தமிழாற்றுப்படை

தமிழாற்றுப்படை, கவிஞர் வைரமுத்து, திருமகள் நிலையம், பக். 360, விலை 500ரூ. தமிழ்மொழியின் அகவை, 3,000 ஆண்டுகளுக்கும் மேல். அந்தத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தோர், இலக்கியம் படைத்தோர், நீதிநுால் செய்தோர், காப்பியம் கண்டோர், அறநுால் ஆக்கியோர், பேரிலக்கியமாய்ப் போரிலக்கியம் படைத்தோர், அடைபட்டுக் கிடந்த மொழிச் செல்வங்களை மீட்டெடுத்தோர், இதன் தொன்மையை ஆராய்ந்து அறிவித்தோர், சீர்திருத்தம் செய்து மொழியைச் செப்பனிட்டோர், தெய்வம் தொழுதோர், பகுத்தறிவு பரப்பியோர், பொதுவுடைமை பேசியோர், கலையிலும் அரசியலிலும் தமிழுக்குத் தகுதி தந்தோர் இப்படித் தமிழ்ப்பணி ஆற்றிய, 24 ஆளுமைகள் குறித்து, கவிஞர் […]

Read more

கண்ணன் வருவான்

கண்ணன் வருவான், இந்திரா சவுந்தராஜன், திருமகள் நிலையம், விலை 250ரூ. மகாபாரதத்தில் பாண்டவர்கள் ராஜசூய யாகம் நடத்தும் வேளையில் அவர்களுக்கு கிருஷ்ணரின் பெருமைகளை விளக்கிக் கூறும் வகையில், கிருஷ்ணரின் வரலாறும் அவரது அவதார மகிமைகளும் விரிவாகத் தரப்பட்டுள்ளன. எழுதியவர் இந்திரா சவுந்தரராஜன் என்பதால் இந்த வரலாற்றை விறுவிறுப்பான நாவல் போல சுவைபடத் தந்துள்ளார். கிருஷ்ணரையும், துவாரகையையும் அழிக்க வந்த சால்வனின் சம்ஹாரம் வரை உள்ள வரலாறு சித்தரிக்கப்பட்டுள்ள இந்த நூலில், ஆன்மிகக் கருத்துக்களை ஆங்காங்கே அருமையான விளக்கங்களுடன் தந்து இருப்பது சிறப்பு. இந்தப் புத்தகத்தை […]

Read more

ஆனந்த தாண்டவம்

ஆனந்த தாண்டவம், இந்திரா சவுந்தரராஜன், திருமகள் நிலையம், பக். 280, விலை 175ரூ. இந்நாவல் படிக்கத் துவங்கியது முதல் முடிக்கும் வரை தொடர்ந்து படிக்கும் வகையில் விறுவிறுப்பாக உள்ளது. மகாதேவபுரம், மழையின்றி, தண்ணீர் இன்றித் தவித்தபோது, தாசி கமலாம்பாள் அங்கு வந்து, அவ்வூர் நடராஜர் சன்னிதியில் நடனமாடி, மழையை வரவழைத்தாள் என்ற செய்தியுடன் நாவல் தொடங்குகிறது. இச்செய்தியைக் கேள்விப்பட்ட ஊஞ்சல் பத்திரிகை ஆசிரியர் அமிர்தலிங்கம், பிரபாகர் என்ற செய்தி சேகரிப்பவரை அந்த ஊருக்கு அனுப்புகிறார்; அவன், அஸ்வதி என்ற பெண்ணுடன் மகாதேவபுரம் சென்று உண்மையை […]

