அகத்திய ரகசியம்!

அகத்திய ரகசியம்!, ஸ்ரீஜா வெங்கடேஷ், ஸ்ரீபுக்ஸ் கிரியேஷன்ஸ், பக். 674, விலை 400ரூ. நுாலின் பெயரைப் பார்த்தவுடன், அகத்தியர் பற்றிய தெரியாத செய்திகள் பலவற்றைத் தொகுத்துத் தரும் நுால் என்று தோன்றும். ஆனால், கற்பனை கலந்த ஆராய்ச்சிகளை உள்ளடக்கிய நாவல் தான் அகத்திய ரகசியம். போகிற போக்கில் இந்த நாவலில் பல அறிவியல் உண்மைகளையும், மருத்துவ உண்மைகளையும் எடுத்துரைக்கிறார் நாவலாசிரியர் ஸ்ரீஜா வெங்கடேஷ். தற்கால தமிழ் நாவல் இலக்கியம் புதிய பரப்புகளில் தடம் பதிக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. நாவலின் நிறைவு பகுதியில், 24ம் […]

Read more

நெல்லை மறவர் கதைப்பாடல்கள்

நெல்லை மறவர் கதைப்பாடல்கள், பேரா.சு.சண்முகசுந்தரம், காவ்யா பதிப்பகம், பக். 372, விலை 400ரூ. முக்குலத்தோரில் மறவர்கள் ஒரு பிரிவினர். இவர்கள் ராமநாதபுரத்திலிருந்து புலம்பெயர்ந்து, நெல்லைச் சீமையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வீரம், காவல் உரிமை, மான உணர்வு, கொள்கை போன்றவற்றால் முதன்மையாகி தெய்வமாகிய முன்னோரை, கதை வடிவில் பாடப்படும் நுாலைப் படைத்துள்ள ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். – த.பாலாஜி நன்றி: தினமலர், 23/2/20. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000030004.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

ஸ்ரீ வாராகி அம்மன் வழிபாடும் பரிகாரங்களும்

ஸ்ரீ வாராகி அம்மன் வழிபாடும் பரிகாரங்களும், சுந்தர் பாலா, அழகு பதிப்பகம், பக். 224, விலை 210ரூ. வேண்டியதைவாரி வழங்கும் ஸ்ரீவாராகி அம்மனைவழிபடும் முறை, தோத்திரங்கள், பரிகாரங்கள், வரலாற்று புராண பின்னணி ஆகியவை இதில் உள்ள சிறப்புகள் அனைத்தையும் ஆசிரியர் அழகாக தொகுத்து உள்ளார். அம்மனுக்கு நைவேத்யம், மலர்கள், தொழும் பொழுது, உபாசனை முறை, அதற்கான மந்திரங்கள், பண்டாசுரன் என்ற அரக்கனின், தவறான விருப்பங்கள், அதை பராசக்தி முடித்த விதம் ஆகியவை இதன் மையக் கருவாகும். இதற்கு தேவி மகாத்மியம் கூறும் மையக் கருத்துக்களை […]

Read more

மகாத்மா 150

மகாத்மா 150, உமாதேவி பலராமன், நந்தினி பதிப்பகம், பக். 276, விலை 250ரூ. காலத்தால் அழியாத பொக்கிஷமான மகாத்மாவை பற்றிய சுவையான, 150 தகவல்களை ஆசிரியர் உமாதேவி ரத்தினச் சுருக்கமாக வழங்கியுள்ளார். எளிய நடையில் எழுதப்பட்டுள்ள இந்நுாலை படிக்கையில், தேசப்பிதாவின் வரலாறு மற்றும் வாழ்க்கையை தெளிவாக அறிந்து கொள்ள முடியும். நன்றி: தினமலர், 23/2/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

இந்தியா அழைக்கிறது

இந்தியா அழைக்கிறது, ஆங்கிலத்தில் ஆனந்தகிரிதாஸ், தமிழில் அருட்செல்வர் நா.மகாலிங்கம், மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு, பக். 360, விலை 300ரூ. அமெரிக்க இந்திய பெற்றோருக்குப் பிறந்தவர் ஆசிரியர். தாய் பஞ்சாபி; தந்தை தமிழர். அவ்வப்போது பெற்றோரோடு இந்தியா வந்தவருக்கு, இந்திய மண் மணம் ஆசிரியரின் நெஞ்சை ஈர்க்கிறது. படிப்பு அமெரிக்காவிலும், பிழைப்பு இந்தியாவிலும் பரிணமிக்கிறது. ஆசிரியரின் ஆதங்கங்கள், ஆசைகள், கொதிப்புகள், வார்த்தைக்கு வார்த்தை என மொழி பெயர்க்காமல் ஆசிரியரின் உணர்வுகளை ஊர்வலமாக்கியுள்ளார் மொழிபெயர்ப்பாளர். எத்தனை பாராட்டினாலும் தகும். தம் தாய் – தந்தையர், பாட்டி – […]

