இலக்கிய இன்பம்

இலக்கிய இன்பம், மு.சு. கன்னையா, சங்கர் பதிப்பகம், விலை 220ரூ. வாய்ச் சுவையில் விலங்குகள் மகிழும். செவிச் சுவையில் மனிதர் மகிழ்வர். இலக்கியச் சுவை நம்மை தெய்வ நிலைக்கு உயர்த்தும். இனிமையான, 25 இலக்கியக் கட்டுரைகள் இந்நுாலில் படிப்போருக்கு இன்பம் கொடுக்கும். திருக்குறளைப் பற்றி, 12 கட்டுரைகள் பேசுகின்றன. புறநானுாற்றில், 243 தொடித்தலை விழுத்தண்டினார் எனும் முதியவர் பாடிய இளமையைப் போற்றும் பாடல் விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. நற்றிணை, ஐங்குறுநுாறு, முல்லைப்பாட்டின் முதுமை ஒப்பு நோக்கப்படுகிறது. காமத்துப் பாலா? இன்பத்துப் பாலா? மூன்றாம் பாலின் […]

Read more

பாரதிதாசன் படைப்புக்கலை

பாரதிதாசன் படைப்புக்கலை, ச.சு.இளங்கோ, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 475ரூ. தமிழ் இலக்கியத்தைப் பாரதி புதுமைப்படுத்தினார். இவருக்குப் பின் வந்த பாரதிதாசன் புதுமைத் தமிழைப் பொதுமைப்படுத்தினார்.பாவேந்தரின் பாடல்களில் சமூக சீர்திருத்தம் எரிமலையாக ஒளிரும். அதன் வெப்பத்தையும், ஒளியையும் இந்நுாலாசிரியர் ஆய்வு செய்து, 40 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட ஆய்வேடு நுாலாக, வடிவம் பெற்றுள்ளது. ‘கண்ணகி புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா’ எனும் குறுங்காவியங்களை விரிவாக ஆய்ந்து எழுதியுள்ளார். கண்ணகி, மணிமேகலை பாத்திரப் படைப்புகளை, சமூக நீதியுடன் ஒப்பிட்டு பல உண்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார். […]

Read more

அருஞ்சொற்குவை

அருஞ்சொற்குவை, முனைவர் வே.குழந்தைசாமி, விலை 100ரூ. தற்காலத்தில் கருத்துப் புதுமைகளும், கண்டுபிடிப்புகளும், புதிய பரிணாமங்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. அத்தகைய புதிய கருத்துகள், செய்திகள் வெளியிடவும், மொழியாற்றல் அவசியமாகிறது. ஆங்கிலச் சொல் – இணையான தமிழ்ச் சொல் – மூலம் என்ற அடிப்படையில் பட்டியலிட்டுள்ள ஆசிரியர், தமிழ் என்னும் ஆழ்கடலில் முத்துகளை சேகரிக்க இயலாவிடினும், கடற்கரை மணலில் சேகரித்த சிப்பிகளைத் தொகுத்து, ‘அருஞ்சொற்குவை’யாக வழங்கி, நுாலுக்கு சிறப்பு சேர்க்கிறார். நன்றி: தினமலர் இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

திருக்குறள் களஞ்சியம்

திருக்குறள் களஞ்சியம், கீழாம்பூர், கலைமகள் பப்ளிகேஷன்ஸ், விலை 600ரூ. திருவள்ளுவரும் திருக்குறளும், நம் பண்டைய நீதி நுாலாசிரியர், கம்பன் கண்ட வள்ளுவர், வாழ்க்கை துணை நுால், திருக்குறளும் பொது நோக்கமும், இரந்து வாழும் வாழ்வு, தோன்றின் புகழோடு, குறள் நெறி, குறள் உணர்த்தும் பாடங்களை பட்டியலிடுகிறது இந்நுால். குறளில் சைவ சித்தாந்தம், கீதையும் குறளும், நுண்பொருள்மாலை ஆய்வுரை, குறள் வழங்கும் செய்தி, வள்ளுவரும் புத்தரின் ஒழுக்க இயல்பும், சீர்திருத்தம் உள்ளிட்ட கட்டுரைகள் அடங்கியது இந்நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி:தினமலர் இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

திரைமொழி

திரைமொழி, வித்யாசாகர், முகில் பதிப்பகம், விலை 180ரூ. வித்யாசாகர் எழுதியுள்ள ஒவ்வொரு திரைப்படத்தின் ஆழமான விமர்சனங்களும் வாழ்வியலின் நிதர்சனப் பதிவன்றி வேறில்லை. திரைப்படம் பற்றிய சிறந்த பார்வையை கற்றுத் தந்திருக்கிறார். இந்நுால் எதிர்கால இளைஞர்களின் சிந்தனைப் பெட்டகமாகவும், புதிதாக திரைப்படம் இயக்கும் இயக்குனர்களுக்கு கதைகளின் களமாகவும் இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை நன்றி:தினமலர் இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

