அலர்ஜி

அலர்ஜி,  கு.கணேசன், கிழக்குப் பதிப்பகம், பக்.133, விலை ரூ.140. அலர்ஜி குறித்து எழும் அத்தனை சந்தேகங்களுக்கும் அச்சங்களுக்கும் எளிமையாகவும் ஆறுதல் அளிக்கும் வகையிலும் விடையளிக்கும் நூல். தினம் மாறிவரும் உணவுமுறை, மாசடைந்த சுற்றுச்சூழல், கலப்படம் மிகுந்த வேதிப் பொருள்கள் போன்ற ஏராளமான காரணங்களால் காய்ச்சல், தலைவலிக்கு அடுத்தபடியாக பலரையும் பல நேரங்களில் அவதிப்பட வைப்பது அலர்ஜிதான். இந்த அலர்ஜி எப்படி ஏற்படுகிறது, அதன் வகைகள், அதற்கான சரியான மருத்துவ முறைகள் ஆகியவை குறித்து தெளிவாக இந்நூல் விளக்குகிறது.நாகரிகம் என்ற பெயரில் ஆண்களும் பெண்களும் தங்களை […]

Read more

சமுதாயச் சிற்பி பெருந்தலைவர் காமராசர்

சமுதாயச் சிற்பி பெருந்தலைவர் காமராசர், வி.ஜி.சந்தோசம், பழனியப்பா பிரதர்ஸ்,  பக்.444, விலை ரூ.360. காமராசருடன் நேரில் பழகும் வாய்ப்புக் கிடைத்த நூலாசிரியர், காமராசரின் வாழ்க்கை வரலாற்றை மிக எளிமையாக கூறியுள்ளார்.விருதுபட்டி என்ற சிற்றூரில் பிறந்த, ஆரம்பக் கல்வியைக் கூட முழுமையாக முடிக்காத காமராசர், இளம் வயதிலேயே தந்தை இழந்ததும், கடைகளில் வேலை செய்ததும், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைத்தண்டனைகளை அனுபவித்ததும், பதவியைப் பெரிதாக நினைக்காததும், ஏழை மக்களின் நலன் என்ற அடிப்படையில் முடிவுகள் எடுத்ததும், அகில இந்திய அளவில் பெரிய தலைவராக இருந்தாலும் எளிய […]

Read more

காந்தி வந்தால் ஏந்தும் கருவி

காந்தி வந்தால் ஏந்தும் கருவி, கிருங்கை சேதுபதி,  கபிலன் பதிப்பகம், பக்.184, விலை ரூ.175. தினமணி நாளிதழில் நடுப்பக்கக் கட்டுரைகளாக வெளிவந்த வற்றில் 28 தலைப்புகள் அடங்கிய தொகுப்பாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. வாழ்வியல் நடைமுறையில் மறைந்த சிலவற்றையாவது மீண்டும் பின்பற்ற வேண்டியதன் அவசியம், சாதி, சமயங்களுக்கு அப்பாற்பட்டவர் திருவள்ளுவர், பாரதிக்கு இனி புகழ் சேர்க்க அவருக்கு விருது தேவையில்லை; அவரது பெயராலே விருது வழங்குவதுதான் சிறப்பு என்பன போன்ற பல கருத்துகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இயற்கையை பேணுதல், ஒழுக்கம், உளவியல், கல்வி, இலக்கியம் […]

Read more

நானும் என் சூரியனும்

நானும் என் சூரியனும்,  சுப்ர.பாலன், வானதி பதிப்பகம்,  பக்.168, விலை ரூ.150. புலர் காலை நேரத்தில் வானம் பார்க்கும் வழக்கம் பல ஆண்டுகளாய் உள்ள நூலாசிரியரின் உரைநடைக் கவிதை நூல். 2019 மே 11- ஆம் தேதி தொடங்கி 2019 ஆகஸ்ட் 31- ஆம் தேதி வரையிலான பதிவுகள் இதில் இடம் பெற்றுள்ளன. சென்னை, வேலூர், பெங்களூரு, திருச்சி மட்டுமல்ல பாரீஸ் உள்ளிட்ட நகரங்களிலும் சூரிய தரிசனம் கண்டுள்ளார் நூலாசிரியர். எங்கேயும் ஒரே சூரியன்தான் என்றாலும் அவரது அனுபவங்கள் நாளும் நாளும் புதியன. காலை நேரத்து […]

Read more

ஸ்ரீஅகத்திய பகவான் அருளிய ஆதித்ய ஹ்ருதயம் விரிவுரை

ஸ்ரீஅகத்திய பகவான் அருளிய ஆதித்ய ஹ்ருதயம் விரிவுரை, சு.அரங்கநாதன், ஸ்ரீ அரங்கன் நிலையம், பக்.496, விலை ரூ.400. வான்மீகத்தில், இராம – இராவண யுத்தத்தின்போது, போரின் நிலையைக் காண வருகின்றார் மாமுனிவர் அகத்தியர். போரினால் சோர்வும் துயரமும் கொண்டிருக்கும் இராமனுக்கு அவர் உபதேசித்த வெற்றி மந்திரம்தான் “ஆதித்ய ஹ்ருதயம்”. சூரியதேவனின் பலத்தையும் ஆற்றலையும் பெற்றுத் தரும் இந்த மந்திரத்தை நாளும் மும்முறை ஓதினால், வெற்றி உறுதி என்று அருளிச் செய்கிறார் அகத்திய முனிவர். சிதம்பரத்தில் தமிழாசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்றவர் சு. அரங்கநாதன். விபத்தில் […]

