நானும் சினிமாவும்

நானும் சினிமாவும், ஏவி.எம்.சரவணன், தினத்தந்தி பதிப்பகம், விலை 250ரூ. சினிமா கனவுகளோடு சென்னையை எட்டிப்பார்க்கும் எந்த இளைஞனின் முயற்சியும், ஏவி.எம்.ஸ்டூடியோவை எட்டிப் பார்ப்பதில் இருந்துதான் தொடங்கும். பெருமைக்கு உரிய அந்த ஏவி.எம். என்ற மூன்றெழுத்துக்குச் சொந்தக்காரரான, ஏவி.மெய்யப்ப செட்டியாரின் மகனாகப் பிறந்து வளர்ந்து, அவரோடு இணைந்து நடந்த காலம் முதல், தானே சினிமாத் துறையில் தனித்து ஈடுபட்டு, அறுபது ஆண்டுகளைக் கடந்து இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பது வரையான அனுபவங்களை அற்புதமாகத் தொகுத்திருக்கிறார் ஏவி.எம்.சரவணன். பராசக்தி படத்தில் சிவாஜி கணேசன் அறிமுகமானபோது மிகவும் ஒல்லியாக இருந்தார். […]

Read more

மனசுக்குள் மாயவலை

மனசுக்குள் மாயவலை, மேஜர்தாசன், அமராவதி, பக். 128, விலை 90ரூ. எழுத்தாளர் மேஜர்தாசன் எழுதிய சிறுகதைகள் தொகுப்பாக இந்த நுால் வெளிவந்துள்ளது. இதை சிறுகதைகள் என சொல்வதை விட, நம் வாழ்வில் சந்திக்கும் சம்பவங்கள், ஏற்படும் உணர்வுகளைத் தான், சிறுகதை வடிவில் மேஜர் தாசன் தந்துள்ளார். அதிலும், மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டரிடம், திருநங்கை ஒருவர் பேசுவது, மனிதாபிமானத்தின் எடுத்துக்காட்டு. இன்றைய சமுதாய சீர்திருத்தங்களை வெளிப்படுத்தும் இந்த கதைகள், படிப்பவர்கள் மனதில் நிச்சயம் ஒரு மாற்றத்தை உருவாக்கும். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026598.html இந்தப் புத்தகத்தை […]

Read more

பன்னிரு திருமுறை

பன்னிரு திருமுறை, இராம.லெட்சுமணன், சகுந்தலை நிலையம், பக். 1328, விலை 1200ரூ. சைவத் திருமுறைகள் பன்னிரண்டும் தோத்திரம், சாத்திரம், பிரபந்தம், புராணம் என நான்கு வகையாக அமைந்துள்ளன. ஒன்று முதல், ஒன்பது வரையிலானவை தோத்திரம். 10வது சாத்திரம். 11வது பிரபந்தம். 12வது புராணம். முதல் மூன்று திருமுறைகள் ஞானசம்பந்தர் பாடியது, ‘திருக்கடைக்காப்பு’ எனவும், நாவுக்கரசர் பாடிய, நான்கு, ஐந்து, ஆறு திருமுறைகள் ‘தேவாரம்’ எனவும், சுந்தரர் பாடிய ‘திருப்பாட்டு’ ஏழாம் திருமுறையாகவும், மாணிக்கவாசகர் அருளியது, எட்டாம் திருமுறையாகும். ஒன்பது பேர் பாடிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, […]

Read more

ஆலயம் வழிபாடு

ஆலயம் வழிபாடு, முனைவர் நல்லூர் சா.சரவணன், சைவ சித்தாந்தப் பெருமாள், பக்.136, விலை 100ரூ. சிவாலய வழிபாடு பற்றிய ஒன்பது கட்டுரைகள் நுாலில் தொகுக்கப்பட்டுள்ளன. சிவாலய வழிபாட்டின் நுட்பங்கள் முதல் கட்டுரையில் தரப்பட்டுள்ளன. சிவலிங்கம் யோக நிஷ்டையையும், அதன் கீழுள்ள அஷ்டபந்தனம் மருந்து பிரகிருதி, மஹத், அகங்காரம், சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் எண் வகை பந்தங்களையும் குறிக்கிறது. பலி பீடத்தில் நாம் காமம், குரோதம், உலோபம், மதம், மாச்சரியங்களை பலி கொடுத்து, உள்ளே செல்ல வேண்டும். அதன் பின், தரும […]

Read more

ஐந்தாம் மலை

ஐந்தாம் மலை, தமிழில் மொழிபெயர்ப்பு பேராசிரியர் ச.வின்சென்ட், அருட்செல்வர் நா.மகாலிங்கம், பக்.222, விலை 150ரூ. உலகின் செல்வாக்கு மிக்க நுாலாசிரியர்கள் பட்டியலில், இரண்டாம் இடம் பெற்ற போர்த்துக்கீசிய எழுத்தாளர் புவுலோ கோய்லோ. இவர் எழுதிய, ‘ரசவாதி’ என்ற நுால், 81 மொழிகளில், எட்டு கோடியே முப்பது லட்சம் பிரதிகள் விற்றன. அந்த வரிசையில் அவர் எழுதிய, ‘ஐந்தாம் மலை’ என்ற நாவல், விவிலிய நிகழ்வுகளின் பின்புலத்தில் அமைந்தது. தத்துவ பின்புலம் கொண்ட நாவலை அழகிய தமிழில், எளிதாக மொழிபெயர்த்து தந்துள்ள பேராசிரியர் ச.வின்சென்ட் பாராட்டுக்குரியவர். […]