இறை இரகசியம்

இறை இரகசியம், பண்டிட் நாராயணன், ஸ்ரீநிதி பப்ளிஷர்ஸ், விலை 390ரூ. எங்கே கடவுள்? பிரபஞ்சம் உருவான வரலாறு, யுகங்கள், சிருஷ்டி கர்த்தா, முப்பெரும் தேவியராகிய கலைமகள், அலைமகள், மலைமகள், விஷ்ணு மாயா, 108 திவ்ய தேசங்கள், ஆதிசிவன், 1,008 லிங்கங்கள், சிவபெருமானின் வேறு வடிவங்கள், தட்ஷிணாமூர்த்தி, காலபைரவர் உள்ளிட்ட ஆன்மிக செய்திகள் அடங்கிய பொக்கிஷம் இந்நுால். ஐம்பத்தியொரு சக்தி பீடங்கள், குலதெய்வ வழிபாடு ஏன்? இறை வழிபாடு ஆறு, ஜோதிடம் உருவான வரலாறு, இறையை உணர்வது எப்படி? நம்மை நாமே உணர்வது எப்படி? மந்திரம், […]

Read more

தத்வமஸி

தத்வமஸி, சு.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலை 150ரூ. தத்வமஸி என்ற வார்த்தையை கேட்டவுடன், அய்யப்பன் கோவில் தான் நினைவுக்கு வரும். ஏனெனில், அய்யப்பன் கோவில்களில் சன்னிதி முகப்பில், இந்த வார்த்தை எழுதப்பட்டிருக்கும். ஆனால், இந்த வார்த்தைக்கு பலருக்கு அர்த்தம் தெரியும். ‘நீ அதுவாக இருக்கிறாய்’ என்பது தான் இதன் அர்த்தம். இறைவனும் நாமும் ஒன்று தான் என்ற, அத்வைத தத்துவத்தை விளக்கும் வாசகம். ஆதிசங்கரர் எழுதிய, ‘வாக்கிய விருத்தி’ என்ற நுாலை, ஆங்கிலத்தில், சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிகள் மொழிபெயர்த்துள்ளார். அதை தமிழாக்கம் செய்துள்ள […]

Read more

சுந்தரர்

சுந்தரர், முகிலை இராசபாண்டியன், ஞாலம் இலக்கிய இயக்கம், விலை 200ரூ. சேக்கிழார் படைத்த பெரிய புராணம், சுந்தரர் வாழ்க்கையுடன் தொடங்கி, சுந்தரர் வாழ்க்கையுடனே நிறைவடைகிறது. திருக்கயிலாயத்திற்குச் சுந்தரர் வருகிற காட்சியைக் கண்டதும், உபமன்னிய முனிவர் எழுந்து நின்று வணங்குகிறார். சிவபெருமானை மட்டுமே வணங்கும் உபமன்னிய முனிவர், இவரைக் கண்டதும் எழுந்து நின்று வணங்குகிறாரே என்று, அவரது சீடர்கள் கேட்கின்றனர். அவர்களிடம், இவர் தான் சுந்தரர். சிவபெருமானின் மறுவடிவம் தான் சுந்தரர். அடியார்கள் அந்தச் சுந்தரரின் வரலாற்றை கேட்கின்றனர். அவர்களுக்கு அந்த வரலாற்றை கூறுவது போல் […]

Read more

வாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை

வாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை, அழ.சுப.ஸ்ரீனிவாசன், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலை 120ரூ. நம் இந்திய நாட்டின் வலிமை, மணமக்கள் வலது காலை எடுத்து வைத்து வருவது ஏன்? மணமக்கள் அறிந்து கொள்ள வேண்டியது, ஆபரணங்களின் அர்த்தம் – திருமணத்தில் யாரை எப்படி வணங்க வேண்டும்? வாழ்க்கை எது வரை, சிரிப்பு வகைகள், வாழ்க்கைக் கணிதம், புயல் உருவாவது எப்படி? நேரம் சொல்லும் பறவை, நிரந்தரம் இல்லை, உகந்த உறவினர்கள் யார்? குழந்தை பிறந்த ஒரு ஆண்டிற்குள் மொட்டை போடுவது ஏன்? தோல்வி பெறுபவர் […]

Read more

படத்தொகுப்பு கலையும் அழகியலும்

படத்தொகுப்பு கலையும் அழகியலும், ஜீவா பொன்னுசாமி, நிழல் பதியம் பிலிம் அகாடமி, விலை 350ரூ. எடிட்டிங் ஒரு அற்புதக் கலை. எடிட்டிங் பற்றிய அருமையான தகவல்களை இந்தப் புத்தகம் தருகிறது! ‘படத் தொகுப்பு என்பது, விதிகள் என்பது தகர்க்கப்படுபவையாகவும், தளர்த்தப்படுபவையாகவும் இருக்கின்றன. காரணம், அது பார்வையாளனின் உளவியலோடு சார்ந்த ரசனை தொடர்புடையதே’ என்று நுாலாசிரியர் கூறுகிறார். எடிட்டிங் கலை தான் சினிமாவுக்கே அடிப்படை என்பதை சொன்னவர்கள் ரஷ்யர்கள்: குலசேவ், செர்ஜி ஐசென்ஸ்டின், புத்தோவ்கின், ஜிகா வேர்ட்டோவ்… படத் தொகுப்பு அறிமுகம், அடிப்படை தொழில்நுட்ப அம்சங்கள், […]

Read more
1 67 68 69 70 71 240