நாடகமும் தமிழிசையும்

நாடகமும் தமிழிசையும் , டி.கே.எஸ். கலைவாணன், வானதி பதிப்பகம், பக். 176; விலை ரூ. 150; தமிழ் இசையை பாமர மக்களிடமும் பரப்பிய பெருமை தமிழ் நாடகக் கலைஞர்களுக்கு உண்டு, நாடகமும் தமிழிசையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பதைப் பல்வேறு ஆதாரங்களுடன் நிறுவிக்காட்டும் ஆய்வு நூல். தமிழ் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் தமிழிசைப் பாடல்கள், நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்தனார், நாடகம் வளர்த்த தமிழிசை, நாடகம் வளர்த்த நால்வர், நூற்றாண்டு கண்ட நடிப்பிசை மாமணிகள், திரையிசையில் தமிழிசையின் பங்களிப்பு, சுதந்திரப் போராட்டத்தில் தமிழிசையின் பங்கு,  […]

Read more

நல்லன எல்லாம் தரும்

நல்லன எல்லாம் தரும், டாக்டர் சுதா சேஷையன், வானதி பதிப்பகம், விலை 120ரூ. ஏராளமான ஆன்மீக கட்டுரைகளை எழுதி, தனக்கென தனி இடத்தைத் தக்கவைத்து இருக்கும் மருத்துவர் சுதா சேஷையன் இந்த நூலில் 23 கட்டுரைகளைத் தந்து இருக்கிறார். அனைத்து கட்டுரைகளும் கடவுள் என்ற ஒன்றை மையமாக வைத்து சிந்தனை கருவூலமாக அமைக்கப்பட்டு இருக்கின்றன. பல சமஸ்கிருத நூல்களில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டு இருப்பது, அவரது சமஸ்கிருத புலமையையும், அந்தக் கருத்துகளை எளிய தமிழில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் கொடுத்து இருப்பது அவரது தமிழ்ப் […]

Read more

வைணவ வாழ்க்கை தத்துவங்கள்

வைணவ வாழ்க்கை தத்துவங்கள், ந.இரா.சீனிவாச ராகவன், வானதி பதிப்பகம், விலைரூ.200. ஆன்மிகத்தில் ஆழ்ந்த அறிவு பெற்ற ஆன்மிக அனுபவத்தின் கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால்.‘ஷேமநிதி’ என்ற தலைப்பிலான கட்டுரையில், பாவ மற்றும் புண்ணியங்களின் கணக்குகளைக் குடும்ப உறவுகளிடையே ஒருங்கிணைத்து, அதன் மூலம் வரும் லாப நஷ்டக் கணக்குகளை அருமையாக குறிப்பிடுகிறார். புண்ணிய பலத்தால் சந்ததியினருக்கு எவ்வாறு இறையருளைப் பெற முடியும் என்றுரைக்கிறார். ‘ஸீதாராமன் திருக்கல்யாணம்’ என்ற தலைப்பிலான கட்டுரையில், தினமும் ஸீதாராமன் திருக்கல்யாணம், காசியில், 200 ஆண்டுகளாகத் தொடர்ந்து சிரத்தையுடன் நடத்துவதை விளக்குகிறார்.திருமலை ஸ்ரீநிவாஸ பெருமாளுக்கும், […]

