அறிவியல் உலகம் ஓர் அறிமுகம்

அறிவியல் உலகம் ஓர் அறிமுகம், என்.ஸ்ரீநிவாசன், கண்ணப்பன் பதிப்பகம், பக்.496, விலை 300ரூ. நம் அன்றாட வாழ்வில் பார்க்கும், கேட்கும், உணரும் செயலாற்றும் நிகழ்ச்சிகளின் தொகுப்பு தான் இந்நுால் என விளக்கம் தருகிறது. தண்ணீர் புவியின் உயிரோட்டம் இது. புவியின் பரப்பளவில் பூமிக்கு நீர்க்கோளம் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. கோடிக்கணக்கான உயிரினங்களுக்கு உயிர்ப்போராட்டம் கொடுக்கும் இயற்கை அமுதம் என்ற விளக்கமும் அதில் உள்ள தகவல்கள் உள்ளன. ‘ஆல்கே’ எனும் கடற்பாசியினம் தோன்றி, 310 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்ற கேள்வி இப்போது எழுவது […]

Read more

நான் எப்படி எழுதுகிறேன்

நான் எப்படி எழுதுகிறேன், ஆங்கில மூலம் உம்பர்ட்டோ ஈகோ, தமிழில் க.பஞ்சாங்கம், அருட்செல்வம் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பக். 128, விலை 125ரூ. இன்று உலகில் புகழ் பெற்ற முதல் இருபது அறிவு ஜீவிகளில் ஒருவர் உம்பர்ட்டோ ஈகோ. நாவலாசிரியர், கட்டுரையாளர், பண்பாட்டாய்வாளர் என, பன்முகத்தன்மை கொண்ட இவர், 30க்கும் மேற்பட்ட கவுரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றவர். அவரது நுாலிலிருந்து, நான் எப்படி எழுதுகிறேன், நடை, இலக்கியத்தின் சில செயல்பாடுகள், அரிஸ்டாட்டிலின் கவிதையிலும் நாமும், கம்போரேசி ரத்தம், உடல், வாழ்வு, பொதுவுடைமை அறிக்கையின் நடையை […]

Read more

ஸ்ரீராஜ மாதங்கி

ஸ்ரீராஜ மாதங்கி, டி.எஸ்.கிருஷ்ணன், ஸ்வார்த்தம் சத் சங்கம், பக். 320. தென் நாட்டில் முளைத்தெழுந்த மூலவித்து மூல லிங்கமாம் சோமசுந்தரர், அன்னை மீனாட்சி சக்தியின் இதய பாகம் எழுந்தருளிய கடம்பவனமாம் மாமதுரையின் வரலாறும், இத்தலத்தின் வரலாற்றுப் புதினங்களும் பல நிலைகளில் கிடைத்தாலும், அவை வைர மாலையாக, வரலாற்றுப் பெட்டகமாக, ‘ஸ்ரீ ராஜ மாதங்கி’ அமைந்திருக்கிறது. மதுரை மீனாட்சி கோவில் கட்டமைப்பு உணர்த்தும் தத்துவங்கள், இசை பாடும் துாண்கள், ஓவியங்கள் உணர்த்தும் வரலாறு, திருவிழாக்கள், தமிழ் சங்க வேந்தர்கள் பற்றி ஒவ்வொரு அடியாக நமக்கு விளக்கும் […]

Read more

கம்பன் கண்ட இராமன்

கம்பன் கண்ட இராமன், கீரனூர் ராமமூர்த்தி, ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா சொசைட்டி, பக். 271. சொற்பொழிவுகள் மூலம், கம்பனின் கவிநயத்தையும், ராமனின் புகழையும் பரப்பி வந்த நுாலாசிரியர், கவிதையின் உச்சத்தைத் தொட்ட கம்பனின் கவிதைகளை இடையிடையே இணைத்து, எளிய தமிழில் எல்லாருக்கும் புரியும் வண்ணம் நுாலை உருவாக்கி இருக்கிறார் ஆசிரியர். கம்ப ராமாயணக் கடலில் மூழ்கி, கம்ப ராமாயணத்தையே கதையாகவும், கம்பன் கவிதைகளோடும் ‘கம்பன் கண்ட ராமன்’ என்னும் பெயரில் நுாலை வெளியிட்டுள்ளார். கம்ப ராமாயண கதையை தெரிந்து கொள்ள விரும்புவோர், இதைப் படித்தால் […]

Read more

பல்லவப் பேரழகி

பல்லவப் பேரழகி, கயல் பரதவன், நர்மதா பதிப்பகம், பக். 688, விலை 375ரூ. வரலாற்றுப் புதினங்கள் வெறும் கற்பனைக் கோலங்கள் அல்ல. நிகழ்ந்த வரலாற்றை கற்பனைச் சாயங்களில் வரைந்து நம்முன் ஓடவிடுவது. சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசிக்கும், காஞ்சியின் மகேந்திர பல்லவனுக்கும் இடையில் நிகழ்ந்த போர்க்களமே புதினத்தின் கதைக் களம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழந்தமிழரின் வாணிபச் செல்வாக்கும், கட்டடக் கலை நுட்பமும், போரில் கையாண்ட தற்காப்பு உத்திகளும், பண்பாடு நாகரிகமும், இல்வாழ்வு மாண்புகளும் நம்கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது புதினம். இரண்டாம் புலிகேசி வடஇந்தியாவிலுள்ள […]

