ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், பா.சு.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.200. இறைவனின் அன்பு எல்லையில்லாதது. படித்தவர், உயர்குலத்தவர் என்றெல்லாம் இறைவன் பகுத்தறிந்து அன்பை தருவதில்லை; பெறுவதும் இல்லை. எளிமையும், எல்லையில்லா சரணாகதியும் தான் இறைவனை மனித உடலுக்கு ஒன்றச் செய்கிறது. அதிலுள்ள உயிரை உருக்கி தன்னை நோக்கி வரச் செய்கிறது. படிக்காவிட்டாலும் எளிமையான காளி பக்தியால் தன்னை உயர்த்திய ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றிய வரலாறு இது. காளியின் அருளால் அனைத்து மதங்களின் சாராம்சங்களையும் முழுமையாக அறிந்தவர். அனைத்தும் காட்டும் வழி ஒன்றே […]

Read more

தென்கிழக்குத் தென்றல் தாவோ – சூபி – ஜென்

தென்கிழக்குத் தென்றல் தாவோ – சூபி – ஜென், வெ.இறையன்பு, விஜயா பதிப்பகம், விலைரூ.360. நுட்பமான பொருளை உணர்த்துவது ஜென் தத்துவமும், அதை தாங்கி நிற்கும் சிறுகதைகளும். அமைதி, ஒற்றுமை, கருணை, சமத்துவத்தை போதிப்பது, சூபியிசம். கருணை, அடக்கம், பணிவு போன்ற மகத்தான அறங்களை எளிய கோட்பாடாக விளக்குவது தாவோயிசம். இந்த மூன்று உயர் நெறிகளையும் அறிந்து சிந்தனை தெளிவுடன் பகிர்ந்துள்ள நுால். மனதின் நுண்ணிய ஆற்றலை மேம்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது. மூன்று தத்துவங்களும் தனித்தனி தலைப்புகளில் தொகுத்து எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு தத்துவத்திலும் ஆர்வமுள்ள […]

Read more

ஓம் சக்தி!

ஓம் சக்தி! தமிழக சக்தி பீடங்கள், பிரபு சங்கர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.160. ஓம் சக்தி என்ற இந்த புத்தகத்தில் அம்மன்களின் வரலாறும், சிறப்பும் தொகுக்கப்பட்டு உள்ளது. அனைத்திற்கும் ஆதியானவள் அன்னை காமாட்சி காஞ்சியிலே குடியிருக்கும் விதம், ஆதிசங்கரர் கோவிலை அமைத்த விதம், தீய சக்திகளிடம் இருந்து பக்தர்களை காத்தருளிய கருணை ஆகியவற்றை ஆசிரியர் பிரபுசங்கர் குறிப்பிடுகிறார். அன்னை காமாட்சியின் அருள் கிடைப்பதற்கான ஸ்லோகங்களையும் விவரிக்கிறார். இரண்டாவதாக அன்னை மீனாட்சியின் அருளை புத்தகத்தில் வாரி வழங்குகிறார். அன்னையின் வரலாறு, மதுரையின் […]

Read more

ஜோதிடத்தை எப்படி புரிந்து கொள்வது?

ஜோதிடத்தை எப்படி புரிந்து கொள்வது?, க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலைரூ.200. ‘டெலஸ்கோப்’ பார்த்திருக்கீங்களா? ‘இல்லை… எனக்கு, ‘பைனாக்குலர்’ தான் தெரியும்… மொட்டை மாடியிலிருந்து, நாலு தெரு தள்ளி இருக்கிற வீட்டின் ஜன்னல் வழியே, உள்ளே உத்துப் பார்ப்பேன்…’ என, வாயிலிருக்கும் 32ம் தெரிய சிரிக்கிறீங்களா… நீங்களாக எழுதி வைத்துள்ள உங்கள் தலைச் சுழி அப்படி! அப்படி உத்துப் பார்த்து நீங்கள், ‘வாங்கி’க் கட்டிக் கொண்டால், அதுவும் உங்கள் தலைச் சுழியே!‘டெலஸ்கோப் வாங்கத் தோணவில்லை; பைனாக்குலர் வாங்கும் வரை தான் அறிவு இருக்கிறது’ என்பதெல்லாம், நீங்களாகவே, […]

Read more

பன்முகப் பார்வையில் தமிழிலக்கியங்கள்

பன்முகப் பார்வையில் தமிழிலக்கியங்கள், ரம்யா, அகலன் வெளியீடு, விலைரூ.100. தமிழிலக்கியங்களைப் பன்முகப்பார்வையோடு ஆய்வு செய்யும் நோக்கில், 13 கட்டுரைகள் நுாலை அணி செய்கின்றன. குறுந்தொகையும் ஆண் மொழியும் பெண் மொழியும், தமிழச்சி குறுங்காவியத்தில் பெண் விடுதலை, பழங்குடி பெண்களின் சுயாட்சி தன்மை உட்பட, ஏழு கட்டுரைகளை ரம்யா வரைந்திருக்கிறார்.தொல்காப்பியர் உரிப்பொருளும் பொருந்தா மெய்ப்பாடும், கம்பனில் அருமறையாட்சி, வாணிதாசன் கவிதைகளில் பொதுவுடைமை உட்பட பல கட்டுரைகளை ஜவகர் எழுதியுள்ளார். பன்முக நிலையில் ஆய்வுப் பார்வையை விசாலமாக்கியுள்ள நுால். – ராமலிங்கம் நன்றி: தினமலர், 16/5/21 இந்தப் […]

