அமானுஷ்யம்… ஆனால் உண்மை

அமானுஷ்யம்… ஆனால் உண்மை, வேணு சீனிவாசன், குறிஞ்சி பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, இரண்டாவது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், செக்கை 49, விலை 100ரூ. ஆவிகளின் கதையை, ஆவி பறக்க தந்திருக்கும் நூல். மனித அறிவுக்கும் ஆற்றலுக்கும் எட்டாத சில விஷயங்கள் நமக்கு பிரமிப்போடு பயத்தையும் ஊட்டுகின்றன. பறக்கும் பேய் மனதன், ஆண்களை தூக்கில் போட்டு உயிரை பலி வாங்கும் அமானுஷ்ய உருவம், கண்ணாடியில் தோன்றி அதிசயிக்க வைக்கும் சிலுவைக்குறி இப்படி ஒவ்வொரு சிலிர்ப்புப் பின்னணியிலும் ஒரு திகில் சம்பவம் […]

Read more

பிஞ்சுச் சாவு

பிஞ்சுச் சாவு, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான சாலை, ராயப்பேட்டை, சென்னை 14,விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-490-7.html பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் மரணம் குறித்து 87 கவிஞர்கள் நெஞ்சு பொறுக்க முடியாத வேதனையில் படைத்த கண்ணீர்க் கவிதைகளின் தொகுப்பு நூல். பாலச்சந்திரன் தன் உயிரைக் கொடுத்து உலகின் பார்வையை தமிரீழத்தின் பக்கம் திருப்பியிருக்கிறான். அவர் மார்பைத் துளைத்த தோட்டாக்கள், லட்சக்கணக்கான தமிழீழ மக்களைக் கொன்று குவித்த கொடுரத்தை உலகின் பார்வைக்குகொண்டு சென்றிருக்கிறது. அவனது ஒற்றை மரணம், ஒரு […]

Read more

யார் அந்த தமிழ்ச் சித்தர்கள்

யார் அந்த தமிழ்ச் சித்தர்கள், அகமுக சொக்கநாதர் குருஜி, கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தியாகராய நகர், சென்னை 17, பக். 128, விலை 45ரூ. சித்தர்கள் பலரும் படிப்போர் ஆராய்ந்து அறிந்து கொள்ளும் வகையில் கருத்துக்களை மறைமுகமாகவே கூறியுள்ளனர். அவ்வாறாகக் கூறப்பெற்றுள்ள கருத்துக்களை தம் ஆய்வுமுறை அறிவுடன் விளக்கியுள்ளார் இந்நூலாசிரியர் அகமுக சொக்கநாதர். அகமுகர் என்போர் சித்தர்களே, சித்தர்களின் கருத்துக்களோடு பிறமொழி அறிஞர்களின் கருத்துக்களை ஒப்பிட்டு இந்நூலில் விளக்கியுள்ளார். இந்தியாவின் சிறந்த பண்பாட்டையும், நாகரிகத்தையும் நிறுவியவர்கள் தமிழர்களே. இந்திய மொழிகளின் தாய்மொழி […]

Read more

மனோதிடம் ஒரு புதுமையான பெருங்கதை

மனோதிடம் ஒரு புதுமையான பெருங்கதை, குஜராத்தி மூலம் பன்னாலால் படேல், தமிழில்-ந.சுப்ரமணியன், சாகித்ய அகடமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 608, விலை 375ரூ. படேலுக்கு ஞான பீட விருதைப் பெற்றுத் தந்திருக்கிறது இந்த நாவல். ஒரு கிராமவாசியான இந்நூலாசிரியர் முறையான கல்வி பயிலாதவர் என்னும் செய்தி, நமக்கு வியப்பைத் தரும். அவரது அனுபவ அறிவு நாவல் முழுவதும் வெளிப்டுகிறது. குஜராத்தின் கிராமப்புறத்தைப் பின்னணியாகக் கொண்ட இந்த நாவல், 1900ம் ஆண்டுவாக்கில், அங்கு கோரத் தாண்டவமாடிய பஞ்சத்தின் விளைவுகளைத் […]

