இந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்

இந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள், செ.திவான், இலக்கியச் சோலை, விலை 90ரூ. காந்தியால் தேசிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தின் தொடக்கப் புள்ளி கிலாபத் இயக்கம். அந்த இயக்கத்தைத் தொடங்கிய அலி சகோதரர்களின் வரலாறு இது. வரலாற்று ஆய்வாளர் செ.திவானின் 120-வது நூல். நன்றி: தமிழ் இந்து, 9/2/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சிறுபான்மை முஸ்லிம்களுக்கான இஸ்லாமிய சட்டம்

சிறுபான்மை முஸ்லிம்களுக்கான இஸ்லாமிய சட்டம், அஷ்ஷெய்க் ரவூப் ஸெய்ன் நளீமி, இலக்கியச் சோலை, விலை 120ரூ. உலகில் ஒரு குறிப்பிட்ட நாட்டில் மிகப் பெரிய அளவில் வாழும் சிறுபான்மை சமூகம், இந்திய முஸ்லிம்களே. இலங்கையிலும் முஸ்லிம்கள் சிறுபான்மையினரே. ஒரு பன்மைச் சமூகத்தில் வாழ்கின்ற முஸ்லிம் சிறுபான்மையினரின் வாழ்வியல் பற்றிய சிந்தனையை முஸ்லிம்கள் மத்தியில் கட்டியெழுப்ப இந்நூல் உதவும். நன்றி: தினத்தந்தி, 4/10/2017.

Read more

மதராஸாபட்டினம்

மதராஸாபட்டினம், தாழை மதியவன், இலக்கியச் சோலை, பக். 176, விலை 100ரூ. மதரஸாபட்டினம், சென்னப்பட்டினம், மதராஸ், மெட்ராஸ், (இன்று) சென்னை என அழைக்கப்படும் இப்பட்டணத்தின் வரலாறு கி.பி. 15-ஆம் நூற்றாண்டிலிருந்து விவரிக்கப்பட்டுள்ளது. சென்னக் குப்பத்தை விலைக்கு வாங்கிய 1639-ஆம் ஆண்டைக் கணக்கிட்டு சென்னை-375, 376 என விழா நடத்துகிறார்கள். ஆங்கிலேயர்களின் சென்னப் பட்டினத்திற்குத்தான் வயது 376. நமது மதராஸப்பட்டினத்திற்கான வரலாறு ஆயிரம் ஆண்டுகள். இந்நூல் ஆங்கில ஏகாதிபத்தியம் அகலும் வரையுள்ள பல நூற்றாண்டு நிகழ்வுகளைக் கூறுகிறது. இன்றைய புனித செயிண்ட் ஜார்ஜ் கோட்டையும் அதன் […]

Read more

பாலஸ்தீனம் – நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு

பாலஸ்தீனம் – நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு, வெ.சாமிநாத சர்மா,  இலக்கியச் சோலை, பக்.80, விலை ரூ.60 சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேற்கத்திய, ஐரோப்பிய சக்திகளால் தொடங்கி வைக்கப்பட்டது பாலஸ்தீனப் பிரச்னை. மக்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த பாலஸ்தீனத்தில், உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து யூதர்களைக் கொண்டு வந்து குடியமரச் செய்தார்கள். குடியேறிய யூதர்கள் சொந்த மண்ணின் மக்களை அகதிகளாக்கினர். அவர்களின் உரிமைகளைப் பறித்தனர். இழந்த உரிமைகளையும் நிலங்களையும் பெறுவதற்காக பாலஸ்தீனியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்தப் பிரச்னையை 75 ஆண்டுகளுக்கு முன்பே நூலாசிரியர் வெ.சாமிநாத […]

Read more

இடிந்தகரை சிந்தனைகள்

இடிந்தகரை சிந்தனைகள், சுப. உதயகுமார், இலக்கியச் சோலை, சென்னை, விலை 60ரூ. கூடங்குளம் அணு மின்நிலையம் அமைப்பதற்கு எதிராக இடிந்தகரை மக்கள் நடத்திய போராட்டம் பற்றி சுப. உதயகுமார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இதில் கடல் விவசாயம், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் போன்ற கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. சாதி, மதம் கடந்து, சச்சரவுகள் துறந்து, உண்மை, ஒழுக்கம், உறுதியோடு ஆயிரம் நாட்கள் நாங்கள் நடத்தியது வெறும் போராட்டமல்ல. அது ஒரு தவம், வேள்வி, யாகம் என்கிறார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி, 29/4/2015.   —- […]

Read more