புதிதாய்ப் பிறப்போம்! சரித்திரம் படைப்போம்!

புதிதாய்ப் பிறப்போம்! சரித்திரம் படைப்போம்!, அ.முகமது அப்துல்காதர், கற்பகம் புத்தகாலயம்,  பக்.160, விலை ரூ.120.  ஒரு மனிதர் என்று சாதனை படைக்கிறாரோ அன்றுதான் அவர் பிறந்ததாக கருத வேண்டும் என்கிறார் அப்துல்கலாம். அந்த கருத்தையே தலைப்பாகக் கொண்டுள்ளது இந்த நூல். ‘வாழ்க்கை கடினமானதுதான் ஆனால் வெற்றிக்கான வழி அங்கேதான் இருக்கிறது’ என்கிறார் புகழ் பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். ‘வலிகளை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்கிறார் புத்தர். ‘வலிகளால் நிரப்பப்பட்டதுதான் வாழ்க்கை . அதை திறம்பட கையாளுவதன் மூலம் தொடர்ந்து சாதனைகள் படைக்கலாம்’ என்கிறார் நூலாசிரியர். […]

Read more

ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்

ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம், தமிழருவி மணியன், கற்பகம் புத்தகாலயம், பக்.312, விலை ரூ.250. தமிழருவி மணியனின் வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கும் தன்வரலாற்று நூல் இது. எத்தனையோ அரசியல் தலைவர்கள் சுயசரிதை நூலை இயற்றி இருக்கிறார்கள்; ஆனால் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு நூலாக இது விளங்குகிறது. தமிழறிவு மணியனைப் போலவே அவரது எழுத்துக்களும் எளிமையின் அடையாளமாக இருப்பது நூலுக்கு சிறப்பு சேர்க்கிறது. அரசியலில் தடம் மாறாமல், கொண்ட கொள்கையிலிருந்து மனம் மாறாமல், 70 ஆண்டு காலம், தான் வாழ்ந்த வாழ்க்கையை வாசகனுடன் பகிர்ந்துள்ளார் […]

Read more

கற்றது விசில் அளவு

கற்றது விசில் அளவு, டாக்டர் ஆர். பாண்டியராஜன், கற்பகம் புத்தகாலயம், பக். 128, விலை 100ரூ. இந்நுால், பாண்டியராஜன் நடிகராகவும், இயக்குனராகவும் மலர்ந்ததை சொல்லும் சுயசரிதை. ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றில் தன் குடும்பத்தினர் வறுமையில் வாடியதை உருக்கமாகச் குறிப்பிடுகிறார் பாண்டியராஜன். சைதாப்பேட்டையில், ஒரு எளிய குடும்பத்தில், பேருந்து ஓட்டுனரின் மகனாக பிறந்தவர், பாண்டியராஜன். சைதாப்பேட்டை, மாதிரி உயர்நிலைப் பள்ளியில் படித்த போது, அவர் என்.சி.சி.,யில் சேர்ந்து பயிற்சி பெற்றார். ஒரு ஆண்டு, என்.சி.சி., கேம்ப், சைதையில் அவர்கள் பள்ளிக்கூட வளாகத்திலேயே நடைபெற்றது. கேம்ப் கலை […]

Read more

உயர் கணித நட்சத்திர ஜோதிடம்

உயர் கணித நட்சத்திர ஜோதிடம், ஏ.திருநாவுக்கரசு, கற்பகம் புத்தகாலயம், பக். 104, விலை 90ரூ. இந்நுால், அடிப்படை ஜோதிட கணிதங்கள், காரகங்கள், உயர் கணித சார ஜோதிட விதிகள் மற்றும் உதாரண ஜாதகங்களால் விளக்கம் என, நான்கு பகுதிகளாக உள்ளது. ராசிக் கட்டங்களின், 12 பாவங்களுக்கும் லக்னம் அமைத்து, அந்த லக்னம் நின்ற நட்சத்திராதிபதியைக் கொண்டு, பலன்கள் சொல்லும் முறையை நுாலாசிரியர் கூறுகிறார். இந்நுாலில், ஜாதகங்களை விளக்கும்போது, கால புருஷ தத்துவ விளக்கங்களோடு இணைத்து, நுாலாசிரியர் விளக்கும் பாங்கு பாராட்டத்தக்கது. ஓரளவு ஜோதிடப் புலமையுள்ள […]

Read more

பாரதியின் செல்லம்மாள்

பாரதியின் செல்லம்மாள், புலவர் சி.வெய்கை முத்து, கற்பகம் புத்தகாலயம், பக். 176, விலை 150ரூ. நுாலாசிரியர் – கடையம் – சத்திரம் மேல்நிலைப் பள்ளியில், 32 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பின், மகாகவி பாரதியாரின் துணைவியார் செல்லம்மாள் பிறந்த ஊரான கடையத்தில் ஆசிரியர் பணியாற்றிய போது, கிடைத்த அனுபவத்தாலும், அங்கு வாழ்ந்து வரும் பல சான்றோர்களிடத்தில் செல்லம்மாளைப் பற்றிக் கேட்டு அறிந்து கொண்டும் இந்நுாலைப் படைத்துள்ளார்! செல்லம்மாள் பாரதி (1890 – 1955) பர்த்தாவுக்கு ஏற்ற பதிவிரதை! மஹாகவியின் மஹா […]

