அன்பின் பிரபந்தம்

அன்பின் பிரபந்தம், உலகக் கவிதைகள், மெொழிபெயர்ப்பாளர் கிருஷ்ண பிரசாத், காவ்யா, விலை 950ரூ. பிறமொழி இலக்கியங்கள் தமிழ் மொழியில் செய்தல் வேண்டும் என்று பாடினார் பாரதி. அந்த முண்டாசு கவிஞனின் அவாவை நிறைவேற்றும் வகையில் ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழியில் புகழ்பெற் கவிதைகளும், பாப்லோ நெருடா, அகமத் பராஸ் போன்ற உலக புகழ்பெற்ற கவிஞர்களின் கவிதைகளும் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டு உள்ள பெருநூல் இது. உலக கவிஞர்களின் நவரசம் ததும்பும் பாடல்களை ஒருசேர படிக்கும்போது வாசகரின் உள்ளத்தில் மகிழ்ச்சி பிரவாகம் எடுப்பது திண்ணம். […]

Read more

பாப்பாவுக்குப் பாட்டு

பாப்பாவுக்குப் பாட்டு, ருக்மணி சேஷசாயி, சாயி பதிப்பகம், பக்.64, விலை 80ரூ. பாட்டுக்கு என்றாலே மகாகவி பாரதி தான் நினைவுக்கு வருவார். குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக் கொடுக்கும் காலம் மறைந்து வருகிறது. இக்குறையை போக்கும் வகையில், குழந்தைகளுக்கென்றே விலங்குகளை நாயகனாக வைத்து பாடல்களை ஆசிரியர் தொகுத்து தந்துள்ளது பாராட்டிற்குரியது. உறவுகளை வளர்க்கும் வகையில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி பற்றிய பாடல்களும் இடம் பெற்றுள்ளன. இந்நுாலை வாங்கி, குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்தால், அவர்களும் சிறப்பாக பாடுவர்; உச்சரிப்பும் சரியாக வரும் என்பதில் எள்ளளவும் […]

Read more

தொழில் முனைவோர்

தொழில் முனைவோர், இரத்தின நடராசன், ஏகம் பதிப்பகம், பக்.120, விலை 90ரூ. பண்டைய காலந்தொட்டு உழவு மற்றும் நெசவு தொழில்கள் மிக முக்கியமாகக் கருதப்பட்டு வந்தன. திரைகடலோடியும் திரவியம் திரட்டு என்பர். நாம் மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்; மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் இந்நுால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தொழில் செய்பவர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரின் சிந்தனைகளையும், அனுபவங்களையும், ஆலோசனைகளையும் உள்ளடக்கிய அறிவுப் பெட்டகம் இந்நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி:தினமலர், 20/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

சுற்றுச்சூழல் காப்போம் வாங்க

சுற்றுச்சூழல் காப்போம் வாங்க, பொறிஞர் எஸ்.சுந்தரம், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.104, விலை 75ரூ. கழிவுப் பொருட்களால் நதிகள் வீணாவதையும், கிரீன் ஹவுஸ் விளைவுகளையும், ஓசோன் அடுக்கு பற்றி மக்கள் கவலைப்படுவதையும், குப்பை கழிவுகள் எங்கே செல்கின்றன… அமில மழை என்றால் என்னவென்பதையும், மின்சார கார்களை ஏன் உபயோகிக்கவில்லை? எரிபொருள் நெருக்கடி, சலவை சோப்புகளால் பூமி மாசுபடுவதையும், பவளப்பாறைகளின் முக்கியத்துவத்தையும், பயனற்றவையிலிருந்து செல்வம் பெறுவது எப்படி? ஒருவருக்கான உணவை 20 பேருக்கு அளிப்பது என்பதையும் படங்களுடன் விவரிக்கிறது இந்நுால். நன்றி:தினமலர், 20/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

பௌத்த சிந்தனை பன்நோக்கு வாசிப்பு

பௌத்த சிந்தனை பன்நோக்கு வாசிப்பு, முனைவர் கா.அய்யப்பன், காவ்யா, பக்.184, விலை 190ரூ. கோட்பாடுகளில் வரையறைக்கு அப்பாற்பட்டது பௌத்தம். பதிமூன்றாம் நூற்றாண்டு கால அளவிலும் பெரும் செல்வாக்குள்ள சமயமாக விளங்கியது. பௌத்த சமய பின்புலத்தில் காப்பியங்கள் உட்பட பல்வேறு நூல்கள் இயற்றப்பட்டு உள்ளன. தமிழ் வளர் சூழலில் பௌத்த சிந்தனைகள் ஏற்படுத்திய தாக்கங்களை, சங்க இலக்கியம் தொட்டு, பக்தி இயக்க காலகட்டம் வரை, அதற்குப் பிந்தைய காலம் என வேறுபடுத்தி பார்க்க வேண்டியதாகக் குறிப்பிடப்படுகிறது. தமிழ் இலக்கண மரபிலும் பௌத்த சிந்தனைகளின் தாக்கங்கள் இருந்தமை […]

