இல்லுமினாட்டி

இல்லுமினாட்டி, குன்றில் குமார், அழகு பதிப்பகம், பக்.160, விலை 150ரூ. உலகம் முழுவதையும் ஒரே ஆட்சி அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் எனும் ஒற்றை லட்சியத்தின் கீழ், 1776ம் ஆண்டு துவங்கப்பட்டு, உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர்களால் ரகசியமாகச் செயல்படுத்தப்படுவதாகக் கருதப்படும், ‘இல்லுமினாட்டி’ அமைப்பு பற்றிய விரிவான நுால். இல்லுமினாட்டி என்றால், ‘தெளிவூட்டுபவர்’ எனும் பொருள். உலக வங்கி மற்றும் ராணுவத் தலைமையகத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும், உலகின் மக்கள் தொகையைக் குறைப்பதும், பஞ்சம், பட்டினி, வறுமை, யுத்தம், வியாதிகள் மூலமாக பேரழிவுகளை ஏற்படுத்துவது […]

Read more

சங்ககால நாணயவியலின் தந்தை இரா.கிருஷ்ணமூர்த்தி

சங்ககால நாணயவியலின் தந்தை இரா.கிருஷ்ணமூர்த்தி, முனைவர் சந்திரிகா சுப்ரமணியன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக்.114, விலை 800ரூ. ஒருவரின் வாழ்க்கையில் சிறப்புத் தரவுகளை மணம் வீசும் மலர்களாக்கி தொடுத்து மகிழ் மாலையாக்கும் வித்தையை ஒருவர் கற்றிருந்தால் மட்டுமே, அந்தப் படைப்பு வரவேற்பைப் பெறும் என்ற கருத்தை, முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் ப.க.பொன்னுசாமி, தன் முன்னுரையில் கூறியிருப்பதை, இந்த தமிழ் கூறும் நல்லுலகம் அறிய, இந்த நுால் ஒரு சிறந்த உதாரணம். தமிழ் நாளிதழ், ‘தினமலர்’ எழுத்துச் சீர்திருத்தம். கணினியில் எழுத்துருவப் […]

Read more

பத்மநாபபுரம் அரண்மனை

பத்மநாபபுரம் அரண்மனை, எழில் ரத்னம், நிஜம் வெளியீடு, பக். 144, விலை 100ரூ. தொலை தொடர்பு வசதியில்லாத காலத்தில் இருபது அஞ்சல் அட்டைகள் மூலம், ‘பத்மநாபபுரம் அரண்மனை’ என்ற கடித இலக்கிய வரலாற்று ஆவணப் பனுவலை உயர்ந்த பரிணாமம் கொள்ளச் செய்த பெருமைக்குரியவர் ஆயன். இந்நுாலில், 64 மூலிகை மரங்களால் செய்யப்பட்ட அற்புதக் கட்டிலில் உறங்கிய மன்னருக்கு எந்த வகையில் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது என்பதை பக்கம் 13ல் சொல்லி இருப்பது, அந்த காலத்து வைத்திய முறைக்கு படிக்கல் எனலாம். – மாசிலா ராஜகுரு நன்றி: […]

Read more

மண்…மக்கள்…தெய்வங்கள்

மண்…மக்கள்…தெய்வங்கள், வெ.நீலகண்டன், விகடன் பிரசுரம், பக். 152, விலை 185ரூ. தமிழகத்தில் குல தெய்வ வழிபாடு மிகவும் சிறப்பு பெற்றது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் குல தெய்வம் உண்டு. இந்த குல தெய்வங்கள், பெரும்பாலும் கிராம தேவதைகளாகத் தான் இருப்பர். கிராம தேவதைகளை வழிபடும் பலருக்கு, அவற்றின் வரலாறு தெரியாது; எதனால், வழிபடுகிறோம் என்றும் தெரியாது. அந்த குறையை போக்கும் வகையில், கிராம தேவதைகளான அய்யனார், கருப்பன்,மாடசாமி, மதுரை வீரன், பேச்சி பற்றி, ஆசிரியர் நீலகண்டன் எளிய தமிழில் சுவைபட எழுதியுள்ளார். இந்நுாலில், அய்யனார், கருப்பன் […]

Read more

சிற்பியின் படைப்புத்தளம்

சிற்பியின் படைப்புத்தளம், தே.ஞானசேகரன், காவ்யா, பக். 453, விலை 450ரூ. இலக்கியம் காலம் தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது’ என்று சொல்வர். உருவத்திலும், உணர்விலும், உள்ளடக்கத்திலும் அது எத்தனையோ மாற்றங்களைக் கடந்து வந்திருக்கிறது. அந்த வகையில் கவிதைகளால் தன்னை புதுப்பித்துக் கொண்ட கவிஞர் சிற்பி குறித்து, முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் வெளிவந்திருக்கிறது சிற்பியின் படைப்புக்கலை நுால். ஒரு சிறந்த கவிஞனின் அனைத்து பரிமாணங்களும் இலக்கிய உலகிற்கு முறையாக சொல்லப்படவேண்டும் என்ற முயற்சியின் பலன் தான் இந்தப் புத்தகம். சிற்பி படைத்த ‘உத்திகள்’ […]