Read more

சிவபெருமான் அடியார்களுக்கு அருளிய அருட்கோலங்கள்

சிவபெருமான் அடியார்களுக்கு அருளிய அருட்கோலங்கள், மருத்துவர் கைலாசம் சுப்ரமண்யம், வானதி பதிப்பகம், விலைரூ.125. அளவிலா பக்தி செலுத்தும் அன்பர்களுக்கு தேவை அறிந்தும், சூழலுக்குப் பொருத்தமாக வெளிப்பட்டு அருள் செய்கிறான் இறைவன். உடல் சார்ந்த நோய்களுக்கு, உள்ளம் சார்ந்த இறை நம்பிக்கை மருந்தாக அமையலாம் என உணர்த்துகிறது நுால். நாயன்மார்களுடன் இறைவன் நடத்திய திருவிளையாடல்களின் சுருக்கமே என கூறியுள்ளது, உண்மைத் தன்மையை உணர்த்துகிறது. சுந்தரரை சிவபெருமான் தடுத்தாட்கொண்டது, திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்தது, பரவையார் வீட்டிற்குத் துாது போனது, திருநாவுக்கரசருக்கு சூலை நோய் கொடுத்து சிவநெறிக்கு மாற்றியது […]

Read more

அணிந்துரை அணிவகுப்பு

அணிந்துரை அணிவகுப்பு, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், பக். 240,விலை 150ரூ. இந்த நூலில் 30 அணிந்துரைகள் சேர்க்கப்பட்டுள்ளன.மூல நுாலைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த அணிந்துரைகள் ஏற்படுத்தும். ஏற்றுக்கொண்ட நுாலின் ரசமான பகுதிகளை ஆசிரியர் குறிப்பிடுவது நேர்த்தியானது. ‘மு.வ.,வின் செல்லப் பிள்ளை’ எனத் தமிழ் கூறும் நல்லுலகத்தில் அழைக்கப் பெறும் இரா.மோகன், சாகித்ய அகாடமிக்காக எழுதிய கு.ப.ராஜகோபாலன், கல்கி, முடியரசன், மீரா குறித்த ஆய்வு நுால்கள் எல்லாம் தனிப் பெரும் சாதனை எனச் சொல்லலாம். அணிந்துரை அணிவகுப்பு என்ற இந்த நுாலிலும் […]

Read more

பெரியாழ்வார் போற்றும் பெருவாழ்வு

பெரியாழ்வார் போற்றும் பெருவாழ்வு, பேராசிரியர் தி.இராசகோபாலன், வானதி பதிப்பகம், விலைரூ.120. பன்னிரு ஆழ்வார்களில், எம்பெருமானுக்குப் பொங்கும் பரிவு கொண்டு, பல்லாண்டு பாடியதால் விஷ்ணு சித்தர் – பெரியாழ்வார் என்று போற்றப்படுகிறார். ஆழ்வார்கள் இறைவனைத் தாயாகப் பாவித்து காக்க வேண்டி பாசுரங்கள் பாடினர்; ஆனால், பெரியாழ்வார் இறைவனுக்குத் தாமே தாயெனப் பாவித்து பாசுரங்கள் பாடினார் என்று கூறி, அவரின் ஆன்மிக சிந்தனைகளை விளக்கும் நுால். அறிவின் திறனுக்குச் சான்றுகளாக உள்ளன. செவ்விலக்கியம் படைப்போர் வழக்கு சொற்களையும், கொச்சை சொற்களையும் பயன்படுத்த மாட்டர் என்று கூறும் நுாலாசிரியர், […]

Read more

சூரிய வம்சம்

சூரிய வம்சம் (இரண்டு பகுதிகள்), சிவசங்கரி, பதிவு – எழுத்து: ஜி.மீனாட்சி, வானதி பதிப்பகம், விலை: ரூ.600. நினைவை மீட்டுவதென்பது காலச் சக்கரத்தில் ஏறிப் பின்னோக்கிப் பயணித்து மீள்வதைப் போன்றது. ‘சூரிய வம்சம்’ நினைவலைகளின் மூலம் அதை நிகழ்த்துகிறார் சிவசங்கரி. வாழ்க்கை சுரத்தில்லாமல் நிறமிழக்கும் நேரத்தில், மலர்ந்து சிரிக்கிற வசந்தத்தைப் போல எழுத்துலகில் புதுப் பாய்ச்சலுடன் புகுந்தவர் அவர். மானசீகமாகத் தன்னை அம்மாவாக ஏற்றுக்கொண்ட லலிதாவுக்காகத் தன் நினைவலைகளைத் தொகுத்திருக்கிறார். இது சுயசரிதை அல்ல என்று சொல்லும் சிவசங்கரி, சிலரது முகமூடிகளைக் கிழிக்க வேண்டிவரும், […]