Read more

எம்.ஜி.ஆர். அரசியல் பாதை

எம்.ஜி.ஆர். அரசியல் பாதை, துரை கருணா, எம்.ஜி.ஆர். பாசறை, பக்.264, விலை 160ரூ. ‘மக்கள் திலகம்’ என்று கொண்டாடப்படும் எம்.ஜி.ஆர்., அவர்களின் அரசியல் வரலாற்றை இந்நுால் பதிவு செய்துள்ளது. காந்தியவாதியாகவும், நேதாஜியை நேசிப்பவராகவும், காங்கிரஸ் அனுதாபியாகவும் இருந்த எம்.ஜி.ஆர்., 1952ம் ஆண்டு, நடிகமணி டி.வி.நாராயணசாமி மூலம் அண்ணாதுரையின் அறிமுகம் கிடைத்த பின், தி.மு.க., அனுதாபியாக மாறினார் என்று அறிகிறோம் (பக். 15). நாடோடி மன்னன் என்ற திரைப்படத்தின் மூலம், தி.மு.க.,வின் கொடியையும், கொள்கைகளையும் பட்டி தொட்டியெங்கும் பரவச் செய்தார் என்றும் (பக். 18), அண்ணாதுரை […]

Read more

பாப்பாவுக்குப் பாட்டு

பாப்பாவுக்குப் பாட்டு, ருக்மணி சேஷசாயி, சாயி பதிப்பகம், பக்.64, விலை 80ரூ. பாட்டுக்கு என்றாலே மகாகவி பாரதி தான் நினைவுக்கு வருவார். குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக் கொடுக்கும் காலம் மறைந்து வருகிறது. இக்குறையை போக்கும் வகையில், குழந்தைகளுக்கென்றே விலங்குகளை நாயகனாக வைத்து பாடல்களை ஆசிரியர் தொகுத்து தந்துள்ளது பாராட்டிற்குரியது. உறவுகளை வளர்க்கும் வகையில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி பற்றிய பாடல்களும் இடம் பெற்றுள்ளன. இந்நுாலை வாங்கி, குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்தால், அவர்களும் சிறப்பாக பாடுவர்; உச்சரிப்பும் சரியாக வரும் என்பதில் எள்ளளவும் […]

Read more

தொழில் முனைவோர்

தொழில் முனைவோர், இரத்தின நடராசன், ஏகம் பதிப்பகம், பக்.120, விலை 90ரூ. பண்டைய காலந்தொட்டு உழவு மற்றும் நெசவு தொழில்கள் மிக முக்கியமாகக் கருதப்பட்டு வந்தன. திரைகடலோடியும் திரவியம் திரட்டு என்பர். நாம் மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்; மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் இந்நுால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தொழில் செய்பவர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரின் சிந்தனைகளையும், அனுபவங்களையும், ஆலோசனைகளையும் உள்ளடக்கிய அறிவுப் பெட்டகம் இந்நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி:தினமலர், 20/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

சுற்றுச்சூழல் காப்போம் வாங்க

சுற்றுச்சூழல் காப்போம் வாங்க, பொறிஞர் எஸ்.சுந்தரம், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.104, விலை 75ரூ. கழிவுப் பொருட்களால் நதிகள் வீணாவதையும், கிரீன் ஹவுஸ் விளைவுகளையும், ஓசோன் அடுக்கு பற்றி மக்கள் கவலைப்படுவதையும், குப்பை கழிவுகள் எங்கே செல்கின்றன… அமில மழை என்றால் என்னவென்பதையும், மின்சார கார்களை ஏன் உபயோகிக்கவில்லை? எரிபொருள் நெருக்கடி, சலவை சோப்புகளால் பூமி மாசுபடுவதையும், பவளப்பாறைகளின் முக்கியத்துவத்தையும், பயனற்றவையிலிருந்து செல்வம் பெறுவது எப்படி? ஒருவருக்கான உணவை 20 பேருக்கு அளிப்பது என்பதையும் படங்களுடன் விவரிக்கிறது இந்நுால். நன்றி:தினமலர், 20/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

பௌத்த சிந்தனை பன்நோக்கு வாசிப்பு

பௌத்த சிந்தனை பன்நோக்கு வாசிப்பு, முனைவர் கா.அய்யப்பன், காவ்யா, பக்.184, விலை 190ரூ. கோட்பாடுகளில் வரையறைக்கு அப்பாற்பட்டது பௌத்தம். பதிமூன்றாம் நூற்றாண்டு கால அளவிலும் பெரும் செல்வாக்குள்ள சமயமாக விளங்கியது. பௌத்த சமய பின்புலத்தில் காப்பியங்கள் உட்பட பல்வேறு நூல்கள் இயற்றப்பட்டு உள்ளன. தமிழ் வளர் சூழலில் பௌத்த சிந்தனைகள் ஏற்படுத்திய தாக்கங்களை, சங்க இலக்கியம் தொட்டு, பக்தி இயக்க காலகட்டம் வரை, அதற்குப் பிந்தைய காலம் என வேறுபடுத்தி பார்க்க வேண்டியதாகக் குறிப்பிடப்படுகிறது. தமிழ் இலக்கண மரபிலும் பௌத்த சிந்தனைகளின் தாக்கங்கள் இருந்தமை […]

Read more
1 88 89 90 91 92 240