அரவான் களப்பலி

அரவான் களப்பலி, கே.பாலகங்காதரன், அருள்நிதி நுாலகம், விலைரூ.330. மகாபாரதத்தில் மிகச்சிறிய கதாபாத்திரத்தில் வந்து, மிகப்பெரிய விஷயங்கள் செய்தவர் அரவான். பஞ்ச பாண்டவர்களின் குணநலன், அவர்களின் சிறப்புகள், பாஞ்சாலியின் வரலாறு, உலுாபி என்ற நாகக்கன்னி யார்? அவர் அர்ஜுனன் மீது வைத்துள்ள காதல் எத்தகையது போன்ற வரலாற்றை இந்நுால் விவரிக்கிறது. தெருக்கூத்து, நாடகம் வாயிலாக அறிந்த அரவான் களப்பலி நிகழ்வை, இன்றைய தலைமுறை அறியும் விதமாக, பல மனிதர்களை சந்தித்து விளக்கம் பெற்று எழுதியுள்ளார் ஆசிரியர். அரவானை தெய்வமாக திருநங்கையர் வழிபட்டு வருவதையும், களப்பலி எதற்கு, […]

Read more

கலைஞர் என்னும் மனிதர்

கலைஞர் என்னும் மனிதர், மணா, பரிதி பதிப்பகம், விலைரூ.500. எழுத்து, நடிப்பு, ஆட்சி, கட்சியை வழிநடத்துதல் என பன்முகத் திறன்களால் மிளிர்ந்து வரலாற்றில் நிலைத்தவர் கருணாநிதி. ஆளுமை நிறைந்த மனிதர். உயர்த்தும் பண்புகளை, அவர் வளர்த்து கொண்ட விதம் பற்றி சித்தரிக்கும் நுால். வண்ணப் படங்களுடன் சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஆட்சி பொறுப்பிலும், கட்சியிலும் சந்தித்த நெருக்கடிகளை சமாளித்த காலங்களில் இதழ்களுக்கு அளித்த பேட்டிகள், முக்கிய பிரமுகர்களுடனான உரையாடல், சந்திப்புகளில் சொன்ன தகவல்கள், எழுதிய பத்திகள் மற்றும் கட்டுரைகளால் நிரம்பியுள்ளது. இந்த நுாலை ஆக்கியிருப்பவர் மணா; […]

Read more

இங்கிலாந்தில் 100 நாட்கள்

இங்கிலாந்தில் 100 நாட்கள், அகிலா, எழிலினி பதிப்பகம், விலைரூ.300. பயண இலக்கியங்கள், ஒரு இடத்தின் புவியியல் அமைப்பு, மக்கள் வாழ்வியலை தெரிந்துகொள்ள வழி செய்கின்றன. பயண நுாலுக்கு முக்கியத்துவம், அதன் எளிய மொழிநடை தான். ஐரோப்பிய நாடான பிரிட்டனில் விழாக்கள், வாழ்வியல், அரசியல் என, 22 தலைப்புகளில் விரித்துள்ளார். போக்குவரத்து வசதி, பணம், மொழி ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் விளக்குகிறது. லண்டன் மாநகர அரண்மனைகள், கோட்டைகள், தேவாலயங்கள் என பல குறிப்புகளை கொண்டுள்ளது. பயண இலக்கியத்தில் முக்கிய நுால். – முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன். நன்றி: தினமலர், […]

