ஜோதிடக் களஞ்சியம்

ஜோதிடக் களஞ்சியம், கவிஞர் ரா.நக்கீரன், கவிதாலயம், பக்.100, விலை 100ரூ. உங்கள் ஜாதகப் பலன்களை நீங்களே தெரிந்து கொள்ளலாம்’ என்பது, நுாலின் உபதலைப்பு. உதாரணத்திற்கு ஒன்று. ‘ஒருவரது ஜாதகத்தில் சந்திரனும், கேதுவும் சேர்ந்து லக்னத்திற்கு, 2, 6, 8, 12 இடங்களில் காணப்பட்டால், நன்கு ஆராய்ந்து பலன் கூற வேண்டும். ஆயுள் பாவத்தை எட்டாவது இடம் மட்டும் நிர்ணயிப்பதில்லை. 3, 6, 9 இடங்களில் சுக்கிரன் கெட்டிருந்தால், உஷாராகப் பார்க்க வேண்டும். இப்படி, பல பயனுள்ள குறிப்புகள் இந்நுாலில் உள்ளன. நன்றி:தினமலர், 27/5/2018. இந்தப் […]

Read more

ஐரோப்பியத் தத்துவ இயல்

ஐரோப்பியத் தத்துவ இயல், ராகுல் சாங்கிருத்யாயன், தமிழில் ஏ.ஜி.எத்திராஜுலு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 124, விலை 105ரூ. இந்திய பயண உலகின் தந்தை’ எனப் புகழப்படும் ராகுல் சாங்கிருத்யாயன், கிரேக்கத் தத்துவ அறிஞர்களின் தத்துவங்களையும், ஐரோப்பியத் தத்துவார்த்த சிந்தனையாளர்களின் கருத்துக்களையும் மிக விரிவாக எடுத்துக் கூறுகிறார். அதுவே ஐரோப்பியத் தத்துவ அறிஞர்கள் குறித்த பார்வையையும், தத்துவங்களையும், சமயங்களையும் முழுமையாக ஐரோப்பியத் தத்துவ இயல் நுாலில் முன் வைத்துத் தந்துள்ளார். யுனிக் தத்துவவியலாளர்களில் (கி.மு. 600 – 400) வரை ஆரம்பித்து, முதல் […]

Read more

இலக்கியக் கலையும் பாரதி நிலையம்

இலக்கியக் கலையும் பாரதி நிலையம், தொ.மு.சி.ரகுநாதன், வேலா வெளியீட்டகம், பக்.112, விலை85ரூ. ரகுநாதனின் பல படைப்புகள் இன்னும் நுால் வடிவம் பெறாமல் உள்ளன. மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு உயிர்ப்பிக்கப்பட்டுள்ளன. இலக்கியம் பற்றியும், பாரதி பற்றியும் நுாலாசிரியர் கொண்டிருந்த முக்கிய மதிப்பீடுகள் இடம்பெற்றுள்ளன. ‘பஞ்சலட்சணம், இலக்கியப் பரம்பரை, வள்ளுவமும் வாழ்வும், பாரதி பாடல்களால் தமிழர் அடையும் பயன், உலக மொழிகளில் மகாகவியின் நுால்கள் பிரசுரம்’ உள்ளிட்ட கட்டுரைகள், இந்நுாலுக்கு சிறப்பு சேர்க்கின்றன. நன்றி:தினமலர், 27/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

ஐங்குறு நாவல்கள்

ஐங்குறு நாவல்கள், சித்தார்த்தன், பண்மொழி பதிப்பகம், பக்.120, விலை 100ரூ. சங்க கால சோழ மன்னனை மையப்படுத்தி, அந்த காலத்தில் நிலவிய வாழ்க்கை சூழலையும், மொழி நடையையும் மனதில் இருத்தி எழுதப்பட்டுள்ளது. ‘விடியல்’ என்ற குறுநாவல், ஈழத் தமிழர்களின் துயர வாழ்வை உணர்த்தி நம்மை கண்ணீர் சிந்த வைக்கிறது. பல்வகை கருப்பொருட்கள், காலச்சூழல்கள், மனிதர்கள் உள்ளிட்டவை அடங்கிய வண்ணக் களஞ்சியமாகத் திகழ்கிறது இந்நுால். நன்றி:தினமலர், 27/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

குழந்தைகளும் குட்டிகளும்

குழந்தைகளும் குட்டிகளும், ஓல்கா பெரோவ்ஸ்கயா, ருக்மணி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 260, விலை 180ரூ. ஓல்கா, சோன்யா, யூலியா, நத்தாஷா ஆகிய நான்கு சகோதரிகள், காட்டில் வாழக்கூடிய புலி, ஓநாய், நரி உள்ளிட்ட கொடிய விலங்குக் குட்டிகளை வீட்டில் வளர்க்கின்றனர். அவற்றுக்கு உணவளிப்பதும், குதுாகலத்துடன் விளையாடுவதும், அன்பு செலுத்துவதும் என, ஒவ்வொன்றையும் படிக்கப் படிக்க பரவசமும், மகிழ்ச்சியும், திகிலும், துயரமும், ஆர்வமும் மாறி மாறி ஆட்கொள்வதை உணர முடிகிறது. நன்றி:தினமலர், 27/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

