தத்துவ ஞானி ஜே.கே.

தத்துவ ஞானி ஜே.கே., மானோஸ், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.208, விலை180ரூ. ஜே.கே., என சுருக்கமாக அழைக்கப்படும் ஜே.கிருஷ்ணமூர்த்தி ஒரு பூரண சிந்தனையாளர்; தத்துவ ஞானி. அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகளில் இருந்தும், மாணவர்களுடன் அவர் நடத்திய உரையாடல்களில் இருந்தும் எழுந்த கருத்துக்களை அழகாகத் தொகுத்து, தத்துவ ஞானி ஜே.கே., என்று தந்திருக்கிறார் மானோஸ். உலகில், இன்று வரை நிலைத்திருக்கும் சமயங்களுக்கும், முன்னோர்களின் தத்துவ விளக்கங்களுக்கும், குருமார்களின் சடங்கு, சம்பிரதாயங்களுக்கும், அவற்றுக்கு இடையே நிகழும் முரண்பட்ட கருத்துக்களுக்கும், அதனால் எழும் குழப்பங்களுக்கும், பிரச்னைகளுக்கும் தெளிவாக விளக்கமளித்து, […]

Read more

கருணை தெய்வம் காஞ்சி மகான்

கருணை தெய்வம் காஞ்சி மகான், வி.ராமசுந்தரம், சங்கர் பதிப்பகம், படிப்பதிலும், கேட்பதிலும் அலுக்காத விஷயமாக இன்றும் இருப்பது, காஞ்சிப் பெரியவர், சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் குறித்த செய்திகள் என்று துணிந்து சொல்லலாம். அண்மைக் காலத்தில் நடமாடும் தெய்வமாக வாழ்ந்தவரைப் பற்றி, குறித்த அருமையான நுாலிது. காஞ்சிப் பெரியவாளுக்கு, 14 மொழிகள் தெரியும் என்றும் (பக். 8), காஞ்சி மடத்தின் தலைவராக, 87 ஆண்டுகள் இருந்துள்ளார். தன் எதிரில் திரைப்படப் பாடல் பாடிய சிறுமியைப் பாராட்டியதும் (பக். 25), உணவைத் தரையில் அமர்ந்து உண்ணுவது தான் […]

Read more

ஆன்மிகம் அறிவோமா

ஆன்மிகம் அறிவோமா, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 60, விலை 60ரூ. மனிதர்களுக்கும், மகான்களுக்கும் என்ன வித்தியாசம்? தமக்கு மேலே இருக்கிறவர்களையே எப்போதும் மனிதர்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர்… ‘அவர்களைப் போல் ஆவது எப்போது?’ என்கிற ஆசையில்! தமக்கு கீழே இருக்கிறவர்களையே எப்போதும் மகான்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர்… ‘அவர்களும் நம்மைப் போல் ஆவது எப்போது?’ என்கிற அக்கறையில்! அந்த வகையில், நல்வாழ்விற்கு மகான்கள் காட்டிய பாதை இரண்டு. ஒன்று ஆன்மிகம்; இன்னொன்று நற்பண்பு. இவை இரண்டும் ஒரே புள்ளியில் இணையும் இரு கோடுகள். […]

Read more

எம்டன் செல்வரத்தினம்

எம்டன் செல்வரத்தினம், கிழக்கு பதிப்பகம், பக்.144, விலை 140ரூ. சென்னையர் கதைகள் சென்னை தினத்தை முன்னிட்டு, 2017ம் ஆண்டு நடத்திய, ‘சென்னை சிறுகதைப் போட்டி’யில் வெற்றி பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு தான், ‘எம்டன் செல்வரத்தினம்!’ முதல் பரிசுக் கதையின் தலைப்பே தொகுப்பின் தலைப்பாகவும் இருக்கிறது. கடந்த, 1914ம் ஆண்டு ஜெர்மானியக் கப்பல் எம்டன் மதராஸ் மீது குண்டு வீசிய தருணத்தை கற்பனை கலந்து கொஞ்சமும் உறுத்தாமல் வரலாற்றுக் கோணத்தில் விவரித்துப் பார்க்கும் கதை. 68, லாயிட்ஸ் ரோடு வாசலில் விரியும் ராயப்பேட்டை வீடு. காமத்தை […]

Read more

மனசுக்குள் மாயவலை

மனசுக்குள் மாயவலை, மேஜர்தாசன், அமராவதி, பக். 128, விலை 90ரூ. எழுத்தாளர் மேஜர்தாசன் எழுதிய சிறுகதைகள் தொகுப்பாக இந்த நுால் வெளிவந்துள்ளது. இதை சிறுகதைகள் என சொல்வதை விட, நம் வாழ்வில் சந்திக்கும் சம்பவங்கள், ஏற்படும் உணர்வுகளைத் தான், சிறுகதை வடிவில் மேஜர் தாசன் தந்துள்ளார். அதிலும், மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டரிடம், திருநங்கை ஒருவர் பேசுவது, மனிதாபிமானத்தின் எடுத்துக்காட்டு. இன்றைய சமுதாய சீர்திருத்தங்களை வெளிப்படுத்தும் இந்த கதைகள், படிப்பவர்கள் மனதில் நிச்சயம் ஒரு மாற்றத்தை உருவாக்கும். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026598.html இந்தப் புத்தகத்தை […]

