அயோத்தி தாசர் துவக்கி வைத்த அறப்போராட்டம்

அயோத்தி தாசர் துவக்கி வைத்த அறப்போராட்டம், பிரேம், எதிர் வெளியீடு, பக். 184, விலை 200ரூ. இந்தப் படைப்பு பண்டிதர் அயோத்தி தாசரை முழுமையாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. அயோத்திதாசர் சமூக விடுதலைக்கான கோட்பாட்டு அடையாளம். பூமியை உழுபவன் சின்ன சாதி, உழைப்புள்ளவர்கள் சிறிய ஜாதி, சோம்பேறிகள் பெரிய ஜாதிகள் என்று சொல்லித்திரிவது இன்றைய வழக்கமாகிவிட்டது என்று சாடியவர் அயோத்திதாசர். பொய் ஜாதி கட்டுகளை ஏன் அகற்றினீரில்லை? என்று தட்டிக் கேட்ட புரட்சிக்காரனை சிறப்பாக அறிமுகப்படுத்தும் நூல். நன்றி: தினமலர், 9/2/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

துக்ளக் 50 பொன்விழா மலர்

துக்ளக் 50 பொன்விழா மலர், துக்ளக் வெளியீடு, விலை 150ரூ. துக்ளக் பத்திரிகையும், அரசியலும் இரண்டற கலந்தவை. இதன் ஆசிரியர், மறைந்த சோ பார்வையில் அலசப்பட்டு, அந்தந்த காலகட்டங்களில் ெவளியான கட்டுரைகள், செய்திகள், கார்ட்டூன்கள், கேள்வி – பதில்கள் போன்றவற்றின் குவியல் தான் இந்த புத்தகம். இந்த புத்தகத்தை முதல் அட்டையிலிருந்து கடைசி அட்டை வரை, சில மணி நேரங்கள் புரட்டிப் பார்த்தால், இந்திய அரசியல் மட்டுமின்றி, தமிழக அரசியலையும் தளபாடமாக அறிந்து கொள்ளலாம். அப்போதைய அரசியல் தலைவர்களின் பேச்சுகளை, இந்த நுாலில் இப்போது […]

Read more

நக்கீரன் பொது அறிவு உலகம் இயர்புக் 2020

நக்கீரன் பொது அறிவு உலகம் இயர்புக் 2020, நக்கீரன், பக். 1120, விலை 160ரூ. தமிழில் நிறைய இயர்புக்ஸ் வெளிவருகின்றன. அவற்றில், நக்கீரன் வெளியிடும் இயர்புக் 2020யும் ஒன்று. தொடர்ந்து, 14 ஆண்டுகளாக இயர்புக்கை இந்த நிறுவனம் வெளியிடுகிறது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் வசதிக்காகவும், பொது அறிவுத் தகவல்களை தெரிந்து கொள்வோருக்கும் இந்த நுால் மிகவும் உதவிகரமாக இருக்கும். பொருளாதாரம், அறிவியல் தொழில்நுட்பம், சட்டங்கள், திட்டங்கள், சுற்றுச்சூழல் குறித்த கட்டுரைகளும் ஏராளமாக இடம்பெற்றுள்ளன. விலை மிகவும் குறைவாக இருப்பதால், எளிதாக அனைவராலும் வாங்கி, […]

Read more

பிற்காலச் சோழர் சரித்திரம்

பிற்காலச் சோழர் சரித்திரம், டி.வி.சதாசிவ பண்டாரத்தார், ஜீவா பதிப்பகம், பக். 592, விலை 570ரூ. ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதவை என்று அறிஞர்கள் கருதுவனவற்றுள் அந்நாட்டின் சரித்திர நுால் சிறந்ததொன்றாம். முன்னோர் ஒழுகிக் காட்டிய உயர்ந்த நெறிகளையும் அன்னார் கொண்டிருந்த சிறந்த பண்பினையும், பின்னோர்க்கு நினைப்பூட்டி அவர்களை நல்வழிப்படுத்துவன நாட்டின் பழைய சரிதங்களே என்லாம் என்று தன் முன்னுரையில் கூறுகிறார் சதாசிவ பண்டாரத்தார். சோழன் விசயாலயன், முதல் ஆதித்த சோழன், முதல் பராந்தக சோழன், கண்டராதித்த சோழன், அரிஞ்சய சோழன், சுந்தர சோழன், உத்தம […]

Read more

சங்க கால மக்கள் வாழ்க்கை

சங்க கால மக்கள் வாழ்க்கை, சு.தண்டபாணி, ஜெயலட்சுமி பப்ளிகேஷன்ஸ், பக். 300, விலை 350ரூ. மதுரையில் இருந்து, 13 கி.மீ., தொலைவில் வைகையாற்றின் கரையில் உள்ள கீழடி எனும் இடத்தில் நிகழ்த்தப்பெற்ற அகழ்வாராய்ச்சியில், ஆயிரக்கணக்கான மிகத் தொன்மையான பொருட்கள் கிடைத்து உள்ளன. இவற்றை ஆய்வு செய்து, தொல்பொருள் ஆய்வு செய்வோர் இவை, 2,600 ஆண்டுகள் பழமையானவை என்றும், பல நாடுகளுடன் தமிழர்கள் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதையும் இப்பொருட்கள் மூலம் தெளிவாக உணர முடிகிறது. சங்க இலக்கியங்கள், 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டு தோன்றியவை. இவை […]

