நேரா யோசி!

நேரா யோசி!,  சுதாகர் கஸ்தூரி, பினாக்கிள் புக்ஸ், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், பக்.144, விலை ரூ.150. மாத்தி யோசி என்ற சிந்தனை இன்றைய சமூகத்தில் எப்படி பலரின் பார்வையில் வக்கிரத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று நியாயமாக அங்கலாய்க்கும் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் கூறும் செய்தி – மாத்தி யோசி என்பதற்கு முன்பாக, நேரா யோசிப்பது எப்படி என்று அறிந்து கொள் என்பதுதான். அந்தச் சிந்தனையைத் தூண்டும் 24 அருமையான கட்டுரைகளை – இல்லையில்லை – பார்வைகளை நமக்குத் தருகிறார்! நேராக யோசிப்பதற்கும் ஒன்றின்மேல் எண்ணத்தைக் […]

Read more

நாம் ஏன் அந்தத் தேநீரைப் பருகவில்லை?

நாம் ஏன் அந்தத் தேநீரைப் பருகவில்லை? (சிறு கதைகள்)- உமா பார்வதி; யாவரும் பப்ளிஷர்ஸ், பக்.144, விலை ரூ.160. பல்வேறு நாளிதழ்களில், மாத இதழ்களில் வெளியான 12 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். எல்லாக் கதைகளும் கதைக் கருவில் ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கின்றன. அம்மாவோடு நாளைக் கழிக்க ஆசைப்படும் பத்து வயது சிறுவன் சஞ்சுவின் ஏக்கம் ஒருபுறம்; ஒரே மகனின் ஏக்கத்தையும், தனிமையையும் போக்க நினைத்தாலும், அலுவலகத்தில் கெடுபிடி, ஆடிட்டிங் என்று நீண்ட தூரம் மின்சார ரயிலில் பயணம் செய்து, மனமும் உடலும் சோர்ந்து […]

Read more

உலகத்துச் சிறந்த நாவல்கள்

உலகத்துச் சிறந்த நாவல்கள் (உலகப் புகழ்பெற்ற 15 நூல்களின் அறிமுகம்) – க.நா.சுப்ரமண்யம்.முல்லை பதிப்பகம்,பக்.368, விலை ரூ.250. உலக மொழிகளில் வரும் அத்தனை இலக்கியப் படைப்புகளையும் மூலமொழிகளில் ஒரு வாசகனால் படித்துவிட முடியாது. அவனறிந்த மொழியில் நாவலின் மொழிபெயர்ப்பு கிடைத்தால் மட்டுமே படிப்பது சாத்தியம். அதை சாத்தியமாக்கியுள்ளார் தமிழ் எழுத்தாளரும், விமர்சகருமான க.நா.சுப்ரமண்யம். உலக இலக்கிய நாவல் பரப்பில் எத்தனை விதமான சிருஷ்டிகள் இருக்கின்றன என்பதைத் தமிழ் வாசகர்கள் அறிந்துகொள்ள பயன்படும் என்ற வரிகளுடன் 15 உலகத்துச் சிறந்த நாவல்களை அறிமுகம் செய்து வைக்கிறார். […]

Read more

உலகத்துச் சிறந்த நாவல்கள்

உலகத்துச் சிறந்த நாவல்கள் (உலகப் புகழ்பெற்ற 15 நூல்களின் அறிமுகம்), க.நா.சுப்ரமண்யம், முல்லை பதிப்பகம், பக்.368, விலை ரூ.250. உலக மொழிகளில் வரும் அத்தனை இலக்கியப் படைப்புகளையும் மூலமொழிகளில் ஒரு வாசகனால் படித்துவிட முடியாது. அவனறிந்த மொழியில் நாவலின் மொழிபெயர்ப்பு கிடைத்தால் மட்டுமே படிப்பது சாத்தியம். அதை சாத்தியமாக்கியுள்ளார் தமிழ் எழுத்தாளரும், விமர்சகருமான க.நா.சுப்ரமண்யம். உலக இலக்கிய நாவல் பரப்பில் எத்தனை விதமான சிருஷ்டிகள் இருக்கின்றன என்பதைத் தமிழ் வாசகர்கள் அறிந்துகொள்ள பயன்படும் என்ற வரிகளுடன் 15 உலகத்துச் சிறந்த நாவல்களை அறிமுகம் செய்து […]

Read more

கற்றது விசில் அளவு

கற்றது விசில் அளவு, ஆர்.பாண்டியராஜன், கற்பகம் புத்தகாலயம், பக்.128, விலை ரூ.100. ஒரு திரைப்பட இயக்குநரின் நுட்பம், வாழ்க்கையை அவதானிப்பதுதான். அதை எழுத்திலும் காட்டியுள்ளார் ஆர். பாண்டியராஜன். ஒரு கலைஞன் எப்படி அவரது ரத்த உறவுகளுடன் நம்மையும் சேர்த்துக்கொண்டு நடத்திச் செல்வாரோ, அத்தகைய தமிழ் நடை எல்லாப் பக்கங்களிலும் உள்ளன. சைதாப்பேட்டையில் எளிய குடும்பத்தில் பேருந்து ஓட்டுநரின் மகனாகப் பிறந்து, சிறு வயது முதல் இளமைப் பருவம் வரை வறுமையை, அதனால் வரும் துன்பத்தை இன்பத்தோடு அனுபவித்ததை இவர் சொல்லும் பாங்கு அலாதியானது. பல்வேறு […]

