காகமும் நான்கு மீன்களும்

காகமும் நான்கு மீன்களும், ஆர்.வி.பதி, நிவேதிதா பதிப்பகம், விலை: ரூ.65. சிறுவர்களுக்கான பல நூல்களைப் படைத்திருக்கும் நூலாசிரியர் எழுதிய 10 சிறார் கதைகளின் தொகுப்பு இது. எளிய நடையில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு கதையும் குழந்தைகளுக்கான நீதிநெறி போதனைகளை வழங்குகிறது. கதைகளுக்கான ஓவியங்களை ஓவியர் கி.சொக்கலிங்கம் வரைந்துள்ளார். நன்றி: தமிழ் இந்து, 5/2/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வழிகாட்டும் வள்ளுவம்

வழிகாட்டும் வள்ளுவம், பழ.சபாரெத்தினம், பாரதி புத்தகாலயம், விலை: ரூ.165. 1,330 குறள்களில் வாழ்வுக்கு வழிகாட்டுவனவாகத் தன் கண்ணுக்குப்பட்ட 62 குறள்களைத் தேர்ந்தெடுத்து தன்னுடைய சொந்த வாழ்க்கை அனுபவங்களையும் இலக்கிய நூல்களிலிருந்து மேற்கோள்களையும் இணைத்து அவற்றுக்கு நூலாசிரியர் விளக்க உரை எழுதியுள்ளார். நன்றி: தமிழ் இந்து, 5/2/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மகிழ்ச்சி நிறைந்த மணவாழ்க்கைக்கு மணியான யோசனைகள்

மகிழ்ச்சி நிறைந்த மணவாழ்க்கைக்கு மணியான யோசனைகள், பி.எஸ்.ஆர்.ராவ், நர்மதா பதிப்பகம், விலை – ரூ.100, வாழ்க்கைத் துணையை எப்படித் தேர்ந்தெடுப்பது, தம்பதிகள் அன்புடன் இருக்க என்ன செய்ய வேண்டும். ருசியாகச் சமைப்பது எப்படி, சண்டையைத் தவிர்ப்பது எப்படி என திருமண உறவில் இருப்பவர்களுக்கு எழக்கூடிய பல கேள்விகளுக்கு இந்நூலில் விரிவாக விடையளிக்கப்பட்டுள்ளது. நன்றி: தமிழ் இந்து, 5/2/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000006889_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

தெய்வங்கள் கேட்கவரும் தேனிசைப் பாடல்கள்

தெய்வங்கள் கேட்கவரும் தேனிசைப் பாடல்கள், கவிஞர் மு.தவசீலன், வானதி பதிப்பகம், விலை: ரூ.120. தமிழர் வழிபாட்டு மரபில் பக்திப் பாடல்களுக்குத் தனித்த இடம் உண்டு. கவிஞர் மு.தவசீலன் எழுதியுள்ள பக்திப் பாடல்களின் தொகுப்பு இந்நூல். திரைப்படங்களிலும் பாடல்களை எழுதியிருப்பவர் என்றாலும் பக்திப் பாடல்களுக்காகவே அறியப்படுபவர் தவசீலன். அவர் எழுதிய பாடல்களை பி.சுசீலா, வாணி ஜெயராம், எல்.ஆர்.ஈஸ்வரி, சூலமங்கலம் சகோதரிகள், சீர்காழி சிவசிதம்பரம், கே.வீரமணி உள்ளிட்ட புகழ்பெற்ற பல பாடகர்கள் பாடியுள்ளனர். குன்னக்குடி வைத்தியநாதன், வி.குமார், எச்.எம்.வி. ரகு உள்ளிட்டோர் இசையமைத்துள்ளனர். பண்டிகை நாட்களில் வீடுகளிலும் […]

Read more

பனையடி

பனையடி, இரா.செல்வம், என்.சி.பி.எச். வெளியீடு, விலை: ரூ.200. அபுனைவில் தொடங்கிய நாவலாசிரியர் இரா. செல்வத்தின் எழுத்து வாழ்க்கை புனைவில் பூரணம் பெற்றுள்ளது. ஆனால், இந்த நாவல் முழுவதுமே புனைவு என்றும் கொண்டுவிடலாகாது. பெயர்களும் இடங்களும் சம்பவங்களும் கருத்துகளும் மாற்றிவைக்கப் பட்டிருக்கலாம். ஒரு நாவலில் தன்வரலாற்றுத் தன்மைகள் இடம்பெறுவது குற்றம் அல்ல. வாசிப்பு ஈர்ப்பைக் கருத்தில் கொண்டு ஆடம்பரமும் அலங்காரமும் இல்லாத எளிய சொற்றொடர்களால் முழு நாவலுமே கட்டமைக்கப்பெற்றுள்ளது. சொந்த அனுபவங்களின் வலுவில் தனது இளம் பருவத்து வாழ்க்கையை புனைவாக்க முயன்றிருக்கிறார் நாவலாசிரியர். அந்த அனுபவப் […]

