வெள்ளித்திரைக்கேற்ற கதைகள்

வெள்ளித்திரைக்கேற்ற கதைகள், ஆர்.மகேந்திரகுமார், மணிமேகலை பிரசுரம், விலைரூ.230. மூன்று திரைப்படத்திற்கான மூலக்கதை தான் இந்நுால். அதிகார மையம், கூடா நட்பு, குற்றம் என்றும் குற்றமே ஆகிய தலைப்புகள் கொண்ட கதைகள் சுவாரசியமாக உள்ளன. உடல் உறுப்பு தான மோசடி, அரசியல் நகர்வு, ஏமாற்றுதல், அதிகாரிகளின் சுயநலம், நட்பு, குடும்பம் என, பல அம்சங்களை உணர்த்துகிறது. சினிமா இயக்கும் ஆசையுள்ளோருக்கு உதவும். – டி.எஸ்.ராயன். நன்றி: தினமலர், 22/11/20. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030817_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

ஸ்ரீ விநாயக புராணம்

ஸ்ரீ விநாயக புராணம், வேணு சீனிவாசன், சங்கர் பதிப்பகம், விலைரூ.150 வியாசர் எழுதிய பதினெட்டு புராணங்களில் விநாயக புராணம் உபபுராணம் ஆகும். பிருகு முனிவர், வேதவியாசரிடம் கேட்ட விநாயக புராணத்தை வடமொழியில் பாடினார். அதைப் பின்பற்றி, கச்சியப்ப முனிவர் தமிழில் பாடினார். இந்நுாலில், 38 பகுதிகள் உள்ளன. பிரம்மாவிடம், வியாசர் விநாயகர் சரிதம் கேட்டது, அரக்கர்களை அழித்த ஆனைமுகன் குறித்து எழுதியவை சுவையாக உள்ளன. – டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 22/11/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

ஔவைக் குறள் மூலமும் உரையும்

ஔவைக் குறள் மூலமும் உரையும், ஈ.சுந்தர மாணிக்க யோகீஸ்வரர், அழகு பதிப்பகம், விலைரூ.185, வீட்டு நெறிப்பால், திருவருட்பால், தன்பால் என்னும் மூன்று பிரிவுகளுடன், 31 அதிகாரங்களைக் கொண்டுள்ளது அவ்வைக் குறள். அதிகாரத்துக்கு, 10 வீதம், 310 குறட்பாக்கள் அமைந்துள்ளன.பதவுரை, கருத்துரை, விசேஷவுரை என்னும் மூன்று பிரிவுகளில் உரை வழங்கியுள்ளார். ஒவ்வொரு அதிகாரத்திற்கும் விளக்கம் வழங்கி உள்ளதோடு, மேற்கோளாகப் பட்டினத்தார், வள்ளலார் பாடல்களையும் வழங்கியுள்ளார். இந்தப் பாடல்களிலிருந்து உரையாசிரியரின் புலமை புலப்படுகிறது. திருவள்ளுவர் போல், அவ்வையாரும் குறட்பாக்களைப் படைத்துள்ளார் என்பதை இந்த நுால் உணர்த்துகிறது. இந்த […]

Read more

தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் – பாகம் 5

தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் – பாகம் 5, தமிழ்வாணன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.440 எளிய தமிழ் நடையில் புதினங்கள் படைத்த பெருமைக்கு உரியவர் தமிழ்வாணன். துப்பறியும் புதினங்களுக்கு முன்னோடியாக கொடிகட்டிப் பறந்தவர். மர்ம நாவல்கள், துப்பறியும் நாவல்கள் என்று ஆர்வத்தைத் துாண்டும் எழுத்து நடைக்குச் சொந்தக்காரர். சங்கர்லால் என்னும் துப்பறியும் பாத்திரத்தை உருவாக்கிப் பல நாவல்களைப் படைத்தவர், சொந்தப் பெயரிலேயே, ‘தமிழ்வாணன் துப்பறிகிறார்’ என்றும் படைத்துள்ளார். பெர்லின், டோக்கியோ, சிகாகோ முதலான அயல்நாட்டு நகரங்களின் பெயர்களை, தமிழகத்தில் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் அறிமுகம் செய்தவர் […]

Read more

இந்திய பாரம்பரியத்தில் சுவை

இந்திய பாரம்பரியத்தில் சுவை, முனைவர் லட்சுமி ராமசுவாமி, ஸ்ரீ முத்ராலயா, விலைரூ.500 பிரபல நடனக் கலைஞர் லட்சுமி ராமசுவாமி கைவண்ணத்தில் உருவாகியுள்ள அரிய ஆய்வு நுால். தமிழ் மற்றும் சமஸ்கிருத பாரம்பரியங்களில், ‘சுவை’ பற்றிய ஒப்பீட்டை வழங்குகிறது. ஆடற்கலை பற்றிய சங்க கால சாத்தனாரின் கூத்த நுாலை, பல சமஸ்கிருத நுால்களோடு ஒப்பாய்வு செய்து, அரிய தகவல்களை தந்துள்ளார். நாட்டியக்கலை நுணுக்கங்களை கூறுவதாக இருந்தாலும், நாட்டியக் கலையையே அறியாதவர் கூட புரியும் வகையில் எளிமையாக தந்திருப்பது பாராட்டத்தக்கது. நடனக் கலையில் மிளிர விரும்புவோருக்கான ஆதார […]

