என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்

என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள், சி.கே.மாணிக்கவாசகம், நர்மதா பதிப்பகம், விலை 200ரூ. மிகச் சிறிய மாற்றங்களை நடைமுறையிலும் உணவிலும் கொண்டுவருவதன் மூலம் மிகப் பெரும் பயன்களைப் பெற முடியும் என்கிறது இந்நூல். நன்றி: தமிழ் இந்து,9/10/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

திருவாசகம்

திருவாசகம் (பதிக விளக்கம்), ஆ. ஆனந்தராசன், நர்மதா பதிப்பகம், பக்.248, விலை ரூ.200; சைவர்களின் தமிழ் வேதமான பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாகத் திகழ்கிறது மாணிக்கவாசகர் அருளிச்செய்த திருவாசகம். இறைவனின் திருவருளையே துணையாகக் கொண்டு அருளிச் செய்யப்பட்டதுதான் திருவாசகம்.இந்நூலில், ஒவ்வொரு பதிகத்தின் ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனியாக விளக்கமளிக்காமல், பதிகம் நிறைவு பெறும்போது அந்தந்தப் பதிகத்தின் பொருளை குறைந்த சொற்களில் நிறைவான பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது சிறப்பு. முதல் பதிகமான சிவபுராணத்துக்குத் தந்திருக்கும் விளக்கத்தில், சிந்தை மகிழ சிவபுராணந் தன்னை முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் […]

Read more

மருந்தில்லா சிகிச்சை முறைகள்

மருந்தில்லா சிகிச்சை முறைகள், ஜி.லாவண்யா, நர்மதா பதிப்பகம், பக்.160, விலை ரூ.100. மருந்தில்லாத மருத்துவமுறைகள் என்று சொன்னவுடன் தொடுசிகிச்சை, வர்ம சிகிச்சை போன்றவைதாம் நினைவுக்கு வரும். ஆனால் இந்நூலில் உணவு சிகிச்சை, சூரியக்குளியல், நீர் சிகிச்சை, மண் சிகிச்சை,பிரபஞ்ச சக்தி சிகிச்சை, யோகாசன சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, நறுமண திரவ சிகிச்சை, இசை சிகிச்சை ஆகிய மருந்தில்லாத சிகிச்சை முறைகள் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. நாடி பரிசோதனை மூலமாக ஒருவருடைய உடல்நிலையைத் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும் என்கிறார் நூலாசிரியர். அறுசுவை உணவுகளைப் பற்றியும், […]

Read more

தெனாலிராமன் கதைகள்

தெனாலிராமன் கதைகள், பி.எஸ்.ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், விலை 130ரூ. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த தெனாலி ராமன் கதைகள் அனைத்தையும் கொண்ட முழுத் தொகுப்பாக வெளியாகி உள்ள இந்த நூலில், மொத்தம் 46 கதைகள் இடம் பெற்று இருக்கின்றன. இந்த நூலின் ஆசிரியர், தெனாலிராமன் பிறந்த ஊரான விஜயநகரத்திற்கு நேரடியாகச் சென்று அங்கு கிராமங்களில் நிலவும் தெனாலிராமன் கதைகளையும் சேகரித்துத் தந்து இருப்பதால் அத்தனை கதைகளையும் ரசித்துப் படிக்க முடிகிறது. நன்றி: தினத்தந்தி, 24/7/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

ஜே.கிருஷ்ணமூர்த்தி போதனைகள்

ஜே.கிருஷ்ணமூர்த்தி போதனைகள், தமிழில் எஸ்.ராஜேஸ்வரி, நர்மதா பதிப்பகம், விலை 300ரூ. ஒவ்வொருவரும் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைகளை புதிய முறையில் எவ்வாறு அணுகி அவற்றுக்குத் தீர்வு காண்பது என்பது குறித்து தொலைநோக்குப் பார்வையுடன் ஆலோசனைகள் வழங்குவதில் புகழ்பெற்ற தத்துவ மேதை ஜே.கிருஷ்ணமர்த்தியின் கருத்துகள் ஏராளம் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. ஒரு சில இடங்களில் நடைபெற்ற கலந்துரையாடல்கள், விவாதங்கள், சொற்பொழிவுகள், பேட்டிகள், கேள்வி பதில்கள் என்று பல இடங்களில் ஜே.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட சிந்தனைத் துளிகள் தொகுக்கப்பட்டு, அனைவரும் படிக்கும் வகையில் எளிய முறையில் தரப்பட்டு இருக்கின்றன. […]

