ஓஷோ 1000 ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம்

ஓஷோ 1000 ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம், மு.அப்பாஸ் மந்திரி, நர்மதா பதிப்பகம், பக். 272, விலை 140ரூ. இன்றைய அறிவியல் உலகத்தில், மனித வாழ்க்கை பரபரப்பான சூழ்நிலையோடு ஓடிக் கொண்டிருக்கிறது. மனித எண்ணங்கள் அனைத்தும் தன்னுடைய குடும்பம், வேலையால் வரக்கூடிய வருமானம், குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை என்னவாகும் என சிந்தித்துக் கொண்டே ஒவ்வொரு நாளும் நகர்கிறது. என்ன தான் வாழ்க்கையை சிக்கனமாக ஓட்டினாலும், வாழ்க்கையில் என்ன நடக்குமோ அது நடக்கத்தானே போகிறது என நினைப்போருக்கு இந்த நுால் ஒரு அற்புத மருந்து. இந்த […]

Read more

ஏன் எதற்கு

ஏன் எதற்கு, டி.வி.பாலசர்மா, நர்மதா பதிப்பகம், விலை 125ரூ. ஆன்மிகம் தொடர்பான சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் விளக்கமான பதில்கள் புராணங்களில் இருந்தும், வேதங்களில் இருந்தும் தொகுத்து தரப்பட்டு இருக்கிறது. கடவுள், கோவில், வழிபாட்டு முறைகள், சம்பிரதாயங்கள், விசேஷங்கள், பாவம், புண்ணியம், தானம், விதி, புணூல் போன்றவை குறித்து எதிர்மறையாக எழுப்பப்படும் கேள்விகளுக்கும் கூட தெளிவாக புரிந்துகொள்ளும் விதமாக விளக்கங்கள் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது. ஆன்மிகம் பற்றி இந்துக்கள் அவசியம் அறிந்துகெள்ளவேண்டிய அறிவுப்பூர்வ தகவல்களும் நூலில் விளக்கப்பட்டு இருக்கிறது. பொருள் பொதிந்த பதில்கள் சிந்தனையையும் தூண்டுகின்றன. நூலைப் போலவே […]

Read more

இந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம்

இந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம், எஸ்.சென்ன கேசவ பெருமாள், நர்மதா பதிப்பகம், பக். 480, விலை 300ரூ. இறையன்பர்கள், சான்றோர்கள், ஆன்மிக சொற்பொழிவாளர்கள் ஆகியோர் அருளிய சமய தத்துவங்கள், விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் நாளிதழ்கள், வார இதழ்கள், திங்களிதழ்கள், ஆண்டு மலர்கள் ஆகியனவற்றில் இடம் பெற்ற இந்து சமயம் தொடர்பான செய்திகள் முதலியனவற்றை நிரல்பட தொகுத்து, ஆங்காங்கே குறிப்புகளையும், விளக்கங்களையும் தந்து நுாலாக்கிய ஆசிரியரின் அளப்பரிய முயற்சி பாராட்டுக்குரியது. ‘இறைவனைக் காண இயலாது; உணர முடியும்’ என, விளக்கியுள்ள பாங்கும், ராமகிருஷ்ண […]

Read more

மக்கள் தலைவர் கலைஞரும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும்

மக்கள் தலைவர் கலைஞரும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், கமலா கந்தசாமி, நர்மதா பதிப்பகம், விலை 90ரூ. மக்கள் தலைவர் கலைஞர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்னும் இருபெரும் மேதைகளின் இனிய உறவையும் அவர்களுடைய நட்பின் மேன்மையையும் எடுத்துக்கூறும் நூல். அதோடு இருவர் வாழ்விலும் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள், இருவருக்கமான நல்லியல்புகள் ஆகியவற்றை நேர்த்தியான முறையில் படைத்து இருக்கிறார் நூலின் ஆசிரியர் கமலா கந்தசாமி. நன்றி: தினத்தந்தி 6/6/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026854.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

பல்லவப் பேரழகி

பல்லவப் பேரழகி, கயல் பரதவன், நர்மதா பதிப்பகம், பக். 688, விலை 375ரூ. வரலாற்றுப் புதினங்கள் வெறும் கற்பனைக் கோலங்கள் அல்ல. நிகழ்ந்த வரலாற்றை கற்பனைச் சாயங்களில் வரைந்து நம்முன் ஓடவிடுவது. சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசிக்கும், காஞ்சியின் மகேந்திர பல்லவனுக்கும் இடையில் நிகழ்ந்த போர்க்களமே புதினத்தின் கதைக் களம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழந்தமிழரின் வாணிபச் செல்வாக்கும், கட்டடக் கலை நுட்பமும், போரில் கையாண்ட தற்காப்பு உத்திகளும், பண்பாடு நாகரிகமும், இல்வாழ்வு மாண்புகளும் நம்கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது புதினம். இரண்டாம் புலிகேசி வடஇந்தியாவிலுள்ள […]