Read more

திருவள்ளுவரின் இன்பியல் கோட்பாடுகள்

திருவள்ளுவரின் இன்பியல் கோட்பாடுகள், ஆ.இரத்தினம், கலைக்கோ, விலைரூ.140 திருக்குறள் ஆராய்ச்சி என்பது ஒரு தொடரோட்டம். திருக்குறளில் காணப் பெறும் கருத்துகளை உள்ளம் சார்ந்த இன்பியல், சொல் சார்ந்த இன்பியல், செயல் சார்ந்த இன்பியல் ஆகிய மூன்று கோட்பாடுகளை விளக்குகிறது. திருக்குறளில் ஆழ்ந்த ஈடுபாடுகொண்டவரால் எழுதப்பட்டுள்ளது. வள்ளுவர் வைதீக மத எதிர்ப்பாளர் என்பது இவரது துணிபு. இவ்வகையில், துறவு அதிகாரத்தை இவர் அணுகியுள்ள முறை புதியது. முன்னோரின் கருத்துகளை ஏற்றும், மறுத்தும் தடை விடைகளால் நிறுவியும், துணிந்து வலியுறுத்தி இருப்பது பாரட்டும்படி உள்ளது. குடிசெயல் வகை […]

Read more

தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் பாகம் – 4

தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் பாகம் – 4, தமிழ்வாணன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.610 தொப்பி, கறுப்புக் கண்ணாடி என்ற அடையாளங்களுடன் பிரபலமான தமிழ்வாணன் படைத்த இரும்புக் கை மனிதன், கருகிய கடிதம், பேய், ஒற்றைக்கண் மனிதன், சீன ஒற்றர்கள், மீனழகி ஆகிய மர்ம நாவல்களின் தொகுப்பு நுால். ஏற்கனவே தொடர்கதையாக வாசித்தவர்கள், இப்போது படித்தாலும் மெய் சிலிர்க்கச் செய்யும். எளிமையான உரைநடையைப் பயன்படுத்தும் வல்லமை மிக்கவர் தமிழ்வாணன். அவர் எழுதிய வாக்கியங்கள் நான்கு, ஐந்து சொற்களுக்குள் இருக்கும். பல தொடர்கள் ஒரு சொல்லாகவே அமைந்திருக்கும். […]

Read more

சிலேட்டுக்குச்சி

சிலேட்டுக்குச்சி, சக.முத்துக்கண்ணன், பாரதி புத்தகாலயம், விலைரூ.110 மாணவ – மாணவியரோடு செலவிடும் கொடுப்பினை, ஆசிரியர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும். அவர்களின் உளவியல் அனுபவங்களை, ஒரு ஆசிரியரால் தான் உள்வாங்க முடியும். அரசு பள்ளி ஆசிரியராக பணி புரிந்து, மாணவர்களின் வாழ்வியலை உள்வாங்கி, கட்டுரை தொகுப்பாக வெளியிட்டுள்ளார். ‘என்ன சிரிப்பு வேண்டியிருக்கு..’ என துவங்கி, ‘அவன விட்ருங்க பாஸ்..’ என முடியும், 17 கட்டுரைகள் முழுதும் சேட்டைகள் தான். கட்டுரைகள் பள்ளி காலத்திற்கு இழுத்துச் செல்கின்றன. பழைய இலக்கியம் முதல், நவீன இலக்கியம் வரை வாசித்த […]

Read more

திருமங்கை ஆழ்வார்

திருமங்கை ஆழ்வார்,முகிலை இராசபாண்டியன், முக்கடல், விலைரூ.80 திருமாலின் அருள் பெற்ற பன்னிரு ஆழ்வார்களில் பெரிதும் கவரும் நன்கலியன் திருமங்கை ஆழ்வாரை படம் பிடித்துக் காட்டுகிறது. திருமால் பற்றிய அறிமுகம், ஆழ்வார்கள் பற்றிய ஆய்வுடன் துவங்குகிறார். பத்து ஆழ்வார்களுடன், மதுரகவியும், ஆண்டாளும் பின்னர் சேர்க்கப்பட்டனர் என்கிறார். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில், 3,776 பாடல்களே உள்ளதையும் கூறுகிறார். சோழன், வேல் வழங்கிய வரலாறு, நாகை, பொன் புத்தர் சிலையை, திருவரங்கம் திருப்பணிக்காக எடுத்தது, வாடினேன் வாடி வருந்தினேன் என்று பாடியது போன்ற அரிய செய்திகளால் நிரம்பியுள்ளது. மனம் […]

Read more

எனைத்தானும் நல்லவை கேட்க

எனைத்தானும் நல்லவை கேட்க, டாக்டர் பொற்கோ, இசையமுது பதிப்பகம், விலைரூ.360 தமிழர் வாழ்க்கைத் தத்துவங்கள் அடங்கிய, 81 கட்டுரைகளின் தொகுப்பு நுால். நல்லவற்றைக் கேட்கவேண்டும், படிக்கவேண்டும், செய்யவேண்டும் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது. சான்றோன் இயல்பைச் சால்பு என்றும், சான்றோனாக இருக்க அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்ற நிலைகளைக் குறிப்பிட்டு வள்ளுவரின் வழிநின்று விளக்குகிறார். தமிழர்களின் கல்விப் பாரம்பரியம் இரண்டாயிரம் ஆண்டுகாலப் பழமையானது என்பதை ஆய்வுரையில் விளக்குகிறார். கணக்காயர், வானவியல், மருத்துவம் போன்ற துறைகளில் தமிழறிஞர்கள் புலமை பெற்று விளங்கியதைத் தொல்காப்பிய வழிநின்று […]

Read more
1 30 31 32 33 34 240