், சிங்கமுகனையும் மற்றும் சூரனையும் அழிக்கிறான். தீபாவளியும், திருக்கார்த்திகையும் ஒரே விழாக்கள் என்றும், பங்குனி உத்திரத்தில் வள்ளியை, முருகன் மணம் புரிந்தான் முதலான தகவல்களை, இந்த நூல் எடுத்துரைக்கிறது. […]

Read more

நெல்லை வரலாற்று சுவடுகள்

நெல்லை வரலாற்று சுவடுகள், முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா, பக். 244, விலை 240ரூ. திருநெல்வேலி சீமைப் பற்றிய, சிறு சிறு, பல அரிய செய்திகளை, இந்நூலுள் தொகுத்து வழங்கி உள்ளார், நூலாசிரியர். தென்கயிலை எனவும், பொதிகைமலை எனவும் போற்றப்படும், அகத்தியர்மலை முதல், அம்பாசமுத்திரத்தில் துண்டிக்கப்பட்ட தண்டவாளம் ஈறாக இருநூற்றுக்கும் மேற்பட்டச் செய்திகளை தரும், அரிய தகவல் களஞ்சியமாக திகழ்கிறது இந்நூல். ‘ நெல்லை மாவட்டத்தின், பண்பாட்டின் சின்னங்களாக விளங்கும் கோவில்கள், கோபுரங்கள், அரண்மனைகள், தேவாலயங்கள், நீரூற்றுகள், அருவிகள், ஆறுகள், பாலங்கள், விலங்குகளின் சரணாலயங்கள், சடங்குகள், […]

Read more

வா நம் வசப்படும் மணிக்கட்டுரைகள்

வா நம் வசப்படும் மணிக்கட்டுரைகள், அ. கோவிந்தராஜ், வானதி பதிப்பகம், பக். 174, விலை 110ரூ. வீதிகள் தோறும், ஆங்கிலக் கல்விக் கூடங்கள் நிரம்பியுள்ள நிலையில், கற்றல், கற்பித்தல் என்பது, ஆசிரியர், மாணவர்கள் என இருதரப்பிற்குமே, பெரும் சுமையாகவே உள்ளது. கல்வி என்பது, பொருளீட்டும் முதலீடாகவே கருதப்படும் அளவுக்கு சமூக மாந்தரின் சிந்தனை சுருங்கி விட்ட நிலையில், கற்றலும், கற்பித்தலும் எப்படி இருக்க வேண்டும் என்பதை, நன்னூல் ஆசிரியர் பவணந்தி முனிவர் எழுதியவற்றிலிருந்து மேற்கோள் காட்டி, வகுப்பறை ஒழுக்கங்களை முதல் பத்து கட்டுரைகளில், செம்மையுடன் […]

Read more

வானதியின் எண்ணச் சிறகுகள்

வானதியின் எண்ணச் சிறகுகள், வானதி சந்திரசேகரன், விஜயா பதிப்பகம். கல்லூரி காலத்தில், கவிதாயினியாக மலர்ந்தவர்; பின், குடும்பத்திற்காக, 24 ஆண்டுகளை ஒதுக்கி, கவிதையை ஒதுங்கியிருந்தவர், குடும்பத்தார் தந்த உற்சாகம் காரணமாக, தற்போது, நிறைய கவிதைகள் எழுதி வருகிறார். இடைப்பட்ட, 24 ஆண்டுகளில் நீர்த்துப் போகாதிருக்கும் இவரது வளமான தமிழால், பல விஷயங்களை பாடியிருக்கிறார். அதிலும், கரிசல் காடு, களிறுகளும், கயவர்களும் உள்ளிட்ட, பல கவிதைகள் அருமை! கவிதையை, வெறும் அலங்காரத்திற்கு பயன்படுத்தாமல், சுற்றுப்புறச்சூழல், மதுவின் பாதிப்பு, தவறான உணவு வகை, வனங்கள் அழிப்பின் அவலங்கள் […]

Read more
1 118 119 120 121 122 240