முத்திரை சிறுகதைகள்

முத்திரை சிறுகதைகள், தொகுப்பாசிரியர் கி.ராமசுப்பு, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 156, விலை 140ரூ. கதைகள்… மனித வாழ்வின் அனுபவத்தை பூர்த்தி செய்யும் மாபெரும் ஆயுதம்! கதைகள் இல்லா விட்டால்; கற்பனைகள் இல்லாவிட்டால் மனித வாழ்வு வறட்சி கண்டு விடும். தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரை, ஆயிரமாயிரம் ஆண்டு காலமாகவே கதை கேட்டே வளர்ந்த சிறப்புடையது. தாத்தா – பாட்டி, கூத்து, நாடகம், புத்தகம், சினிமா… என எந்த வழியிலாவது கதைகள் நம்மை வந்தடைந்து கொண்டிருந்தன. ஆனால் இப்போது… கூத்தும், நாடகமும் காணாமல் […]

Read more

காட்டுக்குள்ளே கணித மாயாவி

காட்டுக்குள்ளே கணித மாயாவி, இரா.செங்கோதை, மகாயுகம், பக். 72, விலை 60ரூ. கணிதத்தில் தோன்றும் பல்வேறு சிறந்த புதிர்களை மையமாகக் கொண்டு, ஒவ்வொரு அத்தியாயமும் செதுக்கப்பட்டுள்ளது. இந்நுாலை படிக்கும் இளம் மாணவர்களுக்கு, கணிதம் மீதுள்ள அச்சம் நீங்கி மகிழ்வை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அழகிய கதை வடிவில் கணித கோட்பாடுகளை திறமையாக வெளிப்படுத்திய நுாலாசிரியரை நிச்சயம் பாராட்டலாம். நன்றி: தினமலர், 30/9/2018.   இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

இதிகாசம் புராணத்தில் இந்திய சட்டங்கள்

இதிகாசம் புராணத்தில் இந்திய சட்டங்கள், முனைவர் பங்காரு வேணுகோபால், வானதி பதிப்பகம், பக். 80, விலை 50ரூ. நாம் யார்? நம் நாகரிகம் எப்படிப்பட்டது என்பதையும், இன்றைக்கு இருக்கிற சட்டங்களோடு இந்திய கலாசாரப் பண்பாடு எப்படி பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும், நம் முன்னோர்கள் சொல்லிவிட்டுச் சென்ற கதைகளும், வரலாற்று இதிகாச புராணங்களும் எவ்வளவு மேன்மை பொருந்தியவை என்பதையும் கூறும் இந்நுால், இன்றைய இளைய தலைமுறையினருக்கு பாடம் கற்பிப்பதாக அமைந்துள்ளது. நன்றி: தினமலர், 30/9/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026683.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

தலைமைப் பொறுப்பேற்கலாம்

தலைமைப் பொறுப்பேற்கலாம், சந்திரிகா சுப்ரமணியன், சந்திரோதயம் பதிப்பகம், பக். 64. இந்நுாலில், தயங்காது வாருங்கள் தலைமைப் பொறுப்பேற்க… எது தலைமைத்துவம்? அதன் வகைகள், தலைமையேற்க வயது ஒரு தடையல்ல, மேலாண்மையும் தலைமைத்துவமும், நீங்கள் சிறந்த தலைமைத்துவம் உள்ளவரா? தலைமைத்துவமும் உடல் மொழியும், சோம்பேறிகளை நிர்வகித்தல், பத்து விடயங்களை மறுப்பதற்கு தவறவேண்டாம், நெல்சன் மண்டேலா கற்றுத் தந்த தலைமைத்துவம் உள்ளிட்ட கட்டுரைகள், நுாலாசிரியர் தான் கற்ற, பெற்ற அனுபவங்களின் வெளிப்பாடு எனலாம். நன்றி: தினமலர், 30/9/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

இஸ்லாமியத் தத்துவ இயல்

இஸ்லாமியத் தத்துவ இயல், ராகுல் சாங்கிருத்யாயன், ஏ.ஜி.எத்திராஜீலு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 200, விலை 170ரூ. இந்நுால் ஹிந்தியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட ஒரு தத்துவ நுாலாகும். எளிய தமிழில் இஸ்லாமிய சமயம் குறித்த ஒரு ஆழ்ந்த சிந்தனையை, வரலாற்றை இந்நுால் முன்வைக்கிறது. முகமது நபி பெருமானது வரலாற்றில் துவங்கும் இந்நுால், இஸ்லாமிய சமயத்திலுள்ள கருத்து வேற்றுமைகளையும், கிழக்கிந்திய இஸ்லாமியத் தத்துவ அறிஞர்கள், ஸ்பெயினின் இஸ்லாமியத் தத்துவ அறிஞர்கள் குறித்தும், விரிவாக எடுத்துரைக்கிறது. இஸ்லாமியர் மட்டுமல்லாது, இம்மதத்தைப் பற்றி அறிய விழையும் அனைவருக்கும் […]

