சக்ரவா்த்தி இராஜகோபாலாச்சாரி

சக்ரவா்த்தி இராஜகோபாலாச்சாரி,  ஆா்.கே.மூா்த்தி,  மொழிபெயா்ப்பு- எஸ்.கணேசன், பப்ளிகேஷன்ஸ் டிவிஷன், தகவல் ஒலிபரப்பு அமைச்சகம்,  விலை ரூ.145. சா்வதேச அளவில் தீா்க்கதரிசியென்றும், தலைசிறந்த நிா்வாகி என்றும் போற்றப்படும் ஒருவா், தமிழகத்தில் போதிய மரியாதை பெறவில்லை என்றால், அவா் ராஜாஜி என்று பரவலாக அழைக்கப்படும் சக்ரவா்த்தி இராஜகோபாலாச்சாரியாராகத்தான் இருப்பாா். மூதறிஞா் ராஜாஜி என்று அவா் குறிப்பிடப்பட்டாலும் அவா் குறித்து இன்றைய தலைமுறைக்கு சரியாகவும், முறையாகவும் எடுத்துரைபாரில்லை என்பதுதான் உண்மை. பிராமண சமூகத்தின் பிரதிநிதியாகவும், ஆசார அனுஷ்டான சீலராகவும், சனாதனியாகவும் ராஜாஜி வா்ணிக்கப்பட்டு, அவா் குறித்த தவறான பரப்புரைகள் […]

Read more

சிலப்பதிகாரம் கேள்விகள் ஆயிரம்

சிலப்பதிகாரம் கேள்விகள் ஆயிரம், மு. கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம்,   பக்.192. விலை ரூ.200.  தமிழா்களின் காப்பியம் என்று அழைக்கப்படும் சிலப்பதிகாரத்தின் கதையைத் தெரியாதவா்கள் தமிழா்களாக இருக்க இயலாது. கோவலன்-கண்ணகி-மாதவி; சேர-சோழ-பாண்டியா்; இயல்-இசை-நாடகம் என்று சிலப்பதிகாரம் பல முப்பரிமாணங்களைத் தன்னுள் கொண்டதாகத் திகழ்கிறது. சிலப்பதிகாரத்துக்கு 11-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அரும்பதவுரையும், 12-ஆம் நூற்றாண்டில் அடியாா்க்கு நல்லாா் எழுதிய உரையும் அந்தக் காப்பிய நுட்பங்களை அறிந்துணர உதவுகின்றன. அடியாா்க்கு நல்லாா் உரையிலிருந்து அவரது காலத்தில் சிலப்பதிகாரம் போலவே பல இசை நாடக நூல்கள் வழக்கில் இருந்தன […]

Read more

தமிழக வரலாற்றில் பெரம்பலூர்

தமிழக வரலாற்றில் பெரம்பலூர், ஜெயபால் இரத்தினம், விச்சி பதிப்பகம், பக்.572, விலை ரூ.700.  பெரம்பலூர் வட்டாரத்தின் வரலாற்றைச் சொல்லும் இந்நூலில், முதலில் பெரம்பலூர் பகுதியின் நிலவியலமைப்பு விவரிக்கப்படுகிறது. பழைய கற்காலத்திலேயே பெரம்பலூர் வட்டாரத்தில் மக்கள் பரவி வாழத் தொடங்கிவிட்டதையும், புதிய கற்காலம் மற்றும் பெருங்கற்படைக் காலங்களில் ஊர்கள் உருவாகிவிட்டதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. சங்க காலத்தில் இவ்வட்டார நிலப்பரப்பில் விச்சி, கண்டீரம் மற்றும் பிடவூர் ஆகிய மூன்று குறுநில அரசுகள் அமைந்திருந்தன, எஞ்சியுள்ள பகுதிகள் மலையநாட்டின் ஒரு பகுதியாகவும், சோழ நாட்டின் ஒரு பகுதியாகவும் […]

Read more

குழந்தைகளை வளர்க்காதீர்கள் வளரவிடுங்கள்

குழந்தைகளை வளர்க்காதீர்கள் வளரவிடுங்கள்,  எஸ்.குருபாதம்,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.500, விலை ரூ.450.  குழந்தைப் பருவத்தில் மனதளவில் ஏற்படும் சிறிய பாதிப்புகள் கூட அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற அடிப்படையில் குழந்தை வளர்ப்பை இந்நூல் அணுகுகிறது. எனவே குழந்தைகளுக்கு உரிய மரியாதை கொடுத்து, அவர்களின் இயல்பறிந்து எவ்வாறு பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும்? குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும்? எப்படி நடந்து கொள்ள வேண்டும்? பிரச்னைகளை எப்படி அணுக வேண்டும்? என்பதை இந்நூல் விளக்குகிறது. குழந்தைகளிடம் எதிர்மறையாக […]

Read more

தாவரத் தரகன்

தாவரத் தரகன் (கட்டுரைகள்), ஜெயபாஸ்கரன், வழுதி வெளியீட்டகம், பக்.200, விலை ரூ.200. தினமணி நாளிதழ், ரெளத்திரம், அமுதசுரபி உள்ளிட்ட பல இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. நீராதாரத்தைப் பாதுகாக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தும் கட்டுரை, வேலிகாத்தானை ஒழிப்பது பற்றிய “தாவரத் தரகன்” கட்டுரை, தனியார் பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவியர்கள் செல்லும் வாகனங்களைப் போன்று, அரசுப் பள்ளிகளிலும் பள்ளி வாகனங்கள் இருக்க வேண்டும் என்பதைச் சொல்லும் கட்டுரை, தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் தேர்தலுக்காகச் செய்யும் செலவுகளைப் பற்றிச் சொல்லும் கட்டுரை என பலவிதமான விஷயங்களை […]

