நான் கண்ட போராளிகள் – களமும் வாழ்வும்

நான் கண்ட போராளிகள் – களமும் வாழ்வும்,  ஓவியர் புகழேந்தி,  தோழமை வெளியீடு,  பக்.456, விலை ரூ.480. தமிழீழம் நான் கண்டதும் – என்னைக் கண்டதும்; தலைவர் பிரபாகரன் – பன்முக ஆளுமை என்ற இரு நூல்களுக்குப் பிறகு ஓவியர் புகழேந்தியின் மூன்றாவது நூல் இது. விடுதலைப் புலிகளின் வசம் தமிழீழம் இருந்த காலத்தில் இரு தடவைகள் பயணம் மேற்கொண்டவர் ஓவியர் புகழேந்தி. அவரின் இரண்டாவது பயணத்தில் 40 நாள்கள் அங்கு தங்கியிருக்கிறார். இந்த தடவை மனைவி குழந்தைகளுடன் சென்றதால், தான் சந்தித்த ஆளுமைகள் […]

Read more

நடிகையர் திலகம் சாவித்திரி நிழலும் நிஜமும்

நடிகையர் திலகம் சாவித்திரி  நிழலும் நிஜமும், இருகூர் இளவரசன், தோழமை வெளியீடு, விலை 225ரூ. துயர நாயகி சாவித்திரி எவ்வளவு உயரத்தில் சினிமா ஒருவரைத் தூக்கி நிறுத்துகிறதோ அதைவிடப் பல மடங்கு கீழே தூக்கியும் எறிந்துவிடும். இதற்கு உதாரணம் சாவித்திரியின் வாழ்க்கை. திரைப்படங்களில் தனது அபாரமான நடிப்புத் திறமையால் நடிகையர் திலகமாக வாழ்ந்த சாவித்திரியை மக்களுக்குத் தெரியும். ஆனால், படத் தயாரிப்பாளராக, இயக்குநராக, நெருக்கடியான நேரத்தில் நடிகர் சுருளிராஜனுக்கு ரூ.30 ஆயிரம் கொடுத்து உதவியவராக, குழந்தைத்தனம் மிக்கவராக சாவித்திரியின் பன்முகங்களைக் காட்டியுள்ளார் ஆசிரியர். அன்றைய […]

Read more

எப்போ வருவாரோ

எப்போ வருவாரோ, தொகுப்பாசிரியர் வள்ளி முத்தையா, தோழமை வெளியீடு, பக். 112, விலை 150ரூ. எம்.எஸ்.சுப்புலட்சுமி சதாசிவம் தம்பதியருக்கு ரசிகமணி டி.கே.சி. எழுதிய கடிதங்களின் தொகுப்பே இந்நூல். இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு ரசிகமணி எழுதிய கடிதங்கள், ஒரு பல்சுவை விருந்து. பல தனிப்பட்ட சம்பவங்களை அவை கூறும்போது, சரித்திர நிகழ்வுகளாக அவை நிழலாடுகின்றன. எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு அவர் எழுதும் கடிதங்கள், “அருமைப் புதல்வி குஞ்சம்மாளுக்கு’ எனத் தொடங்குகின்றன. டி.சதாசிவத்துக்கு எழுதும் கடிதங்கள் “அருமை நண்பர் சதசாசிவத்துக்கு’ என்று தொடங்குகின்றன. கடிதங்களின் முடிவில் “அன்புள்ள, டி.கே.சிதம்பரநாதன்’ என்றே எழுதி […]

Read more

பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம், ஜெகவீர பாண்டியனார், தோழமை வெளியீடு, பக். 640, விலை 500ரூ. இந்தியாவை சுரண்டிய ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக, நாடு தழுவிய அளவில், 1857ல் நடந்த, முதல் இந்திய சுதந்திர போர், முதல் விடுதலை எழுச்சியாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு, 50 ஆண்டுகளுக்கும் முன்னதாகவே, தென் தமிழகத்தில் நடந்த பாளையக்காரர்களின் எழுச்சி மிகு போராட்டம், அதற்கு முன்னோட்டம். அவ்வகையில், தென்னிந்திய புரட்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவரான ஊமைத்துரை மற்றும் அவரது சகோதரரான வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாறு, கும்மி பாடல்கள் முதல் சினிமா வரையிலும் […]

Read more

பாஞ்சாலக்குறிச்சி வீர சரித்திரம்

பாஞ்சாலக்குறிச்சி வீர சரித்திரம், ஜெகவீர பாண்டியனார், தோழமை வெளியீடு, விலை 500ரூ. பாஞ்சாலங்குறிச்சி என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருபவர்கள், வீரபாண்டிய கட்டபொம்மனும், ஊமைத்துரையும் ஆவர். அவர்கள் இருவரும் சிற்றரசர்களாக இருந்தபோதிலும் பேரரசரும் போற்றும்வகையில் வீரம் செறிந்தவர்கள். இந்த நூலில் முதல் பாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றையும், இரண்டாம்பாகத்தில் ஊமைத்துரையின் வரலாற்றையும் ஜெகவீர பாண்டியனார் விரிவான முறையில் எழுதியுள்ளார். இதன் மூலம் வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை ஆகியோரின் வீரம் செறிந்த வாழ்க்கை மற்றும் அவர்களது தேசப்பற்று, தெய்வப்பற்றை அறிந்து கொள்ள முடிகிறது. உயிர் துறக்க […]

