பாவை விளக்கு

பாவை விளக்கு, அகிலன், தாகம் வெளியீடு, விலை 400ரூ. புகழ் பெற்ற எழுத்தாளர் அகிலன் படைத்தவற்றில் தனிச்சிறப்பு பெற்ற நாவல், பாவை விளக்கு. எழுத்தாளர் தணிகாசலம், அவர் சந்தித்த செங்கமலம், உணர்ச்சிப் பிழம்பாக அமைந்த உமா, தணிகாசலத்தின் மனைவி கவுரி, உமாவின் தந்தை சந்திரசேகரன் போன்ற கதாபாத்திரங்களின் உணர்ச்சிப் போராட்டத்தைக் கொண்டு விறுவிறுப்பாக பின்னப்பட்ட இந்த நாவல், யதார்த்தமான நிகழ்வுகளைக் கொண்டது என்பதால், படிக்க சுவாரசியமாக இருக்கிறது. தணிகாசலத்துக்கும் உமாக்கும் இடையே நடைபெறும் மனதளவிலான போராட்டம் மிக அருமையாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. முழு நீள […]

Read more

காசி கதைகள்

காசி கதைகள், மயிலம் அய்யப்பன், காவ்யா, விலை160ரூ. நூலின் பெயர் காசி கதைகள் என்றாலும், இதில் இடம் பெற்றுள்ள அனைத்து கதைகளும் காசு, துட்டு, பணம் தொடர்பான சம்பவங்களால் உருவாக்கப்பட்டுள்ளன. மயிலம் வட்டாரத்து மக்களின் அன்றாட வாழ்வீயல், அவர்களது குடும்பம், வழிபடும் தெய்வம் என்று பல அம்சங்களை இந்தக் கதைகள் தாங்கி இருப்பதால் படிக்க சுவாரசியமாக இருக்கிறது. நீரோட்டம் போன்று அமைந்துள்ள நடை, இந்த நூலுக்கு வலுவூட்டுகிறது. நன்றி: தினத்தந்தி, 6-3-19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000028021.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

செம்மொழித் தமிழ் நூல்கள் பதிப்புரைத் தொகுப்பு

செம்மொழித் தமிழ் நூல்கள் பதிப்புரைத் தொகுப்பு(தமிழ் பதிப்பு வரலாற்று ஆவணம்) – பதிப்பாசிரியர் கா.அய்யப்பன்; காவ்யா, பக்.626. விலை ரூ.600. ஒரு நூலைப் பதிப்பிக்கும்போது வாழ்த்துரை, பதிப்புரை, முன்னுரை, ஆராய்ச்சியுரை போன்றவை இருப்பது சிறப்பு. இவை அனைத்தும் இல்லை என்றாலும், பதிப்புரை கட்டாயம் இடம்பெற வேண்டும். அந்த வகையில், தமிழ் மொழியில் உள்ள செவ்வியல் இலக்கியங்களான தொல்காப்பியம், அகநானூறு, குறுந்தொகை, புறநானூறு, இன்னா நாற்பது, ஆசாரக்கோவை, கைந்நிலை முதலிய நூல்களுக்குப் பதிப்புரை, மதிப்புரை, முகவுரை எழுதிய தமிழறிஞர்களின் பதிவுளைத் தொகுத்துரைக்கிறது இந்நூல். கு.சுந்தரமூர்த்தியின் ஆராய்ச்சி முன்னுரையில் […]

Read more

நடுகல்

நடுகல், தீபச் செல்வன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 180ரூ. நினைவுகளை இழப்பதற்கில்லை தொண்ணூறுகளின் தொடக்கத்திலிருந்து முள்ளிவாய்க்கால் ஊடாக, ஈழத்தில் தமிழ் மக்கள் ஒடுக்கப்படும் இக்காலத்தையும் உட்படுத்திய‌ முப்பது ஆண்டு காலவெளியில் பயணிக்கிறது தீபச்செல்வனின் ‘நடுகல்’ நாவல். இதுவே ஈழ மக்களின் இருப்பைக் கேள்விக்குட்படுத்திய காலம், ஈழ மக்களை ஏதிலிகளாய் அலையச் செய்த காலம், முள்ளிவாய்க்கால் பேரவலத்தை ஏந்தச் செய்த காலம். இக்காலத்தினூடே புலிகள் இயக்கம், ஈழ இயற்கை வளம், பண்பாட்டுக் கலாச்சாரம் போன்றவற்றைப் பேசிச் செல்கிறது இந்நாவல். போர் வாழ்க்கையை, முள்வேலி முகாம்களின் […]

Read more

ரசவாதி

ரசவாதி, பாலோ கொயலோ, தமிழில் நாகலட்சுமி சண்முகம், சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற பாலோ கொயலோவின் ‘தி அல்கெமிஸ்ட்’ நாவலை ‘ரசவாதி’ என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார் நாகலட்சுமி சண்முகம். ஆடு மேய்க்கும் சிறுவன் சான்டியாகோ, ஒரு புதையலைத் தேடி பிரமிடுகளை நோக்கி மேற்கொள்ளும் பயணமாக விரிகிறது இந்நாவல். இதுவரை 8 கோடிக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன. என்ன காரணம்? சகுனம், கனவுகள், எதேச்சை போன்ற நாம் பெரிதாகப் பொருட்படுத்தாத விஷயங்களை சான்டியாகோ தன் வெற்றிக்கான வழிகாட்டியாக எடுத்துக்கொள்கிறான். இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது; சுவாரசியமற்ற […]