Read more

கொல்லிமலை மகிமை

கொல்லிமலை மகிமை, மதியுகி சிவகுரு, பிரேமா பிரசுரம், பக். 104, 60ரூ. எந்த இடத்துக்கு சென்றாலும், அந்த இடம் பற்றிய விபரங்களை நாம் அறிந்திருந்தால் மட்டுமே, நன்கு சுற்றி பார்க்க முடியும். நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக உள்ள கொல்லிமலை பற்றி பலரும் தெரிந்திருப்போம். ஆனால், அங்கு பார்க்க வேண்டியவை பற்றி கேட்டால், சரியாகத் தெரியாது. இந்தக் குறையைப் போக்கும் வகையில், கொல்லிமலை பற்றி முழு தகவல்களுடன், இந்நுால் வெளிவந்துள்ளது. நன்றி: தினமலர், 26/8/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

பாரதி முதல் கவிதாசன் வரை

பாரதி முதல் கவிதாசன் வரை, பூ.மு.அன்புசிவா, குமரன் பதிப்பகம், பக். 144, விலை 90ரூ. பாரதி முதல் கவிதாசன் வரை எனும் இந்நுால் தொடர்ச்சியான வரலாறாக இன்றி, காலப்போக்கில் அவ்வப்போது எழுதிய திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. இந்நுாலின் முதல் கட்டுரை பாரதியைப் பற்றியது. அடுத்தடுத்த மூன்று கட்டுரை, சங்க இலக்கியம் பற்றியது. பின், கம்பன், திருவள்ளுவர் என அமைந்து, இக்காலத்தில் சக்திஜோதி, பா.விஜய், கனிமொழி, நா.முத்துக்குமார், அகிலா, கவிதாசன் ஆகிய படைப்பாளிகளின் கவிதைகளையும் திறனாய்வு செய்துள்ளது இந்நுால். பாரதியின் சமுதாய உணர்வையும், உலகளாவிய […]

Read more

தமிழக வடக்கெல்லைப் போராட்ட வரலாறு

தமிழக வடக்கெல்லைப் போராட்ட வரலாறு, பேரா.முனைவர் பி.யோகீசுவரன், அரசி பதிப்பகம், பக். 160, விலை 125ரூ. இன்றைய இளைஞர்களுக்கும், சில அரசியல்வாதிகளுக்கும், திருத்தணி, சென்னை ஆகிய நகரங்கள் தமிழகத்துடன் இணைந்த வரலாறு தெரிந்திருக்காது என்று கூறலாம். சிலம்புச்செல்வர் ம.பொ.சி., தமிழாசிரியர் மங்கலங்கிழார், தளபதி கே.விநாயகம், என்.ஏ.ரஷிது, கோல்டன் ந.சுப்பிரமணியன் உள்ளிட்ட பல போராட்ட வீரர்கள் குறித்து, இந்நுால் விரிவான செய்திகளைக் கூறுகிறது. வெள்ளையர் ஆதிக்கத்தில் வேங்கடம், சித்துார் மாவட்டங்கள் உருவான வரலாறு, வடக்கெல்லைப் போராட்ட வரலாறு, சித்துார் போராட்டத்தில் தமிழக கம்யூனிஸ்டுகள் நடுநிலையில் இல்லை […]

Read more

குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு, டாக்டர் வசந்த் செந்தில், குமரன் பதிப்பகம், பக். 128, விலை 50ரூ. குழந்தையின் தேவை என்ன? எந்தெந்த வயதில் தடுப்பூசிகள், ஆண் – பெண் குழந்தையின் வயதுக்கேற்ப எடை மற்றும் உயரம், எடைக்குத் தேவையான கலோரி, தாய்ப்பால் கொடுப்பதால் அம்மாக்களுக்கு என்ன பயன்? திட உணவுகளை அறிமுகப்படுத்தும் முறை, குழந்தை வளர்ப்பில் பல்வேறு வழிமுறைகளை படங்களுடன் விவரிக்கிறார், டாக்டர் வஸந்த் செந்தில். இந்நுால், கர்ப்பிணிகளுக்கு மிகவும் பயனளிக்கும் அரிய பொக்கிஷம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 26/8/2018. இந்தப் புத்தகத்தை […]

Read more

கால்பந்தாட்டம் ஒரு நகைச்சுவைக் கண்ணோட்டம்

கால்பந்தாட்டம் ஒரு நகைச்சுவைக் கண்ணோட்டம், ப.குணசேகர், பண்புப் பதிப்பகம், பக். 192, விலை 150ரூ. கால்பந்தாட்ட வரலாறு என்ன? அதன் தோற்றம் எப்போது என்பதை ஆண்டு அடிப்படையில் அடுக்கடுக்காக எழுதியிருப்பது, இந்நுாலுக்கு சிறப்பு சேர்க்கிறது. களத்தில் தனிநபராக நின்று, எதிரணிக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய வீரர்களைப் பற்றிய செய்திகளோடு, நம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் கதாபாத்திரங்களை கால்பந்தாட்ட வீரர்களாகவும் ரசிகர்களாகவும் சித்தரித்து, நகைச்சுவை ததும்ப எழுதியுள்ளார், நுாலாசிரியர் குணசேகர். நன்றி: தினமலர், 26/8/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more
1 82 83 84 85 86 240