சுகப்பிரசவம் இனி ஈஸி

சுகப்பிரசவம் இனி ஈஸி,  டாக்டர் கு.கணேசன், சூரியன் பதிப்பகம்,  பக்.208, விலை ரூ.150 சுகப்பிரசவம் இனி ஈஸி என்று நூலின் தலைப்பு சொன்னாலும், சுகப்பிரசவம் எளிதாக அமைய எவ்வளவு விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நூலாசிரியர் சொல்கிறதைப் படிக்கும்போது மலைப்பாக இருக்கிறது. ஒரு பெண் கருவுறுதலுக்கு முன்பிருந்து எவ்வாறு தனது உடல் நலனைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதிலிருந்து தொடங்கி, குழந்தை பிறந்து தாய்ப்பால் கொடுப்பது வரை எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நூல் விளக்குகிறது. தொற்றுநோய்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும்; பயணங்களைத் […]

Read more

சங்க கால வானிலை

சங்க கால வானிலை,  கு.வை.பாலசுப்பிரமணியன், முக்கடல், பக்.272, விலை ரூ.300. நவீன வானிலையியல் காற்றைப் பற்றி, மேகத்தைப் பற்றி, மழையைப் பற்றி, காலநிலையைப் பற்றி, வானிலை பற்றி வைத்துள்ள அறிவியல் வரையறைகள் நூலில் விளக்கப்படுகின்றன. அந்த வரையறைகளுக்குப் பொருந்துவிதமாக சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கும் தகவல்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. உதாரணமாக காற்றைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் உள்ளன.  வடக்குத் திசையிலிருந்து வீசும் காற்றை வாடை, வடந்தை, ஊதை எனவும், கிழக்கிலிருந்து வீசும் காற்றை ;கொண்டல் எனவும், மேற்கிலிருந்து வீசும் காற்றை கோடை எனவும், தெற்கில் […]

Read more

பிற்காலச் சோழர் சரித்திரம் (முழுமையாக)

பிற்காலச் சோழர் சரித்திரம் (முழுமையாக), டி.வி.சதாசிவ பண்டாரத்தார். ஜீவா பதிப்பகம், பக்.592. விலை ரூ.570. கிபி 846 முதல் கி.பி.1279 வரை சோழ மண்டலத்தை ஆண்ட அரசர்களின் வரலாறு இந்நூல். மூன்று பகுதிகளாகத் தனித்தனியாக வெளியிடப்பட்டிருந்த பிற்காலச் சோழர் சரித்திரத்தைத் தொகுத்து முழுமையாக வெளியிட்டிருக்கிறார்கள். சோழப் பேரரசை நிறுவ அடிகோலிய விசயாலயன் (கி.பி.846 -881) காலம் முதல் பாண்டிய மன்னன் முதல் சடையவர்மன் சுந்தரபாண்டியனுடன் போரிட்டு சோழப் பேரரசை இழந்த மூன்றாம் இராசேந்திர சோழன் (கி.பி.1246 -1279) வரை ஆண்ட சோழ மன்னர்களின் வரலாறு இந்நூலில் […]

Read more

விளிம்புக்கு அப்பால்

விளிம்புக்கு அப்பால் (புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்),  தொகுப்பாசிரியர்: பொன்.வாசுதேவன்,  அகநாழிகை பதிப்பகம், பக்.160, விலை ரூ.140 பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகளின் தொகுப்பு. 22 வயதிலிருந்து 35 வயகுக்குட்பட்டவர்கள் எழுதிய கதைகள் இவை என்பதை நம்ப முடியவில்லை. வங்கியில் வேலை செய்யும் அப்பா, பிறருக்கு புத்தகங்களை விற்பவராக இருந்திருப்பதன் ரகசியத்தை அவர் மறைவுக்குப் பிறகு தெரிந்து கொள்ளும் மகனின் பார்வையில் சொல்கிறது அப்பாவின் ரகசியம் சிறுகதை.  திருமணம் செய்து கொள்ளாமல் வேலைக்காரனோடு வாழும் ஒருவர், வேலைக்காரனுக்கு திருமணம் செய்வதற்காக எல்லாச் சொத்துகளையும் வேலைக்காரனின் பெயரில் […]

Read more

உன்னை அறிந்தால்

உன்னை அறிந்தால், லட்சுமி ராஜரத்னம், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 120, விலை 120ரூ. சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை. வார்த்தை தவறி விட்டால்… அதன் விளைவுகள் சொல்லொணா துயரம் தருகின்றன. நெல் போட்டால் நெல் விளையும். சொல் போட்டால் சொல் தானே விளைய வேண்டும். மாறாக துன்பம், கோபம், ஆற்றாமை, ஆதங்கத்தை ஏன் அறுவடை செய்ய வேண்டும் என, கேள்வி கேட்கிறார், ஆசிரியர் லட்சுமி ராஜரத்னம். மக்கு பல், உதட்டை கடவுள் ஏன் கொடுத்திருக்கிறார் தெரியுமா என்பது அவரது கேள்வி. […]