Read more

அப்படியா(ஆன்மிகக் கேள்வி-பதில்)

அப்படியா(ஆன்மிகக் கேள்வி-பதில்),  ஈச நேசன் மகஸ்ரீ, மணிவாசகர் பதிப்பகம், பக்.96, விலை ரூ.75. ஓர் ஆன்மிக மாத இதழில் மாதம்தோறும் வெளியான கேள்வி – பதில்கள் (200) இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. சிவன் கோயிலில் சண்டீஸ்வரர் சந்நிதியில் கை தட்டுவது ஏன்? எலும்பிச்சை விளக்கு ஏற்றுவதன் ஐதீகம் என்ன? தெய்வத்தை தினமும் பூஜை செய்தாலும் சோதனை ஏற்படுவது ஏன்? ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை வந்தால் சுபநிகழ்ச்சிகள் நடத்தலாமா? பூஜைக்குரிய பாத்திரங்களை எந்தெந்த நாள்களில் துலக்க வேண்டும்? ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்து […]

Read more

1000 கடல் மைல்

1000 கடல் மைல், வறீதையா கான்ஸ்தந்தீன்,  தடாகம், விலை 250ரூ. மீனவர்களை ஏதோ மீன்பிடித் தொழில் செய்பவர்கள் என்ற ரீதியிலேயே புரிந்துகொள்கிறது பொதுப்புத்தி. ஆனால், காட்டைச் சார்ந்து வாழும் பழங்குடிகளைப் போல் கடலைச் சார்ந்து வாழும் பழங்குடிகளாக உள்ள மீனவர்களை அரசுகள் எப்படிப்பட்ட நெருக்கடிகளுக்குத் தள்ளுகின்றன என்பதை விரிவாகப் பேசுகிறது இந்தப் புத்தகம். நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027320.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

கையிலிருக்கும் பூமி

கையிலிருக்கும் பூமி, சு.தியடோர் பாஸ்கரன், உயிர்மை வெளியீடு, விலை 600ரூ. மூத்த சூழலியல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் தமிழில் சூழலியல் எழுத்துக்குத் தனி அடையாளம் பெற்றுத் தந்தவர். தமிழில் அவர் எழுதிய 100 கட்டுரைகள் அடங்கிய இந்த முழுத் தொகுப்பு, முதன்மையான சூழலியல் ஆவணமாக வெளியாகியுள்ளது. நன்றி: தி இந்து, 10/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027340.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மரியா மாண்டிசோரியின் மனிதன் உருவாகிறான்

மரியா மாண்டிசோரியின் மனிதன் உருவாகிறான்,  தமிழில்: மீனாட்சி சிவராமகிருஷ்ணன், முல்லை பதிப்பகம், பக்.136, விலை ரூ.100. மாண்டிசோரி பள்ளிகள் என்றால் நமக்கு சிறுகுழந்தைகளுக்கான பள்ளிகளே நினைவுக்கு வரும். ஆனால் வெளிநாடுகளில் மாண்டிசோரி கல்விமுறையைப் பின்பற்றுகிற கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களும் உள்ளன. ஹாலந்தில் 5 பல்கலைக்கழகங்கள் உள்ளன. பாரிஸில் தனியார் மாண்டிசோரி கல்லூரி உள்ளது. இந்த நூல் மாண்டிசோரி கல்விமுறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப கல்வி கற்கும் முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று சொல்லும் இந்நூல், வெறும் வேலைக்கான கல்வி என்பதில் இருந்து […]

Read more

ராஜ் கௌதமன் நூல்கள் வரிசை

ராஜ் கௌதமன் நூல்கள் வரிசை, என்.சி.பி.ஹெச். வெளியீடு, விலை 1670ரூ. சங்க இலக்கியங்கள், புதுமைப்பித்தன், வள்ளலார் என்று வெவ்வேறு ஆய்வுத் தளங்களைத் தனித்த பார்வையோடு அணுகியவர் ராஜ் கௌதமன். புனைவாகவும் தன்வரலாறாகவும் அமைந்த அவரது சிலுவைராஜ் தொடர் வரிசை நூல்கள் அவரது இலக்கிய எழுத்தாளுமைக்கு உதாரணங்கள். ஏற்கெனவே வெளிவந்து பதிப்பில் இல்லாத புத்தகங்களையும், புதிய புத்தகங்களையும் (9 புத்தகங்கள் – ஆய்வு நூல்கள் மற்றும் ‘காலச்சுமை’ நாவல் உட்பட) என்சிபிஹெச் பதிப்பகம் கொண்டுவந்திருக்கிறது. நன்றி: தி இந்து, 10/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more
1 243 244 245 246 247 505