க.நா.சு. கவிதைகள்

க.நா.சு. கவிதைகள், பதிப்பாசிரியர்: இளையபாரதி, விலை: ரூ.165 புதுக்கவிதையின் தந்தையாக ந.பிச்சமூர்த்தி பொதுவில் அறியப்படுகிறார்; பாரதிக்குப் பிறகு வசனகவிதையை முயன்ற கு.ப.ராவும் புதுமைப்பித்தனும் முன்னோடிகள். ஆனால், புதுக்கவிதை என்ற பெயரை அந்த வடிவத்துக்குப் புனைந்ததோடு மட்டுமின்றி புதுக்கவிதைக்கு, இருபதாம் நூற்றாண்டு இந்திய, தமிழ் வாழ்க்கையின் நவீனத்தையும் லட்சணங்களையும் அழகியலையும் ஏற்றியவர் க.நா.சுப்ரமணியம். புதுக்கவிதை தன்னை நிறுவிக்கொண்ட கதை அவ்வளவு எளிதானதல்ல. இலக்கண வயப்பட்ட சட்டகங்களிலிருந்து மட்டுமல்ல, பழமையின் இறுகிய தடைகொண்ட மனோபாவங்களிலிருந்தும், சிந்தனை மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பெற்ற உருவம் புதுக்கவிதை. ஒரு உயிர் […]

Read more

சங்கரர் என்கிற புரட்சிக்காரர்

சங்கரர் என்கிற புரட்சிக்காரர், எம்.என்.கிருஷ்ணமணி; தமிழில்: க.ஜெயராமன், சந்தியா பதிப்பகம்,  பக்.464, விலை ரூ.450. Shankara: The revolutionary என்று வழக்குரைஞர் எம்.என். கிருஷ்ணமணி எழுதிய ஆங்கில மூலத்தைத் தமிழில் க.ஜெயராமன் (87) அவர்கள் சங்கரர் என்கிற புரட்சிக்காரர் என்று மொழிபெயர்த்திருக்கிறார். இப்புத்தகத்தின் தலைப்பிற்கேற்ப ஆதிசங்கரரின் புரட்சிகரமான அத்வைத தத்துவங்களை அலசியிருக்கும் இந்நூலில், அவரின் தெய்வீகமான ஆச்சாரியர் என்னும் குரு பட்டத்தின் புனிதம் கெடாமல் அற்புதங்கள் நிகழ்த்தியதையும் ஒருசேர அலசப்பட்டிருக்கிறது. சங்கரர் வாழ்ந்த காலத்தைக் கணக்கிடும் அத்தியாயம் மிகவும் விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்டிருக்கிறது. சங்கரர் வாழ்ந்த […]

Read more

தித்திக்கும் நினைவுகள்

தித்திக்கும் நினைவுகள்,  ஏ.ஆர்.எஸ், ஏ.ஆர்.சீனிவாசன், பக்.296, விலை ரூ.200 . ஒய்.ஜி.பார்த்தசாரதி மூலமாக நாடக உலகில் நடிகராக அறிமுகமான ஏ.ஆர்.எஸ்., தனது 50 ஆண்டு கால நாடக, திரையுலக அனுபவங்களைச் சுவைபட எழுதியிருக்கிறார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெயலலிதா, சோ, வீணை எஸ்.பாலசந்தர் ஆகியோருடன் அவர் பழகிய அனுபவங்களைப் பதிவு செய்திருப்பது மிகவும் சுவாரஸ்யம். நவராத்திரி படத்தில் ஒன்பது வேடங்களில் நடித்தது குறித்து சிவாஜியிடம் ஏ.ஆர்.எஸ்.பேசும்போது, டம்பாச்சாரி நாடகத்தில் சாமண்ணா 11 வேடங்களைப் போட்டிருக்கிறார் என்று சிவாஜி அளித்த பதிலில் இருக்கும் அடக்கம் வியக்க வைக்கிறது. பராசக்தி […]

Read more

கம்பரச ஆராய்ச்சி

கம்பரச ஆராய்ச்சி, கு.பாலசந்திர முதலியார், செண்பகா பதிப்பகம், விலை 150ரூ. கம்பரசம் என்ற பெயரில் அறிஞர் அண்ணா எழுதிய புத்தகத்தை மறுக்கும் விதமாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. அண்ணா எழுதிய 9 பிரிவுகளில் உள்ள ஒவ்வொரு கருத்தையும் தக்க காரணங்களுடன் மறுப்பதோடு, கம்பரின் கவிரசம், கவித்துவம், கம்பசிருஷ்டி, கம்ப சூத்திரம் ஆகியவற்றையும் இந்த நூல் ஆய்வு நோக்கத்துடன் தந்து இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 27/3/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000028036.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

நகைச்சுவை குதிரையில் என் சிந்தனைப் பயணம்

நகைச்சுவை குதிரையில் என் சிந்தனைப் பயணம், திண்டுக்கல் ஐ. லியோனி, அசசி பதிப்பகம், பக். 204, விலை 180ரூ. வாழ்வியல் குறித்த சிந்தனைகள்: பட்டிமன்றங்களில் நகைச்சுவையால் பலரையும் ஈர்த்து வரும் லியோனி எழுதிய,  கட்டுரைகள் அடங்கிய இந்நுால் அவரது முதல் நுால். பல எடுத்துக்காட்டுகள், வழித் தீட்டப்பட்ட கட்டுரைகள் படிப்போருக்கு நல்ல விருந்து. பேச்சுக் கலை பற்றிக் குறிப்பிடும்போது, ‘நல்லதைப் பேசுவோம்; நன்றாகப் பேசுவோம்’ என்ற அடிப்படையில் எழுந்த அக்கட்டுரை, சூழ்நிலைக்கு ஏற்ப எவ்வாறு ஒருவர் பேச வேண்டும் என்பதைப் பல உதாரணங்களோடு விளக்குகிறது. […]

