தித்திக்கும் நினைவுகள்

தித்திக்கும் நினைவுகள், கலைமாமணி ஏ.ஆர்.எஸ், பக். 300, விலை 200ரூ. தான் பார்த்ததை, ரசித்ததை, பழகி பிரமித்ததை, கலைமாமணி ஏ.ஆர்.சீனிவாசன் இந்த நுாலில் எழுதிய விதம், அனைவரையும் படிக்கத் துாண்டும்.குறிப்பாக, சிவாஜி – எம்.ஜி.ஆர்., இணைந்து கூண்டுக்கிளி திரைப்படத்தில் நடித்தது, அந்தக் காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இரு தரப்பு ரசிகர்கள் மோதல் காரணமாக, அந்தப் படம் வெற்றி பெறவில்லை. இருந்தாலும், அப்பட ஷூட்டிங் காலத்தில், டைரக்டர் ராமண்ணா, சிவாஜியை தனியாக அழைத்தார். அவரிடம், ‘எம்.ஜி.ஆர்., சீன் காட்சிகளின் போது, ஏன் வெளியில் சென்று விடுகிறீர்கள்?’ […]

Read more

திரைகடல் ஓடியும் திரவியம் தேடும் மும்பை தமிழர்கள்

திரைகடல் ஓடியும் திரவியம் தேடும் மும்பை தமிழர்கள், அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி, சூரியன் பதிப்பகம், பக். 240, விலை 240ரூ. திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழியை விரிவாக்கி, தமிழர் உழைப்பால் இன்றைய மும்பை வளர்ச்சி பெற்றதை, இந்த நுாலில் ஆசிரியர் விளக்குகிறார். மும்பை, இந்தியாவின் பொருளாதாரத் தலைநகர். துறைமுகத் தொழிலாளர்கள் மூலம் மிகப்பெரும் இடத்தைப் பிடித்த வரதராஜ முதலியார், மும்பைத் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கிய முன்னோடி சு.கந்தசாமி, ‘கலியுக வரதன்’ என்ற பட்டத்தை பெற்றவர் எனப் பலரது உழைப்பு எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. சுதந்திரப் […]

Read more

வேளாண் காதலர் வெங்கடபதி

வேளாண் காதலர் வெங்கடபதி, இராணி மைந்தன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 150, விலை 120ரூ. வேளாண் துறையில் வியத்தகு சாதனைகளைச் செய்த வேளாண் காதலர் வெங்கடபதி, ஒன்பது மாதங்கள் மட்டும், நான்காம் வகுப்பு படித்தவர்; பின் பள்ளிக்கே செல்லவில்லை. ஆனால், பெற்ற பட்டறிவு ஏராளம். மூன்று ஜனாதிபதியால் பாராட்டப் பெற்றவர். 2012ம் ஆண்டு, பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் வேளாண் விஞ்ஞானி. கனகாம்பரம், வெங்கடபதியின் வாழ்க்கையை தலை கீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது, கனகாம்பர மலரில் வகை வகையான கண்டுபிடிப்புகளால், இன்று விவசாயியின் வாழ்க்கை வளமாகி […]

Read more

மனிதனைத் தேடும் மாமனிதர் போப் பிரான்சிஸ்

மனிதனைத் தேடும் மாமனிதர் போப் பிரான்சிஸ், மதுரை இளங்கவின் , வாழ்க்கை சட்டம் பப்ளிகேஷன் மீடியா, பக். 80, விலை 120ரூ. இன்றைய காலச் சூழலில் மனிதனுக்கு அனைத்து நிலைகளிலும் வழிகாட்டுதல்கள் தேவைப்படுகின்றன. அறிவியல், தொழில்நுட்பம் எத்தனை சிறந்து விளங்கினாலும், மனிதனுக்கு மனிதன் அன்பு செலுத்துவதிலிருந்து விலகிச் செல்ல முடியாது. இது தான் வாழ்க்கை நெறி என்று உணர்ந்த மகான்கள் பலர் உலகில் தோன்றினர். இறைவன் வகுத்த பாதையில் மக்களைப் பயணிக்கச் செய்யும் பணியையே திருத்தந்தையர் மேற்கொண்டு வருகின்றனர். அத்தகைய பண்பாட்டுப் பாதையில் இன்று, […]

Read more

லயன் காமிக்ஸ்

லயன் காமிக்ஸ், எஸ். விஜயன், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், காமிக்ஸ் புத்தகங்கள் படிக்கும் வழக்கம் கடந்த, 70 – 80ம் ஆண்டுகளில் அதிக அளவில் இருந்தது. பல நிறுவனங்கள் காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட்டிருந்தாலும், ஆங்கிலத்தில் வெளியான காமிக்ஸ் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து வழங்கியதில் முன்னணியில் இருந்தது, முத்து காமிக்ஸ். பேன்டம் மற்றும் இரும்பு கை மாயாவி போன்ற கற்பனை கதாபாத்திரங்களில் வீரதீர சாகச கதைகள், வாசகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. அந்த வரிசையில், சிவகாசியைச் சேர்ந்த, லயன் காமிக்ஸ் நிறுவனத்தார், ஆங்கிலத்தில் பிரபலமாக இருந்த […]

