அர்த்தமற்ற மனித மனம்

அர்த்தமற்ற மனித மனம் (அறம், மரம் மறந்ததேனோ), வ.ராஜ்குமார்,கவிதா பப்ளிகேஷன், பக்.176, விலை ரூ.160. அறம் என்பது ஒழுக்கப் பண்புகளையும், மரம் என்பது இயற்கைச் செல்வத்தையும் குறிக்கும். ஒழுக்கமாகிய அறத்தையும், இயற்கைச் செல்வமாகிய மரத்தையும் வளர்ப்பதுவே நம் எல்லாருடைய இலக்காக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. முக்கிய நிகழ்வுகளில் தங்களின் உண்மையான முகத்தைக் காட்டும் தருணங்களில் மட்டுமே மனிதர்களின் உண்மையான முகத்தைப் புரிந்து கொள்ள முடியும். சாதாரணமாகத் தெரிந்து கொள்ள முடியாது என்று கூறும் நூலாசிரியர் தான் படித்த, கற்றுக் கொண்ட […]

Read more

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை, பாகம் 4, தொகுப்பாசிரியர்: சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், பக்.552, விலை ரூ. 200. சுவாமி விவேகானந்தர் குறித்த மிக உயர்ந்த அபிமானம் கொண்டவராக பாரதி விளங்கினார். தான் நடத்திய பத்திரிகைகளிலும் பணிபுரிந்த பத்திரிகைகளிலும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் விவேகானந்தரைப் போற்றி மகிழ்கிறார் பாரதி. அதுமட்டுமல்ல, விவேகானந்தரின் சீடர்களான சுவாமி அபேதானந்தரையும் சகோதரி நிவேதிதையையும், அவரது சகோதரர் பூபேந்திரரையும் தனிப்பாடல் புனைந்து வழிபட்டவர் பாரதி. மகாத்மா காந்தி, திலகர், நேதாஜி போன்ற பிற தேசியத் தலைவர்களைப் […]

Read more

வெல்ல நினைத்தால் வெல்லலாம்

வெல்ல நினைத்தால் வெல்லலாம்,  அ.அமல்ராஜ், விஜயா பதிப்பகம், பக்.368, விலை ரூ.300. வாழ்க்கையில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு விடை தரும் நூல். வெல்ல வேண்டும் என்று நினைத்தால் வெல்லலாம் என்றாலும் அப்படி நினைப்பதற்கே நம்மைத் தயார்ப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்நூல் மனதின், எண்ணத்தின், சொல்லின், செயலின், பழக்கத்தின் வல்லமைகளை மிக விரிவாக விளக்குகிறது. மனம், எண்ணம், குணம், சொல், செயல், பழக்கம் எல்லாமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒன்று இன்னொன்றின் மீது தாக்கம் ஏற்படுத்துபவை. எதிலும் கவனம் செலுத்த, நம்பிக்கை கொள்ள, […]

Read more

அச்சம் தவிர்… ஆளுமை கொள்

அச்சம் தவிர்… ஆளுமை கொள், பரமன் பச்சைமுத்து, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.160, விலை ரூ.150. படிப்பு என்பது ஒரு பாஸ்போர்ட். உங்களை நேர்முகத் தேர்விற்கும், முக்கியமான தளங்களுக்கும் கொண்டு சேர்க்கும். ஆனால் வாழ்வில் மேலும் மேலும் வெற்றி பெற சில தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றை ஆளுமை என்று சொல்லலாம். ஆளுமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள அச்சம் தடையாக இருக்கிறது. அச்சத்தை எவ்வாறு நீக்குவது? ஆளுமைப் பண்புகளை எவ்வாறு வளர்த்துக் கொள்வது? இதுதான் இந்நூலின் சாரம். அச்சப்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அச்சப்படும் ஒரு […]

Read more

அர்த்தமற்ற மனித மனம்

அர்த்தமற்ற மனித மனம் (அறம், மரம் மறந்ததேனோ), வ.ராஜ்குமார். கவிதா பப்ளிகேஷன், பக்.176. விலை ரூ.160. அறம் என்பது ஒழுக்கப் பண்புகளையும், மரம் என்பது இயற்கைச் செல்வத்தையும் குறிக்கும். ஒழுக்கமாகிய அறத்தையும், இயற்கைச் செல்வமாகிய மரத்தையும் வளர்ப்பதுவே நம் எல்லாருடைய இலக்காக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. முக்கிய நிகழ்வுகளில் தங்களின் உண்மையான முகத்தைக் காட்டும் தருணங்களில் மட்டுமே மனிதர்களின் உண்மையான முகத்தைப் புரிந்து கொள்ள முடியும். சாதாரணமாகத் தெரிந்து கொள்ள முடியாது என்று கூறும் நூலாசிரியர் தான் படித்த, கற்றுக் கொண்ட […]