Read more

நீரிழிவு நோய் இருந்தாலும்…

நீரிழிவு நோய் இருந்தாலும்… இயல்பான வாழ்க்கை வாழலாம், லயன் எம். சீனிவாசன், கற்பகம் புத்தகாலயம், பக்.160, விலை ரூ.120. அடுத்த 10 ஆண்டுகளில் சர்க்கரை நோயாளிகளின் தலைமையகம் என்ற நிலையை இந்தியா எட்டிவிடும் என மருத்துவத்துறையின் புள்ளிவிவரங்கள் எச்சரித்துள்ளன. சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியாது. ஆனால் அதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்கமுடியும் எனும் நூலாசிரியரின் முன்னுரையுடன் தொடங்கும் இந்த நூல், சர்க்கரை நோயாளிகளுக்கு பயனளிக்கக்கூடிய விழிப்புணர்வு வழிகாட்டி எனலாம். குறிப்பாக, சில கற்பனை கருத்துகளும், உண்மையும் என்ற பகுதி புதுமையானது. சர்க்கரை நோய் வந்தால் அதைக் கட்டுப்படுத்தக்கூடிய […]

Read more

சித்த நூல் ரகசியங்கள்

சித்த நூல் ரகசியங்கள், எஸ். சந்திரசேகர், கற்பகம் புத்தகாலயம், விலை 140ரூ. சித்த நூல் ரகசியங்கள் ரிஷிவர்ஷா என்ற தேசம் தான் இப்போது ரஷியா என்று அழைக்கப்படுகிறது என்று கூறும் ஆசிரியர். இதே போல பல எடுத்துக்காட்டுகளைக் கூறி, பழங்காலத்தில் உலகம் முழுவதும் பாரத கண்டத்தோடு தான் இருந்தது என்பதையும் விளக்குகிறார். வானூர்தி, கப்பல் சாஸ்திரம் ஆகியவற்றை அந்தக் கால சித்தர்கள் அறிந்து இருந்தார்கள் என்றும் மாந்திரீக மற்றும் அட்டமா சித்திகளில் தேர்ந்தவர்களாக இருந்தார்கள் என்றும் கூறும் ஆசிரியர், தனது கருத்து நம்ப முடியாததாகவும் […]

Read more

விடை தேடும் வினாக்கள்

விடை தேடும் வினாக்கள், தமிழருவி மணியன், கற்பகம் புத்தகாலயம், விலை 160ரூ. அன்றாட வாழ்வுக்குத் தேவையான அறிவுரைகள், ஆன்மிகக் கருத்துகள், சிந்தனையைத் தூண்டும் செய்திகள் போன்றவற்றை ஏராளமான கேள்விகளுக்குப் பதிலாக மிக நேர்த்தியாகச் சொல்லி இருக்கிறார் ஆசிரியர். அனைத்து கருத்துகளையும், ஆன்மிகப் பெரியோர்கள், பல அறிஞர்கள் ஆகியோரின் மேற்கோள்களுடன் தந்து இருப்பதால், அந்தக் கருத்துக்கள் அனைவரையும் கவரும் வண்ணம் திகழ்கின்றன. வேதங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள் மற்றும் திருமூலரின் திருமந்திரம் உள்பட பல நூல்களின் கருத்துக்களைச் சுட்டிக்காட்டியும், ஆங்காங்கே ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான சிறுகதைகள் மூலமும் […]

Read more

விடைதேடும் வினாக்கள்

விடைதேடும் வினாக்கள், வாழ்வியல் – ஆன்மிகம் – தத்துவம் குறித்த தேடல்களுக்கான விடைகள், தமிழருவி மணியன், கற்பகம் புத்தகாலயம்,  பக்.216, விலை ரூ.160. விடைதெரியாத கேள்வி களுக்கு இடையில்தான் வாழ்க்கை நதி ஓடிக் கொண்டிருக்கிறது என இந்நூல் உருவாகியதற்கான காரணத்தை ஒரு வரியில் சொல்கிறார் நூலாசிரியர். எந்தக் கேள்வியாக இருந்தாலும் அதற்கு அறிஞர் பெருமக்கள், ஆன்மிகப் பெரியோர்கள், தத்துவ ஞானிகள், கவிஞர்கள் ஆகியோர் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதையே பெரும்பாலும் தனது பதிலாகத் தந்திருக்கிறார். என்னைச் சுற்றியிருப்பவர்கள் தீமையின் வடிவங்களாக வலம் வரும்போது, அவர்களிடமிருந்து எப்படி என்னை […]

Read more

கற்றது விசில் அளவு

கற்றது விசில் அளவு, ஆர்.பாண்டியராஜன், கற்பகம் புத்தகாலயம், பக்.128, விலை ரூ.100. ஒரு திரைப்பட இயக்குநரின் நுட்பம், வாழ்க்கையை அவதானிப்பதுதான். அதை எழுத்திலும் காட்டியுள்ளார் ஆர். பாண்டியராஜன். ஒரு கலைஞன் எப்படி அவரது ரத்த உறவுகளுடன் நம்மையும் சேர்த்துக்கொண்டு நடத்திச் செல்வாரோ, அத்தகைய தமிழ் நடை எல்லாப் பக்கங்களிலும் உள்ளன. சைதாப்பேட்டையில் எளிய குடும்பத்தில் பேருந்து ஓட்டுநரின் மகனாகப் பிறந்து, சிறு வயது முதல் இளமைப் பருவம் வரை வறுமையை, அதனால் வரும் துன்பத்தை இன்பத்தோடு அனுபவித்ததை இவர் சொல்லும் பாங்கு அலாதியானது. பல்வேறு […]

Read more
1 2 3 4 7