கரிசலில் உதித்த செஞ்சூரியன்

கரிசலில் உதித்த செஞ்சூரியன், (சோ.அழகர் சாமியின் வாழ்க்கைத் தடம்),  எஸ்.காசிவிஸ்வநாதன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.366,  விலை ரூ.335. எட்டயபுரத்துக்கு அருகில் உள்ள ராமனூத்து என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் சோ. அழகர்சாமி. தனது 14 வயதிலேயே நாட்டுப்பற்று உடையவராகத் திகழ்ந்த அவர் காங்கிரஸ், சோசலிஸ்ட் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு இருந்திருக்கிறார். ஜெயபிரகாஷ் நாராயண் உள்ளிட்ட பல புகழ்பெற்ற அரசியல் தலைவர்களை எட்டயபுரத்துக்கு வரவழைத்து அரசியல்மாநாடுகள் நடத்தியிருக்கிறார். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட்டிருக்கிறார். 1948 – இல் கம்யூனிஸ்ட் […]

Read more

சைவமும் சன்மார்க்கமும்

சைவமும் சன்மார்க்கமும்,  செந்நெறி பா.தண்டபாணி, விஜயா பதிப்பகம், பக். 200, விலை ரூ.180. உலகம் இன்றளவும் தேடிக் கொண்டிருக்கும் மிகச் சிறந்த வாழ்வியல் முறைகளை நமக்கு வழங்கியவர் வடலூர் வள்ளல் பெருமான். அவரது சிறப்புகளும் சன்மார்க்க கோட்பாடுகளும் எளிய முறையில் தொகுத்து இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.  பதினெட்டு அத்தியாயங்களில் வள்ளலார் பற்றியும் அவரது மரணமில்லாப் பெருவாழ்வு குறித்த சிந்தனைகளும் தரப்பட்டுள்ளன. “சைவ சித்தாந்தமும் சன்மார்க்கமும் வேறு வேறு அல்ல; சன்மார்க்கம் என்பது சைவத்தின் உச்சநிலை’ என்கிறார் நூலாசிரியர். “உருவராகியும் அருவினராகியும் உருஅருவினராயும் ஒருவரே உளார் கடவுள் […]

Read more

இந்தியப் பொருளாதாரம் வரலாறு காட்டும் வழிகள்

இந்தியப் பொருளாதாரம் வரலாறு காட்டும் வழிகள், தொகுப்பு ஆசிரியர் ஆ.அறிவழகன், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், விலை 250ரூ. வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி, ஏழைகளின் முன்னேற்றம் ஆகியவற்றைத் தனது குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றிய மால்கம் ஆதிசேசய்யாவின் பன்முகத் தன்மைகளை இந்த நூல் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறது. சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக அவர் எழுதிய கட்டுரைகள் மூலம், வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை, தொழிலாளர் நலன், வேலை வாய்ப்பு, வறுமை ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் லஞ்ச ஊழல், கருப்புப் பணம், சுற்றுச் சூழல் […]

Read more

காமராஜ் எனும் தமிழ் ஆளுமை

காமராஜ் எனும் தமிழ் ஆளுமை, வை.ஜவஹர் ஆறுமுகம், மணிமேகலைப் பிரசுரம், விலை 120ரூ. கர்மவீரர் காமராஜரின் ஆளுமைகளை இந்த நூல் புதிய கோணத்தில் தந்து இருக்கிறது. காமராஜரின் சுற்றுப் பயணத்தில் அவருடன் பல ஆண்டுகள் கலந்துகொண்ட இந்த நூலின் ஆசிரியர், அந்தப் பயணங்களின் போது வெளியான காமராஜரின் வியப்பான குணநலன்களை சிறப்பாகப் பதிவு செய்து இருக்கிறார். பத்திரிகைகளை காமராஜர் எந்த அளவுக்கு மதித்தார் என்பது, கடைநிலை ஊழியரின் குறையைக் கேட்டதும், அதற்குத் தீர்வு காணும் வகையில் அரசு ஆணையை மாற்றி அமைத்தது, விதிவிலக்கு கொடுத்து […]

Read more

சுந்தரவல்லி சொல்லாத கதை

சுந்தரவல்லி சொல்லாத கதை, உத்தமசோழன், கிழக்கு வாசல் வெளியீடு, விலை: ரூ.950. வேளாண் பெருமகளின் வெற்றிக் கதை வட்டார இலக்கியங்கள் பெரும்பாலும் நம் வாழ்வை நகல் எடுப்பவையாகவே இருக்கின்றன. ஆர்.சண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’, ராஜம் கிருஷ்ணனின் ‘குறிஞ்சித்தேன்’, ‘கரிப்பு மணிகள்’, சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’, ச.பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ போன்ற வட்டார இலக்கியங்கள் முக்கியமானவை. பாமா, இமையம், பெருமாள் முருகன், ஜோ டி குரூஸ் உள்ளிட்டோர் வேளாண், மீனவ, பழங்குடியினச் சமூகங்களை மையமாகக் கொண்டு எழுதிவருகிறார்கள். அந்த வகையில் உத்தமசோழனின் ‘சுந்தரவல்லி சொல்லாத கதை’, கீழத்தஞ்சையை மையமாகக் […]

