பகல் கனவு

பகல் கனவு, லா.ச. ராமாமிருதம், பாலாஜி பதிப்பகம், விலைரூ.130. வித்தியாசமான சிறுகதைகளின் தொகுப்பு நுால். இதில், 16 கதைகள் உள்ளன. வண்ணங்கள் தடவிய சொற்களால் ஆனது. ஒவ்வொரு சொல்லுக்கும் பல்லாயிரம் பொருள் கொள்ளும் வகையில் திறன் உட்பட்டது. மனக் குகையில் எழும் ஒலியின் வடிவத்தை விவரிப்பது. வாழ்வை மிகவும் நுட்பமாக கடந்து சென்று, கற்பனையாக, அனுபவமாக வெளிப்படுத்துகின்றன கதைகள். அன்பு, ஆசை, பக்தி, பாசம் என கதைகளின் உள்ளீடு கிறங்க வைக்கின்றன. சொற்சேர்க்கைகள் கவிதையாக பொழிகின்றன. வண்ணமயமான விளக்குகள் மனதுக்குள் ஒளிர்வது போன்ற தோற்றத்தை […]

Read more

திருவடி முதல் திருமுடி வரை

திருவடி முதல் திருமுடி வரை, அருண் சரண்யா, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.160 புத்தகத்தின் பெயரைப் பார்த்ததும் திருமாலும், பிரம்மனும் விஸ்வரூபம் எடுத்த சிவபெருமானின் அடியையும், முடியையும் காணச் சென்ற கதை தானே என்று நினைக்க வேண்டாம். திருவடி முதல், திருமுடி வரையான உடலின் ஒவ்வொரு உறுப்புகளைப் பற்றிய அரியின், சிவனின் திருவிளையாடல்கள் விளக்கப்படுகின்றன. சிறு சிறு கதைகளின் வழியே எளிமையாக மனதில் பதியும் வகையில் சொல்லப்பட்டுள்ளது. தன் இடையால் சிவபக்தனை திருத்திய திருமாலின் கதை சுவாரசியத்தைத் துாண்டும். ராதையின் அன்பை […]

Read more

நீதிமன்ற குறுக்கு விசாரணைகளும் விவரங்களும்

நீதிமன்ற குறுக்கு விசாரணைகளும் விவரங்களும், மேஜர் மொ.முத்துசாமி, மணிமேகலை பிரசுரம், விலைரூ.180. செய்திக்கு அப்பாற்பட்ட நிலையில் வழக்கு, குறுக்கு விசாரணை எவ்வாறு நடைபெறும் என்பதையும் விளக்கும் நுால். குறுக்கு விசாரணை கேள்விகளை வரிசையாகத் தந்துள்ளார். வழக்குகளுக்கான காரணங்களைக் குறிப்பிட்டு, அது எந்தத் தண்டனைச் சட்டத்திற்கு உட்பட்டது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். குற்ற வழக்கு, வாகன விபத்துகளில் எத்தகைய குறுக்கு விசாரணை நடக்கும் என எடுத்துரைக்கிறது. சாலையில் நடந்து செல்லும்போதே திடீரென ஒரு விபத்தையோ குற்றச்செயலையோ பார்க்க நேரிட்டு, அதன் காரணமாக நீதிமன்றித்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயம் […]

Read more

திருப்பாவை

திருப்பாவை, கவிஞர் பிரபாகர பாபு, தமிழ்க்கவி பதிப்பகம், விலைரூ.80. மார்கழி மாத விடியற்காலை நேரத்தில் பெண்களை எழுப்பி நீராடச் செல்வதாகப் பாடப் பெறும் திருப்பாவைக்கு எளிய உரை தரும் நுால். இயல்பான ஓட்டத்தில் செல்கிறது. சில சொற்களுக்குப் புதிய நோக்கில் பொருள் காண முற்பட்டுள்ளது. குறளை என்ற சொல், கோள் சொல்வதாகத்தான் மூலத்தில் உள்ளது. தீயசொல் என்று இதில் சுட்டப்பட்டுள்ளது. வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று என்பது ஆண்டாள் கால ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தும் தொடர். வெள்ளி சுக்கிரனையும், வியாழன் குருவையும் குறிக்கும். மார்கழி மாதத்தில் […]

Read more

இந்த நாள் வெற்றித் திருநாள் – பாகம் 1

இந்த நாள் வெற்றித் திருநாள் – பாகம் 1, சிந்தனைக் கவிஞர் கவிதாசன், குமரன் பதிப்பகம், விலைரூ.100 வெற்றி பெறத் துடிக்கும் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை, உற்சாகம் தரும் நுால். ஒருவரிடம் உள்ள குறைகளைச் சொல்லக் கூடாது; மாறாக நிறைகளைச் சொல்ல வேண்டும். நிறைகளைச் சொல்லி குறைகளைத் திருத்த முயல வேண்டும். முன்னேற்றத்திற்கு மூன்று வழிகள், ஆறுவது சினம், சொற்களின் அற்புதம், விழிப்புணர்வே வெற்றி, மகிழ்ச்சியின் ரகசியம், முயற்சியே மூலதனம், அச்சத்தை விரட்டுங்கள், இலட்சியம் வெல்லட்டும் போன்ற தலைப்புகள் வசப்படுத்தும். பார்த்தது, படித்தது, கேட்டது மற்றும் […]