Read more

கஸல்களைப் பாடும் யாரோ ஒருவன்

கஸல்களைப் பாடும் யாரோ ஒருவன், காரிகைக் குட்டி, இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 120, விலை 100ரூ. கஸல்களைப் பாடும் யாரோ ஒருவன் கவிதைகள் எதார்த்தங்களின் வெளிப்பாடாகவே விளங்குகின்றன. இவரின் கவிதைகள் எளிய நடையில் அமைந்திருந்தாலும் கனமான கருவுடன் உணர்வுகளின் தாக்கங்களை வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு பொழுதுகளும் துாசி பறக்க விடுவது, பெண்களின் வாழ்வில் சுமை மற்றும் சடங்காகவே விளங்குவதை புலப்படுத்துகிறார் கவிஞர். கன்னி கழியவில்லை, கஸல்களைப் பாடும் யாரோ ஒருவன், சுட்டுவிரல், சாட்சியங்கள் போன்ற கவிதைகள் கவிஞரின் ஆவேசத்தை வெளிப்படுத்துகின்றன. கஸல்களைப் பாடும் யாரோ […]

Read more

தமிழ்நாட்டு கொலை வழக்குகள் பாகம் 2

தமிழ்நாட்டு கொலை வழக்குகள் பாகம் 2, கோமல் அன்பரசன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 132, விலை 120ரூ. இரண்டாம் பாகமாக இரட்டிப்பு கொலை வழக்குகளுடன் சுடச் சுட வந்துள்ளது, ‘தமிழ்நாட்டு கொலை வழக்குகள்!’ பல நேரங்களில் செய்திகளை விட அதன் பின்னணி ஆச்சரியம், அதிர்ச்சி தரும் என ஆசிரியர் கோமல் அன்பரசன் தன், ‘என்னுரை’யில் குறிப்பிட்டு, உண்மை தன்மை மாறாத கதை படிக்கலாம் என நம்பிக்கை தருகிறார். ஆட்டோ சங்கர், நாவரசு, பிரேமானந்தா, டாக்டர் பிரகாஷ் என முக்கிய வழக்குகளின் […]

Read more

மதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ இராமானுஜர்

மதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ இராமானுஜர்,  ம.கணபதி, மணிவாசகர் பதிப்பகம், பக்.208, விலை ரூ.160. “பிறருடைய துன்பத்தை, வேதனையைக் கண்டு “ஐயோ” என்று நினைத்து அவனுக்காக இரங்கி, அவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய எவன் துடிக்கிறானோ, அவனே உண்மையான வைணவன்” என்ற வைணவக் கொள்கையைப் பின்பற்றி வாழ்ந்தவர் இராமானுஜர். மனிதர்களில் ஏற்ற தாழ்வுகள் இல்லை. இறைவனின் முன்பு எல்லாரும் சமம் என்ற அடிப்படையில் இராமானுஜர் வாழ்ந்ததை, அவருடைய வாழ்வில் நிகழ்ந்த பல சம்பவங்களின் துணைகொண்டு நூல் முழுவதும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இராமானுஜரின் இளம்பருவம், அவர் […]

Read more

உள்ளங்கையில் உடல் நலம்

உள்ளங்கையில் உடல் நலம்,  பி.எம்.ஹெக்டே; தமிழில்: நிழல் வண்ணன்,வானவில் புத்தகாலயம், பக்.176, விலை ரூ.166.   “நோய்கள் என்பவை விபத்துகள் போன்றவைதான். நல்ல ஆரோக்கியத்தோடு வாழும் மனிதர்களைக் கூட தீவிர நோய் வீழ்த்தி விட முடியும். ஆயினும் நாம் சிறந்த வாழ்க்கைமுறையைக் கொண்டால் நோயிலிருந்து விரைந்து குணமடைய முடியும்” என்ற அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நோய்கள் குறித்தும் மருத்துவம் குறித்தும் நாம் கொண்டுள்ள பல கருத்துகளை இந்நூல் மாற்றியமைத்துவிடுகிறது. நன்றாகத் தூங்கினால், உடல் நலம் பெறும் என்ற நம்பிக்கைக்கு மாறாக, “ஒரு நாளைக்கு 9 […]

Read more

சில பெண்கள் சில அதிர்வுகள் வேத, இதிகாச, புராண காலங்களில்,

சில பெண்கள் சில அதிர்வுகள், வேத, இதிகாச, புராண காலங்களில்,  ஹேமா பாலாஜி, சந்தியா பதிப்பகம், பக்.184, விலை ரூ.140. தினமணி டாட் காமில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். வேத காலம் தொட்டு புராண காலம் வரை வாழ்ந்த குறிப்பிடத்தக்க சில பெண்களின் உயர்வான பண்புகளை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. யாக்ஞவல்கியரின் மனைவியான மைத்ரேயி, யாக்ஞவல்கியரை தனது தத்துவஞானக் கேள்விகளால் திணறடித்த கார்கி வாசக்னவி போன்றவர்களைப் பற்றி மட்டுமல்ல, கெட்டவர்களாக பலரால் கருதப்படுகிற கைகேயி, மண்டோதரி, காந்தாரி, சூர்பனகை ஆகியோரின் உயர்ந்த பண்புகளையும் இந்நூல் […]

Read more
1 137 138 139 140 141 505