Read more

பாதை எங்கும் பாடங்கள்

பாதை எங்கும் பாடங்கள், பேராசிரியர் க. ராமச்சந்திரன், நர்மதா பதிப்பகம், விலை 70ரூ. தினத்தந்தி இளைஞர் மலரில் பேராசிரியர் க. ராமச்சந்திரன் எழுதிய தன்னம்பிக்கை கட்டுரைகளின் தொகுப்பு. வாழ்க்கை ஒரு பயணம். அந்தப் பயணத்தில் வெற்றியும் இருக்கும், தோல்வியும் இருக்கும். வெற்றியிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். தோல்வியிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். “கற்றுக்கொள்ள பாதை எங்கும் பாடங்கள் உள்ளன” என்று கூறும் ஆசிரியர், “நதியின் ஒட்டமாய் உன் பயணம் இருக்கட்டும். “எந்த நதியும் தன் பயணத்தில் திரும்பி வர நினைப்பதில்லை. நதிக்கு […]

Read more

உங்கள் ஈ.எஸ்.பி. ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள்

உங்கள் ஈ.எஸ்.பி. ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள், என். தம்மண்ண செட்டியார், நர்மதா பதிப்பகம், விலை 90ரூ. அசாதாரணமான விஷயங்களை மனதின் உள்ளுணர்வு மூலம் தெரிந்துகொள்ளும் ஆற்றலான ஈ.எஸ்.பி. எனப்படுவது எல்லோரிடமும் சிறிதளவாவது இருக்கும் என்று கூறும் இந்த நூல், அந்த சக்தி எந்த அளவு இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் அறிந்துகொள்வதற்கான சோதனைகளையும் விவரிக்கிறது. அமானுஷ்யமான இந்த விஷயம் தொடர்பாக பல எடுத்துக்காட்டுகளைக் கூறுவதோடு, அவற்றுக்கு விஞ்ஞான பூர்வமாக விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆச்சரியமான பல தகவல்களைக் கொண்ட இந்த புத்தகத்தைப் படிப்பதன் மூலம் நமது ஆழ்மனதின் […]

Read more

திருமந்திரத்தின் மறைபொருளும் விளக்கமும்

திருமந்திரத்தின் மறைபொருளும் விளக்கமும், பால.இரத்தினவேலன், நர்மதா பதிப்பகம், பக். 256, விலை 150ரூ. நிறைமொழி மாந்தர் திருமூலர் இயற்றிய அற்புத நுால், மந்திரமாலையாகிய திருமந்திரம். அதில், ஒன்பதாம் தந்திர-த்தில் உள்ள, ‘சூனிய சம்பாசணை’ மறைபொருள் உரையாதலால், பாடல்கள் எழுபதும் பல்வேறு வகைகளில் பொருள் கொள்ள இடமளித்து நிற்கின்றன. இந்நுாலில் பாடல்கள் அனைத்தும் சித்தாந்த சைவத்தின் கோட்பாடுகளை புதிர்களாகக் காட்டி விளக்குவது அருமை. இந்நுாலை படிப்பதன் மூலம் சைவ மெய்யியல் தத்துவங்களை தெளிந்துணர முடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. தமிழக அரசின் முதல் பரிசு பெற்ற […]

Read more

குழந்தை வளர்ப்பு என்னும் அரிய கலை

குழந்தை வளர்ப்பு என்னும் அரிய கலை, டி.வெங்கட்ராவ் பாலு, சூர்யகுமாரி, நர்மதா பதிப்பகம், விலை 300ரூ. உணவுப் பழக்கத்திலிருந்து உறங்கும் முறைவரை கர்ப்பிணிப் பெண்கள் கடைப்பிடிக்க வேண் டிய நியமங்கள், கர்ப்பிணிகளுக்கு ஏற்படக்கூடிய முதுகுவலி உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள், குழந்தை பிறப்பின்போது கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்கள், தாய்ப்பாலின் முக்கியத்துவம். குழந்தை வளர்ப்பின் பல்வேறு நிலைகள், தாய்-சேய் நலத்துக்கான மருத்துவக் குறிப்புகள், குழந்தையின் மனநலத்தைப் பேணுவதற்கான ஆலோசனைகள் ஆகியவற்றை விரிவாக விளக்கும் நூல் இது. குழந்தை வளர்ப்பில் தந்தையர்களுக்கான பங்கை உணர்த்தி அதை நிறைவேற்றுவதற்கான […]

Read more

போதி தர்மா

போதி தர்மா (4 பாகங்கள்), கயல் பரதவன், நர்மதா பதிப்பகம், மொத்த பக்.2856, விலை ரூ.1700. நீலகண்ட சாஸ்திரி எழுதிய தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள் என்ற நூலில் இந்தியாவிலிருந்து சீனா போவதற்கான கடல் வழியைப் பற்றி விவரிக்கும் இடத்தில் போதி தர்மா பற்றிய குறிப்பு வருகிறது. காஞ்சியில் இளவரசனாகப் பிறந்து உலகம் போற்றும் பெளத்த சன்னியாசியாகி சீன தேசத்திற்கு ஜென் பெளத்தத்தையும் குங்ஃபூ என்கிற மற்போரையும் கற்றுத் தந்தவர் போதி தர்மா. அவரது கால (கி.பி.520) தந்திர அரசியலைப் பற்றி விவரிக்கும் வரலாற்று நாவல் […]

Read more
1 2 3 4 5 6 15