குறள் அமிர்தம்

குறள் அமிர்தம், திருக்குறளின் மெய்ப்பொருள், கோ.திருமுருகன் (எ) பூர்ணாநந்தன், வைதேகி பதிப்பகம், விலை  ரூ.800. அதிக உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களுள் ஒன்று என்ற பெருமையப் பெற்றது திருக்குறள். திருக்குறளுக்குக் காலந்தோறும் பல அறிஞர்கள் உரை எழுதியுள்ளனர். பலரும் வாழ்க்கை நெறிகளைக் கற்பிக்கும் உலகியல் நூலாகவே அதனை அணுகியுள்ளனர். ‘ஜீவ அமிர்தம்’ என்னும் சித்தர் மரபு இதழை கடந்த எட்டு ஆண்டுகளாக நடத்திவருபவரும் ‘ஞான அமிர்தம்’, ‘ஜீவ அமிர்தம்’ உள்ளிட்ட சித்தர் நூல்களை எழுதியவருமான கோ.திருமுருகன் இந்த நூலில் 1,330 குறள்களுக்கும் மெய்ப்பொருள் விளக்க […]

Read more

கலைஞர் என்னும் மனிதர்

கலைஞர் என்னும் மனிதர், மணா, பரிதி பதிப்பகம் வெளியீடு, விலை: ரூ.500. கருணாநிதி ஆட்சியில் முதல்வராக இருந்தபோதும், எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டபோதும் பத்திரிகை யாளர்கள் சந்திப்புகளில் கேள்விகளை எதிர்கொள்ள ஒருபோதும் தயங்கியதில்லை. அவருடைய பதின்பருவத்து வாழ்க்கை, பத்திரிகையாளராகத் தொடங்கியதன் காரணமாக அவருக்கு எப்போதும் பத்திரிகையாளர்கள்மீது இணக்கமான பார்வை உண்டு. பத்திரிகையாளர்கள் கேட்கிற முரண்பாடான கேள்விகளுக்கும் லாகவமாகப் பதில் சொல்லும் ஆற்றல் மிக்கவர் அவர். ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று கருதப்படுகிற பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்கள், அரசின் மக்கள் விரோதச் செயல்பாடுகளை எதிர்த்துக் கேள்விகளை எழுப்பி […]

Read more

வியப்பூட்டும் வழிபாடுகள்

வியப்பூட்டும் வழிபாடுகள்,  பெ.பெரியார்மன்னன், விவேகா பதிப்பகம், பக்.118, விலை ரூ.145. சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கோவில்களில் பல்வேறுவிதமான வழிபடும் முறைகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றிய அறிமுகமாக இந்நூல் மலர்ந்திருக்கிறது. ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் அமைந்துள்ள பழனியாபுரம் கிராம எல்லை வனப்பகுதியில் அஞ்சலான் குட்டை முனியப்பன் கோவிலில் ஆண்கள் மட்டுமே வழிபடுகிறார்கள். இரவு நேரத்தில் காவல்தெய்வமான “முனி’ உலாவுவதால் இக்கோவிலுக்குப் பெண்கள் செல்வதில்லை. குமாரபாளையம் கிராமத்தின் நுழைவு வாயிலில் வெள்ளாற்றின் வலது கரையில் அமைந்துள்ளது “சாராய’ முனியப்பன் கோவில். முனியப்ப […]

Read more

ஓஷோ தத்துவ விளக்கக் கதைகள்

ஓஷோ தத்துவ விளக்கக் கதைகள், மு.அப்பாஸ் மந்திரி, நர்மதா பதிப்பகம்,  பக்.224, விலை ரூ.140. தத்துவ ஞானி ஓஷோவின் எழுபது தத்துவங்களும், அந்தத் தத்துவங்களை விளக்குவதுபோல் அமைந்த எழுபது சிறுகதைகளும் இத்தொகுப்பில் உள்ளன. புதிய முயற்சியாக இருக்கிறதே என்று நூலைப் படிக்கத் தொடங்கினால், டூ- இன்-ஒன் என்பதுபோல இரு நூல்களை வாசித்த அனுபவம் ஏற்படுகிறது. “நாட்டை ஆள்வதற்கு நேருவுக்கு என்ன தகுதி இருக்கிறது?’ என்று வல்லபபாய் படேல் காந்தியடிகளைப் பார்த்துக் கேட்க, “பதவி ஆசையே இல்லாதவன் நேரு ஒருவன்தான். அந்த ஒரு தகுதி போதும்’ […]

Read more

துரிஞ்சிலாற்றின் பயணம்

துரிஞ்சிலாற்றின் பயணம், க.ஜெய்சங்கர், நறுமுகை, பக்.208, விலை ரூ.190. நதிக்கரை நாகரிகங்கள் என்றாலே நமக்கு காவிரி, கங்கை, யமுனை என்றுதான் நினைவுக்கு வருகின்றன. ஆனால் உண்மையில் ஒவ்வொரு சிறிய நதிகளும் பெரும் கதைகளைக் கொண்டிருக்கின்றன என்பதை “துரிஞ்சிலாற்றின் பயணம்’ நூல் பறைசாற்றுகிறது. கவுத்தி வேடியப்பன் மலையில் தொடங்கி தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் துரிஞ்சில் ஆறு வெறும் 65 கிலோ மீட்டர்தான், ஆனால் அது ஏற்படுத்தும் தாக்கம் 55 ஊர்களில் – அங்குள்ள மக்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளது. இதில், தமிழ் மக்களின் நீர் […]

