வெற்றி எங்கே இருக்கிறது?

வெற்றி எங்கே இருக்கிறது? , உதயை மு.வீரையன், மணிவாசகர் பதிப்பகம், பக்.136, விலை ரூ.100. வாழ்கையில் ஒருவர் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பதை மிக விரிவாகக் கூறும் நூல்.சிறந்த குறிக்கோள் இருப்பவர்களே சிறந்த மனிதர்களாக விளங்க முடியும். சிறந்த மனிதர்களால் மட்டுமே சிறந்த வெற்றியை ஈட்ட முடியும். எந்தச் செயலையும் செய்வதற்கு முன்னும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து முடிவெடுக்க வேண்டும். முடிவு எடுத்த பிறகு திரும்பிப் பார்க்காமல் முன்னோக்கியே போய்க் கொண்டிருக்க வேண்டும்.கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு அடுத்தடுத்த முயற்சிகளில் […]

Read more

சித்தர் வழி

சித்தர் வழி, அரங்க. இராமலிங்கம், வர்த்தமானன் பதிப்பகம்,  பக்.312, விலை ரூ.200.   சித்தர் மரபு குறித்து பொதுநிலையில் பேசப்படுபவை, சித்தர் நெறியின் மெய்ப்பொருள் ரகசியங்கள் குறித்து பேசப்படுபவை, அனுபவ அறிவால் உணரக் கூடிய நூலாக திகழும் திருமந்திரம், சித்தர் நோக்கில் சைவநெறி போன்றவை குறித்த 21 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. சித்தர் நெறியின் பன்முகத்தன்மையை விரிவாகப் பேசுவதோடு, அவர்களின் பரிபாஷைகள் குறித்த தொகுப்பு, அவற்றில் ஒரு சிலவற்றுக்கு உரிய விளக்கம், சித்தர்கள் ஏன் பரிபாஷைகளைக் கையாண்டனர் என்பதற்கான காரணம் உள்ளிட்டவற்றை தனது […]

Read more

மதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ இராமானுஜர்

மதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ இராமானுஜர்,  ம.கணபதி, மணிவாசகர் பதிப்பகம், பக்.208, விலை ரூ.160. “பிறருடைய துன்பத்தை, வேதனையைக் கண்டு “ஐயோ” என்று நினைத்து அவனுக்காக இரங்கி, அவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய எவன் துடிக்கிறானோ, அவனே உண்மையான வைணவன்” என்ற வைணவக் கொள்கையைப் பின்பற்றி வாழ்ந்தவர் இராமானுஜர். மனிதர்களில் ஏற்ற தாழ்வுகள் இல்லை. இறைவனின் முன்பு எல்லாரும் சமம் என்ற அடிப்படையில் இராமானுஜர் வாழ்ந்ததை, அவருடைய வாழ்வில் நிகழ்ந்த பல சம்பவங்களின் துணைகொண்டு நூல் முழுவதும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இராமானுஜரின் இளம்பருவம், அவர் […]

Read more

உள்ளங்கையில் உடல் நலம்

உள்ளங்கையில் உடல் நலம்,  பி.எம்.ஹெக்டே; தமிழில்: நிழல் வண்ணன்,வானவில் புத்தகாலயம், பக்.176, விலை ரூ.166.   “நோய்கள் என்பவை விபத்துகள் போன்றவைதான். நல்ல ஆரோக்கியத்தோடு வாழும் மனிதர்களைக் கூட தீவிர நோய் வீழ்த்தி விட முடியும். ஆயினும் நாம் சிறந்த வாழ்க்கைமுறையைக் கொண்டால் நோயிலிருந்து விரைந்து குணமடைய முடியும்” என்ற அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நோய்கள் குறித்தும் மருத்துவம் குறித்தும் நாம் கொண்டுள்ள பல கருத்துகளை இந்நூல் மாற்றியமைத்துவிடுகிறது. நன்றாகத் தூங்கினால், உடல் நலம் பெறும் என்ற நம்பிக்கைக்கு மாறாக, “ஒரு நாளைக்கு 9 […]

Read more

சில பெண்கள் சில அதிர்வுகள் வேத, இதிகாச, புராண காலங்களில்,

சில பெண்கள் சில அதிர்வுகள், வேத, இதிகாச, புராண காலங்களில்,  ஹேமா பாலாஜி, சந்தியா பதிப்பகம், பக்.184, விலை ரூ.140. தினமணி டாட் காமில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். வேத காலம் தொட்டு புராண காலம் வரை வாழ்ந்த குறிப்பிடத்தக்க சில பெண்களின் உயர்வான பண்புகளை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. யாக்ஞவல்கியரின் மனைவியான மைத்ரேயி, யாக்ஞவல்கியரை தனது தத்துவஞானக் கேள்விகளால் திணறடித்த கார்கி வாசக்னவி போன்றவர்களைப் பற்றி மட்டுமல்ல, கெட்டவர்களாக பலரால் கருதப்படுகிற கைகேயி, மண்டோதரி, காந்தாரி, சூர்பனகை ஆகியோரின் உயர்ந்த பண்புகளையும் இந்நூல் […]