Read more

யான் பெற்ற பயிற்சிகள்

யான் பெற்ற பயிற்சிகள், மாக்சிம் கார்க்கி, தமிழில்-ஆர்.ராமநாதன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிமிடெட், 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-959-1.html தாய் என்ற புகழ்பெற்ற நாவலை எழுதிய ரஷ்ய எழுத்தாளரான மாக்சிம் கார்க்கியின் வாழ்க்கையின் முதல் பாதி துன்பங்களும் துயரங்களும் நிறைந்தவை. அவரது தந்தை இறப்பிற்குப் பின் அவர் சந்தித்த வேதனைகள் பல. அவருக்கு தாயாக, வழிகாட்டியாக இருந்தவர் அவரது பாட்டி அக்குலினா என்பவர். தனது 10 வயது முதல் […]

Read more

விவேக சிந்தாமணி

விவேக சிந்தாமணி, கவிஞர் பத்ம தேவன், கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தி. நகர், சென்னை 17, பக். 200, விலை 65ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-878-8.html தனிப்பாடல்கள் பலவற்றைத் தொகுத்து, விவேக சிந்தாமணி என்ற பெயரில் நூலாக முதலில் வெளியிட்டவர் யார் என அறிய இயலவில்லை. முற்காலத்தில், பெரியோர்கள் அனைவரும் படித்து பாதுகாத்த நூல். இலக்கியத் தரம் வாய்ந்த பாடல்களும், நீதிக் கருத்துக்களை கூறும் பாடல்களும் உள்ளன. புராணச் செய்திகளும் பஞ்சதந்திரக் கதைச் செய்திகளும் […]

Read more

அன்புள்ள அம்மா

அன்புள்ள அம்மா, மணவை. பொன். மாணிக்கம், கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தி.நகர், சென்னை 600017, பக்கங்கள் 278, விலை 160ரூ அம்மாவே தெய்வம், உலகிலே அம்மாவைக் கொண்டாடாதவர்கள் யார்? எழுபத்தைந்து வெற்றியாளர்கள் தங்கள் அன்னையரைப் பற்றிச் சொல்லும், போற்றுதல் கட்டுரைகள் அடங்கிய அருமையான தொகுதி. திலகவதி ஐ.பி.எஸ்., தன் அம்மா பற்றிச் சொல்வதைக் கேளுங்கள். அவர் அம்மாவுக்கு எழுதிய கடிதத் தகவல் சுவையானது. அப்பா பார்த்த ஜாதகப்படி எனக்கு திலகவதி அம்மையார் என்று பெயர் சூட்டினர். பள்ளியில் என் பெயரை, ஆசிரியர் […]

Read more

சமர்ப்பணம்

சமர்ப்பணம், யோகி ராம்சுரத்குமார் வாழ்க்கை வரலாறும் போதனைகளும், ஆர்,கே. ஆழ்வார், யோகிராம் சுரத்குமார் டிரஸ்ட், திருவண்ணாமலை, பக்கங்கள் 236, விலை 80ரூ. திருவண்ணாமலைக்கு பல சிறப்புகள் உண்டு. சேஷாத்ரி சுவாமிகள், பகவான் ரமண மகரிஷி போன்ற மகான்கள் வாழ்ந்த பூமி. இந்த நகரின் ஆன்மிக சிறப்புக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் விசிறி சாமியார் என அன்பர்களால் நேசிக்கப்பட்ட யோகிராம் சுரத்குமாரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். தன்னை ஒரு பிச்சைக்காரன் என்று சொல்லிக் கொள்வது இவர் வழக்கம். இவருடைய ஒரு பார்வைக்கும், நல்லாசிக்கும் பலர் […]

Read more
1 5 6 7