அறம் வளர்த்த அருந்தமிழ்ப் புலவர்களும் புரவலர்களும்

அறம் வளர்த்த அருந்தமிழ்ப் புலவர்களும் புரவலர்களும், அரங்க பரமேஸ்வரி, மங்கை வெளியீடு, பக்.320, விலை ரூ.240. அக்காலத்தில் வாழ்ந்த கல்வியிற் சிறந்த புலவர்கள் மட்டுமல்லாமல், அரசரர்கள், சிற்றரசர்கள், பல்வேறு நிலையில் வாழ்ந்த குடிமக்கள், கலைஞர்கள், வணிகர்கள் எனப் பலரும் தமிழில் புலமைப் பெற்றிருந்ததுடன், பாடல்கள் புனையும் ஆற்றலும் கைவரப் பெற்றிருந்தனர் என்பதை சங்க இலக்கியப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. இவற்றில் மிக சிறந்ததாகக் கூறப்படும் கொடைப் பண்பு உடையவர்களையே அக்காலச் சமுதாயம் புரவலர்கள் என்று போற்றியுள்ளது. தமது ‘பா’த் திறத்தால், புலவர்கள் பலர் அறப்பாடல்களைப் பாடியதுடன், […]

Read more

பூக்கூடை

பூக்கூடை,   படம் ஒன்று, கதைகள் முப்பத்தெட்டு, தொகுப்பாசிரியர்: பாலகணேஷ் , வாதினி, பக். 160, விலை: 160. ஓர் ஓவியத்துக்குப் பொருத்தமான சிறுகதை எழுதும் போட்டியில் பரிசு பெற்ற 38 கதைகளின் தொகுப்பு. 38 எழுத்தாளர்கள் தங்கள் கற்பனை வளத்தால் இந்நூலை சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார்கள். நகரின் பரபரப்பான சாலையில் காரை ஓட்டும் இளம்பெண், காரின் மேற்கூரையில் கயிறால் கட்டப்பட்டிருக்கும் இளைஞன், இந்த விசித்திரக் காட்சியை வேடிக்கை பார்க்கும் பேருந்து பயணிகள், இருசக்கர வாகனத்தில் அமர்ந்த நிலையில் பார்வையிடும் தம்பதி ஆகியோர் மட்டுமே அடங்கிய ஓர் ஓவியம். […]

Read more

குறள் விருந்து கதை விருந்து

குறள் விருந்து கதை விருந்து, இரா.திருநாவுக்கரசு, குமரன் பதிப்பகம், பக்.232, விலை ரூ.200. திருக்குறளுக்கு நிறைய உரைகள் வெளிவந்திருக்கின்றன. திருக்குறளைப் படிக்கும் அனைவரின் மனதிலும் அது பதிந்துவிடும் என்று சொல்ல முடியாது. மருந்தின் கசப்பை நாக்கு ஏற்றுக் கொள்ள தேனைக் கலப்பது போல், நல்ல கருத்துகளை விதைக்க தேனான கதைகள் அவசியம் என நினைத்த நூலாசிரியர், திருக்குறளை ஒரு கதையுரையில் தந்தால் அது சிறக்கும் என்பதால், ஒரு குறளுக்கு ஒரு கதையை எழுதி விளக்கியிருக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட 108 திருக்குறள்களுக்கு 108 கதைகளை எழுதித் தொகுத்துத் தந்திருக்கிறார். […]

Read more

சிலம்புச் செல்வரின் அறவழிப் போராட்டங்கள்

சிலம்புச் செல்வரின் அறவழிப் போராட்டங்கள்,  தஞ்சை வெ.கோபாலன், அன்னம், பக்.100, விலை ரூ.80. சைமன் கமிஷனுக்கு எதிர்ப்புத் தெரிவித்த போராட்டம் (1928), உப்பு சத்தியாக்கிரகம் (1930), கள்ளுக்கடை மறியல் போராட்டம் (1931), தனிநபர் சத்தியாக்கிரகம்(1941), ஆகஸ்ட் புரட்சி (1942), வடக்கெல்லை போராட்டங்கள், தெற்கெல்லைப் போராட்டங்கள் என பல மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளுக்காகப் போராடி எட்டுமுறை சிறை சென்றவர் ம.பொ.சிவஞானம். காங்கிரஸ் கட்சியில் அவர் இருந்தபோதே, ஆந்திர மாநில காங்கிரஸ்காரர்களுடன் கருத்து மாறுபாடு கொண்டு வடக்கெல்லைப் போராட்டத்தை நடத்தியவர்; காமராஜர் ஆட்சிக் காலத்தில் திருவாங்கூர் […]

Read more

கல்வித்துறையிலிருந்து விடை பெறுகிறேன்

கல்வித்துறையிலிருந்து விடை பெறுகிறேன், பொன்னீலன், சீதை பதிப்பகம், பக்.264, விலை ரூ.250. சமூக அக்கறை மிகுந்த எழுத்தாளராக அறியப்பட்ட பொன்னீலன், கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நூலில் அவர் கல்வித்துறையில் ஏற்ற பணிகளைப் பற்றியும், அதில் கிடைத்த அனுபவங்களைப் பற்றியும் மிகச் சுவையாகச் சொல்லியிருக்கிறார். மதுரை தியாகராசர் மாதிரிப் பள்ளியில் முதன் முதலில் கணிதப் பாடம் எடுத்த அனுபவத்துடன் தொடங்குகிறது அவர் கல்விப் பயணம். 1962 – இல் மதுரையில் உள்ள விருதுநகர் இந்து நாடார் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்கிறார். ஆனால் […]