Read more

பிசினஸ் டிப்ஸ்

பிசினஸ் டிப்ஸ்,  சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு பதிப்பகம், பக்.128, விலை140. சொந்தமாகத் தொழில் செய்ய விழைவோருக்கு எளிமையான, கலகலப்பான மொழியில் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி.குட்டி, குட்டியாக இருபத்து மூன்று அத்தியாயங்களாகப் பிரித்து, புதிதாகத் தொழிலில் முனைவோருக்கு உந்து சக்தியாக இருக்கும் வகையில் நூலை வடிவமைத்திருக்கிறார். புதிதாய் பணியில் சேரும் ஓர் ஊழியரின் முதல் நாள் அனுபவம் அவருக்கு மறக்க முடியாதவண்ணம் அமைவதற்கு என்ன செய்கிறீர்கள்? என்று கேட்கும் சதீஷ், ஓர் அருமையான யோசனையை முன்வைக்கிறார். நீங்கள் பணிக்கு அமர்த்தும் புதிய ஊழியரை வரவேற்க […]

Read more

விநோத சந்திப்பு

விநோத சந்திப்பு (சீனத்துச் சிறுகதைகள்),  இராம.குருநாதன், டிஸ்கவரி புக் பேலஸ், பக்.112, விலை ரூ.100. 13 சீனத்துச் சிறுகதைகள் ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.1937 -1945 கால கட்டத்தில் ஜப்பான் சீனாவை ஆக்ரமித்தது அந்த ஆக்கமிப்பை எதிர்த்து சீன மக்கள் போராடினார்கள். அந்தப் போராட்டம் சீன மக்களிடையே ஏற்படுத்திய மாற்றங்களை காற்று, நெருப்பு விதை ஆகிய சிறுகதைகள் அற்புதமாகச் சித்தரிக்கின்றன. கற்பனையும் கனவும் மட்டும் ஒரு பெண்ணுக்கு இருந்தால் போதாது, எந்தப் பொறுப்பையும் சிறப்பாக ஏற்றுச் செயல்பட வேண்டும் என்பதைச் […]

Read more

புதிய செலபஸ்

புதிய செலபஸ்,  கோ.வரதராஜன்,  தமிழ்ச்சுவடி, பக்.424, விலை ரூ.400. தேசியப் பண்பாட்டை வடிவமைத்த ஆன்மிக அறிஞர்கள் முதல் தற்கால தூய்மை இந்தியா திட்டம் வரை-அவற்றைப் பற்றி மிக எளிமையாக, அதே நேரத்தில் அதன் சாரம் குறையாத வகையில் நூலாசிரியர் கட்டுரைகளாக இந்நூலில் தொகுத்துள்ளார். பொதுவியல், கல்வியியல் மற்றும் தத்துவவியல், பொருளியல், விஞ்ஞானவியல் என நான்கு பகுதிகளாகப் பிரித்து, அதில் 81 கட்டுரைகளை இடம் பெறச் செய்துள்ளார். வாழ்வுக்கு வள்ளுவரையும், படிப்பறிவுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணனையும், பண்பாட்டுக்கு சகோதரி நிவேதிதையையும், இலக்கியத்துக்கு பாரதி, கம்பரையும், அறிவியலுக்கு அப்துல் […]

Read more

அகம் செய விரும்பு

அகம் செய விரும்பு,  நா.சங்கரராமன், விஜயா பதிப்பகம், பக்.168, விலை ரூ.130. நூலின் தலைப்பே வித்தியாசமாக இருப்பதைப் போல நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளின் தலைப்புகளும் வித்தியாசமாக உள்ளன. நீங்கள் எந்த வருட மாடல்? இளிச்சவாயர்களாக இருப்போம்,  யார் உங்கள் பிக் பாஸ்,  அம்மாவும் நீயே… அப்பாவும் நீயே ஆகியவை சில உதாரணங்கள். இந்நூலில் அடங்கியுள்ள 16 கட்டுரைகளும், நமது வாழ்வில் உள்ள பல்வேறு பிரச்னைகளை எவ்வாறு சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதாக இருக்கின்றன. அதே சமயம் அறிவுரை வழங்கும் தொனியில் இல்லாமல் […]

Read more

நமது மரபணு ஓர் உயிரியல் அற்புதம்

நமது மரபணு ஓர் உயிரியல் அற்புதம், மோகன் சுந்தரராஜன், மணிவாசகர் பதிப்பகம், பக்.240, விலை ரூ.150. மரபணு பற்றிய அறிவியல் கண்டுபிடிப்புகள் இப்போது பெரிய அளவில் வளர்ந்துவிட்டன. பாக்டீரியாவின் மரபணுவில் வேறுபாடுகள் தோன்றி மருந்துகளைச் செயலிழக்கக் செய்துவிடுகிறது. ஆர்டெமிசினின் மருந்து, பென்சிலின் ஆகியவை ஒரு நோயாளியின் உடலில் செயல்படாமல் போவது இதனால்தான். நமது உடலில் வலி தோன்றுவதற்குக் காரணமான மரபணு எஸ்என்பி -9 ஏ. இது உடலில் சோடியம் செல்லும் பாதைகளில் ஒன்றான என்ஏவி 1.7 என்பதை ஒழுங்குபடுத்துகிறது. இந்தப் பாதையைச் செயலிழக்கச் செய்துவிட்டால், கொதிக்கும் […]

Read more
1 33 34 35 36 37 180