Read more

குழந்தைகள் ஆடிய குடைராட்டினம்

குழந்தைகள் ஆடிய குடைராட்டினம், அருள்நிதி ஆதவன், ஜோதி பதிப்பகம், பக்.40, விலை 30ரூ. மரங்களை குலசாமிகளாகப் போற்றிய பண்பாட்டு மரபுகளைக் கொண்டது நம் தமிழகம். இந்நுாலில் மூன்று மரங்களும், மூன்று குழந்தைகளும் உறவாடி மகிழ்கின்றன. மரங்கள் பறவைகளைப் போலவே நேசித்து, மனிதர்களுக்கு உணர்வூட்டுகின்றன; உயிர் காற்று தருகின்றன. அன்பின் பெரு வெள்ளம் மரங்களில் கசியும் என்பதை நுாலாசிரியர் உணர்த்தியுள்ள பாங்கு பாராட்டத்தக்கது. நன்றி:தினமலர், 20/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

புகழ் மணச் செம்மல் எம்.ஜி.ஆர்.

புகழ் மணச் செம்மல் எம்.ஜி.ஆர்., மணவை பொன்.மாணிக்கம், கற்பகம் புத்தகாலயம்,  பக். 376, விலை ரூ.270. எம்.ஜி.ஆரின் திரையுலக அனுபவங்களையும், அரசியல் அனுபவங்களையும் ஏராளமான தகவல்களுடன் அள்ளித் தந்திருக்கிறார் நூலாசிரியர். சிறுவயதில் நாடகத்துறையில் நுழைந்து நடிப்புப் பயிற்சியை காளி என். ரத்தினத்திடமும், நடனப் பயிற்சியை ஸ்ரீ ராமுலுவிடம் பெற்று ‘ராஜபார்ட்‘ ஆக உயர்வடைய எம்.ஜி.ஆர். பட்ட கஷ்டங்கள், திரைத்துறையில் நுழைவதற்காக குதிரையேற்றம், வாள் சண்டை, சிலம்பம் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டும் கூட சிறு சிறு வேடங்களே கிடைக்க, தன்னை நாயகனாக நிலைநிறுத்திக் கொள்ள அவர் பட்ட […]

Read more

ஆதிசைவர்கள் வரலாறு

ஆதிசைவர்கள் வரலாறு, தில்லை எஸ்.கார்த்திகேய சிவம், கிழக்கு பதிப்பகம், விலை 130ரூ. சிவனோடு தொடர்புடையது சைவம். "சைவத்தின் மேல் சமயம் வேறில்லை' என்பது சைவர்களின் உறுதியான நம்பிக்கை. சிவனை வணங்கும் யாவரும் சைவர்களேயாயினும் இறைவன் திருமேனியை முப்போதும் தீண்டி பூஜை செய்து வழிபடுவோரை "ஆதிசைவர்' என அழைப்பது மரபு. ஆதிசைவர்கள், குருக்கள், பட்டர், நாயனார், சிவாச்சாரியார் என வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு பகுதிகளில் அழைக்கப்படுகின்றனர். அப்படிப்பட்ட ஆதிசைவர்களின் வரலாற்றை ஓரளவு விரிவாகவும் மிகத்தெளிவாகவும் இந்நூலில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். திருக்கயிலாய மலையில் சிவபெருமான், பார்வதி […]

Read more

அன்பென்று கொட்டு முரசே

அன்பென்று கொட்டு முரசே, கவிஞர் செல்லம் ரகு, தளிர் இலக்கியகளம், பக்.96, விலை 120ரூ. பண்புகளில் தலையாயது அன்பு. அதை தலையங்கமாக்கி முரசு கொட்டி கவிதை வடித்திருக்கிறார். சமூக அக்கறையின் பெருமூச்சு இந்நுாலில் இழையோடியிருக்கிறது. காதல், காதல் தோல்வி, பிரிவு, ஜாதி மதப் பிளவுகள், சமூக அவலங்கள், பெண்களின் சுதந்திரம் எனப் பல தளங்களை தொட்டிருக்கிறார் நுாலாசிரியர். ‘நிலைமாறும் உலகு…! போய் வா என்னுயிரே…! எங்கே போகிறாய்? நெஞ்சு பொறுக்குதில்லையே! காதலின் வண்ணங்கள்! ஆறைவிட ஐந்து பெரிது…!’ ஆகிய கவிதைகள், மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் […]

Read more

சத்யஜித் ரே வாழ்வும் வழியும்

சத்யஜித் ரே வாழ்வும் வழியும், வீ.பா.கணேசன், விகடன் பிரசுரம், விலை 100ரூ. இந்திய சினிமா உலகின் அசைக்க முடியாத மனிதர் பிதாமகன், பால்கே. வங்கத்து மக்களின் வாழ்க்கை வரலாற்றை இலக்கியத்தின் மூலம் சினிமா என்ற சொல்லால் இந்திய மக்களின் கவனத்தை தன்னகத்தே வைத்துக் கொண்டவர் என்றால் அது மிகையாகாது. அந்த வரிசையில் இந்திய சினிமாவில் சத்யஜித் ரேவும் குறிப்பிடத்தக்க மனிதராக இருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. தடைபட்ட பயணம் என்ற தான் எழுதிய கதைக்கு திரைக்கதையை எழுதி, அதைத் திரைப்படமாக எடுத்து, இந்தியாவிலேயே முதன் […]

Read more
1 298 299 300 301 302 505