உழைப்பே உயர்வு தரும்

உழைப்பே உயர்வு தரும், அருணோதயம் அருணன், அருணோதயம் வெளியீடு, பக்.172, விலை 100ரூ. முயற்சியால் முன்னேறியவர்கள், உழைப்பால் உயர்ந்தவர்கள் வாழ்க்கையை நேரில் பார்த்தோ, அவர்கள் வரலாற்றை நுால் வடிவாகப் படித்தோ, நாமும் அதுபோல் நடை போட வேண்டும்; வெற்றி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். பேசி பேசியே வாழ்நாளை வீணடிக்காமல், ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாக்க வேண்டும் என்பதை நம் மனதில் ஆழமாக பதிவு செய்கிறது இந்நுால். நன்றி: தினமலர், 22/7/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

விடியலின் முகவரிகள்

விடியலின் முகவரிகள், கவிஞர் செல்லம் ரகு, அகநி, பக். 96, விலை 120ரூ. இன்றைக்கு பூமியே நெகிழிப் பையென சுருங்கிப் போய்விட்டதோ என்று அஞ்சும் அளவிற்கு நெகிழிப் பை இல்லாமல் எதுவுமேயில்லை என்கிற நிலை உண்டாகி விட்டது. ‘மேய்ச்சல் நிலம் தேடிச் சென்ற மாடுகள் மாலையில் திரும்பின நெகிழிப்பை மென்றபடி’ என்ற கவிதை வரிகளில், நம்மைக் கொல்லும் நெகிழிப் பையின் அபாயம் குறித்து ஆசிரியர் கூறியுள்ளது, நெஞ்சத்தை பதற வைக்கிறது. நன்றி: தினமலர், 22/7/2018.   இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027093.html இந்தப் புத்தகத்தை […]

Read more

அறிவியல் தொழில் நுட்பம் பற்றி அறியலாம் வாங்க

அறிவியல் தொழில் நுட்பம் பற்றி அறியலாம் வாங்க, பொறிஞர் எஸ்.சுந்தரம், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 75ரூ. உலகத்தின் எந்த ஒரு பகுதியையும் ஓரிரு மணித் துளிகளில் தொடர்பு கொள்ளும் நிலை இன்று உருவாகியுள்ளது. இந்த சூழலில், நம்மை சூழ்ந்துள்ள இயற்கையான சுற்றுப்புறம், நாம் பயன்படுத்தும் தொழில் நுட்பம், நம் உடல் இயங்கும் முறை, அவற்றுள் பொதிந்து கிடக்கும் எண்ணற்ற அறிவியல் ரகசியங்கள் பற்றியும் அறிந்துகொள்ள உதவும் அற்புத நுால் இது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 22/7/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]

Read more

உன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன்

உன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன், கவிக்கோ அப்துல் ரகுமான், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 384, விலை 300ரூ. நம்மைச் சுற்றிலும், உலகிலும் கவிதை இலக்கியத்தில் ஏற்பட்டுள்ள புதிய வெளிச்சங்களைக் காணப் பொழுதில்லாத நமக்கு, ரகுமான் திறந்து வைத்துள்ள சாளரங்கள், வெளி உலகைப் பார்க்கும் கண்களாய் இல்லை, நம் மீது சுகந்தம் இறைக்கும் புதிய காற்றாய் ததும்புகின்றன’ என, இந்த நுாலைப் புகழ்கிறார், கவி சிற்பி! உருது கவிஞர், கைபி ஆஸ்மி பற்றி, அப்துல் ரகுமான் சொல்கிறார்: உருது கவிஞர், கைபி ஆஸ்மி அற்புதமான கவிதைகளை […]

Read more

ஒரு துணை வேந்தரின் கதை

ஒரு துணை வேந்தரின் கதை, டாக்டர் சே. சாதிக், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், பாகம் 1, விலை 400ரூ, பாகம் 2, விலை 350ரூ. நிறைய வேலை – குறைய வேலை என்பது என் ஏட்டில் இருந்ததில்லை – இப்போதும் இல்லை. என்னிடம் இருப்பதெல்லாம், ‘வேலை’ என்பது தான். வேலையை வேலை என்று பார்த்தால் அது ஒரு பாரம், பளு. வேலையையும் விளையாட்டாக எடுத்துக் கொண்டால் அங்கே வேதனை இருப்பதில்லை. வேகம் வரும். அது மகிழ்ச்சி தரும். ஒரு ஆத்ம திருப்தி மலரும். இதுவே என் […]