Read more

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், அ.பழனிசாமி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 152, விலை 100ரூ. குமரகுருபரர் அருளிய மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் சொற்சுவை, பொருட்சுவை, கற்பனை, வருணனை கொண்ட சிற்றிலக்கியமாகும். ஏனைய பிள்ளைத் தமிழ் நுால்களை விட, இது பலராலும் போற்றப்படும் சிறப்பிற்குரியது. இதற்கு, இந்நுாலாசிரியர் பழனிசாமி மிக எளிமையாகவும், தெளிவாகவும் பொருள் விளங்கக்கூடிய வகையில் உரை எழுதியுள்ளார். மேலோட்டமாகப் பொருள் கூறாமல், தாம் தமிழ்ச் சுவையில் கரைந்து உரை வரைந்துள்ளார். ‘பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப்பசுங் கொண்டலே’ என்ற அடிகளுக்கு, எளிய […]

Read more

திருவேங்கடவன் திருநாமங்கள்

திருவேங்கடவன் திருநாமங்கள், ஸ்ரீ.உ.வே.கோழியாலம் சடகோபாசாரியார், பக். 232, விலை 150ரூ. கலியுக தெய்வமாக விளங்கும் ஸ்ரீவேங்கடவன் வழிபாட்டில், அவன் பெருமை கூறும், 108 திருநாமங்கள் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். அத்திருநாமங்கள் வடசொற்களில் உள்ளன; அதன் பொருள் கூறும் நுாலாக, இந்நுால் வெளிவந்துள்ளது. வேம்+கடம் என்று பிரித்து, ‘வேம்’ என்ற சொல்லிற்கு மோட்சம் என்றும், ‘கடம்’ என்ற சொல்லிற்கு ஐஸ்வரியம் – செல்வம் என்றும் பொருள் கூறுவர். வேம் என்றால் வெந்துவிடும் என்றும், கடங்கள் என்றால் கர்மங்கள் – பாவங்கள் என்றும், இங்கு வருபவர்களின் பாவங்கள் […]

Read more

தத்வமஸி

தத்வமஸி, பேரா.சு.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக். 112, விலை 150ரூ. தத்வமஸி என்றவார்த்தையை கேட்டவுடன், அய்யப்பன் கோவில் தான் நினைவுக்கு வரும். ஏனெனில், அய்யப்பன் கோவில்களில் சன்னிதி முகப்பில், இந்த வார்த்தை எழுதப்பட்டிருக்கும். ஆனால், இந்த வார்த்தைக்கு பலருக்கு அர்த்தம் தெரியும். ‘நீ அதுவாக இருக்கிறாய்’ என்பது தான் இதன் அர்த்தம். இறைவனும் நாமும் ஒன்று தான் என்ற, அத்வைத தத்துவத்தை விளக்கும் வாசகம். ஆதிசங்கரர் எழுதிய, ‘வாக்கிய விருத்தி’ என்ற நுாலை, ஆங்கிலத்தில், சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிகள் மொழிபெயர்த்துள்ளார். அதை தமிழாக்கம் […]

Read more

நூற்றெட்டுத் திருப்பதி வண்ண விருத்தம்

நூற்றெட்டுத் திருப்பதி வண்ண விருத்தம், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், தமிழில் வண்ணப்பாடல்கள் படைத்து மகிழச் செய்த புலவருள் தலையாயவர் அருணகிரிநாதர். 15 ஆம் நுாற்றாண்டில், தமிழகமெங்கும் முருகன் புகழ்பாடி பெருமை பெற்றார். அவர் பாடியவை திருப்புகழ் எனப் போற்றப்பட்டு வருகின்றன. 16 ஆம் நுாற்றாண்டில் அந்தகக்கவி வீரராகவ முதலியார் இராம காதையை வண்ணப்பாடல்களில் இயற்றியுள்ளார். திருமால் எழுந்தருளியுள்ள, 108 திவ்விய தேசங்களைப் பற்றிய பிரபந்தங்கள் தமிழில் நிரம்ப உள்ளன. 108 திருப்பதிகளில் எழுந்தருளியுள்ள பெருமாள் பெருமைகளும், தலச்சிறப்புகளும், பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் முதலியவர்களல் பாடப்பட்ட […]

Read more

இராஜ தந்திரி இராஜாஜி

இராஜ தந்திரி இராஜாஜி, செல்லப்பா, அனிதா பதிப்பகம், பக். 136, விலை 65ரூ. சீர்திருத்தம், சமதர்மம், பகுத்தறிவு என்றெல்லாம் பலரும் மேடையில் பேசுவர். அவற்றைத் தம் வாழ்வில் கடைப்பிடிப்போர் மிகச் சிலரே ஆவர். அந்த மிகச் சிலரில் ராஜாஜியும் ஒருவர். மகாத்மா காந்தியடிகள் தம் வாரிசு என்று இவரையே சொன்னார். அத்தகைய பெரியவரின் வாழ்க்கை வரலாற்றின் சில பகுதிகளை இந்நுால் கூறுகிறது. சிறுவயதில் ராஜாஜி கண் சரியாகத் தெரியாமல், கண்ணாடி கேட்டு தந்தையிடம் அடம் பிடித்ததும், முதல் வழக்கிலே வாதாடி இவர் வெற்றி பெற்றதும், […]

Read more
1 69 70 71 72 73 240