சங்ககால நாணயவியலின் தந்தை இரா.கிருஷ்ணமூர்த்தி

சங்ககால நாணயவியலின் தந்தை இரா.கிருஷ்ணமூர்த்தி, முனைவர் சந்திரிகா சுப்ரமணியன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக்.114, விலை 800ரூ. ஒருவரின் வாழ்க்கையில் சிறப்புத் தரவுகளை மணம் வீசும் மலர்களாக்கி தொடுத்து மகிழ் மாலையாக்கும் வித்தையை ஒருவர் கற்றிருந்தால் மட்டுமே, அந்தப் படைப்பு வரவேற்பைப் பெறும் என்ற கருத்தை, முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் ப.க.பொன்னுசாமி, தன் முன்னுரையில் கூறியிருப்பதை, இந்த தமிழ் கூறும் நல்லுலகம் அறிய, இந்த நுால் ஒரு சிறந்த உதாரணம். தமிழ் நாளிதழ், ‘தினமலர்’ எழுத்துச் சீர்திருத்தம். கணினியில் எழுத்துருவப் […]

Read more

பத்மநாபபுரம் அரண்மனை

பத்மநாபபுரம் அரண்மனை, எழில் ரத்னம், நிஜம் வெளியீடு, பக். 144, விலை 100ரூ. தொலை தொடர்பு வசதியில்லாத காலத்தில் இருபது அஞ்சல் அட்டைகள் மூலம், ‘பத்மநாபபுரம் அரண்மனை’ என்ற கடித இலக்கிய வரலாற்று ஆவணப் பனுவலை உயர்ந்த பரிணாமம் கொள்ளச் செய்த பெருமைக்குரியவர் ஆயன். இந்நுாலில், 64 மூலிகை மரங்களால் செய்யப்பட்ட அற்புதக் கட்டிலில் உறங்கிய மன்னருக்கு எந்த வகையில் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது என்பதை பக்கம் 13ல் சொல்லி இருப்பது, அந்த காலத்து வைத்திய முறைக்கு படிக்கல் எனலாம். – மாசிலா ராஜகுரு நன்றி: […]

Read more

மண்…மக்கள்…தெய்வங்கள்

மண்…மக்கள்…தெய்வங்கள், வெ.நீலகண்டன், விகடன் பிரசுரம், பக். 152, விலை 185ரூ. தமிழகத்தில் குல தெய்வ வழிபாடு மிகவும் சிறப்பு பெற்றது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் குல தெய்வம் உண்டு. இந்த குல தெய்வங்கள், பெரும்பாலும் கிராம தேவதைகளாகத் தான் இருப்பர். கிராம தேவதைகளை வழிபடும் பலருக்கு, அவற்றின் வரலாறு தெரியாது; எதனால், வழிபடுகிறோம் என்றும் தெரியாது. அந்த குறையை போக்கும் வகையில், கிராம தேவதைகளான அய்யனார், கருப்பன்,மாடசாமி, மதுரை வீரன், பேச்சி பற்றி, ஆசிரியர் நீலகண்டன் எளிய தமிழில் சுவைபட எழுதியுள்ளார். இந்நுாலில், அய்யனார், கருப்பன் […]

Read more

ரமணரின் பார்வையில் நான் யார்?

ரமணரின் பார்வையில் “நான் யார்?, வேதகாலம் முதல் ரமணர் காலம் வரை…- அபிநவ ராஜகோபாலன், நர்மதா பதிப்பகம், பக்.280; விலை ரூ.175. அகங்காரம் (நான்), மமகாரம் (இது என்னுடையது) என்ற மனப்போக்கு வேத காலத்தில் நேர்மறைச் சிந்தனையாக முன்னெடுக்கப்பட்டு தனிப்பட்ட, சமுதாய வாழ்வியலில் மனிதன் உன்னத நிலையில் இருந்தான். வாழ்வில் மிகுந்த துயருற்று, தத்துவ விசாரத்தில் நாட்டம் கொண்டவர்களுக்கு மட்டுமே நான் யார்? என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்வி எழும்போதே, தேடலும் பயணமும் ஆரம்பமாகி இறுதியில் முக்தி எனும் விடை கிடைக்கிறது. நான் […]

Read more

தமிழ்ச் சிற்றிலக்கியங்கள்

தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் (ஆய்வுக் கட்டுரைகள், இரு தொகுதிகள்), தலைமைப் பதிப்பாசிரியர்: ப.முருகன்,  தமிழ்த்துறை, முதல் தொகுதி-பக்.520; ரூ.500; இரண்டாவது தொகுதி- பக்.496; ரூ.500. சென்னையில் இரு நாள்கள் நடந்த அனைத்துலக தமிழ்ச் சிற்றிலக்கிய மாநாட்டில் வாசிக்கப்பட்ட 140 ஆய்வுக் கட்டுரைகள் (தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் உட்பட) இவ்விரு தொகுதிகளிலும் உள்ளன. இறைவன், அரசன், வள்ளல் முதலிய யாரேனும் ஒருவரை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கையில் சுருங்கியதாக அமைவது; அகப்பொருள் அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப்பற்றியதாகவும்; அறம், பொருள், […]