Read more

விதையாக இரு

விதையாக இரு, வழக்கறிஞர் த.இராமலிங்கம், விகடன் பிரசுரம், விலை 210ரூ. தமிழ் இலக்கியங்களில் அனைவருக்கும் பயனளிக்கும் கருத்துகள் ஏராளம் இருப்பதை இந்த நூல் சுட்டிக்காட்டி இருக்கிறது. தமிழ் இலக்கியங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பாடல்களை எடுத்துக்கூறி, அவற்றில் காணப்படும் வாழ்க்கைக்குத் தேவையான முன்னேற்ற சிந்தனைகள் என்ன என்பது, ஆர்வத்துடன் படிக்கும்வகையில் தரப்பட்டு இருக்கின்றன. அவ்வையார் பாடல்கள், உலகநீதி, வெற்றிவேற்கை, திரிகடுகம், நீதிவெண்பா, திருமந்திரம் போன்றவற்றின் இலக்கிய வரிகள் கூறும் அறநெறிகள், ஆங்காங்கே கதை வடிவிலும் உரை நடையாகவும் கொடுத்து இருப்பது அனைத்துக் கருத்துகளையும் படிக்க […]

Read more

சித்திரச் சோலை

சித்திரச் சோலை, சிவகுமார், இந்து தமிழ் திசை, விலை: ரூ.285. பன்முக வாழ்க்கை ‘சித்திரச் சோலை’ நூலைப் படிக்கும்போது ஒரு பன்முகக் கலைஞரின் வாழ்வு எப்படி ரத்தமும் சதையுமாக வார்த்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டுப்போவீர்கள். ஓவியர், நடிகர் என்ற இரு அம்சங்களில், இரு வேறு கோணங்களில் தன் ஒட்டுமொத்த அனுபவங்களையும் ‘சித்திரச் சோலை’யில் சிவகுமார் வடித்துள்ளார். மிகச் சிறந்த மனிதர், மார்க்கண்டேயர் என்றெல்லாம் அவர் புகழப்படுவதன் சூட்சுமம் அவரது சொல்லும் செயலும் ஒன்றாக இருப்பதிலும், அளவிட்டு அறிய முடியாத ஒரு கலை உணர்வு எப்போதும் […]

Read more

ஏர் இந்தியாவின் தந்தை ஜேஆர்டி டாட்டா

ஏர் இந்தியாவின் தந்தை ஜேஆர்டி டாட்டா, ஆர். நடராஜன், மணிவாசகர் பதிப்பகம், பக்.176,  விலை ரூ.150. இந்தியாவில் இரும்பு, எஃகு ஆலை, மின்சார ஆலை உள்ளிட்ட இன்றைய முக்கியத் தொழில் துறைகள் அனைத்துக்கும் அன்றே அடித்தளமிட்டவர் ஜாம்ஷெட்ஜி டாட்டா. ஜாம்ஷெட்ஜியின் டாட்டா குழுமம் பல்வேறு தொழில்களை வெற்றிகரமாக நடத்திவந்த போதிலும், அவரது பெயரன் ஜே.ஆர்.டி. டாட்டாவுக்கு விமானத்துறை மீது தணியாத ஆர்வம் இருந்தது. விமானம் ஓட்டுவதற்குப் பயிற்சி பெற்று இந்தியாவின் முதல் விமானியானது மட்டுமல்லாது, அன்றைய ஆங்கில அரசின் அனுமதியுடன் முதல்முதலில் கராச்சி – […]

Read more

கடோபநிஷத்

கடோபநிஷத்,க. மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக். 264, விலை ரூ. 350. உபநிஷத்துகளில் தனிச்சிறப்பு கொண்டது கடோபநிஷத். பெரியதும்கூட. 119 மந்திரங்களைக் கொண்டது. கடோபநிஷத்துக்குத் தமிழில் நிறைய உரைகள் வந்திருக்கின்றன. எல்லாரும் படித்து எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது இந்த விளக்கவுரை. விச்வஜித் யாகத்தில் அதிருப்தியுற்று எழுப்பும் கேள்வியால் ஆத்திரமுற்று, எமனுக்கே தானமாகத் தருவேன் என்று தந்தையால் கூறப்படுகிறான் அல்லது சபிக்கப்படுகிறான் மகன் நசிகேதஸ். மூன்று இரவுகள் காத்திருந்து தன்னைச் சந்திக்கும் நசிகேதஸுக்கு மூன்று வரங்கள் அருளுவதாகக் கூறுகிறார் எமதர்மன். தந்தை கோபம் நீங்கியவராகத் தன்னை […]

Read more

உமாபதி சிவாச்சாரியார் அருளிச் செய்த திருவருட்பயன்

உமாபதி சிவாச்சாரியார் அருளிச் செய்த திருவருட்பயன், விளக்க உரை, சு. சிவபாதசுந்தரனார், சந்தியா பதிப்பகம்,  பக்.238,  விலை ரூ.225.   சைவ நெறியில் சமயக் குரவர் நால்வர் இருப்பது போலவே சந்தானக் குரவர் நால்வர் உளர். அவர்களுள் நான்காமவரான உமாபதி சிவாச்சாரியார், “மெய்கண்ட சாத்திரம்’ என்று கூறப்படும் பதினான்கு நூல்களுள் எட்டு நூல்களை இயற்றியுள்ளார். “சித்தாந்த அட்டகம்’ எனப்படும் அவற்றுள் ஒன்றுதான் “திருவருட்பயன்’. இந்நூலுக்கு சைவ அறிஞர் இலங்கை சு. சிவபாதசுந்தரனார் எழுதிய உரையுடன் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இது திருக்குறளைப் போலவே குறள் வெண்பா […]

Read more
1 6 7 8 9