தமிழ்ச் சிறுகதை வரலாறு(1951-1952)

தமிழ்ச் சிறுகதை வரலாறு(1951-1952), கி.துர்காதேவி, விலை 225ரூ. சிறுகதைகள் வரலாற்றில், ‘1951 – 1952’ காலப் பகுதியில் நிகழ்ந்த நிகழ்வுகளை அறிய துணை செய்கிறது இந்நுால். குறிப்பாக, இக்கால இடைவெளியில் பிரசண்ட விகடன் என்னும் இதழில் வெளியான சிறுகதைகள் குறித்த நுாலாக இது விளங்குகிறது. நாரண.துரைக்கண்ணன் என்னும் புதின ஆசிரியரை, சிறுகதை ஆசிரியரை, -இதழ் ஆசிரியர் அறிந்துகொள்ளும் நிலை இந்நுாலில் வாய்க்கிறது. மேலும், 19ம் நுாற்றாண்டின் இடைக்காலம் துவங்கி, 20ம் நுாற்றாண்டின் இடைக்காலம் வரை, தமிழ்ச் சூழலில் செயல்பட்ட அரசியல் கருத்து நிலைகள்; அக்கருத்து […]

Read more

க.நா.சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

க.நா.சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், ச. கந்தசாமி, சாகித்திய அகாடெமி, விலை 200ரூ. க.நா.சுப்ரமண்யத்தை விமர்சகராகவும் நாவலாசிரியராகவுமே பரவலாக அறிந்திருக்கிறோம். க.நா.சு.வின் சிறுகதை சாதனைகளை வாசிக்கத் தோதாக அவரது 24 சிறுகதைகளை ச.கந்தசாமி தொகுத்திருக்கிறார். க.நா.சு. ஒரு காலகட்டத்தில் இருந்த விழுமியங்களின் பிரதிநிதி. அவர் தன் காலத்தின் குரலாக அவர் வாழ்ந்த சூழ்நிலையையே சிறுகதைகளாக எழுதியிருக்கிறார். ஆழ்மன வேட்கையை, அக்காலகட்டக் குடும்பநிலையை, இயல்பான வாழ்க்கையை அவரது சிறுகதைகளில் காணலாம்.   அவருடைய கதைகள் பெரும்பாலும் குடும்ப அமைப்பின் மீது நம்பிக்கை கொண்டு அதன் மீது கட்டப்பட்டவைதான். […]

Read more

பகல் கனவு

பகல் கனவு, லா.ச.ராமாமிருதம், பாலாஜி பதிப்பகம், விலை 130ரூ. பிரபல எழுத்தாளர் லா.ச.ராமாமிருதம் எழுதிய சிறுகதைகளின் இந்தத் தொகுப்பு, கடலில் மூழ்கித் தேடிச் சேகரித்த முத்துக்களால் கோர்த்த மாலையாக ஜொலிக்கிறது. இவற்றில் உள்ள பெரும்பாலான கதைகளின் முக்கிய கதாபாத்திரம் தன்னை முன்னிலைப்படுத்திக் கூறுவதுபோல கதை அமைக்கப்பட்டு இருப்பதால், அந்தக் கதாபாத்திரத்தின் உணர்ச்சிக் குவியலில் நாம் கரைந்து விடுவது போன்ற பரவசம், அந்தக் கதையைப் படிக்கும்போது ஏற்படுகிறது. அனைத்துக் கதைகளின் நிகழ்வுகளும், ஒவ்வொருவர் வாழ்விலும் ஏற்கனவே நடந்த, அல்லது நடக்க இருக்கின்ற சம்பவங்களால் கோர்க்கப்பட்டு இருக்கின்றன. […]

Read more

தொடர்கதைகளும் முற்றும்

தொடர்கதைகளும் முற்றும், வெ.ஆத்மநாதன், மணிமேகலை பிரசுரம், பக். 160, விலை 80ரூ. இந்நுாலில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் அனைத்தும் அருமை. இதில் வரும் கதாபாத்திரங்கள் பலவற்றை, நாம் அன்றாட வாழ்வில் சந்தித்துள்ளோம். இந்த புத்தகத்தை படித்து முடித்தவுடன், புத்தகம் படித்த உணர்வு ஏற்படவில்லை. மாறாக, நமக்கு தெரிந்த நபர்களுடன் பேசிக் கொண்டிருந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. அதிலும், புத்தகத்தின் தலைப்பில் எழுதப்பட்டுள்ள கதையில் வரும் மீனாட்சி கதாபாத்திரம், நெஞ்சில் நிழலாடுவதாக அமைந்துள்ளது. அனைவராலும் விரும்பி படிக்கும் எளிய நுால் என்ற பாராட்டிற்குரியது. – ச.சுப்பு […]

Read more

குழந்தைப் பருவத்து நினைவுகள்

குழந்தைப் பருவத்து நினைவுகள், தெ.வி.விஜயகுமார், சங்கமித்ரா சுற்றுச்சூழல் கல்வி மற்றும் முன்னேற்ற அறக்கட்டளை, பக். 113. மனிதனின் வாழ்நாளில் குழந்தைப் பருவம் பலருக்கு வரமாகவும், பலருக்கு சாபமாகவும் அமைந்து விடுகிறது. இந்த வேறுபாட்டிற்கு பெரும்பாலும் முதன்மையான காரணம் பொருளாதார பலமும், பலவீனமுமே. பொருளில்லார்க்கு இவ்வுலகு முற்றிலுமாக இல்லை என்பதை உணர்ந்து உழைத்து மீண்டெழுந்தவர் பலர்; எழாது வீழ்ந்தோரும் பலர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து மீண்டெழும் ஒரு சாமானியரின் அல்லல் மிக்க இளமைக் காலத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்நுால். போதுமான வருவாய் இல்லாத நோயாளித் […]