Read more

அன்பின் உரு அருளின் தரு வள்ளலார்

அன்பின் உரு அருளின் தரு வள்ளலார், பேராசிரியர் புதுவைக்கிருஷ்ணா, அருள்மொழிப் பிரசுரம், விலைரூ.250. வள்ளலாரின் வாழ்க்கையை காட்சிப்படுத்தும் நுால். வாசிப்போரை ஊக்கப்படுத்தும் வகையில் கட்டியங்காரன் நாடகத்தை நடத்திச் செல்லும் பாங்கு அருமை. வள்ளலார் ஜோதியில் கலந்தது வரை வரிசையாகத் தெரிவிக்கிறது. உலகில் 51- ஆண்டுகள் வாழ்ந்த மகானின் வரலாற்றை, 51- காட்சிகளில், 51- பாத்திரங்களோடு மிக நேர்த்தியான காட்சிகளாக அமைந்துள்ளன. முதல் அங்கத்தில் சிதம்பரத்தில் ரகசியக் காட்சி கண்டு அருள் பெற்றதும், வள்ளலாரின் முதல் சொற்பொழிவும் காட்சிப் படுத்தப்பட்டு உள்ளது. சன்மார்க்க சங்கம் நிறுவியதன் […]

Read more

தமிழ் நாட்டுப்புறவியல்

தமிழ் நாட்டுப்புறவியல், டி.தருமராஜ், கிழக்கு பதிப்பகம், விலைரூ.250. நாட்டுப்புறவியல் என்னும் தலைப்பில் நாட்டுப்புறக் கதைகளின் அணிவகுப்பை ஆய்வு நோக்கில் வழங்கும் நுால். தேவராட்டத்தை நடத்துவோர், நடத்தப்படும் ஊர்கள், ஆட்ட முறை என்று ஒவ்வொன்றையும் தெளிவுபடுத்துகிறது. தேவராட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் உருமி மேளத்தைத் தேவதுந்துபி என்று மாற்றுப்பெயர் கொண்டு குறிப்பிடுவதை அப்படியே வெளிப்படுத்தியுள்ளார். நாட்டுப்புறவியலை மானுடவியல் சிந்தனையுடன் இணைத்து உள்ளதை உள்ளபடி எடுத்துரைக்கிறது. நாட்டுப்புறவியலில் புதிய அணுகுமுறையாக உள்ளது. உலகளாவிய நிலையில் நாட்டுப்புறவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ள கருத்துகளை, தமிழ் வாசகர்களுக்கு எளிய நடையில் மொழிபெயர்த்து தந்துள்ளார். நாட்டுப்புறவியலில் […]

Read more

பாடும் நிலா பாலு பற்றிய பல்சுவைத் தகவல்கள்!

பாடும் நிலா பாலு பற்றிய பல்சுவைத் தகவல்கள்!, டி.என்.இமாஜான், மணிமேகலை பிரசுரம், விலைரூ.170. முறைப்படி சங்கீதம் கற்கா விட்டாலும் சங்கீதத்தில் முத்து எடுத்தவர் எஸ்.பி.பி., என்பதை குறிப்புகள் சொல்லிக் காட்டுகின்றன. இன்ஜினியரிங் படிப்பை உதறிவிட்டு இசைத் துறையில் கால் பதித்து கொடி நாட்டியவரின் இழப்பு, எல்லாரையும் துக்கத்தில் ஆழ்த்தி விட்டது. உடன் பாடியவர்கள், ரசிகர்கள், திரைத்துறையினர், அரசியல்வாதிகள் கூறிய கருத்துக்கள் அலங்கரிக்கின்றன. சிறந்த பாடகர் என உயரிய விருதுகள் பெற்றிருந்தாலும் பணிவு, பரோபகாரம் என உதவிய மனிதநேயம் சிலை வடிக்க வைத்துவிட்டது. – சீத்தலைச்சாத்தன். […]

Read more

பிரமிடுகள் பிரமிப்புகள்

பிரமிடுகள் பிரமிப்புகள், ஸ்ரீவி தி.மைதிலி, ஆனந்த நிலையம், விலைரூ.110. பிரமிடு வடிவ அமைப்பின் சிறப்புகள் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். கோபுர கலசம் போல், பிரமிடுஅமைப்பை வீட்டில் உபயோகித்து வந்தால், இயற்கை சீற்றத்தை தடுக்கலாம். இயற்கை சீற்றத்தால் ஏற்படும் விபத்துகளில் இருந்து காக்க பிரமிடு உதவும் என கூறப்பட்டுள்ளது. பிரமிடு வடிவமைத்து, அதன் உள்ளே அமர்ந்து தியானம் செய்வதால் மன அமைதி கிடைக்கும்; முடிவு எடுக்கும் திறனும் அதிகரிக்கும் என்றெல்லாம் நுாலில் விளக்குகிறார். – எஸ்.குரு. நன்றி: தினமலர், 22/8/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3/ […]

