ஆய்வுச் சுவடுகள்

ஆய்வுச் சுவடுகள், முனைவர் யோ.ஞானச்சந்திர ஜான்சன், கீர்த்தனா பதிப்பகம், விலை 250ரூ. தமிழ் இலக்கியம் ஒரு காலத்தில் சங்க இலக்கியம், காப்பிய இலக்கியம், சிற்றிலக்கியம், நவீன இலக்கியம் எனப் பகுத்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அந்தப் பகுப்பையும் தாண்டி, சமய இலக்கியம் என்னும் பகுப்பும் தோன்றியது. சமய இலக்கியங்களில் ஐரோப்பியரின் வருகைக்குப் பின், கிறிஸ்துவ இலக்கியங்கள் தமிழில் தோன்றி, தமிழ் மொழிக்குப் புது மறுமலர்ச்சியைக் கொடுத்தன. காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள் என்னும் நிலையைக் கடந்து, தற்கால உரைநடை இலக்கியத்திற்குப் பெரும் பங்களிப்பை வழங்கின. அந்தக் கிறிஸ்துவ இலக்கியங்கள் பற்றிய […]

Read more

உயர்ந்தவர்கள்

உயர்ந்தவர்கள், ஊனத்துடன் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் பிரமிப்பூட்டும் கதைகள், கோபாலஸ்வாமி, ப்ளு ஓசன் புக்ஸ் பிரிசம் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட், விலை 180ரூ. பாரபட்சமான உலகில், ஆராதிக்கப்படாமலும், அங்கீகாரம் கிடைக்காமலும் தங்களுக்குள் இருக்கும் தனித்தன்மையுடன் வளர்ந்து வரும் சாதனையாளர்களின் சாகசங்களை விவரிக்கிறது இந்நுால். இச்சாகசங்களுக்குப் பின்னால் மறைந்துள்ள துன்பங்களை எல்லாம் பார்க்கும்போது, நாம் அனுபவிக்கும் துன்பங்கள் எல்லாம் துளியிலும் மிகச் சிறிது என்பதை உணர முடிகிறது. ‘பல்மனரி பைப்ரோசிஸ்’ நோயால் அவதிப்பட்டுக் கொண்டே, பிராண வாயு மூகமூடியை அணிந்து, ‘நிகழ் காலத்தில் வாழ்வதும், மகிழ்ச்சியாக […]

Read more

எங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்

எங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள், சி.எஸ்.தேவநாதன், நேஷனல் பப்ளிஷர்ஸ், விலை 175ரூ. நீண்டதாகப் பலரும் கருதும் இந்த வாழ்க்கை உண்மையில் மிகவும் சிறியது. கண் மூடி இமைப்பதற்குள் காலம் பறந்து விடுகிறது. இதை உணர்ந்தோர் வாழ்க்கையில் எதையேனும் சாதிக்க வேண்டும் என்று ஓடிக் கொண்டிருக்கின்றனர். பலர் இலக்குகள் இன்றி, கிடைத்த வாழ்க்கையில் சமரசமாகி நீர்த்து விடுகின்றனர். வாழ்க்கையின் இடையில் வரும் ஒவ்வொரு சவாலான கட்டத்திலும் வெல்வதற்கு முயல்வதே ஊக்கமுள்ளோரின் இலக்கு. எங்கும் எதிலும் எப்போதுமே நேர்மையோடு முதன்மையாக நிற்க விரும்புவதே, சிறந்த […]

Read more

தி டிவைன் சைவ நாயன்மார்ஸ்

தி டிவைன் சைவ நாயன்மார்ஸ், துர்காதாஸ் என்.கே.சுவாமி, பிரேமா பிரசுரம், விலை 300ரூ. தமிழில் அறுபத்து மூவர் கதைகள் என்னும் பெயரில் எழுதப்பட்டு, 1967ல் வெளிவந்துள்ளது. ஐம்பத்தொரு ஆண்டுகளுக்குப் பின் இந்த நுால் எளிய ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. பெரியபுராணத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டு இந்த அறுபத்து மூவர் வரலாற்றை எழுதுவதற்கு முன், திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணத்தைப் படைத்த சேக்கிழார் வரலாற்றை இந்த நுால் விரிவாக எடுத்துக் கூறுகிறது. இந்த நாயன்மார் வரலாற்றை விளக்கும் வகையில் பக்கத்துக்குப் பக்கம் அழகிய கறுப்பு […]

Read more

பாரதியின் செல்லம்மாள்

பாரதியின் செல்லம்மாள், புலவர் சி.வெய்கை முத்து, கற்பகம் புத்தகாலயம், பக். 176, விலை 150ரூ. நுாலாசிரியர் – கடையம் – சத்திரம் மேல்நிலைப் பள்ளியில், 32 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பின், மகாகவி பாரதியாரின் துணைவியார் செல்லம்மாள் பிறந்த ஊரான கடையத்தில் ஆசிரியர் பணியாற்றிய போது, கிடைத்த அனுபவத்தாலும், அங்கு வாழ்ந்து வரும் பல சான்றோர்களிடத்தில் செல்லம்மாளைப் பற்றிக் கேட்டு அறிந்து கொண்டும் இந்நுாலைப் படைத்துள்ளார்! செல்லம்மாள் பாரதி (1890 – 1955) பர்த்தாவுக்கு ஏற்ற பதிவிரதை! மஹாகவியின் மஹா […]