Read more

இதிகாசம் புராணத்தில் இந்திய சட்டங்கள்

இதிகாசம் புராணத்தில் இந்திய சட்டங்கள், முனைவர் பங்காரு வேணுகோபால், வானதி பதிப்பகம், விலை 50ரூ. நாம் யார்? நம் நாகரிகம் எப்படிப்பட்டது என்பதையும், இன்றைக்கு இருக்கிற சட்டங்களோடு இந்திய கலாசாரப் பண்பாடு எப்படி பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும், நம் முன்னோர்கள் சொல்லிவிட்டுச் சென்ற கதைகளும், வரலாற்று இதிகாச புராணங்களும் எவ்வளவு மேன்மை பொருந்தியவை என்பதையும் கூறும் இந்நுால், இன்றைய இளைய தலைமுறையினருக்கு பாடம் கற்பிப்பதாக அமைந்துள்ளது. நன்றி: தினமலர்   இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026683.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

வீட்டில் ஒரு மூலிகைத்தோட்டம்

வீட்டில் ஒரு மூலிகைத்தோட்டம், வை.கண்ணன், ஸ்ரீ ஆனந்த நிலையம், பக். 140, விலை 120ரூ. வீட்டில் ஒரு மூலிகை தோட்டம்’ நுாலில், பப்பாளி, முருங்கை உள்ளிட்ட, 17 மூலிகைகளின் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன. குடியிருக்கும் வீட்டில் எந்த பகுதியில் எந்த மூலிகையை பயிர் செய்து பயன் பெறலாம்? எப்படி பயிரிட வேண்டும் என்னும் செய்திகளை எளிமையாக விளக்குகிறது இந்நுால். ஒவ்வொரு வீட்டிலும் மூலிகை தோட்டம் அமைப்பதால், சிறு சிறு உபாதைகளுக்காக மருத்துவரை நாடவேண்டிய அவசியமிருக்காது என்ற விழிப்புணர்வை உணர்த்துகிறார் நுாலாசிரியர் கண்ணன். நன்றி: தினமலர், 8/12/19 […]

Read more

கோளும் குறளும்

கோளும் குறளும், நெல்லை வசந்தன், புதிய தலைமுறை பதிப்பகம் வெளியீடு, பக். 120, விலை 80ரூ. கையடக்க நுாலில், வாழ்க்கைக்கு வழிகாட்டும் குறள், ஜோதிடத்தை தெளிவாக சுட்டிக்காட்டுவதையும், மறுபிறப்பை உணர்த்துவதையும், முற்றிலும் புதிய கோணத்தில் எழுதப்பட்ட நுால். ஆசிரியர் ஜோதிட நுணுக்கம் தெரிந்தவர் என்பதால் இப்புதிய பார்வை காணப்படுகிறது. – மாசிலா ராஜகுரு நன்றி: தினமலர், 8/12/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029988.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

நாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும்

நாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும், 12 தொகுதிகள், பள்ளத்தூர் பழ.பழனியப்பன், திருவரசு புத்தக நிலையம், விலை 3880ரூ. மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்களால் கூறப்பட்ட நாலாயிரம் பாசுரங்களுக்கும் உரை எழுதுவது என்பது மிகப்பெரிய சாதனையாகும். இன்றைய மக்கள் எளிதில் படித்து மகிழும் வண்ணம், பழகு தமிழில் உரை எழுதியுள்ளார் பழனியப்பன். பெரியவாச்சான் பிள்ளை நாலாயிரத்திற்கு முன்பு உரை எழுதியிருந்தாலும், அவை மணிப்பிரவாள நடையில் (வடமொழியுடன்கூடிய தமிழ்ச்சொற்கள்) இருப்பதால், இக்காலத்தவர் படிக்கையில், அயர்ச்சியே ஏற்படும். அதைத் தவிர்க்க இப்பெரும் முயற்சி எனலாம். ‘சொட்டுச்சொட்டென்ன’ என்ற […]

Read more

வைணவம் வளர்த்த மகான்கள்

வைணவம் வளர்த்த மகான்கள், ஆர்.வி.பதி, நிவேதா பதிப்பகம், விலை 150ரூ. வைணவம் வளர்த்தவர் என்றதும் பன்னிரு ஆழ்வார்களையே நினைப்போம். ஆனால், வைணவத்தை எங்கும் பரப்பிய, 32 மகான்களை, இந்த நுாலில் மிகச் சுருக்கமாக ஆசிரியர் தந்துள்ளார். வைணவ குரு மரபில் முதல்வர் நாராயணர், இரண்டாம் ஆச்சார்யர் பெரிய பிராட்டியார், பின், விஷ்வக்சேனர் இவரே நம்மாழ்வாராக அவதரித்து நான்கு வேதங்களையும் திருவாய் மொழியாகப் பாடியவர். பெருமாள் கோவில்கள் தலையில் சாத்தப்படும் ஸ்ரீசடாரி, நம்மாழ்வார் சடகோபன் பெயரால் வழங்கப்படும் பெருமாள் பாதங்கள். பல நுாற்றாண்டுகளுக்கு முன், ‘திருமலை […]

Read more
1 51 52 53 54 55 240