Read more

மார்க்சிய அறிவுத் தோற்றவியல்

மார்க்சிய அறிவுத் தோற்றவியல், நா.வானமாமலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 70, விலை50ரூ. இந்நுால், தமிழ்ப் புலமைத் தளத்தின் வழியாக, மார்க்சிய அறிவு ஆராய்ச்சி இயலைச் சிறப்பாகக் கற்பிக்கிறது. அறிவின் தோற்றம், உண்மை, பிழை முதலான அறிவுத் தத்துவப் பிரச்னைகளை எடுத்து விளக்கும்போது, தமிழ்த் தத்துவ நிலைப்பாடுகள் வழியாக விளக்குவதும், மார்க்சிய நிலைப்பாடுகளை எடுத்துக் கூறுவதும் மார்க்சியத்தை கற்க வழிவகுக்கிறது. இந்நுால் வழியாக வெளிப்படும் மார்க்சிய சிந்தனை, தமிழ் மரபில் வேர் பிடித்து வளரும் என்பது முன்னிறுத்தப்பட்டுள்ளது. நன்றி: தினமலர், 1/7/2018. இந்தப் […]

Read more

ராஜா விஸ்வநாதன்

ராஜா விஸ்வநாதன், பி,விஸ்வநாதன், அசோக்ராஜா பதிப்பகம், பக்.144, விலை 140ரூ. ஒரு நிமிட பழக்கமாக இருந்தாலும், ஓராண்டு பழக்கமாக இருந்தாலும், பிரிய வேண்டிய சூழ்நிலை வந்து பிரியும் போது அந்த மனங்கள் தவிக்கிறதே, அந்த தவிப்புக்குப் பெயர் தான் காதல்! காதல் மகிமையால் தான் இந்த பூமியும் சுழன்று கொண்டிருக்கிறது; இந்த உலகத்தையும் நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். ‘காதல் ஒரு மாயை; இனிக்கவும் செய்யும்… அழிக்கவும் செய்யும்’ என்ற கருத்தை ஆழமாக பதிவு செய்கிறது இந்நுால். நன்றி: தினமலர், 1/7/2018. இந்தப் புத்தகத்தை […]

Read more

சுடர்கள் ஏற்றும் சுடர்

சுடர்கள் ஏற்றும் சுடர், பொன்னீலன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 180, விலை 160ரூ. பேராசிரியர் நா.வானமாமலை நாட்டார் வழக்காற்றியலின் தந்தை. மார்ச்சிய லெனினிய அகராதி, தமிழர் நாட்டுப் பாமரர் பாடல்கள், தமிழர் நாட்டுப் பாடல்கள், புதுக்கவிதை – முற்போக்கும் பிற்போக்கும் – போன்ற அவரது நுால்கள் தமிழுக்கு சிறந்த பங்களிப்புகள். அவரது அன்றாட வாழ்க்கை, ரசனைகள், குறைகள், சாதனைகள், வேதனைகள், அவரைப் பற்றிய மதிப்பீடுகள் ஆகியவை பொன்னீலனால் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு காலகட்டத்தில் புதுக்கவிதை இடதுசாரி விமர்சகர்களால் அங்கீகரிக்கப்படவில்லை. தொ.மு.சி.ரகுநாதன், கலாநிதி […]

Read more

இளசையாரின் இலக்கிய பயணம்

இளசையாரின் இலக்கிய பயணம், முனைவர் ரேவதி சுப்புலட்சுமி, புகழ் பதிப்பகம், பக். 136. படைப்பாளர், பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், நுாலாசிரியர், ஆராய்ச்சியாளர், கிருபானந்த வாரியாரால் பாராட்டப்பட்ட நகைச்சுவை மாமன்னர், ஆன்மிக அறிஞர், அகில இந்திய வானொலி இயக்குனர், கவிஞர், நாடக ஆசிரியர், மகாகவி பாரதியாக வேடமிட்டுத் தோன்றும் நடிகர், பல வெளிநாடுகளில் தமிழின் புகழைப் பரப்பியவர் போன்ற பன்முகம் கொண்ட இலக்கியவாதியின் சுயசரிதையைக் கூறுகிறது இந்நுால். நன்றி: தினமலர், 8/7/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

இறைவனிடம் கையேந்துங்கள்

இறைவனிடம் கையேந்துங்கள், ஏகவன், அமானி பப்ளிகேஷன்ஸ், பக். 96, விலை 40ரூ. உழைக்கும் கரங்கள், ஹாஜியார் வீட்டுக் கல்யாணம், ஏழை வரி, ஹலால், நோன்பு கஞ்சி, பெருநாள் காசு, எல்லா புகழும் இறைவனுக்கே, கொழுக்கட்டை, இறை இல்லம், இறைவனிடம் கையேந்துங்கள்’ ஆகிய சிறுகதைகள், நபி மொழிகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பிலும், பொருளாதார நிலையிலும் பின்தங்கியிருக்கும் முஸ்லிம் சமுதாயம் முன்னேற, கல்வி ஒன்று தான் கருவியாக இருக்க முடியும் என்பதை உணர்த்தும் சிறுகதைகள் இந்நுாலில் இடம்பெற்றுள்ளன. நன்றி: தினமலர், 8/7/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more
1 87 88 89 90 91 240