Read more

பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம்

பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம், கே.ஜி.எப். பழனிச்சாமி, நர்மதா பதிப்பகம், விலை 60ரூ. வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தில், உடலில் ஏற்படும் சிறு, சிறு வியாதிக்கும் டாக்டர்களை தேடி ஓடும் நிலைமை உள்ளது. ஆனால் நமது வீட்டில் இருக்கும் சமையலறை பொருட்கள் மூலமாகவே அந்த நோய்களை விரட்டலாம் என்பதை இந்த நூல் சிறப்பாக விளக்கி உள்ளது. மேலும், எந்த வியாதிக்கு என்ன பொருட்களை பயன்படுத்தலாம் என்பதும் தெளிவாக கூறப்பட்டு உள்ளது. நன்றி: தினத்தந்தி,11/7/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000006865.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

மூளையின் திறனைப் பெருக்கி சுய முன்னேற்றம் பெறுங்கள்

மூளையின் திறனைப் பெருக்கி சுய முன்னேற்றம் பெறுங்கள், பி.எஸ்.ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், பக். 160, விலை 80ரூ உயிரின உறுப்புகளின் மிகப் பிரதானப் படைப்பே அவற்றின் மூளையாகும். பிற உறுப்புகள் எல்லாம் தங்களது இயக்கத்தை வெளிக்காட்டும்போது, மூளை மட்டும் ஆடாமல் அசையாமல் அமைதியாக இருந்துகொண்டே, உடலின் அனைத்து உறப்புகளையும், நொடிப் பொழுதில் இயக்கும் ஆற்றல் படைத்தது. தவிர, எண்ணங்களும், சிந்தனைகளும் கூட மூளையில்தான் தோற்றுவிக்கப்படுகின்றன. அவற்றைக் கொண்டே உயிரினங்களின் அறிவுகளும் வகைப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், ஆறு அறிவு கொண்ட மனித இனத்தின் மூளையைப் போன்ற […]

Read more

ஓஷோ 1000 (ஒரு ஞானியின் தீர்க்கதரிசனம்)

  ஓஷோ 1000, ஒரு ஞானியின் தீர்க்கதரிசனம், தொகுப்பாசிரியர் மு.அப்பாஸ் மந்திரி, நர்மதா பதிப்பகம், விலை 140ரூ. உலகப் புகழ்பெற்ற தத்துவஞானி ஓஷோவின் 1000 பொன்மொழிகள் அடங்கிய புத்தகம். பொன்மொழிகள் சிந்தனையைத் தூண்டுகின்றன. மாதிரிக்கு சில பொன்மொழிகள் கையில் மாற்று மருந்து இருக்கிறது என்பதற்காக, யாரும் விஷத்தை சாப்பிட்டு சோதனை செய்து கொள்ள வேண்டாம். அச்சம், கவலை, நோய் ஆகிய மூன்றும் மனிதனின் வலிமையை அழிப்பவை. வாள் தன் உறையை வெட்டாது. நீரில் மூழ்கிக் கொண்டிருப்பவன், தன் கைக்கு ஒரு பாம்பின் வால் கிடைத்தாலும் […]

Read more

வாகீச முனிவரின் ஞானாமிர்தம்

வாகீச முனிவரின் ஞானாமிர்தம் (சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல்), ஆ. ஆனந்தராசன், நர்மதா பதிப்பகம், பக்.752, விலை ரூ.650. வாகீச முனிவர் அருளிச் செய்த ‘ஞானாமிர்தம்‘ என்ற நூலே மெய்கண்ட சாத்திரங்களுக்கு எல்லாம் முன்னோடி நூலாக இருக்கிறது. சைவ சித்தாந்தம் கூறும் பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள் உண்மைகளை 75 அகவற்பாக்களால் விளக்குகிறது ஞானாமிர்தம். உலகப் படைப்பு, பசுவின் மூவகை அவத்தை, ஆன்மா அடையும் ஐந்துநிலை வேறுபாடுகள், மாயாவாத மறுப்பு, சற்காரிய வாதம், மூவகை துக்கங்கள், பசு தரிசனம், ஞானியரின் இயல்பு, குரு உபதேசப் […]

Read more

ஞானாமிர்தம்

ஞானாமிர்தம், ஆ. ஆனந்தராசன், நர்மதா பதிப்பகம், விலை 650ரூ. திருவொற்றியூரில் 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வாகீச முனிவர், சைவ சித்தாந்த கொள்கைகளை விளக்கி எழுதிய நூல் ஞானாமிர்தம். இதில் உள்ள 75 பாடல்களில் காணப்படும் கடினமான அத்தனை வார்த்தைகளுக்கும் எளிய பதவுரை, மற்றும் விளக்கவுரை, தொகுப்பு உரை ஆகியவற்றுடன் அந்தப் பாடல்களில் உள்ள ஆழ்ந்த தத்துவங்களை விளக்கமாகத் தந்து இருக்கிறார் ஆசிரியர். சைவ சித்தாந்தத்தின் அடிப்படையான ஆன்மா, இறைவன், பாசம் ஆகியவற்றை பல்வேறு இலக்கியங்களில் காணப்படும் கருத்துக்களை மேற்கோள் காட்டி விளக்கமாகத் தந்து இருப்பது […]

Read more
1 3 4 5 6 7 15