Read more

குயில்பாட்டுத் திறன்

குயில்பாட்டுத் திறன், செ.வை.சண்முகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.280, விலை ரூ.260. ஓர் இலக்கியத்தைத் திறனாய்வு செய்வதற்கு பலவிதமான கோட்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. இந்நூல் பாரதியாரின் “குயில் பாட்டு’ படைப்பை மொழியியல் இலக்கியத்திறனாய்வு நோக்கில் ஆராய்ந்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் மேலை நாடுகளில் தோன்றிய திறனாய்வு முறைதான் மொழியியல் இலக்கியத் திறனாய்வு. முதலில் இலக்கியத்தின் நடை தொடர்பாக ஆராய்ந்த திறனாய்வு, இலக்கியத்தில் காணப்படும் மொழி அமைப்பு முழுவதையும் ஆராயும் மொழியியல் திறனாய்வாக மாறியது. “மொழியின் அமைப்புதான் இலக்கியத்திற்கு வடிவ அழகைத் […]

Read more

உடல் அரசியல்

உடல் அரசியல், ஜெகாதா, மீனாட்சி புத்தக நிலையம், பக்.232, விலை ரூ.200. உடல் மொழி பற்றி கேள்விப்பட்டிருப்போம். பேசும்போதும், பேசுவதற்கு மாற்றாகவும் உடல் மொழி உதவுகிறது. இந்த “உடல் அரசியல்’ நூல் கூட ஒருவிதத்தில் உடலின் பேச்சை – உடலின் மொழியை – நாம் உன்னிப்பாகக் கவனிக்கத் தூண்டுகிறது. நான் என்று ஒருவர் தன்னை நினைத்துக் கொள்வது அவருடைய சிந்தனை, மனோபாவம் ஆகியவை மட்டுமல்ல, இந்த உடலும் சேர்த்துத்தான் என்பதால் உடலைப் பற்றி தெரியாத விவரங்களை இந்நூல் சொல்லித் தருகிறது. நமது உடலில் உள்ள […]

Read more

சிலம்பொலியார் பார்வையில்

சிலம்பொலியார் பார்வையில், கே.ஜீவபாரதி,  ஜீவா பதிப்பகம், பக்.96, விலை ரூ.80. நூலாசிரியர் தொகுத்த”பட்டுக்கோட்டையார் பாடல்கள்' என்ற நூலுக்கும், நூலாசிரியர் எழுதிய புதுயுகக் கவிஞனும் புதியவன் குரல்களும் மற்றும் அப்துற்-றஹீம் வாழ்வியல் இலக்கியம் ஓர் ஆய்வு ஆகிய நூல்களுக்கும் தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பனார் எழுதிய அணிந்துரைகளின் தொகுப்பே இந்நூல். சிலம்பொலி செல்லப்பனாரின் 85 -ஆவது பிறந்த நாள் சிறப்பு மலருக்கு நூலாசிரியர் எழுதிய கட்டுரை பின் இணைப்பாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களின் சிறப்புகளை சிலம்பொலி செல்லப்பனார் எடுத்துக் கூறுகிறார். “மக்களின் இன்றைய தேவைக்கேற்ற புதுமையான […]

Read more

உன்னத வாழ்க்கைக்கு… தன்னிலை உயர்த்து,

உன்னத வாழ்க்கைக்கு… தன்னிலை உயர்த்து, இரா.திருநாவுக்கரசு; இரண்டு பாகங்கள்; குமரன் பதிப்பகம், ஒவ்வொரு பாகமும் பக்.168, விலை ரூ.150. தினமணி இளைஞர்மணியில் தொடராக வெளிவந்த 52 கட்டுரைகளின் நூல் வடிவம். ஒருவர் தன்னையறிந்தால், தன் திறமைகளை, ஆற்றலை அறிந்தால் வாழ்வில் உயர முடியும். மனிதன் உடம்பால் ஆனவன். அவனுக்கு மனம் இருக்கிறது. எண்ணங்கள், குறிக்கோள்கள் இருக்கின்றன. வாழ்வில் முன்னேற திட்டமிட வேண்டும். முயற்சி செய்ய வேண்டும். மனதை ஒருமுகப்படுத்தி உழைக்க வேண்டும். கட்டுபாட்டோடு இருக்க வேண்டும். ஒழுக்கமாக இருக்க வேண்டும். அஞ்சுவதற்கு அஞ்ச வேண்டும். […]

Read more

இராஜேந்திர சோழன்

இராஜேந்திர சோழன் (வெற்றிகள்- தலைநகரம் – திருக்கோயில்), குடவாயில் பாலசுப்ரமணியன், அன்னம், பக்.472, விலை ரூ.750. இராஜேந்திர சோழனின் வரலாற்றை கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார், தி.வை.சதாசிவ பண்டாரத்தார் உள்ளிட்ட பல வரலாற்று ஆசிரியர்கள் எழுதியிருக்கின்றனர். அவர்கள் எழுதிய வரலாற்று நூல்களில் விடுபட்டுப் போனவற்றை விரிவாக எழுதும் நோக்கில் இந்த வரலாற்று நூல் படைக்கப்பட்டுள்ளது. முதலாம் இராஜ ராஜனின் மகனான முதலாம் இராஜேந்திரனின் (கி.பி.1012 – 1044) வரலாற்றை விரிவாக இந்நூல் கூறுகிறது. நூலின் முதல் பகுதியில் பிற்காலச் சோழர் மரபு பற்றி சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.முதலாம் ராஜேந்திரன் […]

Read more
1 29 30 31 32 33 180