Read more

வியப்பூட்டும் வழிபாடுகள்

வியப்பூட்டும் வழிபாடுகள், பெ.பெரியார்மன்னன், விவேகா பதிப்பகம், பக்.118, விலை  ரூ.145. சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கோவில்களில் பல்வேறுவிதமான வழிபடும் முறைகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றிய அறிமுகமாக இந்நூல் மலர்ந்திருக்கிறது. ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் அமைந்துள்ள பழனியாபுரம் கிராம எல்லை வனப்பகுதியில் அஞ்சலான் குட்டை முனியப்பன் கோவிலில் ஆண்கள் மட்டுமே வழிபடுகிறார்கள். இரவு நேரத்தில் காவல்தெய்வமான “முனி’ உலாவுவதால் இக்கோவிலுக்குப் பெண்கள் செல்வதில்லை. குமாரபாளையம் கிராமத்தின் நுழைவு வாயிலில் வெள்ளாற்றின் வலது கரையில் அமைந்துள்ளது “சாராய’ முனியப்பன் கோவில். முனியப்ப […]

Read more

மறைக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வீர வரலாறு

மறைக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வீர வரலாறு,  தொகுப்பாசிரியர்: எம்.எஸ்.செல்வராஜ் , பாரதி புத்தகாலயம், பக்.96, விலை  ரூ.100. 1815- ஆம் ஆண்டு இலங்கையை பிரிட்டிஷார் கைப்பற்றினர். அங்கு அவர்கள் கட்டுமானப் பணிகளைச் செய்ய தமிழகத்திலிருந்து பலரை அழைத்துச் சென்றனர். பிரிட்டிஷ் முதலாளிகள் காப்பித் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்களை இலங்கையில் ஏற்படுத்தி, அவற்றில் வேலை செய்யவும் தமிழ்நாட்டிலிருந்து மக்களை அழைத்துச் சென்றனர். தமிழகத்தில் இருந்து சென்றவர்களால், இலங்கையின் பொருளாதாரம் மேம்பட்டது என்றாலும் தோட்டங்களில் வேலை செய்பவர்களுக்கு எந்த உரிமையும் வழங்கப்படவில்லை. அவர்கள் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்நிலையை […]

Read more

திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்,  பெரும்பற்றப்புலியூர் நம்பி, உரையாசிரியர்: மு. அருணகிரி, அருணா பப்ளிகேஷன்ஸ்,  பக்.808, விலை ரூ.990.  “பாண்டிப் பதியே பழம்பதி’ என்று கூறுவர். பாண்டிய நாட்டின் தலைநகராம் மதுரையில் திருவாதவூரருக்காகவும், பிற உயிரினங்களுக்காகவும் அறுபத்து நான்கு திருவிளையாடல்களை நிகழ்த்திக்காட்டினார் சொக்கநாதப் பெருமான். இறைவனின் திருவிளையாடல்களை ஓரிரு புலவர்கள் அவ்வப்போது பாடியிருந்தாலும் அவற்றை நிரல்படத் தொகுத்தளித்தவர் பெரும்பற்றப்புலியூர் நம்பியே. உ.வே.சா.இந்நூலை இருமுறை பதிப்பித்துள்ளார். அப்பதிப்புகளில் அவர் பொழிப்புரை தரவில்லையாயினும் அரிய செய்திகளைக் குறிப்புரையாகத் தந்துள்ளார். அக்குறிப்புரைகளை ஆதாரமாகக் கொண்டு இந்நூலாசிரியர் பொழிப்புரை வழங்கியுள்ளார். இந்நூல் மதுரையைப் […]

Read more
1 6 7 8