Read more

தமிழ் உலா

தமிழ் உலா, பேராசிரியர் இரா.மோகன்,  வானதி பதிப்பகம், விலை ரூ.160. தமிழ் இலக்கியங்களில் உள்ள சுவையான செய்திகளையும், பல கவிஞர்களின் கவிதை நயங்களையும் விளக்கும் கட்டுரைகள் அடங்கிய நுாலிது. இரா.மோகனின் எழுத்தாற்றலைக் கூறும் நுாலாக விளங்குகிறது. கவிதைத் துறைமுகம், செவ்விலக்கியப் பேழை, சான்றோர் அலைவரிசை, தன்னம்பிக்கை முனை என ஆறு பகுதிகளில், 36 கட்டுரைகள் உள்ளன. ‘தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் டாஸ்மாக், பிறகெப்படி பண்பாட்டிற்கு கிடைக்கும் பாஸ் மார்க்?’ என, தி.மு.அப்துல்காதர் கவிதையைப் பாராட்டுவதும், ‘வந்து நின்று வாக்கு கேள், உட்கார்ந்தபடி ஊழல் […]

Read more

திருக்கயிலாய தரிசனம்

திருக்கயிலாய தரிசனம்,  டி.கே.எஸ். கலைவாணன்,  வானதி பதிப்பகம், விலை ரூ.125. உச்சியில், 22 அடி உயரம் கொண்ட இடத்தில் சிவபெருமான் உறைந்துள்ளதாகப் புராணங்கள் குறிப்பிடும். வெள்ளிப் பனிமலையில் சிவன் வீற்றிருப்பதாக எண்ணுவோர், திருக்கயிலாய நாதரைக் காண்பதற்குப் புனிதப் பயணம் செய்வது அரிய செயல். கடல் மட்டத்திலிருந்து, 23 ஆயிரம் அடி உயரம் கொண்ட திருக்கயிலாயப் பயணம் என்பது எல்லாருக்கும் கிட்டிவிடாது. இம்மலையைத் தரிசித்தால் மறுபிறவி இல்லை என்பது ஞானிகளின் கூற்று. இப்புனிதத் தலத்தைக் கண்டு வந்து, தாம் பெற்ற அனுபவத்தை இந்நுால் வழியாக நமக்கு […]

Read more

பெரியாழ்வார் போற்றும் பெருவாழ்வு

பெரியாழ்வார் போற்றும் பெருவாழ்வு, தி.இராசகோபாலன்,  வானதி பதிப்பகம், பக்.200, விலை ரூ.120.  முதலாழ்வார்களுள் முதன்மையானவர் விஷ்ணுசித்தரான பெரியாழ்வார். இவர் ‘பெரிய திருவடி’யின் அம்சம். தாய்மையின் பெருமையைப் பிள்ளைத்தமிழ் மூலம் உலகுக்கு எடுத்துரைத்ததோடு, வளர்ப்பு மகளையும் (கோதை) ஆழ்வாராக்கிக் (ஆண்டாள்)காட்டியவர். முன்னோர் மொழியைப் போற்றுவதுடன், அவற்றை தம் படைப்பில் பல்வேறு இடங்களில் கையாண்டு வைணவத் தமிழுக்குச் செழுமை சேர்த்தவர். மற்றைய ஆழ்வார்கள் பரமபக்தியினால் எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்துள்ளபோதிலும், அவர்கள் ‘பகவானுக்குக் குறையொன்றும் இல்லாதிருப்பதே நமக்கு மங்களம்’ என்று எண்ணிச் செய்துள்ளார்கள். ஆனால் விஷ்ணுசித்தரோ, சர்வ இரட்சகனையும் […]

Read more
1 2 3 4 22