விநாயகர் அகவல்

விநாயகர் அகவல், பேரா. க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக். 148, விலை 120ரூ. அவ்வையாரின் விநாயகர் அகவல் இசை நயம் மிக்க தோத்திரப் பாடலாகவும், யோக ரகசியங்கள் பொதிந்த சாத்திர நுாலாகவும் உள்ளது. 72 வரிகள் கொண்ட அகவற்பாவுக்கு, ஆசிரியர் பொழிப்புரை, விரிவுரை இரண்டையும் அழகுற அமைத்துள்ளார். அகவுதல் என்றால் அழைத்தல் என்ற பொருளும் உண்டு. இறுதி அடியில், ‘வித்தக விநாயக, உன் மணம் மிக்க திருவடியில் சரண் புகுகிறேன்’ என்று அகவல் முடிகிறது. முதல் இரண்டு வரிகளில் விநாயகரின் திருவடியைச் சிறப்பித்து, இறுதி […]

Read more

தாம்பிரவன்னி மகத்துவம்

தாம்பிரவன்னி மகத்துவம், புலவர் வே.மகாதேவன், இந்து கலாசாரம் மற்றம் இந்தியவியல் ஆய்வு மையம், பக். 121. தாமிரபரணி வரலாற்றை விளக்கும் நுால்களில் இடம்பெறாத சில சிறப்புச் செய்திகள், இந்நுாலாசிரியரால் சொல்லப்பட்டுள்ளது பாராட்டிற்குரியவை. கன்னடியன் கால்வாய் பற்றி கூறியுள்ள வரலாற்று செய்தி (பக்., 50 – 55) முக்கியத்துவம் பெறுகிறது. தோழி தாமிரபரணி என்பதையும், அகத்திய முனிவர் விமானத்தில் பயணித்ததையும், சகலகோடித் தீர்த்தம் தாமிரபரணி என்பதையும் (பக்., 69), இந்த நதியின் மகத்துவத்தை பட்டியலிடுகிறது இந்நுால் நன்றி: தினமலர், 7/10/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

எல்லா உணவும் உணவல்ல

எல்லா உணவும் உணவல்ல, பாலு சத்யா, விகடன் பிரசுரம், பக். 144, விலை 125ரூ. மனித வாழ்விற்கு உண்ண உணவு முதல் தேவையாகும். உணவு தயாரிப்பதில், உண்பதில் எவ்வளவு கவனம் தேவை என்பதை இந்நுால் மிக அருமையாக விளக்குகிறது. பல உணவுப் பொருட்களையும் வீட்டிலேயே தயாரித்து உண்ண வேண்டும் என்றும், உணவே மருந்தாக நினைத்தால் வியாதிகள் வராது என்றும், உடல் ஆரோக்கியம் பெறத் தேவையான உணவுகளைக் கூறுவதும் இந்நுாலின் சிறப்பாகும். பழைய சோறின் அருமைபெருமைகளை விளக்குவதும், சமோசா வேண்டாம் என்பதற்கான காரணங்களை விளக்குவதும் (பக்., […]

Read more

நமது கச்சத்தீவு

நமது கச்சத்தீவு,புலவர் செ.இராசு, வேலா வெளியீட்டகம், பக். 126, விலை 100ரூ. தன் நாட்டின் நிலப்பரப்பை விரிவாக்கிக் கொள்ள வேண்டுமென்றால், வேறொரு நாட்டுடன் கடுமையாக போரிட்டு கைப்பற்றுவது தான் பண்டைய காலந்தொட்டு நடந்து வருகிறது. ஆனால், இந்திய நாட்டின் பூர்வீக நிலப்பகுதியான ஒரு தீவோ, மிக எளிதாக இன்னொரு தீவு நாட்டிற்குத் தாரை வார்க்கப்பட்ட நிகழ்வு இன்றும் மண்ணின் மைந்தர்களை உறுத்திக் கொண்டிருப்பதன் விளைவே இந்நுால். வளர்ச்சிப்பாதையில் விரைந்து சென்று கொண்டிருந்த இந்தியா, இராமநாதபுர மாவட்டத்துக்குச் சொந்தமான, மீன்வளமும் கனிம வளமும் நிறைந்த கச்சத்தீவை, […]

Read more

தாமிரபரணி புராணம்

தாமிரபரணி புராணம், கீழாம்பூர், கலைமகள் பப்ளிகேஷன்ஸ், பக்.216, விலை 200ரூ. மகா புஷ்கரம் விழா கண்ட தாமிரபரணி நதிக்குப் பல பெருமைகள் உள்ளன. கரைப் பகுதிகளில் பாடல் பெற்ற சிவன், பெருமாள் கோவில்கள் அமைந்த சிறப்புக்குரியது. இந்த நதிக் கரையில், உலகப் பொதுமறை நுாலுக்கு பிழை திருத்தம் செய்யப்பட்டது மட்டுமன்றி, அகத்தியர் உள்ளிட்ட சித்தர்களும், ஞானிகளும் வாழ்ந்துள்ளனர் என்பது வரலாறு. பாபவிசை தீர்த்த மகிமை, ஐந்து வகை நிலங்களும் தாமிரபரணியும், தாமிரசபை சிற்பங்கள், தாமிரபரணி நதி உற்பத்தி புராணம், நதியோரம் கிடைத்த நாணயங்கள், தாமிரபரணி […]