Read more

காகதிய பேரரசு

காகதிய பேரரசு, தெலங்கான மன்னர்களின் வீர வரலாறு, ஓ.ஹென்றி பிரான்சிஸ், வாடிவாசல் பதிப்பகம், பக். 284, விலை 200ரூ. ‘காகதிய பேரரசு – தெலங்கானா மன்னர்களின் வீர வரலாறு’ என்னும் இந்நுாலில், 10 இயல்களின் வாயிலாக செய்திகள் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன. இயல் ஒன்றில், ஒரு கல்லுா நகரை தலைநகராகக் கொண்டு, தெலங்கானா உள்ளடங்கிய ஆந்திர தேசத்தை, கி.பி., 1150 முதல், 1323 வரை சிறப்பாக ஆட்சி செய்தோர் காகதியர்கள். காகதிருத்ர தேவா வெளியிட்ட அனுமகொண்டா கல்வெட்டுகளையும், பட்டயங்களையும் முழுமையாக ஆராய்ச்சி செய்து, கி.பி., 1882ல் […]

Read more

நொய்யல் நதிக்கரைத் தீரன்

நொய்யல் நதிக்கரைத் தீரன், விண்மீன் மைந்தன், வானதி பதிப்பகம், பக். 280, விலை 200ரூ. இருநுாறு ஆண்டுகளுக்கு முன் விடுதலைப் போராட்டத்தைத் துவங்கிய வீரர்கள் பலர் மாநில அளவில் சுருக்கிப் பார்க்கப்பட்டது ஒரு வரலாற்று சோகம். 1805ல் மறைந்த தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாறு முழுமையாகக் கிடைக்காத நிலையில், வழக்காறு கதைகளிலும், செவிவழிச் செய்திகளிலும், பல சரித்திரக் குறிப்புகளிலும், காலக்கோட்டு அடிப்படையிலும் கிடைத்தவற்றைப் பல்லோரும் புனைந்தனர். அவற்றைத் தழுவி, வீரமும், விவேகமும், தீரமும், தியாகமும் நிறைந்த தீரன் சின்னமலையின் வாழ்க்கையைக் கற்பனைக் கதாபாத்திரங்களோடு புனையப்பட்ட […]

Read more

அப்துல் கலாம் வாழ்வில் 100 அரிய நிகழ்ச்சிகள்

அப்துல் கலாம் வாழ்வில் 100 அரிய நிகழ்ச்சிகள், குடந்தை பாலு, வானதி பதிப்பகம், பக். 176, விலை 100ரூ. தாயின் மடியில் விளையாடிய குழந்தைப் பருவம் முதல், கோடிக்கணக்கான மக்களின் முதல் குடிமகனாக, மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பு வகித்த காலம் வரை, உண்மை, நேர்மை, அன்பு, அரவணைப்பு, மனிதநேயம், சமூக ஒருமைப்பாடு போன்ற விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்த அறிவியல் விஞ்ஞானி கலாம் எவ்வாறு சிந்தித்தார், எப்படி செயல்பட்டார் என்பதை மக்களின் மனதில் விதைக்கிறது இந்நுால். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

சிந்தனை முத்துக்கள்

சிந்தனை முத்துக்கள், வாழ்வியல் தடங்கள், நவீன ஆத்திச்சூடி, குறளின் குரல், 108 நட்சத்திரங்கள்,கவிஞர் ஆவியூரார், கே.கே.பதிப்பகம், விலை 100ரூ, 50ரூ, 40ரூ, 40ரூ, 80ரூ. நான் தானே உலகம்; எனது தானே எல்லாம்; படைப்பவன் கடமை எனக்கு எல்லாமே தரணும்’ என்ற போக்கில் மக்கள் திசைமாறியதை படம் பிடிக்கும் ஆசிரியர், இந்த ஐந்து நுால்களை உருவாக்கியிக்கிறார். அட்டலக்குமி அர்ச்சகர் ஆன இவர் இலக்கிய ஆசை கொண்டவர். நம்மைச் சுற்றி நடக்கின்ற வாழ்க்கைகளை, அதிகம் அறிந்தவர் என்ற முறையில் இவரது படைப்புகள் உள்ளன. தவிரவும் அறிவு […]

Read more

வாலி வதை ஆதிகவியும் கம்பகவியும்

வாலி வதை ஆதிகவியும் கம்பகவியும், பிரியா இராமச்சந்திரன், வானதி பதிப்பகம், பக். 112, விலை 70ரூ. பல ஆண்டுகளாகத் தொடரும் நீதிமன்ற வழக்கு போல, சில கம்பராமாயண விவாதங்கள் தலைமுறைகளைக் கடந்து நடந்து வருகின்றன. அப்படிப்பட்ட வாலி வதை விவாதத்துக்கு, இந்நுால் வழி புதிய பங்களிப்பு செய்திருப்பவர், மருத்துவர் பிரியா இராமச்சந்திரன். ஆதிகவி வால்மீகியும், தமிழ்க்கவி கம்பனும் நல்கிய படைப்புகளில், வாலி வதையால் இராமன் முதற்கொண்டு பல்வேறு கதை மாந்தர்களும், தம் இயல்பில் அடையும் மாற்றங்களை நுாலில் நேர்த்தியாகத் தொகுத்துத் தந்திருக்கிறார். கிட்கிந்தா காண்டத்தில் […]

Read more
1 310 311 312 313 314 505