Read more

தமிழ் நூல் வரலாறு

தமிழ் நூல் வரலாறு, பாலூர் கண்ணப்ப முதலியார், பூம்புகார் பதிப்பகம், பக். 458, விலை 300ரூ. சங்க காலம் தொடங்கி தற்காலம் வரை வெளிவந்துள்ள தமிழ் நுால்களின் வரலாற்றையும், தமிழ் மக்களின் வரலாற்றையும், 74 தலைப்புகளில் இந்த நுால் விளக்குகிறது. நிகண்டுகளின் வரலாற்றையும், சைவ மடங்களின் தமிழ்த் தொண்டினையும், தனித்தனித் தலைப்புகளில் விளக்குவது இந்த நுாலின் சிறப்பு. தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கும், தமிழ் இலக்கிய வரலாற்றை அறிந்து கொள்ள விரும்புவோருக்கும் மிகச்சிறந்த கையேடாக விளங்கும் இந்த நுால் மிக எளிய தமிழ் நடையில் […]

Read more

அவ்வையார் படைப்புக் களஞ்சியம்

அவ்வையார் படைப்புக் களஞ்சியம், முனைவர் தாயம்மாள் அறவாணன், தமிழ்கோட்டம் வெளியிடு, விலை 600ரூ. அன்புக்குரிய துணைவர் அறிஞர் அறவாணனுக்கு இந்த நுாலை காணிக்கையாக்கி, பெருமை சேர்த்திருக்கிறார் ஆசிரியர் தாயம்மாள், தமிழகத்தில், பல அவ்வையார்கள் விட்டு சென்ற அறநுால் பதிவுகள் அனைத்திற்கும் விளக்கமாக இந்த நுாலை எழுதியிருக்கிறார். அவ்வை என்ற சொல் வயதில் மூத்தவள், தமக்கை, பெண் துறவி ஆகியவற்றை குறிக்க வழங்குகிறது. சங்க கால அவ்வை தொடங்கி, பல அவ்வையார் வாழ்ந்திருக்கலாம் என்பதை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். காதல் பாடல்களை அவ்வை பாடியதாக குறிக்கும் […]

Read more

தமிழ்மந்திரம்

தமிழ்மந்திரம், பாலூர் கண்ணப்ப முதலியார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 275ரூ. உலகிற்கே ஒரு மந்திரம் திருமந்திரம். மந்திரத்திற்குரியது சமஸ்கிருதம் மட்டுமே எனும் கூற்றைப் பொய்யாக்கிய ஒரே மந்திரம், திருமூலர் இயற்றிய திருமந்திரம். திருக்குறளும், திருமந்திரமும், திருவாசகமும் தமிழின் ஞானக்கருவூலங்கள். புலமைக் கடலாகவும், சாத்திர ஞானச்செறிவு உடையவராகவும் திகழ்ந்த பாலுார் கண்ணப்ப முதலியார், இந்நுாலுக்கு விளக்கவுரை எழுதியுள்ளார். சைவப்பெரியார்கள் வகுத்தவாறு, 10ம் திருமுறையாகத் திகழும் திருமந்திர நுாலில் உள்ள, 304 திருமந்திரங்களும், திருமூலர் பாடியதாகக் கருதப்படும் வயித்தியப் பகுதி நுாலிலிருந்து, 25 மந்திரங்களும் விளக்கத்துடன் […]

Read more

ஒரு துணை வேந்தரின் கதை

ஒரு துணை வேந்தரின் கதை, முனைவர் சே.சாதிக், யூனிவர்சல் பப்ளிஷர்ஸ், பக். 512, விலை 400ரூ. ஒவ்வொரு மனிதனும் ஒரு கதைச் சுரங்கம். துன்பத்தாலோ, தோல்வியாலோ, மகிழ்ச்சியாலோ, கிளர்ச்சியாலோ பாதிக்கும் ஒவ்வொரு சம்பவமும் ஆழ்மனதில் கெட்டியாகப் பதிந்து விடுகின்றன.சொல்லி மகிழவும் அழவும் ஒவ்வொருவருக்கும் பல கதைகள் உள்ளன. தன் வாழ்க்கையில் நடந்தவை பிறரது திருத்தமான வாழ்வுக்குப் பயன்படக்கூடும் என்று எண்ணுபவர்கள் அவற்றை நுாலாக ஆவணப் படுத்துகின்றனர். மற்ற சில செல்வாக்கினரின் வாழ்க்கையைப் பிறர் முன்வந்து நுாலாக்குவதும் உண்டு. சென்னைப் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராகப் […]

Read more

தந்த்ரா ரகசியங்கள்

தந்த்ரா ரகசியங்கள், ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், விலை 250ரூ. விஞ்ஞான் என்றால் உணர்வு. “பைரவ் என்றால் உணர்வு கடந்த நிலை. “தந்த்ரா என்றால் யுக்தி, வழிமுறை, டெக்னிக். அதாவது, உணர்வை கடத்திச் செல்லும் யுக்தி. மற்ற மரபுகளுக்கெல்லாம் முற்றிலும் முரணானதாக தந்த்ரா தெரிவது இப்படித்தான். ஜைனர்கள் சுவையே இருக்கக் கூடாது என்கின்றனர். மகாத்மா காந்தி தன்னுடைய ஆசிரமத்தில், சுவை கூடாது என்பதை ஒரு விதியாகவே வைத்திருந்தார். எதையும் சுவைக்கக் கூடாது. சாப்பிடு, ஆனால், சுவைக்காதே; சுவையை மறந்துவிடு. சாப்பிடுவது தேவையானது. ஆனால், அதை இயந்திரத் […]

Read more
1 68 69 70 71 72 240