Read more

களவும் கற்று மற

களவும் கற்று மற, எஸ்.விஜயன், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 75ரூ. சிறுவர் – சிறுமியரின் ரசனைக்கு இயன்றதொரு விருந்தை படைக்கிறது இந்நுால். திசை மாறிய இளைஞனின் தறிகெட்ட சிந்தனையுடனான சாத்வீக பயணத்தை மேற்கொள்கிறது. கதை நெடுக இளைஞனை ஆக்கிரமித்து வரும் கவிதைகளின் பின்னணி பற்றி, இந்நுாலின் இறுதியில் சிறிய குறிப்பைத் தந்துள்ளார் ஆசிரியர். அந்த குறிப்பும், இந்நுாலின் தலைப்புமே, அழகிய வண்ணப்படங்களோடு சிறார்கள் ஐக்கியமாகிட உதவும் திறவுகோல்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 7/10/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

விவசாயம்

விவசாயம், டாக்டர் வி.ஜி.சந்தோசம், கைத்தடி பதிப்பகம், பக்.148, விலை 140ரூ. விவசாயம் இல்லையென்றால் வாழ்வு இல்லை. விவசாயி என்ற வீரத் திருமகன், விந்தைகள் பல புரிந்து, வியர்வை சிந்தி, உணவிற்கான தானியங்களை உற்பத்தி செய்து, உலக உயிர்களுக்கு உன்னதம் செய்கிறான் என்ற சிறப்பைச் சொல்கிறார் இந்நுாலாசிரியர். உற்பத்தி செய்யப்படும் உணவு தானியங்கள், மனித வாழ்வில் தினை வகைகளின் பங்கு, உலக அரங்கில் விவசாயத்தின் நிலைப்பாடு, தோட்டக்கலைத் துறையால் விவசாயிகளின் முன்னேற்றம், உழவனின் பெருமை, இயற்கை உரம் தயாரிக்கும் முறை, பனை மர விவசாயம், சொட்டு […]

Read more

தனிமையில் ஒரு கோயில்

தனிமையில் ஒரு கோயில், என்.நாகராஜன், ஸ்வேதகலா புக்ஸ், பக். 208, விலை 160ரூ. எளிய நடையில் தெளிவான நேரடித்தன்மை கொண்ட, 16 சிறுகதைகளும் இந்நுாலாசிரியரின் கதை சொல்லும் திறனை வெளிப்படுத்துகின்றன. வாழ்க்கைப் பாதையில் காண்பனவும், உணர்வனவும் கதைக்குக் கருப்பொருளாகி இருப்பதை இந்நுால் வெளிப்படுத்தியுள்ளது. ‘தனிமையில் ஒரு கோவில்’ எனும் கதை, கோவிலுக்கு நேர்ந்து கொண்ட ஓர் அனுபவத்தினுாடே மனிதர்களின் மனோபாவங்களைப் படம் பிடிக்கிறது. பேருந்தில் செல்லும் போது நடத்துனர் பாக்கி சில்லரை தராததோடு, அவன் எப்படிப்பட்டவன் என்பதை விளக்கும் கதை, ‘இருளனைத்தும் புலரும்’ என்ற […]

Read more

காலத்தின் வாசனை

காலத்தின் வாசனை, தஞ்சாவூர் கவிராயர், கே.எஸ்.எல்.மீடியா லிமிடெட், பக். 144, விலை 160ரூ. நிற்பதுவே… நடப்பதுவே, திண்ணைகளின் பொற்காலம்! ரயில் என்ன சாப்பிடும்? கொசுவலை கோலாகலம், கைமாற்று வெண்பா, விசிறி வீடு, ஜவ்வாது பூனையும் ரஹீம்பாய் அத்தர் கடையும், வெயில் மனிதர்கள், வளையல்காரர் வராத தெரு, சக்கரவர்த்தியின் ஆவி, காலை பேப்பரும் காபி டம்ளரும், வள்ளலாரைத் தேடிய சி.ஐ.டி., கூஜாவின் கோபம், வீட்டுக்கு வரும் டாக்டர், சந்துகளுக்கும் சரித்திரம் உண்டு’ உள்ளிட்ட சிறுகதைகள், படிக்கும் வாசகரின் மனதில் முத்திரை பதிக்கும் என்பது திண்ணம். நன்றி: […]

Read more

அது ஒரு கனாக்காலம்

அது ஒரு கனாக்காலம், டாக்டர் ஜெ. பாஸ்கரன், மணிமேகலை பிரசுரம், பக். 144, விலை 100ரூ. சில நினைவுகள் காலத்தால் அழியாதவை. இன்று நினைத்தாலும் இனிமையான உணர்வலைகளை உள்ளமெங்கும் தவழ விடுபவை என்பதில் சந்தேகமில்லை. சைக்கிள் விட்ட துள்ளலையும், கல்யாணங்களில் ஆனந்தப்பட்டதையும், பெண் பார்த்த அப்பாவித் தனத்தையும், வாழைப்பூ வடை சாப்பிட்ட நாக்கு ரசனையையும், துபாய் அனுபவிப்பையும், லண்டனில் படித்ததையும், அகஸ்தியர் கோவில் அமைப்பையும், அம்மாவின் அரவணைப்பையும், சினிமா மோகத்தையும் நினைவுகூர்வதாக அமைந்துள்ளது இந்நுால். நன்றி: தினமலர், 30/9/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more
1 81 82 83 84 85 240