Read more

சிந்திக்கத் தூண்டிய மாணாக்கர்கள்

சிந்திக்கத் தூண்டிய மாணாக்கர்கள், சிந்தை ஜெயராமன், வினோத் பதிப்பகம், பக். 96, விலை 200ரூ. தொலை தொடர்பு பார்வையில் செல்லும் குழந்தைகளைக் கூர்ந்து உற்றுநோக்கும் உளவியல் நிபுணர், சிந்தை ஜெயராமன். குழந்தைகளை அணுகும் முறைகள் குறித்து, பெற்றோருக்கு அறிவுரை கூறும் கல்வியாளர். தமிழகத்தின் கல்வியில் புதுமை சிந்தனை தீட்டியவர். கல்வித் துறையிலும், கற்றல் மேம்பாட்டிலும் உன்னதமான கருத்துகளை தன்னகத்தே கொண்டுள்ள ஒப்பற்ற நுால் இது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 18/8/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

ஸ்டெம் செல் ஓர் உயிர் மீட்புச் செல்

ஸ்டெம் செல் ஓர் உயிர் மீட்புச் செல், முனைவர் இரா.சர்மிளா, காவ்யா பதிப்பகம், பக்.115, விலை 120ரூ. மனித உடல், 200க்கும் மேற்பட்ட செல்களால் வடிவமைக்கப்பட்டது. இவை அனைத்தும் முதன்மைச் செல்களிலிருந்து உற்பத்தியாகின்றன. இந்த முதன்மைச் செல்களே ஸ்டெம் செல் எனும் குருத்தணு. ஸ்டெம் செல் தொப்புள் கொடியினுள் இருப்பது. இது தசை, நரம்பு, ரத்தம் போன்ற பல்வேறு விதமான செல்களுக்கும் முதன்மையான செல். இது, ஒரு செல்லிலிருந்து மற்றொரு வகை செல்களை உற்பத்தி செய்யும் திறனும், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரும் […]

Read more

தமிழாற்றுப்படை

தமிழாற்றுப்படை, கவிஞர் வைரமுத்து, திருமகள் நிலையம், பக். 360, விலை 500ரூ. தமிழ்மொழியின் அகவை, 3,000 ஆண்டுகளுக்கும் மேல். அந்தத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தோர், இலக்கியம் படைத்தோர், நீதிநுால் செய்தோர், காப்பியம் கண்டோர், அறநுால் ஆக்கியோர், பேரிலக்கியமாய்ப் போரிலக்கியம் படைத்தோர், அடைபட்டுக் கிடந்த மொழிச் செல்வங்களை மீட்டெடுத்தோர், இதன் தொன்மையை ஆராய்ந்து அறிவித்தோர், சீர்திருத்தம் செய்து மொழியைச் செப்பனிட்டோர், தெய்வம் தொழுதோர், பகுத்தறிவு பரப்பியோர், பொதுவுடைமை பேசியோர், கலையிலும் அரசியலிலும் தமிழுக்குத் தகுதி தந்தோர் இப்படித் தமிழ்ப்பணி ஆற்றிய, 24 ஆளுமைகள் குறித்து, கவிஞர் […]

Read more

ஆய்வுச் சுவடுகள்

ஆய்வுச் சுவடுகள், முனைவர் யோ. ஞானச்சந்திர ஜான்சன், கீர்த்தனா பதிப்பகம், பக். 339, விலை 250ரூ. தமிழ் இலக்கியம் ஒரு காலத்தில் சங்க இலக்கியம், காப்பிய இலக்கியம், சிற்றிலக்கியம், நவீன இலக்கியம் எனப் பகுத்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அந்தப் பகுப்பையும் தாண்டி, சமய இலக்கியம் என்னும் பகுப்பும் தோன்றியது. சமய இலக்கியங்களில் ஐரோப்பியரின் வருகைக்குப் பின், கிறிஸ்துவ இலக்கியங்கள் தமிழில் தோன்றி, தமிழ் மொழிக்குப் புது மறுமலர்ச்சியைக் கொடுத்தன. காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள் என்னும் நிலையைக் கடந்து, தற்கால உரைநடை இலக்கியத்திற்குப் பெரும் பங்களிப்பை வழங்கின. அந்தக் […]

Read more

விவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப்பாடல்களும்

விவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப்பாடல்களும், ப.கோடித்துரை, காவ்யா, பக். 108, விலை 110ரூ. விவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப் பாடல்களும் வாழ்வில் வெற்றி பெற விவேகம் வேண்டும். விவேக சிந்தாமணி, 135 பாடல்களைக் கொண்டது; வாழ்வியல் அறங்களை உணர்த்துகிறது. முன்னோர் மொழிப் பொருளைப் பொன்னே போல் போற்றுவோம் என்பதற்கிணங்க, நீதி நுால்களின் கருத்துகளைத் தழுவி உள்ளது. பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளுக்கு, விவேக சிந்தாமணியில் உள்ள பாடல்கள் பெரிதும் துணை புரியும். ஆபத்து வேளையில் உதவாத பிள்ளை, மிக்க பசிக்கு உதவாத உணவு, தாகத்தைத் […]

Read more
1 2 3 4 5 9