Read more

வாஸ்து சாஸ்திரம்

வாஸ்து சாஸ்திரம், சிவம், ஸ்ரீ கமலா புக்ஸ்,பக்.320, விலை ரூ.160. வீடு, கடை, அலுவலகம், தோட்டம், சுற்றுச்சுவர்கள் உள்ளிட்டவற்றை வாஸ்து சாஸ்திர முறைப்படி எவ்வாறு அமைக்கவேண்டும்; அதனால் என்னென்ன பலன்கள் உண்டாகும் என்பதை விரிவாக எடுத்துரைக்கும் நூல். “சொந்த வீடு யோகம் யாருக்கு அமையும்? வாஸ்து சாஸ்திரத்திற்கும், ஜாதகத்திற்கும் தொடர்பு உண்டா? வீடு கட்ட வாஸ்து பார்ப்பது எப்படி?’ என்றெல்லாம் வாஸ்து தொடர்பாக என்னென்ன வினாக்கள் எழுமோ, அவற்றுக்கெல்லாம் விடை சொல்லும் வகையில் இந்நூல் கேள்வி – பதில் வடிவில் எழுதப்பட்டிருக்கிறது. “வீடுகட்டும் மனையில் […]

Read more

இந்தியப் பொருளாதாரம்- வரலாறு காட்டும் வழிகள்

இந்தியப் பொருளாதாரம்- வரலாறு காட்டும் வழிகள்,  மால்கம் ஆதிசேசய்யா; தொகுப்பாசிரியர்: ஆ.அறிவழகன், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்,  பக்.256, விலை ரூ.250. இன்றைய இந்தியப் பொருளாதாரநிலையின் தன்மையைத் தெரிந்து கொள்ள 1980- களிலும், 1990 -களிலும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குத் துணைபுரியும் வகையில் இந்நூலில்கட்டுரைகள் தொகுத்து வழங்கப்பட்டிருக்கின்றன. இந்தியப் பொருளாதாரத்தை மாற்றி அமைப்பது தொடர்பான பொருளாதார நிபுணரான நூலாசிரியரின் கருத்துகள் இந்தக் கட்டுரைகளில் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. காந்தியப் பொருளாதாரம் பற்றிய கட்டுரையில் “காந்தியைப் பொறுத்தவரை […]

Read more

நாதஜ்யோதி ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் அடிச்சுவட்டில் இசைப்பயணம்

நாதஜ்யோதி ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் அடிச்சுவட்டில் இசைப்பயணம்,  வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன்,திருப்புகழ்ச் சங்கமம்,  பக்.464,  விலை ரூ.396. கர்நாடக சங்கீத உலகின் மும்மூர்த்திகளுள் ஒருவர் என்று போற்றப்படுபவர் ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதர். ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்று பல தலங்களுக்கும் சென்று அங்குள்ள இறைவன், இறைவியைப் போற்றி கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். தமிழகத்துக் கோயில்கள் மட்டுமல்லாது, திருவேங் கடம், காஷ்மீர், காசி, இமயமலை போன்ற தலங்களில் உள்ள தெய்வங்களையும் போற்றிப் பாடியுள்ளார் தீட்சிதர். இவருடைய கீர்த்தனைகள் பெரும்பாலும் சம்ஸ்கிருதத்தில் அமைந்தவை. இந்நூலில் தீட்சிதர் 66 தலங்களில் பாடிய […]

Read more

மூன்று தலைமுறைகள்

மூன்று தலைமுறைகள் (அர்தமோனவ்கள்) ,  மக்ஸீம் கார்க்கி,  தமிழில்: நா. தர்மராஜன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக். 476, விலை ரூ. 450. ரஷிய இலக்கியத்தின் ஆளுமைகளில் ஒருவராக அறியப்படுபவர் மக்ஸீம் கார்க்கி. உலகின் தலைசிறந்த பத்து நாவல்களைப் பட்டியலிட்டால் அதில் இடம் பெறக் கூடிய “தாய்’ நாவலின் ஆசிரியர். கார்க்கியின் மிகச் சிறந்த இன்னொரு நாவல் “அர்த்தமோனவ்கள்’. சோவியத்தின் ராதுகா பதிப்பகம் வெளியிட்ட இந்த மொழிபெயர்ப்பு தற்போது மீண்டும் மறுபதிப்பாக வந்திருக்கிறது. பெற்றோர்கள் தங்களுடைய வாரிசுகள் அல்லது சந்ததிகள் – தலைமுறைகள் – எதிர்காலத்தில் […]

Read more

முகம்மது பின் துக்ளக்

முகம்மது பின் துக்ளக் (கோமாளியாக்கப்பட்ட கோமான்), செ.திவான், ரெகான் சுலைமான் பதிப்பகம், பக்.144, விலை ரூ.100. கி.பி.1325 இல் இருந்து கி.பி.1351 வரை டில்லியில் ஆட்சி செய்தவர் முகம்மது பின் துக்ளக். திரைப்படம், நாடகம், புதினங்களில் அவர் கோமாளியாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறார். தமிழில் 1971 இல் வெளிவந்த “முகமது பின் துக்ளக்’ திரைப்படத்திலும் அவர் கோமாளியாகவே சித்திரிக்கப்பட்டிருக்கிறார். முகமது பின் துக்ளக் பற்றிய உண்மையான வரலாற்றை இந்நூல் கூறுகிறது. இபின் பதூதாவின் பயணக் குறிப்புகளிலான வரலாற்று நூலில் முகமது பின் துக்ளக் பற்றிக் கூறப்பட்டிருந்த கருத்துகள் […]

Read more
1 4 5 6 7 8