Read more

கிராம நிருவாகத்தின் புரட்சி

கிராம நிருவாகத்தின் புரட்சி, இரா.போசு, ரெயின்போ, விலைரூ.300. வருவாய் கிராம நிர்வாகத்தின் தோற்றம், வளர்ச்சி பற்றி வரலாற்று பின்புலத்துடன் எழுதப்பட்டுள்ள நுால். கிராம நிர்வாகத்தின் தோற்றம், அதில் பணியாற்றிய கர்ணம், மணியம், தலையாரி நியமன முறை, அவர்களின் பணி நிர்ணயம், போலீஸ் அதிகாரத்துடன் பணியாற்றிய தலையாரிகள் போன்ற விபரங்கள் எளிமையாகத் தரப்பட்டுள்ளன. கிராம நிர்வாகத்தில் முதல் சட்டம், 1894ல் கொண்டு வரப்பட்டதாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து கிராம உருவாக்கம் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன. மக்கள் தொகைக்கு ஏற்ப தலையாரிகள் நியமனம் செய்யப்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Read more

களிப்பூட்டும் கணிதம்

களிப்பூட்டும் கணிதம், நல்லாமூர் கோவி. பழனி, வனிதா பதிப்பகம், விலைரூ.300. கணிதத்தை எளிதாக கற்க துாண்டும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். கணித அழகை ரசித்து, அதனுள் மூழ்கவைக்கும் விதமாக எளிமையாக படைக்கப்பட்டு உள்ளது. கணித சிந்தனைகள், கணித மன்ற செயல்பாடுகள், கணித விளையாட்டு, கணித மேதைகளின் சுருக்க வரலாறு என பல தலைப்புகளில் உள்ளது. கணித ஆர்வ களஞ்சியமாக அமைந்துள்ளது. ஒன்றிலிருந்து மற்றொன்று உருவாவதை தெளிவாக புரிந்து கொள்ளும் வகையிலும், அவற்றிற்கு இடையேயான தொடர்புகளையும் அடுக்கமைவு மூலம் தகவலாக கோர்க்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பெருந்தலைப்புகளின் […]

Read more

நெஞ்சிருக்கும் வரை நடிகர் திலகத்தின் நினைவுகள்

நெஞ்சிருக்கும் வரை நடிகர் திலகத்தின் நினைவுகள், சந்திரசேகர், நக்கீரன் பதிப்பகம், விலைரூ.75. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் பணியாற்றிய அனுபவங்களை தொகுத்து எழுதப்பட்டுள்ள நுால். ரசிகத்தன்மையுடன் இணைந்து, வியப்புடன் சேர்ந்து தெளிந்து எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக, அரசியல் கட்சி ஆரம்பித்ததை தொடர்ந்து ஏற்பட்ட சம்பவங்களையும், அனுபவங்களையும் இந்த நுால் பகிர்கிறது. இதுவரை கேள்விப்பட்டிராத பல தகவல்களை வெளிப்படுத்துகிறது. சுவாரசியம் தரும் நுால். – விநா நன்றி: தினமலர், 2/1/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

அந்தமானில் இருந்து சாவர்க்கரின் கடிதங்கள்

அந்தமானில் இருந்து சாவர்க்கரின் கடிதங்கள், தமிழில்: வி. வி. பாலா, தடம் பதிப்பகம், பக்.120, விலை ரூ.100, லண்டனிலிருந்து ஆயுதங்கள் வாங்கி அதனை இந்தியாவில் விநியோகித்து ஆங்கில அரசுக்கு எதிராகப் போர் நடத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ், சாவர்க்கர் எரவாடா சிறையில் அடைக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறார். நாசிக் சதி வழக்கில் மற்றொரு ஆயுள் தண்டனையும் பெற்ற சாவர்க்கர், அந்தமான் சிறைக்கு மாற்றப்படுகிறார். அந்தமான் சிறைக் கைதிகள் வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே உறவினர்களுக்கு கடிதம் எழுத முடியும் என்ற கடுமையான விதி அமலில் இருந்தது. […]

Read more

தலைத் தாமிரபரணி

தலைத் தாமிரபரணி, முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா, பக்.1040, விலை ரூ.1000. தென்காசி, தூத்துக்குடியை உள்ளடக்கி திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு சிறப்புகளை புராண விளக்கங்கள், வரலாற்றுத் தரவுகளுடன் மிக நுணுக்கமாகப் பதிவு செய்துள்ளது இந்நூல். தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியின் உற்பத்தி குறித்து மிக விரிவாக பதிவு செய்திருப்பதோடு மட்டுமல்லாது அது கடலில் கலக்கும் புன்னக்காயல் வரையிலான அணைகள், சிற்றாறுகள், கால்வாய்கள், கோயில்கள், மூலிகைகள் உள்ளிட்ட தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது. முகமது நபியின் வரலாற்றைக் கூறும் சீறாப்புராணம் எழுதிய உமறுப்புலவருக்கு எட்டையபுரத்தில் தர்கா உள்ளது. இந்த தர்காவை […]

Read more
1 30 31 32 33 34 505