Read more

புத்தரின் டூத் பேஸ்ட்டில் உப்பு இல்லை

புத்தரின் டூத் பேஸ்ட்டில் உப்பு இல்லை, மானா பாஸ்கரன், சாக்பீஸ் வெளியீடு. எளிமையின் ருசி வாழ்க்கையை ஆழ்ந்து ரசிக்கும் மனதின் பார்வையில் எந்த விஷயமும் சுவை மிக்கதாக அமைந்துவிடும். பால்யகால நினைவுகள், அன்றாடக் குழப்பங்கள் எனப் பல விஷயங்களை இலகுவான மொழியில் பேசும் மானா பாஸ்கரனின் இப்புத்தகம், அமைதியான நீரோட்டத்தின் குளிர்ச்சியை உணர்த்தும் சுவையான படைப்பு. ‘பசி வந்தாலும் பறக்காத பத்து’ எனும் ஆளுமைகளின் பட்டியலில் புத்தர், அம்பேத்கர், பெரியார் தொடங்கி வடிவேலு வரை இடமளிக்கிறார் மானா. சின்னக்குத்தூசியின் அசாத்தியமான பெருந்தன்மை, கிருஷ்ணம்மாள் ஜெகநாதனின் […]

Read more

காவிரி அரசியல்

காவிரி அரசியல், கோமல் அன்பரசன், தமிழ் திசை வெளியீடு, உரிமைப் போராட்ட வரலாறு நீதிக்கான போராட்டத்தில் காவிரியின் கடைமடையான தமிழ்நாடு தத்தளித்துக்கொண்டிருக்கிறது. காவிரி நீர்ப்பகிர்வு சிக்கலுக்கான காரணங்கள், அதைக் களைவதற்கான முயற்சிகள், அவற்றின் வெற்றி-தோல்விகளை விரிவாக இந்நூலில் பேசுகிறார் ஊடகவியலாளரும் காவிரிக் கரையைச் சேர்ந்தவருமான கோமல் அன்பரசன். காவிரி நதிநீருக்கான உரிமைப் போராட்ட வரலாற்றைப் பேசுகிறது! நன்றி: தமிழ் இந்து, 20/4/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 […]

Read more

இராமானுஜர் – எளியோரின் ஆச்சாரியர்

இராமானுஜர் – எளியோரின் ஆச்சாரியர், கன்யூட்ராஜ், தாமரை பப்ளிகேஷன்ஸ், பக். 211; விலை ரூ.175. ஸ்ரீ ராமானுஜரை சமயவாதி என்பதைவிட, சீர்திருத்தவாதி என்று குறிப்பிடப்பட்டு ஆராயும் போக்கு தற்காலத்தில் அதிகரித்துள்ளது. முதன்மையாகவும் முற்றிலுமாகவும் அவர் சமயவாதியே. சீர்திருத்தம் அவர் தொண்டில் ஒரு பகுதியே. அவரது சமயநெறிச் சிந்தை மூலமே முதன்மையாக நினைவுகூறப்படுகிறார். சமயத்தைப் பிரித்து ராமானுஜரை அடைந்துவிட முடியாது என்பதை அவரது வாழ்வை ஊன்றிப் பார்ப்பவர்கள் அறிவர். இந்த நூலும் ஒருவகையில் அதனை உறுதிப்படுத்துகிறது. சமயத் துறவிகள் என்றாலே சமூக வாழ்க்கையிலிருந்து வெளியேறி கண்காணாது […]

Read more

தமிழ் அறிஞர்கள்

தமிழ் அறிஞர்கள், ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், பக்.440, விலை ரூ.500. தமிழின் இன்றைய நிலைக்குக் காரணமான தமிழ்அறிஞர்கள் 36 பேர் தமிழுக்காற்றிய அரும்பணிகளைப் பற்றி விரிவாக இந்நூல் எடுத்துரைக்கிறது . உ.வே.சாமிநாத அய்யர், அ.ச.ஞானசம்பந்தன், ஒளவை துரைசாமிப் பிள்ளை, பாரதியார், பாரதிதாசன், தேசிக விநாயகம் பிள்ளை, ஜி.யு.போப், தேவநேயப் பாவாணர், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், வ.வே.சு.ஐயர், நீதியரசர் மு.மு.இஸ்மாயில் உள்ளிட்ட முப்பத்தாறு தமிழறிஞர்களின் வாழ்க்கைச்சம்பவங்கள், அவர்கள் எழுதிய நூல்கள், அவர்களின் கருத்துகள், அவர்கள் பங்கு கொண்ட இயக்கங்கள் என விரிந்து செல்கிறது. நூலாசிரியர் எழுதிய நீண்ட […]

Read more

கர்மா தர்மா

கர்மா தர்மா, க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ்,  பக்.64, விலை ரூ.100. அறிவியல் சார்ந்த நிறைய நூல்களை எழுதியிருக்கும் நூலாசிரியர், ஆன்மிகம் சார்ந்து இந்நூலை எழுதியுள்ளார். செய்வது அனைத்தும் கர்மம், அதன் பலனை நிச்சயிப்பது தர்மம் என்ற கருத்தின் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. புதுப்புது இயற்பியல், ஆகாயவியல் விதிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் தோறும் அவர்கள் ஈச்வரனின் இயக்க நியதிகளைத்தான் சிறிது புரிந்து கொள்கிறார்கள். விஞ்ஞானம் என்பதே ஈச்வரனை அறியும் அறிவே. விஞ்ஞானிகள் ஈச்வரனைத்தான் ஆராய்கிறார்கள். ஈச்வரனைப் புரிந்து கொள்வதற்காக கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், காஸ்மாலஜி போன்ற படிப்புகளை எல்லாம் […]

Read more
1 221 222 223 224 225 505