Read more

கந்தபுராணம்

கந்தபுராணம், மூலமும் உரையும், முனைவர் சிவ.சண்முகசுந்தரம், பாரி நிலையம், பக். 1648, விலை 1500ரூ. சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முருகன் தலம் குமரக் கோட்டம். அந்தக் குமரக் கோட்டத்ததில் அர்ச்சகராக விளங்கிய காளத்தியப்ப சிவாச்சாரியரின் மகன் கச்சியப்ப சிவாச்சாரியார். அவர் படைத்த நுால் கந்த புராணம். உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் என்னும் ஆறு காண்டங்களில், 135 படலங்களை அமைத்து, 10 ஆயிரத்து, 345 பாடல்களை பாடியுள்ளார் கச்சியப்ப சிவாச்சாரியார். […]

Read more

மாலை பூண்ட மலர்

மாலை பூண்ட மலர், கி.வா.ஜகந்நாதன், ஏ.கே.எஸ்.பதிப்பகம், பக். 184, விலை 115ரூ. அபிராபி அந்தாதியில் முதல், 25 பாடல்களுக்கு எழில் உதயம் எனும் பெயரில் கட்டுரைகளை எழுதிக் கொடுத்து நுாலாக வெளியிட்ட நுாலாசிரியர், ‘சங்கரகிருபா’ என்ற மாத இதழில், 26 முதல், 50 வரையிலான பாடல்களுக்கு விளக்கக் கட்டுரைகளை எழுதி, ‘மாலை பூண்ட மலர்’ என்ற பெயரில் இரண்டாம் தொகுதியை, 1970களில் வெளியிட்டுள்ளனர். அத்தொகுப்பே தற்போது மறு அச்சு வடிவம் பெற்றுள்ளது. ‘ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிபவராம்’ இவ்வாறு மும்மூர்த்திகளும் […]

Read more

வேணுவனவாசம்

வேணுவனவாசம், சுகா, தடம் பதிப்பகம், பக். 112, விலை 100ரூ. திருநெல்வேலியின் ஆதி பெயர், வேணுவனம்’ என்பது இந்நுாலின் பெயராய் இடம்பெற்றுள்ளது. கதை மற்றும் கட்டுரை வடிவில், நெல்லையின் வட்டார மொழி நடையிலேயே எழுதியுள்ளார் ஆசிரியர் சுகா. இதில் முத்திரை பதித்துள்ள, ‘ராயல் டாக்கீஸ்’ சிறுகதை, ‘விருட்சம்’ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்புக்குரியது. அந்த கதையின் முதலும், முடிவும் படிக்கும்போதே வலியைத் தருவதாக அமைந்துள்ளது. – மாசிலா ராஜகுரு நன்றி: தினமலர், 23/2/20. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029578.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

இஸ்லாமின் தொழுகை முறை

இஸ்லாமின் தொழுகை முறை, அறிவு நாற்றங்கால் பதிப்பகம், விலை 100ரூ. இறை நம்பிக்கை (ஈமான்), தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகிய ஐம்பெரும் கடமைகள் மீது எழுப்பப்பட்ட மாளிகை இஸ்லாம். தொழுகை, இஸ்லாத்தின் பிரதான தூண். அது முஸ்லிமாகிய ஒவ்வொரு ஆணும் பெண்ணும் நிறைவேற்ற வேண்டிய கடமை ஆகம். ஐவேளை தொழுகையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த படி தொழுவதுதான் சரியான முறையாகும். அதை இந்த நூலில் நாகூர் சா.அப்தூர்ரஹீம், அழகிய முறையில் ஆதாரத்துடன் விளக்கியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 4/12/19 இந்தப் […]

Read more

வியாசர் அறம்

வியாசர் அறம், நல்லி குப்புசாமி செட்டியார், பிரெய்ன்பேங்க், விலை 200ரூ. வாழ்க்கைக்குத் தேவையான நல்ல கருத்துகளை, அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் போலக் கொண்டு இருக்கும் மகாபாரதத்தில் இருந்து அறம் சார்ந்த சிறந்த செய்திகளைத் தாங்கியுள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை ருசிகரமாகப் படிக்கும் வகையில் தந்து இருக்கிறார், ஆசிரியர். மகாபாரதத்தில் வியாசர் கூறி இருக்கும் கதைகளில், 60 கதைகள் இந்த நூலில் இடம் பெற்று இருக்கின்றன. ஒவ்வொரு கதைக்கும் முகப்பு வாசகம் கொடுத்து இருப்பது, அந்தக் கதையைப் படிக்கத் தூண்டும் அம்சமாக அமைந்து […]

Read more
1 139 140 141 142 143 505