கொங்கு மண்டலத்தில் பெளத்தம் வரலாற்று ஆய்வு

கொங்கு மண்டலத்தில் பெளத்தம் வரலாற்று ஆய்வு, ஆசிரியர் : மு.நீலகண்டன்,  கனிஷ்கா புத்தக இல்லம், விலை160ரூ. பரந்து காணப்படும் பவுத்த சமய வரலாற்றில், ‘கொங்கு மண்டலத்தில் பெளத்தம் வரலாற்று ஆய்வு’ என்ற பகுதியை எடுத்து, ஆசிரியர் நீலகண்டன் கொங்கு நாட்டில் பவுத்த மத வளர்ச்சியை சிறப்பாகவும், மிக நுணுக்கமாகவும் காட்டியுள்ளார். புத்தரது பெயரைக் கொண்ட புலவர்கள் கொங்கு மண்டலத்தில் வாழ்ந்தனர் என்பதையும் இவரது நுாலின் மூலம் அறியலாம். கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியாக அழைக்கப்படும் கரூர் என்னும் கருவூர்ப் பற்றியும், கரூரில் வாழ்ந்த சங்கப் […]

Read more

அணிந்துரை அணிவகுப்பு

அணிந்துரை அணிவகுப்பு, ஆசிரியர் : இரா. மோகன், வெளியீடு: வானதி பதிப்பகம், விலை 150 ரூ. மூல நுாலைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த அணிந்துரைகள் ஏற்படுத்தும். ஏற்றுக்கொண்ட நுாலின் ரசமான பகுதிகளை ஆசிரியர் குறிப்பிடுவது நேர்த்தியானது. மு.வ.,வின் செல்லப் பிள்ளை’ எனத் தமிழ் கூறும் நல்லுலகத்தில் அழைக்கப் பெறும் இரா.மோகன், சாகித்ய அகாடமிக்காக எழுதிய கு.ப.ராஜகோபாலன், கல்கி, முடியரசன், மீரா குறித்த ஆய்வு நுால்கள் எல்லாம் தனிப் பெரும் சாதனை எனச் சொல்லலாம். அணிந்துரை அணிவகுப்பு என்ற இந்த நுாலிலும் ஆழம் […]

Read more

பதிவு சட்டம்

பதிவு சட்டம், அ.பரஞ்சோதி, ராஜாத்தி பதிப்பகம், பக். 98, விலை 100ரூ. நடைமுறையில் பதிவு செய்ய வேண்டியவை பல. அவற்றுக்கான சட்ட விதிகளையும், பதிவுத்துறையின் அமைப்பையும் விளக்கும் நூல். நிலம் வாங்கும் போது பதிவு செய்கிறோம். பிறப்பு, இறப்பு, திருமணத்தையும் பதிவு செய்கிறோம். இவை எல்லாம் கட்டாயமானவை. அனைவரும் சட்டப்படி செயல்படுகிறோம். அதற்கு, அடிப்படை அறிவு தேவை. அதை நிறைவு செய்கிறது இந்த நூல். மிக எளிமையான பதிவு சட்டம் தொடர்பான விபரங்களை சொல்கிறது. கேள்வி பதில் பாணியிலும், சிறு குறிப்புகளாகவும், முழு சட்ட […]

Read more

பன்னிருதிருமுறை

பன்னிருதிருமுறை, இராம.லெட்சுமணன், சகுந்தலை நிலையம், விலை 1200ரூ. சைவத் திருமுறைகள் பன்னிரண்டும் தோத்திரம், சாத்திரம், பிரபந்தம், புராணம் என நான்கு வகையாக அமைந்துள்ளன. ஒன்று முதல், ஒன்பது வரையிலானவை தோத்திரம். 10வது சாத்திரம். 11வது பிரபந்தம். 12வது புராணம். முதல் மூன்று திருமுறைகள் ஞானசம்பந்தர் பாடியது, ‘திருக்கடைக்காப்பு’ எனவும், நாவுக்கரசர் பாடிய, நான்கு, ஐந்து, ஆறு திருமுறைகள் ‘தேவாரம்’ எனவும், சுந்தரர் பாடிய ‘திருப்பாட்டு’ ஏழாம் திருமுறையாகவும், மாணிக்கவாசகர் அருளியது, எட்டாம் திருமுறையாகும். ஒன்பது பேர் பாடிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, ஒன்பதாம் திருமுறையாகும். இதில் […]

Read more

அகத்திய ரகசியம்!

அகத்திய ரகசியம்!, ஸ்ரீஜா வெங்கடேஷ், ஸ்ரீபுக்ஸ் கிரியேஷன்ஸ், பக். 674, விலை 400ரூ. நுாலின் பெயரைப் பார்த்தவுடன், அகத்தியர் பற்றிய தெரியாத செய்திகள் பலவற்றைத் தொகுத்துத் தரும் நுால் என்று தோன்றும். ஆனால், கற்பனை கலந்த ஆராய்ச்சிகளை உள்ளடக்கிய நாவல் தான் அகத்திய ரகசியம். போகிற போக்கில் இந்த நாவலில் பல அறிவியல் உண்மைகளையும், மருத்துவ உண்மைகளையும் எடுத்துரைக்கிறார் நாவலாசிரியர் ஸ்ரீஜா வெங்கடேஷ். தற்கால தமிழ் நாவல் இலக்கியம் புதிய பரப்புகளில் தடம் பதிக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. நாவலின் நிறைவு பகுதியில், 24ம் […]