Read more

ஓட்டைக் குடிசை

ஓட்டைக் குடிசை, வித்யாசாகர், முகில் பதிப்பகம், விலை 120ரூ. தமிழ் வாசக உள்ளங்களை தன் பேனா முனையால் தன்வசப்படுத்திக் கொண்ட வித்யாசாகர், சிறுகதை மூலம் அழகிய அனுபவப் பகிர்வை உணர்ச்சி பூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஓட்டைக் குடிசை சிறுகதை தொகுப்பில் காட்டாற்று வெள்ளம் போல மடமடவென வரும் வார்த்தைகள், நுாலாசிரியரின் எழுத்தாற்றலுக்கு கிடைத்திருக்கும் பெரும் பலம். புதிய அனுபவத்தை மாறுபட்ட களத்தில் அளித்திருக்கும் வித்யாசாகருக்கு பாராட்டுகள். – மாசிலா ராஜகுரு நன்றி: தினமலர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

எய்ட்ஸ் நோயாளிகளின் மவுன மொழிகள்

எய்ட்ஸ் நோயாளிகளின் மவுன மொழிகள், ஸ்டீபன் மாத்தூர், மணிமேகலை பிரசுரம், விலை 200ரூ. சொல்லத் தயங்குகிற ஒரு சொல்லாக எய்ட்ஸ் நோய் ஆகிவிட்டது. அதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வெளியில் சொல்லாமல் வெட்கப்பட்டு வேதனைத் தீயில் அவதிப்படுபவர்களாகவே உள்ளனர். ஆறுதல் கூற அவர்களுக்கு யாருளர் என்று சொல்லக்கூடிய நிலை தான் உள்ளது. அத்தகைய நோயாளிகள் வாழ்விலிருந்து விலகியே நிற்பது கண்டுணர்ந்து, அவர்களின் அவலத்தை வசன கவிதையாக வடித்துள்ளார் நுாலாசிரியர் ஸ்டீபன். நோய் வாய்ப்பட்டவரின் குடும்ப நிலையும், அந்நோய்க்கு ஆளாகி வருந்தும் வருத்தமும், கண் கெட்ட பிறகு […]

Read more

மொட்டப்பனையும் முகமாலைக்காத்தும்

மொட்டப்பனையும் முகமாலைக்காத்தும், சர்மிலா வினோதினி, பூவரசி பப்ளிகேஷன்ஸ், விலை 150ரூ. ஈழத்தைச் சேர்ந்த படைப்பாளி சர்மிலா வினோதினியின் வித்தியாசமான கதை தொகுப்பான இந்த நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொருவிதமாக காணப்படுகின்றன. பெரும்பாலான கதைகள், இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போருக்குப் பின் நிகழ்ந்த சம்பவங்களையும், போர் ஏற்படுத்திய இழப்புகள், மற்றும் ரணங்களை மையப்படுத்தி இருப்பதால் அவற்றைப் படிக்கும் போது மனம் கனக்கிறது. இந்தக் கதைகளின் வரிகளில் வார்த்தை ஜாலங்கள் இல்லை. ஆனால் கதைகயை நகர்த்திச் செல்லும் ஒவ்வொரு சம்பவங்களுக்கும் ஏற்ற வர்ணிப்புகள் வித்தியாசமாக இருக்கின்றன. […]

Read more

கூண்டுக்குள் பெண்கள்

கூண்டுக்குள் பெண்கள், விலாஸ் சாரங்; தமிழில்: ஆனந்த் ஸ்ரீனிவாசன், நற்றிணை பதிப்பகம், பக்.320, விலை ரூ.350. மராத்தி மற்றும் ஆங்கில மொழி எழுத்தாளரான விலாஸ் சாரங் ஆங்கிலத்தில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். பல கல்லூரிகளில் ஆங்கிலத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய  நூலாசிரியரின் நடுத்தர வர்க்க வாழ்க்கைக்கு நேரடித் தொடர்பில்லாத பல்வேறு அனுபவங்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள  சிறுகதைகளில் இருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. கூண்டுக்குள் பெண்கள் சிறுகதை மும்பையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள வயதாகிக் கொண்டிருக்கிற ஒரு பெண்ணின் கதை. இக்கதை மூலம் அத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் சிரமம் […]

Read more

நன்மாறன் கோட்டைக் கதை

நன்மாறன் கோட்டைக் கதை, இமையம், க்ரியா வெளியீடு, விலை 225ரூ. பெண்களின் பிரச்சினைகளை, அவர்களின் வெவ்வேறு மன இயல்புகளை முன்னிறுத்தி எழுதுவதில் இமையம் தனித்துவமிக்கவர். இத்தொகுப்பிலுள்ள ஆறு கதைகள் பெண்களை மையப்படுத்தியவையே. ஆதிக்க சாதி வெறிக்குக் கணவனைப் பலிகொடுத்துவிட்டு மூன்று பிள்ளைகளுடன் ஊரை விட்டே செல்ல முடிவெடுத்த ‘நன்மாறன் கோட்டைக் கதை’யின் செல்வமணி, இன்னொரு பெண்ணுடன் இருந்த தொடர்பைத் தட்டிக்கேட்டதற்காக ஊரறிய தன்னை அடித்து அவமானப்படுத்திய தன் கணவனை அதே ஊரறிய தன் கணவனின் ஒட்டுமொத்த ஆண்பிம்பத்தையும் குலைத்துப்போடும் ‘தலைக்கடன்’ கதையின் சீனியம்மா, ‘பொட்டச்சி […]

Read more
1 13 14 15 16 17 80