Read more

ஒளி வித்தகர்கள்

ஒளி வித்தகர்கள் – பாகம் 1, தமிழில்: ஜா.தீபா, டிஸ்கவரி புக் பேலஸ், பக்.160, விலை ரூ.150. உலக அளவில் பிரபலமான திரைப்பட ஒளிப்பதிவாளர்களில் ஏழுபேரின் பேட்டிகள் அடங்கிய நூல். MASTERS OF LIGHT என்ற ஆங்கிலநூலின் ஒரு பகுதி தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. காந்தி திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான பில்லி வில்லியம்ஸ்,  எக்ஸார்சிஸ்ட் ஒளிப்பதிவாளர் ஓவன் ராய்ஸ்மன்,  தி புளு லாகூன் ஒளிப்பதிவாளர் நெஸ்டர் ஆல்மன்ட்ராஸ் உள்ளிட்ட ஏழு ஒளிப்பதிவாளர்களின் திரைமொழி குறித்த உரையாடல்கள் கருத்தைக் கவர்கின்றன. இயக்குநர்தான் படத்தின் ஆணிவேர். இயக்குநரின் கற்பனையையும், […]

Read more

மேதையையும் பேதையாக்கும் போதை

மேதையையும் பேதையாக்கும் போதை,  முளங்குழி பா.இலாசர், குமரி முத்தமிழ் மன்றப் பதிப்பகம்,  பக்.188, விலை ரூ.130. போதைப் பழக்கத்தால் எவ்வளவு பெரிய மேதைகளும், வீரர்களும், தலைவர்களும் வீழ்ந்துவிடுவார்கள். எனவே போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாதீர்கள் எனக் கூறும் நூல். போதைப் பழக்கத்தால் ஒவ்வொரு நாட்டிலும் எவ்வளவு பேர் பாதிக்கப் படுகிறார்கள் என்பதை புள்ளி விவரங்களுடன் நூல் எடுத்துக் கூறுகிறது. மகா அலெக்சாண்டர், ஜூலியஸ் சீசர், பாபர், ஹுமாயூன், சிவாஜியின் மகன் சாம்பாஜி, இராபர்ட் கிளைவ் உட்பட பலர் போர்களில் தோல்வி அடைந்ததற்கும் மரணமடைவதற்கும் காரணமாக போதைப் பழக்கமே […]

Read more

வேணாடும் தமிழ்மரபும்

வேணாடும் தமிழ்மரபும்,  வ.ஆன்றனி ஜோசப், பக்.369, விலை ரூ.390. உருவங்கள் ஊடக ஆய்வு மையம், புலவன்விளை, கல்லாங்குழி அஞ்சல், குமரி நமாவட்டம். நன்னூல் சிறப்புப் பாயிரத்தில் குறிப்பிடப்பட்ட பன்னிரண்டு நாடுகளில் ஒரு நாடாக வேணாடு உள்ளது. எனினும் சங்க காலத்தில் வேணாடு என்ற ஒன்று இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. வேணாடு எங்கு அமைந்தது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. திருவிதாங்கூர் தொல்லியல்துறை கல்வெட்டுத் தொகுப்புகளின்படி, தற்போதைய கேரள மாநிலத்தின் கோட்டயம், திருவல்லா, சங்கனாசேரி, ஏற்றமானூர் முதலிய பகுதிகள் வேணாட்டின் பகுதிகளாக இருந்திருக்கின்றன. கன்னியாகுமரி, மங்கலம் […]

Read more

ஸ்ரீ வேதாந்த தேசிகர் தமிழ்த் தொண்டும் சாதனைகளும்

ஸ்ரீ வேதாந்த தேசிகர் தமிழ்த் தொண்டும் சாதனைகளும், வேணு சீனிவாசன், மங்கை பதிப்பகம், பக்.368. விலை ரூ.250. ராமாநுஜருக்குப் பிறகு தோன்றிய மிகப் பிரசித்தமான விசிஷ்டாத்வைத ஆச்சார்யர் வேதாந்த தேசிகர். சம்ஸ்கிருதம் மட்டுமல்லாமல் தமிழிலும் ஏராளமான நூல்களை இயற்றியவர். ஸ்தோத்திரங்கள், உரைகள், வேதாந்த விளக்கம், கவிதை, நாடகம் என்று பலவாறாக நூறுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றிஇருக்கிறார். அதுமட்டுமல்லாமல், உணவு உட்கொள்ளுதல் போன்ற அன்றாட வாழ்வு நடைமுறைகளில் நாம் ஒழுக்கத்துடன் இருந்தாலே, ஆத்மிக விஷயங்களிலும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க இயலும் என்பதன் பொருட்டு, அவற்றைப் பற்றியும் இரு […]

Read more

சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடுகள்

சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடுகள்,  அப்துல்காதர், நேஷனல் பப்ளிஷர்ஸ்,நேஷனல் பப்ளிஷர்ஸ், பக்.192, விலை ரூ. 180. அன்றைய தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, நாகரிகம், பண்பாடு, கலைகள் போன்றவற்றைச் சொல்லும் சிலப்பதிகாரத்தில், இல்லறம், துறவறம், சமுதாய அறம், அரசியல் அறம் ஆகியவை எவ்வாறெல்லாம் இயல்பாகவே விரவிக் கிடக்கின்றன என்பதை புதிய நோக்குடன், பலவித கோணங்களில், விரிவாகப் படம் பிடித்துக்காட்டுகிறது இந்த ஆய்வு நூல். அடையாளமற்ற அடையாளம், அறக்கோட்பாட்டு அமுதசுரபி, அகப்புற அற ஆவணம் உள்பட எட்டு கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. திருக்குறள், புறநானூறு உள்ளிட்டதமிழ் இலக்கியங்கள், பிற நாட்டு […]

Read more
1 31 32 33 34 35 180