Read more

பன்னிரு திருமுறை

பன்னிரு திருமுறை, இராம.லெட்சுமணன், சகுந்தலை நிலையம், பக். 1328, விலை 1200ரூ. சைவத் திருமுறைகள் பன்னிரண்டும் தோத்திரம், சாத்திரம், பிரபந்தம், புராணம் என நான்கு வகையாக அமைந்துள்ளன. ஒன்று முதல், ஒன்பது வரையிலானவை தோத்திரம். 10வது சாத்திரம். 11வது பிரபந்தம். 12வது புராணம். முதல் மூன்று திருமுறைகள் ஞானசம்பந்தர் பாடியது, ‘திருக்கடைக்காப்பு’ எனவும், நாவுக்கரசர் பாடிய, நான்கு, ஐந்து, ஆறு திருமுறைகள் ‘தேவாரம்’ எனவும், சுந்தரர் பாடிய ‘திருப்பாட்டு’ ஏழாம் திருமுறையாகவும், மாணிக்கவாசகர் அருளியது, எட்டாம் திருமுறையாகும். ஒன்பது பேர் பாடிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, […]

Read more

ஆலயம் வழிபாடு

ஆலயம் வழிபாடு, முனைவர் நல்லூர் சா.சரவணன், சைவ சித்தாந்தப் பெருமாள், பக்.136, விலை 100ரூ. சிவாலய வழிபாடு பற்றிய ஒன்பது கட்டுரைகள் நுாலில் தொகுக்கப்பட்டுள்ளன. சிவாலய வழிபாட்டின் நுட்பங்கள் முதல் கட்டுரையில் தரப்பட்டுள்ளன. சிவலிங்கம் யோக நிஷ்டையையும், அதன் கீழுள்ள அஷ்டபந்தனம் மருந்து பிரகிருதி, மஹத், அகங்காரம், சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் எண் வகை பந்தங்களையும் குறிக்கிறது. பலி பீடத்தில் நாம் காமம், குரோதம், உலோபம், மதம், மாச்சரியங்களை பலி கொடுத்து, உள்ளே செல்ல வேண்டும். அதன் பின், தரும […]

Read more

ஐந்தாம் மலை

ஐந்தாம் மலை, தமிழில் மொழிபெயர்ப்பு பேராசிரியர் ச.வின்சென்ட், அருட்செல்வர் நா.மகாலிங்கம், பக்.222, விலை 150ரூ. உலகின் செல்வாக்கு மிக்க நுாலாசிரியர்கள் பட்டியலில், இரண்டாம் இடம் பெற்ற போர்த்துக்கீசிய எழுத்தாளர் புவுலோ கோய்லோ. இவர் எழுதிய, ‘ரசவாதி’ என்ற நுால், 81 மொழிகளில், எட்டு கோடியே முப்பது லட்சம் பிரதிகள் விற்றன. அந்த வரிசையில் அவர் எழுதிய, ‘ஐந்தாம் மலை’ என்ற நாவல், விவிலிய நிகழ்வுகளின் பின்புலத்தில் அமைந்தது. தத்துவ பின்புலம் கொண்ட நாவலை அழகிய தமிழில், எளிதாக மொழிபெயர்த்து தந்துள்ள பேராசிரியர் ச.வின்சென்ட் பாராட்டுக்குரியவர். […]

Read more

காகதிய பேரரசு

காகதிய பேரரசு, தெலங்கான மன்னர்களின் வீர வரலாறு, ஓ.ஹென்றி பிரான்சிஸ், வாடிவாசல் பதிப்பகம், பக். 284, விலை 200ரூ. ‘காகதிய பேரரசு – தெலங்கானா மன்னர்களின் வீர வரலாறு’ என்னும் இந்நுாலில், 10 இயல்களின் வாயிலாக செய்திகள் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன. இயல் ஒன்றில், ஒரு கல்லுா நகரை தலைநகராகக் கொண்டு, தெலங்கானா உள்ளடங்கிய ஆந்திர தேசத்தை, கி.பி., 1150 முதல், 1323 வரை சிறப்பாக ஆட்சி செய்தோர் காகதியர்கள். காகதிருத்ர தேவா வெளியிட்ட அனுமகொண்டா கல்வெட்டுகளையும், பட்டயங்களையும் முழுமையாக ஆராய்ச்சி செய்து, கி.பி., 1882ல் […]

Read more

நொய்யல் நதிக்கரைத் தீரன்

நொய்யல் நதிக்கரைத் தீரன், விண்மீன் மைந்தன், வானதி பதிப்பகம், பக். 280, விலை 200ரூ. இருநுாறு ஆண்டுகளுக்கு முன் விடுதலைப் போராட்டத்தைத் துவங்கிய வீரர்கள் பலர் மாநில அளவில் சுருக்கிப் பார்க்கப்பட்டது ஒரு வரலாற்று சோகம். 1805ல் மறைந்த தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாறு முழுமையாகக் கிடைக்காத நிலையில், வழக்காறு கதைகளிலும், செவிவழிச் செய்திகளிலும், பல சரித்திரக் குறிப்புகளிலும், காலக்கோட்டு அடிப்படையிலும் கிடைத்தவற்றைப் பல்லோரும் புனைந்தனர். அவற்றைத் தழுவி, வீரமும், விவேகமும், தீரமும், தியாகமும் நிறைந்த தீரன் சின்னமலையின் வாழ்க்கையைக் கற்பனைக் கதாபாத்திரங்களோடு புனையப்பட்ட […]

Read more
1 92 93 94 95 96 240