Read more

குருதியுறவு

குருதியுறவு, கமலதேவி,  வாசக சாலை பதிப்பகம், பக். 126, விலை ரூ.130.  ‘குருதியுறவு’, ‘பிம்பங்கள் அலையும் வெளி’, ‘ஊசல்’, ‘பூ முள்’, ‘ஒரு பந்தலின் கீழ்’ உள்ளிட்ட 17 சிறுகதைகள் அடங்கிய நூல். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகையில் புதிய வடிவமைப்பைக் கொண்டிருக்கின்றன. வட்டார வழக்கு மொழிநடையில் அமைந்திருப்பதால் சில கதைகளை ஒருமுறைக்கு இருமுறை படித்து அனுபவிக்க வேண்டும். பாரி வள்ளலின் மகள்களான அங்கவை, சங்கவை இருவரையும் அழைத்துச் செல்லும் புலவர் கபிலர் வரும் ‘குன்றத்தின் முழு நிலா’ கதையில் முல்லைக் கொடி மீது […]

Read more

சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன்

சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன், கே.மகாலிங்கம், மூன்றெழுத்து பதிப்பகம், பக். 456, விலை ரூ.400. மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் உதவியாளராக 1972 – ஆம் ஆகஸ்ட் மாதத்தில் சேர்ந்து 1987 – ஆம் ஆண்டு டிசம்பர் எம்.ஜி.ஆர். மறையும் வரை அவருடன் நெருக்கமாக இருந்தவர் நூலாசிரியர் கே.மகாலிங்கம். எம்.ஜி.ஆர். என்ற தலைவரின், ஆட்சியாளரின், தனிமனிதரின் சிறப்புகளைக் கூறும் இந்நூல் பலரும் அறியாத தகவல்களின் கருவூலமாக உள்ளது. 1972 – இல் தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டது, அதற்காக கருணாநிதி மேற்கொண்ட செயல்கள், தமிழக மக்கள் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக […]

Read more

ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்

ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்,  முத்தாலங்குறிச்சி காமராசு,  காவ்யா, பக்.343, விலை ரூ.350.  திருநெல்வேலி -திருச்செந்தூர் சாலையில் ஆதிச்சநல்லூர் பரம்பு என்றழைக்கப்படும் 114 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கே ஜெர்மனியைச் சேர்ந்த சாகோர் என்பவர் செய்த ஆராய்ச்சிகளின் விளைவாக பல அரிய உண்மைகள் வெளிவந்தன. அதைப் பற்றி விரிவாக இந்நூல் எடுத்துக் கூறுகிறது. ஆதிச்ச நல்லூரில் தொல்லியல்துறையினர் 3 கட்டங்களாக அகழாய்வு செய்தனர். அவ்வாறு அகழாய்வு செய்யும்போது நிறைய தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளின் அருகே சிறிய மண்குடங்கள், குவளைகள், மூடிகள், தீப […]

Read more

இ மெயில் தமிழன்

இ மெயில் தமிழன், விஜய் ராணிமைந்தன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.128, விலை ரூ.100. இ மெயில் கண்டுபிடித்த சிவா அய்யாதுரையின் வாழ்க்கை வரலாறு இந்நூல். இளம் வயதில் மும்பையில் படித்த சிவா அய்யாதுரையின் ஏழாவது வயதில் (1970) அவருடய குடும்பம் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தது. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி | மாகாணத்தில் உள்ள பேட்டர்சன் டவுனில் குடிபெயர்ந்து அங்குள்ள பள்ளியில் படித்தார் சிவா அய்யாதுரை. பள்ளியில் படிக்கும்போதே கோடை விடுமுறையில் ஏழு வித்தியாசமான கம்ப்யூட்டர் மொழிகளை நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படித்தார். 1978இல் “யுனிவர்சிட்டி ஆஃப் டென்ஸ்ட்ரி […]

Read more

சா

சா,  கு. ஜெயபிரகாஷ்,  ஆதி பதிப்பகம், பக்.128, விலை ரூ.120.  மரணத்தை எண்ணத்தில் கொண்டு எழுத்தாக மாற்றுவதைப் பெரும்பாலும் யாரும்விரும்புவதில்லை அல்லது முன் வருவதில்லை.தமிழில் மரணம் தொடர்பாக வெளிவந்த நூல்களை, புதினங்களை விரல்விட்டு அவலம் சம்பத்தின் “இடைவெளி’யையும் சேர்த்து. இத்தனைக்கும் சித்தர்கள் வாழ்ந்த நிலம் இது. இங்கே மரணத்தைப் பாடாத சித்தர்களே இல்லை. பழந்தமிழ்க் கவிஞர்கள் பாடிய தனிப் பாடல்கள் ஏராளம். ஆங்கிலத்தில் நிறைய நூல்கள். தமிழில் பதிவுகள் குறைவே.கு. ஜெயபிரகாஷ் எழுதிய ‘சா’ நாவல் (ஓரிடத்தில் நூல் என்றும் எச்சரிக்கையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது) இந்தப் […]

Read more
1 25 26 27 28 29 180