Read more

ஆனந்த தாண்டவம்

ஆனந்த தாண்டவம், இந்திரா சவுந்தர்ராஜன், திருமகள் நிலையம், விலை 175ரூ. சோழ மண்டலத்தில் தஞ்சையை தலைநகராகக் கொண்ட சரித்திரச் சிறப்பு வாய்ந்த மகாதேவபுரத்தை கதைக்களனாக கொண்டு படைக்கப்பட்ட பரபரப்பான மர்ம நாவல். ‘ஆனந்த தாண்டவம்’ என்ற உடனேயே எல்லோருக்குள்ளும் சிவபெருமானின் நாட்டிய உருவம்தான் ஞாபகத்திற்கு வரும். ஆனந்தம் ஏற்படப்போய் அவர் ஆடுகிறபடியால் அப்படி ஒரு பெயரா இல்லை, அதைப் பார்ப்பவருக்கு ஆனந்தம் வரும் என்பதால் அப்படி ஒரு பெயரா என்பது விவாதத்துக்குரியது மட்டுமல்ல, பெரும் ஆராய்ச்சிக்கும் உரியது. அதற்கான ஆராய்ச்சிகளும் நடந்தபடியே இருக்கின்றன. குறிப்பாக […]

Read more

ஏணிகள் தோணிகள் ஞானிகள்

ஏணிகள் தோணிகள் ஞானிகள், கோ.மணிவண்ணன், திருமகள் நிலையம், பக். 296, விலை 190ரூ. கீழிருப்பவரை மேலே உயர்த்தப் பயன்படுவது ஏணி. ஆழ நீர்நிலையைக் கடக்க உதவுவது தோணி. இவ்விரண்டுமே பயனாளிகளுக்காகக் காத்திருக்கின்றன. பயனாளிகள் இவற்றைத் தவிர்த்தால் நஷ்டம் ஏணிகளுக்கும் தோணிகளுக்கும் அல்ல. இவ்விரு சாதனங்களின் மானுட வடிவமாகத் திகழ்பவர்கள்தாம் ஞானிகள். திருநாவுக்கரசர், வள்ளலார், ரமணர், மகாகவி பாரதி, சங்கரர், ராமானுஜர், சைதன்யர், ராமகிருஷ்ணர், விவேகானந்தர், அரவிந்தர் எனத்தொடரும் அந்த அருளாளர் பரம்பரையின் நோக்கம், மானுட மேம்பாடு மட்டுமே. நூலாசிரியர், ‘பாபாஜி சித்தர் ஆன்மிகம்’ இதழில் […]

Read more

ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு ஒரு வழிகாட்டி

ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு ஒரு வழிகாட்டி, டாக்டர் கீதா அர்ஜுன், ஹேமா நரசிம்மன், திருமகள் நிலையம், பக். 336, விலை 350ரூ. கர்ப்பத்தை ஒரு தாய் உணர்வது எப்படி? மகப்பேறு அடைவது, சாதாரண விஷயம் அல்ல. இப்போதெல்லாம், காற்று மாசு, மன அழுத்தம் உட்பட பல காரணங்களால், கர்ப்பம் தரிப்பதே தாமதமாகிறது என்று கூறப்படுகிறது. அதையெல்லாம் தாண்டி, கர்ப்பம் தரித்தால், அந்த சிசுவை வயிற்றில் பத்திரமாகப் பாதுகாத்து வெளிக்கொணர்வது, மறு ஜென்மம் எடுப்பதற்கு ஒப்பாகிவிடுகிறது. இதனால் கர்ப்பம் தரிக்கும் ஒரு பெண், பல கட்டப் போராட்டத்திற்கும், […]

Read more

அபாய வனம்

அபாய வனம், இந்திரா சவுந்தர்ராஜன், திருமகள் நிலையம், பக். 180, விலை 320ரூ. அபாயவனம் நாவல், சித்தர்களின் சித்து விளையாட்டுகள் பற்றியது. சித்தர்களின் தூர தரிசன சக்தி, ஜீவசமாதி என, துவக்கத்திலேயே, வாசகனை திகிலோடு, கதைக்குள் அழைத்து செல்கிறார். பரணி, குரு என்ற இரு இளைஞர்கள் வாழ்வில் புகும், சித்தர் சிவப்பிரகாசம் என்னென்ன ஆச்சரிய நிகழ்வுகளை ஏற்படுத்துகிறார் என்பதையும், அவர்கள் தேடிச்செல்லும், சித்தரின் ஜீவசமாதியும், ஏடுகளும் கிடைத்ததா என்பதையும், இறுதிவரை பரபரப்பு குன்றாமல் எழுதி உள்ளார். ஒவ்வொரு அத்தியாய முன்னுரையாக, கொல்லிமலை, சதுரகிரி உள்ளிட்ட […]