Read more

சைவ சமயம் – ஒரு புதிய பார்வை

சைவ சமயம் – ஒரு புதிய பார்வை, சிகரம் ச. செந்தில்நாதன், சந்தியா பதிப்பகம், விலை: ரூ. 250 சிந்துவெளி நாகரிகம் நம் கவனத்தில் பட ஆரம்பித்து நூறாண்டுகள் கடந்துவிட்டன. இந்த நூறாண்டுகளில் சிந்துவெளிப் பண்பாட்டுக்கும் தமிழர் பண்பாட்டுக்கும் இடையேயுள்ள உறவு பற்றிய ஆய்வுகளும் மிகத் தீவிரமாகக் களத்தில் முன்நிற்கின்றன. வடமொழியும் அதன் வேதங்களும் ஆட்சி செலுத்தும் முன்பே இந்த மண்ணில் நிலவிய நாகரிகம் தமிழர்களின் நாகரிகம் என்பதை நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வுகள் உறுதி செய்கின்றன. இவை அனைத்துக்கும் மேலாக சமீபத்திய கீழடி […]

Read more

நலம் நம் கையில் (இரண்டு பாகங்கள்)

நலம் நம் கையில் (இரண்டு பாகங்கள்), டாக்டர் கு.கணேசன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் வெளியீடு, விலை: ரூ. 380 (இரண்டு தொகுதிகளும் சேர்த்து)   மருத்துவ நூல்கள், சிறார் இலக்கியம் என்று 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருப்பவர் மருத்துவர் கு.கணேசன். அது மட்டுமல்லாமல் பல்வேறு நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் மின்னிதழ்களிலும் சுற்றிச்சுழன்று தொடர்ந்து எழுதிவருபவர் அவர். எளிய தமிழில் மருத்துவத்தை மக்களுக்குக் கொண்டுசெல்ல முடியும் என்று நிரூபித்திருப்பவரும்கூட. அவரது எழுத்துகளாலே தமிழர்கள் பலருக்கும் குடும்ப மருத்துவராகத் திகழ்கிறார். அவரது மற்றுமொரு முக்கியமான […]

Read more

நீராட்டும் ஆறாட்டும்

நீராட்டும் ஆறாட்டும், தொ.பரமசிவன், காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.75 புறவயமாகத் தமிழ்ப் பண்பாட்டைப் பேசும் வரலாற்று நூல்கள் தமிழில் அதிகளவில் எழுதப்பட்டுள்ளன. அகவயமாகத் தமிழரின் தொல் பண்பாட்டை ஆராயும் நூல்கள் மிக மிகக் குறைவாகவே எழுதப்படுகின்றன. அதில் ஒன்றுதான் தொ.பரமசிவனின் ‘நீராட்டும் ஆறாட்டும்.’ தமிழரின் புழங்குபொருள் சார்ந்தும் சடங்குகள் சார்ந்தும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். தொல் தமிழரின் பண்பாட்டு எச்சங்கள் இன்றும் நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றப்படுகின்றன. சில சிதைந்தும் மருவியும் தொடர்கின்றன. நாம் செய்யும் ஒவ்வொரு சடங்குக்குப் பின்னாலும் ஒரு […]

Read more

தலைவர்களை உருவாக்கிய தலைவர் பூபேந்திரநாத் தத்தா

தலைவர்களை உருவாக்கிய தலைவர் பூபேந்திரநாத் தத்தா, கே.சுப்ரமணியன், இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழகம்-சரோஜினி பதிப்பகம், விலை: ரூ.75. ‘வெய்ய சிறைக்குள்ளே புன்னகையோடு போம்/ ஐயன் பூபேந்த்ரனுக்கு அடிமைக்காரன்’ என பாரதியே வியந்து போற்றிய பூபேந்திரநாத் தத்தா, சுவாமி விவேகானந்தரின் இளைய சகோதரர். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக இளைஞர்களை அணிதிரட்டிய அனுசீலன் சமிதியின் உறுப்பினர் மட்டுமின்றி அதன் வெளியீடான ‘யுகாந்தர்’ இதழின் ஆசிரியர். பொறிபறந்த அவரது எழுத்துக்கு பிரிட்டிஷ் ஆட்சி ஓராண்டு கடுங்காவல் தண்டனை கொடுத்தது. சிறையிலிருந்து வெளியே வந்து, சகோதரி நிவேதிதா தேவியின் உதவியுடன் […]

Read more

மறக்கப்பட்ட திவான் கலிபுல்லாவும் புதுக்கோட்டை சமஸ்தான வரலாறும்

மறக்கப்பட்ட திவான் கலிபுல்லாவும் புதுக்கோட்டை சமஸ்தான வரலாறும், கே.எம்.சரீப், சமூக உயிரோட்டம் வெளியீடு, விலை 500ரூ. புதுக்கோட்டை சமஸ்தானத்தின் துணை ஆட்சியாளர், முதல் கவுன்சிலர், திவான் முதலான முக்கியப் பதவிகளை வகித்தவர் கலிபுல்லா. விளிம்புநிலை மக்களுக்காக சமஸ்தானத்தில் பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்திய முன்னோடி. அவற்றில் முக்கியமானவை, மதிய உணவுத் திட்டமும் தவணை முறைக் கடனில் வீட்டு மனைகள் அளிக்கும் திட்டமும். துரதிர்ஷ்டவசமாக, அவரைக் குறித்த பதிவுகள் அருகிவிட்டன. அவரை இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் வகையில் பல்வேறு தரவுகளைச் சேகரித்து நூல்வடிவம் வழங்கியிருக்கிறார் கே.எம். சரீப். […]

Read more
1 28 29 30 31 32 505