Read more

சாவித்திரி கலைகளில் ஓவியம்

சாவித்திரி கலைகளில் ஓவியம், நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா, தோழமை வெளியீடு, பக்.270, விலை 250ரூ. மதுவால் சரிந்த அழகு சாம்ராஜ்யம்! இப்போது மட்டுமல்ல, அப்போதும் தமிழ் சினிமா என்பது ஆண்களால் ஆளப்படும் உலகம்தான். கதாநாயகர்களை திருவுருக்களாகவும், நாயகியரை அழகு பதுமைகளாகவும் பார்க்கும் செல்லுலாயிட் சிற்பம். இப்பேதைவிட, 60 ஆண்டுகளுக்கு முன்னால், நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அப்போதும் கதாநாயகர்களே, சினிமா உலகை ஆண்டு கொண்டிருந்தனர். ஏறக்குறைய முடிசூடா மன்னர்களைப்போல. அதனால் உச்ச நடிகர்களோடு நடிக்க பெரும் போட்டியே நடக்கும். கதாநாயகன் தாத்தாவின் வயதில் இருந்தாலும், அவரோடு […]

Read more

சாவித்திரி வாழ்க்கை வரலாறு

சாவித்திரி வாழ்க்கை வரலாறு, நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா, தோழமை வெளியீடு, விலை 250ரூ. நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று சாவித்திரி – கலைகளில் ஓவியம் என்ற தலைப்பில் நெஞ்சைத் தொடும் விதத்தில் எழுதியுள்ளார் நாஞ்சில் மு.ஞா. செ. இன்பா. 1955ல் வெளிவந்த மிஸ்ஸியம்மா படத்தில், ஜெமினிகணேசனும், சாவித்திரியும் இணைந்து நடித்தனர். அப்போது அரும்பிய காதல், பிறகு திருமணத்தில் முடிந்தது. இரு குழந்தைகள் பிறந்தன. 1968ம் ஆண்டில் சாவித்திரி டைரக்டர் ஆனார். அதனால் பல பிரச்சினைகளை சந்தித்தார். சொத்துக்களை இழந்தார். ஈருல் ஓருயிர் என்பதுபோல் வாழ்ந்த […]

Read more

சாவித்திரி கலைகளின் ஓவியம்

சாவித்திரி கலைகளின் ஓவியம், மு.ஞா.செ. இன்பா, தோழமை வெளியீடு, சென்னை, பக். 272, விலை 250ரூ. நடிகையர் திலகம் சாவித்திரி, தன்னைப் பற்றி ஒரு சுயசரிதை நூல் எழுதியிருந்தால் எப்படி இருந்திருக்குமோ அதுபோல உள்ளது இந்நூல். சாவித்திரியின் மரணப்படுக்கையில் தொடங்கி, பின்னர் பின்னோக்கிச் சென்று அவருடைய வாழ்க்கையை ஃப்ளாஷ்பேக் பாணியில் ஒரு விறுவிறுப்பான திரைப்படத்தின் திரைக்கதையைப் போல பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். சாவித்திரியின் தேச பக்தி, தயாள குணம், வெகுளித்தனம், வெளிப்படையான பேச்சு, நிர்வாத் திறன், நடிப்புத் திறன், இயக்கும் திறன் உள்ளிட்ட பல்வேறு […]

Read more

இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர்

இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் (வாழ்வும் படைப்பும்), சேவியர், தோழமை வெளியீடு, பக். 184, விலை 150ரூ. பாலசந்தரைப் பல பரிமாணங்களில் அறிமுகப்படுத்தும் அற்புதமான புத்தகம். ஒரு பிலிம் மேக்கர் நாட்டுக்கு நல்லது செய்ய முடியாவிட்டாலும், கெட்டதை செய்துவிடக்கூடாது என்பதில் தான் உறுதியாக இருப்பதாக கே.பி.யே சொல்லி இருக்கிறார். பெண்களை மையப்படுத்திப் பல கதைகளைச் சொன்னவர். நடிகர்கள் கொடி கட்டி பறந்த காலத்திலேயே அவர் படத்தில் நட்சத்திரங்கள் இருந்தது இல்லை. அவர் தன், எழுத்தையே நம்பினார். அவர் இயக்கிய, ஏக் துஜே கேலியே இந்திப் […]

Read more

கே. பாலசந்தர் வாழ்வும் படைப்பும்

கே. பாலசந்தர் வாழ்வும் படைப்பும், தோழமை வெளியீடு, சென்னை, விலை 150ரூ. உலக அளவில் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தவர் டைரக்டர் பாலசந்தர். 100 படங்களை இயக்கியவர், புரட்சிகரமான கதைகளைத் துணிந்து படமாக்கியவர். ரஜினிகாந்தை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியவர். கமல்ஹாசனை பட்டை தீட்டியவர். ஒரு படத்தைப்போல இன்னொரு படம் இல்லாதபடி, விதம் விதமாகப் படங்களை எடுத்த திறமைசாலி. பாடல் காட்சிகளை படமாக்குவதில் புதுமையைப் பகுத்தியவர். அண்மையில் காலஞ்சென்ற பாலசந்தரின் நினைவாக இந்நூலை சேவியர் எழுதியுள்ளார். புத்தகம் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. ரஜினியை பாலசந்தர் பேட்டி கண்டது […]

Read more
1 2