Read more

சந்திரசேகரம்

சந்திரசேகரம், இந்திரா சவுந்தர்ராஜன், திருமகள் நிலையம், பக். 312, விலை 175ரூ. துறவு என்றால், எல்லாவற்றிலிருந்தும் விலகி இருப்பது என்பது பொதுப்படையான அர்த்தம். எல்லாவற்றோடும் ஒன்றி இருப்பது என்பது, காஞ்சிப் பெரியவர் கொடுத்த விசேஷ அர்த்தம். காஞ்சிப் பெரியவர் என்பதை மட்டும், சில காகிதங்களில் அச்சிட்டு வெளியிட்டாலே, அதை வாங்கிப் படிக்கும் அளவுக்கு பக்தர்கள் பெருகிவிட்டனர் இன்று. இதில் நேர்முக வர்ணனையாக பெரியவரைப் பற்றிய செய்திகளையும், பெரியவர் கொடுத்த செய்திகளையும் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் இந்திரா சவுந்தர்ராஜன். ஒரு வகையில் இதை தெய்வத்தின் குரலுக்கு பாஷ்யம் […]

Read more

என் இனிய இந்து மதம்

என் இனிய இந்து மதம், திருமகள் நிலையம், சென்னை, விலை 45ரூ. இந்து மதத்தின் பெருமைகளையும், மேன்மைகளையும் விளக்கிக்கூறும் நூல். மார்கழியின் மகத்துவம். தை மாதத்தில் திருமணம் செய்தால் ஐப்பசியில் குழந்தையோடு தலைத் தீபாவளி கொண்டாடலாம். சிவராத்திரியின் சிறப்பு, ஜாதகம் பார்ப்பது ஏன்? கடவுளுக்கு எதற்கு கல்யாணம்? முடியைக் காணிக்கையாக செலுத்துவது ஏன் என்பன போன்ற இந்துக்களின் சடங்குகள், சம்பிரதாயங்களில் ஒளிந்திருக்கும் ஆழ்ந்த நுட்பமான பொருளை எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் அழகுபட விவரித்துள்ளார். அதுவே மனிதன் மகிழ்வோடு வாழ்ந்திட ஆதாரமாக இருக்கிறது என்பதை ஆதாரத்துடன் […]

Read more

தெரிந்தெடுத்த சுரதா கவிதைகள்

தெரிந்தெடுத்த சுரதா கவிதைகள், தொகுப்பாளர்-மறைமலை இலக்குவனார், சாகித்ய அகாடமி, சென்னை, விலை 140ரூ. கவிஞர், இதழாசிரியர், சினிமா வசனகர்த்தா, திரைப்பட பாடலாசிரியர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர், கவியரங்கத் தலைவர் என்று பன்முக ஆற்றல் பெற்றவர் சுரதா. அவர் பாடல்களில் உவமைகள் அதிகம் இருப்பதால் உவமைக் கவிஞர் என்று அழைக்கப்பட்டார். கவிஞர் சுரதாவின் தெரிந்தெடுத்த கதைகளை சாகித்ய அகாடமி தொகுத்து வெளியிட்டுள்ளது. இவர் மிகக் குறைவான சினிமா பாடல்களையே எழுதி இருக்கிறார் என்ற போதிலும் அவை கருத்தாழமும், பலமை வீச்சும் நிறைந்தவை. அமுதும் தேனும் எதற்கு நீ […]

Read more
1 2 3