Read more

நெல்லை மறவர் கதைப்பாடல்கள்

நெல்லை மறவர் கதைப்பாடல்கள், பேரா.சு.சண்முகசுந்தரம், காவ்யா பதிப்பகம், பக். 372, விலை 400ரூ. முக்குலத்தோரில் மறவர்கள் ஒரு பிரிவினர். இவர்கள் ராமநாதபுரத்திலிருந்து புலம்பெயர்ந்து, நெல்லைச் சீமையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வீரம், காவல் உரிமை, மான உணர்வு, கொள்கை போன்றவற்றால் முதன்மையாகி தெய்வமாகிய முன்னோரை, கதை வடிவில் பாடப்படும் நுாலைப் படைத்துள்ள ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். – த.பாலாஜி நன்றி: தினமலர், 23/2/20. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000030004.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

ஸ்ரீ வாராகி அம்மன் வழிபாடும் பரிகாரங்களும்

ஸ்ரீ வாராகி அம்மன் வழிபாடும் பரிகாரங்களும், சுந்தர் பாலா, அழகு பதிப்பகம், பக். 224, விலை 210ரூ. வேண்டியதைவாரி வழங்கும் ஸ்ரீவாராகி அம்மனைவழிபடும் முறை, தோத்திரங்கள், பரிகாரங்கள், வரலாற்று புராண பின்னணி ஆகியவை இதில் உள்ள சிறப்புகள் அனைத்தையும் ஆசிரியர் அழகாக தொகுத்து உள்ளார். அம்மனுக்கு நைவேத்யம், மலர்கள், தொழும் பொழுது, உபாசனை முறை, அதற்கான மந்திரங்கள், பண்டாசுரன் என்ற அரக்கனின், தவறான விருப்பங்கள், அதை பராசக்தி முடித்த விதம் ஆகியவை இதன் மையக் கருவாகும். இதற்கு தேவி மகாத்மியம் கூறும் மையக் கருத்துக்களை […]

Read more

மகாத்மா 150

மகாத்மா 150, உமாதேவி பலராமன், நந்தினி பதிப்பகம், பக். 276, விலை 250ரூ. காலத்தால் அழியாத பொக்கிஷமான மகாத்மாவை பற்றிய சுவையான, 150 தகவல்களை ஆசிரியர் உமாதேவி ரத்தினச் சுருக்கமாக வழங்கியுள்ளார். எளிய நடையில் எழுதப்பட்டுள்ள இந்நுாலை படிக்கையில், தேசப்பிதாவின் வரலாறு மற்றும் வாழ்க்கையை தெளிவாக அறிந்து கொள்ள முடியும். நன்றி: தினமலர், 23/2/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

இந்தியா அழைக்கிறது

இந்தியா அழைக்கிறது, ஆங்கிலத்தில் ஆனந்தகிரிதாஸ், தமிழில் அருட்செல்வர் நா.மகாலிங்கம், மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு, பக். 360, விலை 300ரூ. அமெரிக்க இந்திய பெற்றோருக்குப் பிறந்தவர் ஆசிரியர். தாய் பஞ்சாபி; தந்தை தமிழர். அவ்வப்போது பெற்றோரோடு இந்தியா வந்தவருக்கு, இந்திய மண் மணம் ஆசிரியரின் நெஞ்சை ஈர்க்கிறது. படிப்பு அமெரிக்காவிலும், பிழைப்பு இந்தியாவிலும் பரிணமிக்கிறது. ஆசிரியரின் ஆதங்கங்கள், ஆசைகள், கொதிப்புகள், வார்த்தைக்கு வார்த்தை என மொழி பெயர்க்காமல் ஆசிரியரின் உணர்வுகளை ஊர்வலமாக்கியுள்ளார் மொழிபெயர்ப்பாளர். எத்தனை பாராட்டினாலும் தகும். தம் தாய் – தந்தையர், பாட்டி – […]

Read more

கஸல்களைப் பாடும் யாரோ ஒருவன்

கஸல்களைப் பாடும் யாரோ ஒருவன், காரிகைக் குட்டி, இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 120, விலை 100ரூ. கஸல்களைப் பாடும் யாரோ ஒருவன் கவிதைகள் எதார்த்தங்களின் வெளிப்பாடாகவே விளங்குகின்றன. இவரின் கவிதைகள் எளிய நடையில் அமைந்திருந்தாலும் கனமான கருவுடன் உணர்வுகளின் தாக்கங்களை வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு பொழுதுகளும் துாசி பறக்க விடுவது, பெண்களின் வாழ்வில் சுமை மற்றும் சடங்காகவே விளங்குவதை புலப்படுத்துகிறார் கவிஞர். கன்னி கழியவில்லை, கஸல்களைப் பாடும் யாரோ ஒருவன், சுட்டுவிரல், சாட்சியங்கள் போன்ற கவிதைகள் கவிஞரின் ஆவேசத்தை வெளிப்படுத்துகின்றன. கஸல்களைப் பாடும் யாரோ […]

Read more
1 47 48 49 50 51 240