Read more

உடுமலை வரலாறு

உடுமலை வரலாறு, பதிப்பக வெளியீடு, மணிமேகலை பிரசுரம், விலைரூ.500 உடுமலை என்ற ஊரைப் பற்றிய தகவல்கள் நிரம்பிய நுால். அவ்வூரின் பல்வேறு பெருமைகளை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. ஊர் வளர்ந்த வரலாறு பற்றிய குறிப்பிடத்தக்க செய்திகளைத் தொகுத்து வழங்கியுள்ளது. மலைகளின் ஊடே இருப்பதால் உடுமலை. உடு என்பது விண்மீனைக் குறிக்கும். எத்திசையில் இருந்து வந்தாலும் விண்மீன் தென்மலைக்கு அடையாளமாக இருந்து வருவதால், உடுமலை என்ற பெயர் பூண்டதாகச் சொல்லப்படுகிறது. சங்க காலத்தில் உதியன் மரபினர் ஆண்டதான குறிப்புண்டு. அங்கு கிடைத்த காசுகளும், தாழிகளும், நடுகற்களும், […]

Read more

உலகப் பெரும் புலவர் வீரமாமுனிவர்

உலகப் பெரும் புலவர் வீரமாமுனிவர், முதுமுனைவர் பால் வளன் அரசு, கதிரவன் பதிப்பகம், விலைரூ.120. வீரமாமுனிவர் இத்தாலி நாட்டில் இருந்து தமிழகத்துக்கு, 18ம் நுாற்றாண்டில் வருகை தந்தவர். தன் பெயரைத் தைரியநாதர் என்று ஆக்கியவர். மதுரைப் புலவர் பெருமக்கள் வீரமாமுனிவர் என்றும், திருமதுரைச் செந்தமிழ்த் தேசிகர் என்றும் அழைத்து மகிழ்ந்தனர். தேம்பாவணி, அன்னை அழுங்கல் அந்தாதி, திருக்காவலுார் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை, அடைக்கல மாலை, பெரியநாயகி மேல் பெண் கலிப்பா ஆகியவற்றை படிப்போர், வீரமாமுனிவரின் இலக்கிய ஆளுமையை உணர முடியும்.இந்த நுால் ஒரு இலக்கியப் […]

Read more

உண்மை வாரிசு

உண்மை வாரிசு, ப.பாலசுப்ரமணியன், சங்கர் பதிப்பகம், பக். 152, விலை 150ரூ. திருநங்கையை மையமாக வைத்து எழுதப்பட்ட நாடக நூல். அரவாணிகள் என்று சொல்லும் பெயர் காரணமும் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. அத்துடன் வெற்றி பெற்ற திருநங்கை பட்டியலும் சொல்லப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக அரவாணியாக பிறந்து பெற்றோருக்கு தலைக்குனிவு வரக்கூடாது என்று வீட்டை விட்டு விலகிய பின் அதிர்ஷ்டவசமாக, தொழில் அதிபரின் வாரிசகாக ஆகி, திருநங்கையர் தலைநிமிர வழி காட்டுவதுடன், தன்னை வெறுத்து ஒதுக்கிய பிறந்த குடும்பத்தை சீராக்கியதை அழகாக சித்தரித்துள்ளார். -சீத்தலைச்சாத்தனார். நன்றி: தினமலர், 16/5/21. […]

Read more

அறவாணர் திறனுரைகள்

அறவாணர் திறனுரைகள், க.அ.அறிவாளன், தமிழ்க் கோட்டம், விலைரூ.180. திறனாய்வு உலகத்தில் புதிதாக வந்துள்ளது இந்த நுால். ஐம்பத்தொன்பது நுால்கள் பற்றிய திறனாய்வுக் கருத்துரைகளின் தொகுப்பு. க.ப.அறவாணனின் காலத்திற்குப் பின் வெளிவந்துள்ளது. படைத்துள்ள திறனாய்வுரைகள் அனைத்தையும் தொகுத்து நன்கு வடிவமைத்து வெளியிட்டு உள்ளனர்.தொடக்க நிலை எழுத்தாளர் முதல் புகழ்பெற்ற எழுத்தாளர் வரை பேதம் இல்லாமல் திறனாய்வு வழங்கியுள்ளார் அறிஞர் அறவாணன். தந்தையின் நினைவைப் போற்றும் வகையில் மகன்கள் எடுக்கும் முயற்சி பாராட்டத்தக்கது. ஒரே புத்தகத்தில் ஐம்பத்தொன்பது புத்தகங்களைப் படிக்க முடியும் என்பதற்கு இந்தத் திறனுரைகள் சான்று […]

Read more

பெருங்கவிக்கோவின் உலகத் தமிழ்ச்சுவடுகள்

பெருங்கவிக்கோவின் உலகத் தமிழ்ச்சுவடுகள், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், கவிஅரசன் பதிப்பகம், விலை 999ரூ. கவிதை உலகில் சாதனைகள் படைத்து வரும் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், தனது 86 – வது பிறந்தநாளையொட்டி இந்த நூலை வெளியிட்டு இருக்கிறார். உலகம் முழுவதும் உள்ள அறிஞர்கள், பெரியோர்கள் பல ஆண்டுகளில் அவருக்கு எழுதிய கடிதங்களை எல்லாம் சேகரித்து வைத்து இருக்கிறார். அவற்றில் 600க்கும் மேற்பட்ட கடிதங்களைத் தொகுத்து இந்த நூலை உருவாக்கி இருக்கிறார். இந்தக் கடிதங்கள், பெருங்கவிக்கோவின் கவிதைகள், காப்பியங்கள், இலக்கியங்கள், மொழிபெயர்ப்புகள், பயண நூல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து […]

Read more
1 25 26 27 28 29 240