Read more

ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினப்படி சேதிக் குறிப்பு

ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினப்படி சேதிக் குறிப்பு – 12 தொகுதிகள்; பதிப்பாசிரியர்கள்: மு.இராஜேந்திரன், அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, மொத்த பக்கங்கள்: 5190, விலை ரூ.8,400; தென்னிந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கம் உச்சத்தில் இருந்தபோது, புதுச்சேரியின் ஆளுநர்கள் 4 பேரிடம் துபாஷியாக இருந்தவர் ஆனந்த ரங்கப்பிள்ளை. குறிப்பாக 12 ஆண்டுகள் ஆளுநராக இருந்த துயூப்ளேக்சின் காலத்தில் ஆனந்த ரங்கப்பிள்ளை தலைமை துபாஷியாகப் புகழின் உச்சத்தில் இருந்தவர். 1736 செப்டம்பர் 6 -ஆம் நாள் தன்னுடைய கைப்பட தினப்படி செய்திக் குறிப்புகளை எழுதத் தொடங்கியிருக்கிறார். தொடர்ந்து 25 ஆண்டுகள் […]

Read more

எஸ்.எஸ்.இராஜேந்திரன்-திரைப்பட ஆளுமைகள்

எஸ்.எஸ்.இராஜேந்திரன்-திரைப்பட ஆளுமைகள், பொன்.செல்லமுத்து, வைகுந்த் பதிப்பகம், பக். 448, விலை ரூ.450. நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்துள்ள 81 திரைப்படங்களின் முழு விவரங்கள் அடங்கிய ஆவணம் இந்நூல். எம்.ஜி.ஆருடன் எஸ்.எஸ்.ஆர். 2 படங்கள் (ராஜா தேசிங்கு, காஞ்சித் தலைவன்), சிவாஜியுடன் 16 படங்கள், ஜெமினியுடன் 2 படங்கள் (குலவிளக்கு, வைராக்கியம்), விஜயகுமாரியுடன் 32 படங்கள் மற்றும் முத்துராமன், பிரேம் நஸீர் உடனும் பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். இயக்குநர்கள் ஏ.பீம்சிங், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், முக்தா சீனிவாசன் போன்றவர்களின் முதல் பட நாயகனாக எஸ்.எஸ்.ஆர். நடித்துள்ளார். அவர் இயக்கி நடித்த […]

Read more

கிளியோபாட்ரா

கிளியோபாட்ரா,  இரும்புப் பெண்மணி, எஸ்.எல்.வி.மூர்த்தி, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.304, விலை ரூ.288. எகிப்தின் மகாராணி கிளியோபாட்ரா என்பவர் ஓர் அழகுப் பதுமை என்னும் பொதுப் பிம்பத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்திருக்கிறது இந்நூல். எகிப்தின் மகாராணி கிளியோபாட்ரா என்பவர் ஓர் அழகுப் பதுமை என்னும் பொதுப் பிம்பத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்திருக்கிறது இந்நூல். கிளியோபாட்ரா அழகாகப் பிறந்தவர் என்பதைவிட தன்னைச் சுற்றிலும் ஆபத்துடன் பிறந்தவர் என்பதே பொருத்தம். 9 மொழிகள், மருத்துவம், கணிதம், வானியல் உள்ளிட்ட 6 துறைகள், அரசியல் சாமர்த்தியம், போர்த்திறன், அபாரத் துணிச்சல் ஆகியவற்றை […]

Read more

கபிலரின் அருமையான குறிஞ்சிப் பாடல்களும் எளிமையான விளக்கங்களும்

கபிலரின் அருமையான குறிஞ்சிப் பாடல்களும் எளிமையான விளக்கங்களும், சி.விநாயகமூர்த்தி, மணிமேகலைப் பிரசுரம், பக்.268, விலை ரூ.200. கபிலர் பல இலக்கியங்களைக் பாடியிருந்தாலும், அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற இலக்கியம் குறிஞ்சிப் பாட்டுதான்! கபிலருக்கும் வள்ளல் பாரிக்குமான நட்பு, தலைவன்-தலைவியரின் காவியக் காதல், கபிலர் பாடிய-கபிலரைப் பாடிய மன்னர்கள், மன்னர்களை நல்லுரை கூறி நல்வழிப்படுத்திய கபிலரின் அறிவுத் திறன் முதலானவற்றுடன், பலவகையான உயிரினங்கள் மற்றும் வரலாற்றுத் தரவுகளையும் குறிஞ்சிப் பாட்டில் காணமுடிகிறது. அவற்றை இந்நூல் விரித்துரைக்கிறது. இயற்கை வருணனைகளையும், உவமைகளையும் தகுந்த இடங்களில் எடுத்துக்கூறி, […]

Read more

காதம்பரியம்

காதம்பரியம், அமர்நாத், வெல்லும் சொல் பக்.288, விலை ரூ.270. காதம்பரி என்ற பெயர் கொண்ட முன்னாள் தமிழ் நடிகையின் கதை. 22 வயதுக்குள் 20 படங்களில் நடித்து முடித்து இனி நடிப்பதில்லை என்ற முடிவுடன் அமெரிக்காவில் உள்ள சித்தப்பா வீட்டுக்குப் பயணமாகிறாள் கதையின் நாயகி. சித்தப்பாவின் வீட்டில் பிரேமசந்திரன் என்ற இளைஞனைச் சந்தித்துக் காதல் வயப்படுகிறாள். அவள் நடிகை என்பதைத் தெரியாது அவனும் விரும்புகிறான். சினிமாவை முற்றிலும் துறந்த அவள், மனைவி, தாய் என்ற புது கதாபாத்திரங்களை ஏற்கிறாள். துணைப் பேராசிரியரான பிரேமசந்திரன் அன்பும் […]

Read more
1 27 28 29 30 31 180