பன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்

பன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர், இரா.சம்பத், சாகித்திய அகாடமி, பக். 238, விலை 180ரூ. சித்த மருத்துவப் பரம்பரையில் தோன்றிய காத்தவராயன், அயராத சமூக மேம்பாட்டுப் பணிகளால் அயோத்திதாசப் பண்டிதரானவர். அவரது தமிழ் ஆளுமையின் பன்முகப் பரிமாணங்களை ஒன்பது கட்டுரைகள் வாயிலாகப் பதிவு செய்யும் இந்நுாலை சாகித்திய அகாதெமிக்காகத் தொகுத்திருப்பவர் இரா.சம்பத். பண்டிதரின் சுருக்கமான வாழ்க்கை வரலாற்றோடு, அவரது தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், பண்பாட்டுச் சடங்குகளுக்கான விளக்கங்கள், உழைப்பவனுக்கே நிலம் சொந்தமாக வேண்டும் எனும் கொள்கை, மக்களுக்கான இலக்கிய நோக்கு போன்றவை தரப்பட்டுள்ளன. நிலம், […]

Read more

வாழ்வியல் கதைகள் 100

வாழ்வியல் கதைகள் 100, கவிஞர் சி.ஸ்ரீரங்கம், மணிமேகலை பிரசுரம், பக்.142, விலை 90ரூ. இந்நுாலில் உள்ள கதைகளில் இடம்பெற்ற மாந்தர்கள் இருவர் பேசுவதை, தாமே பேசுவது போன்ற புது உத்தியை ஆசிரியர் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. ‘வீடு, பணிவு, வாடகை, ஆட்டோ, செல்லம், சாதுர்யம், புத்திசாலி, அப்படி இப்படி, போட்டோ, சிம்பிள், தீபாவளி, சொல்வதற்கு ஒன்றும் இல்லை’ உள்ளிட்ட கதைகள், இன்றைய சமுதாயத்திற்கு பாடம் கற்பிப்பதாக உள்ளன. நன்றி: தினமலர்,13/5/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026733.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

பிரதமர் விஸ்வநாதன்

பிரதமர் விஸ்வநாதன், பி.விஸ்வநாதன், அசோக்ராஜா பதிப்பகம், பக். 168,விலை 90ரூ. தொழிலால் மேன்மை அடைந்த பணக்காரர்கள், பொது வாழ்வில் ஈடுபடும் அரசியல்வாதிகள் மற்றும் படித்து பட்டம் பெற்ற அதிகாரிகளால், நம் நாடு உலக அரங்கில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இவர்களில் சில பேர் செய்யும் தவறுகளை, நம்மால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதை கட்டுப்படுத்தி, நமக்கு அப்பாற்பட்ட சக்தியிடம் பொறுப்பை ஒப்படைத்து, நல்லதை பேசுவது, நினைப்பது, செய்வது என்ற கொள்கையை கடைபிடித்து வாழ்ந்தால், ஒவ்வொருவருக்கும் வெற்றி நிச்சயம் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்ற உண்மையை உணர்த்துகிறது […]

Read more

பத்துப்பாட்டு சிறுபாணாற்றுப்படை மூலம்

பத்துப்பாட்டு சிறுபாணாற்றுப்படை மூலம், வி.கந்தசுவாமி முதலியாரின் உரை விளக்கம் மற்றும் ஆங்கில விளக்கத்துடன், பா.மதுகேஸ்வரன், பிரானேஷ் பப்ளிகேஷன்ஸ். அண்மையில் வெளிவந்திருக்கும் புத்தகம், ‘பத்துப்பாட்டுள் ஒன்றாகிய சிறுபாணாற்றுப்படை மூலம்!’ இது, வி.கந்தசுவாமி முதலியாரின் உரை விளக்கம் மற்றும் ஆங்கில விளக்கத்துடன் வெளியிடப் பெற்றிருக்கிறது. இதில் சிறுபாணாற்றுப்படையில் இடம்பெற்ற சொற்களுக்குப் பொருள் தெரிந்துகொள்ளும் வகையில் கூடுதலாக சொற்பொருள் விளக்கம் என்பதும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இப்புத்தகத்தை 1947ல் வி.கந்தசாமி முதலியார் வெளியிட்ட, ‘சிறுபாணாற்றுப்படை விளக்கம்’ என்பதன் மறுபதிப்பாகக் கொள்ள முடியும். சங்க இலக்கியமான எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டுள் இடம்பெற்ற, 18 […]

Read more

அறத்தொடு நிற்றல்

அறத்தொடு நிற்றல், நர்மதா நவநீதம், ஆகுதி பனிக்குடம், பக். 156, விலை 140ரூ. அறத்தொடு நிற்றல்’ என்னும் இந்நுால், 14 கட்டுரைகளின் தொகுப்பாகும். இவை, பல்வேறு கருத்தரங்குகளில் வாசிக்கப் பெற்றவை என்று அறிய முடிகிறது. அழகிய அணிந்துரை, நுாலைப் படிக்கத் துாண்டும் நுழைவாயிலாக அமைந்து உள்ளன. நுாலின், 14 கட்டுரைகளும், பெண்ணியம், கலை, இலக்கியம் என்னும் மூன்று பிரிவினுள் வகைப்படுத்தப் பட்டுள்ளன. இவற்றுள் பெண்ணியம் குறித்த கட்டுரைகளே அதிகம். செவ்வியல் இலக்கியங்களை மையமாகக் கொண்ட இக்கட்டுரைகள், அக்காலப் பெண்களின் நிலையைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. தலைவியை […]

Read more
1 299 300 301 302 303 505