Read more

நமது கடவுள் மனிதனே

நமது கடவுள் மனிதனே,சுவாமி விவேகானந்தரின் உரத்த ஆன்மிகச் சிந்தனைகள், தொகுப்பாசிரியர்: ஜாநிசிவம், ஜனனி நூல் பதிப்பு, பக்.332, விலை ரூ.250. மக்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த மத, பண்பாடு, கலாசாரப் பழக்கங்களை ஒதுக்கித் தள்ளாமல், தெய்வ பக்தியோடு கலந்த தேசபக்தியை வலியுறுத்தி விவேகானந்தர் ஆற்றிய உரைகளே அவரை இந்த உலகுக்கு அடையாளப்படுத்தின. என்னிடம் 100 வீர இளைஞர்களைக் கொடுங்கள். இந்த உலகையே மாற்றி காட்டுகிறேன் என்றார் சுவாமி விவேகானந்தர். அவர் போதித்த செய்திகள் அனைத்தும் அவரது குருவான சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சரின் கருத்தை எதிரொலிப்பதாகத்தான் இருந்தன. […]

Read more

வல்லினம் பரிசுக் கதைகள்

வல்லினம் பரிசுக் கதைகள், வல்லினம் பதிப்பகம், விலை: ரூ.130 மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கான இலக்கியப் பத்திரிகை ‘வல்லினம்’, கடந்த பத்து ஆண்டுகளாக நடத்தும் சிறுகதைப் போட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் இவை. குடும்ப அமைப்புகள், அதிகாரத் திணிப்புகளால் சிறைபட்டுக் கிடக்கும் வாழ்வைச் சுதந்திரமாக்க விரும்பும் மனிதர்கள் கதைகளின் நாயகர்களாக இருக்கிறார்கள். மலேசிய தமிழ் இலக்கியத்தின் புதிய முகங்கள் அந்த மண்ணிலிருந்து எதைப் பதிவுசெய்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள இத்தொகுப்பு உதவுகிறது. நன்றி: தமிழ் இந்து, 15/2/2020 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் […]

Read more

காயமே இது மெய்யடா

காயமே இது மெய்யடா, போப்பு, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.160 நம் உடலின் முதன்மை உள் உறுப்புகளான கல்லீரல், இதயம், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடுகள், அவற்றைப் புரிந்துகொள்வது எப்படி, மேம்பட்ட வகையில் பராமரிப்பது எப்படி என்று இப்புத்தகம் விரிவாக விளக்குகிறது. காயம் என்பது ஒன்றுமற்றதல்ல; ஊனும் உயிரும் சேர்ந்த உடம்பு. அதை முறையாக வளர்க்கவும் பராமரிக்கவும் தேவைப்படும் வழிகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. நன்றி: தமிழ் இந்து, 15-2-2020. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000030466.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

நேர்மையின் பயணம்

நேர்மையின் பயணம், பா.கிருஷ்ணன், கிழக்கு பதிப்பகம், விலை: ரூ.400 அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் பாலகுருசாமியின் வாழ்க்கை வரலாற்று நூல் இது. கரூர் மாவட்டத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த பாலகுருசாமி பின்னாட்களில் முக்கியமான கல்வியாளராகவும் அறிவியலாளராகவும் உருவெடுத்தவர். நாற்பது ஆண்டுகளாக ஊடகத் துறையில் பயணித்துவரும் பா.கிருஷ்ணன் எழுதியிருக்கும் இந்நூல் பாலகுருசாமியின் முழுமையான சித்திரத்தை வழங்குகிறது. நன்றி: தமிழ் இந்து, 15/2/2020. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/9789351350293.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

அழகிய நதி

அழகிய நதி தரம்பால், கிழக்குப் பதிப்பகம், தமிழில்: பி.ஆர்.மகாதேவன்,  விலை: ரூ.400 ஆயிரம், இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய இந்திய அறிவுத்தளம் பற்றிப் பேசும்போது பெருமிதமும், சில நூற்றாண்டுகளுக்கு முந்தையதைப் பேசும்போது கீழான பார்வையும் வெளிப்படுவது பொது மனோபாவமாகவே மாறியிருக்கிறது. நிறைய கட்டுக்கதைகளும் பொய்ப்புரட்டுகளும் இந்த வரலாற்றில் கலந்திருக்கின்றன. அங்கே புதையுண்டிருக்கும் உண்மையை வெளியே எடுக்கும் எண்ணத்தோடு களத்தில் இறங்கினார், இந்தியாவின் மிக முக்கியமான காந்தியச் சிந்தனையாளர்களுள் ஒருவரான தரம்பால். அவருடைய இரண்டு முக்கியமான புத்தகங்கள் இப்போது மறுபதிப்பு கண்டிருக்கின்றன. 18-ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி என்னவாக […]

Read more
1 2 3 4 5 8