Read more

வன்கொடுமைக்கு உட்பட்டவனின் பிராது

வன்கொடுமைக்கு உட்பட்டவனின் பிராது, பவித்ரா நந்தகுமார், மணிமேகலைப் பிரசுரம், விலை 100ரூ. இந்த நூலில் இடம் பெற்றுள்ள 17 சிறுகதைகளும், உணர்ச்சிப் பிரவாகமாக ஜொலிக்கின்றன. ஆசிரியரின் வித்தியாசமான மொழி நடை உயிர்ப்புடன் கூடி, அத்தனைக் கதைகளுக்கும் கூடுதல் சுவாரசியத்தைக் கொடுக்கின்றன. அன்றாடம் வாழ்வில் சந்திக்கும் யதார்த்தமான பிரச்சினைகளை காட்சிப்படுத்தி இருக்கும் ஆற்றலால் நம்மை பிரமிக்க வைத்துவிடுகிறார். நன்றி: தினத்தந்தி, 27/3/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வேர்களுக்கு வெளிச்சம்

வேர்களுக்கு வெளிச்சம், சென்னை மாநாகராட்சி முன்னாள் மேயர் சைதை சா.துரைசாமி, தொகுப்பு ஆர்.பி.சங்கரன், மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ்.அகடாமி, விலை 25ரூ(மலிவு விலை பதிப்பு) பன்முகத்திறன் கொண்ட எம்.ஜி.ஆரை இன்றைக்கும் தெய்வமாகப் போற்றி வரும் பல லட்சக்கணக்கான உள்ளங்கள் உலகம் முழுவதும் வசித்து வருகின்றனர். தொடக்க காலத்தில் இருந்தே எம்.ஜி.ஆரின் வெற்றிக்காக உடல், பொருள், ஆவியை தியாகம் செய்தவர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் மனித நேய அறக்கட்டளை செய்திருக்கும் முதல் கட்டப்பதிவுதான் இந்த நூல். எம்.ஜி.ஆரின் புகழை பரப்பி வந்த ஏடுகள் மற்றும் […]

Read more

தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?

தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?, கி.வீரமணி, திராவிடர் கழகம், விலை: ரூ.180 திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி எழுதியிருக்கும் ‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்’ என்ற புத்தகம், 270 பக்கங்களில் 20 அத்தியாங்களில் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தமிழர்களின் பண்பாடு, கலை, இலக்கியம், வாழ்வியல் ஆகியவை மேம்பட பெரியார் செய்த மகத்தான பங்களிப்புகளைப் பேசுகிறது. தமிழ், தமிழர் முன்னேற்றத்தில் அவருக்கு இருந்த ஓயாத அக்கறையையும், அதற்கு அவர் செலுத்திய அயராத உழைப்பையும் விவரிக்கிறது. பெரியாரின் உரைகள், ‘விடுதலை’, ‘குடிஅரசு’ இதழ்களில் எழுதிய கட்டுரைகள், தலையங்கங்கள் […]

Read more

தமிழக நாடார்கள்

தமிழக நாடார்கள், இராபர்ட் எல். ஹார்டுகிரேவ், தமிழில் எஸ்.டி.ஜெயபாண்டியன், மீள்பார்வை பக்தவத்சல பாரதி, வெளியீடு அடையாளம், விலை 480ரூ. நாடார்கள் அரச பரம்பரை சேர்ந்தவர்கள் என்று ஆங்காங்கே கூறப்பட்டு இருந்தாலும் இந்த ஆராய்ச்சி புத்தகத்தின் நோக்கம் அது அல்ல. தனது ஆராய்ச்சி பட்டத்துக்காக நாடார் சமுதாயத்தை பற்றி ஆய்வு மேற்கொண்ட ஆசிரியர் 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து நாடார்கள் பற்றிய ஆய்வை தொடங்கி இச்சமூகத்தின் முன்னேறத்தை அழகாக தொகுத்து வழங்கி உள்ளார். நாடார்ஸ் ஆப் தமிழ்நாடு த பொலிடிகல் கல்ச்சர் ஆப் எ கம்யூனிடி […]

Read more

நான் எப்படி எழுதுகிறேன்

நான் எப்படி எழுதுகிறேன், உம்பர்ட்டோ ஈகோ கட்டுரைகள், தமிழில்: க.பஞ்சாங்கம், அருட்செல்வர், பக்.128, விலை ரூ.125. உம்பர்ட்டோ ஈகோ இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். ஆசிரியப் பணி, ஊடகப் பணி, கட்டடக்கலைத் துறையில் பணி என பல பணிகளைச் செய்தவர். எனினும் குறியியலில் ஆர்வம் உள்ளவர். குறியியல் கோட்பாடு என்ற புத்தகத்தை எழுதியவர். இலக்கியம் சார்ந்து அவர் எழுதிய நூலில் உள்ள ஏழு கட்டுரைகளின் தமிழாக்கமே இந்நூல்.கணினியுகத்திலும் இலக்கியத்தின் தாக்கம் இருக்க முடியும். இலக்கியம் மனிதமனங்களை, மனிதர்களின் செயல்களை உருவாக்கும். இலக்கியம் நம் சொந்தக் கதைகளைத்தான் […]

Read more
1 222 223 224 225 226 505